செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23

வன்னியில் யுத்தத்தால் சிக்குண்டுள்ள மக்கள், எவ்வாறு இலங்கை இராணுவத்தின் எறிகணைகளில் இருந்து தப்புவது என்று தெரியாதிருப்பதாக தமிழ் புனர்வாழ்வு கழகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் லோரன்ஸ் கிரிஸ்டி தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி அவர் எழுதியுள்ள அறிக்கையிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும், இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் எதிரில் தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குனர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ஈழ‌த் த‌மிழ‌ர்களை கா‌ப்பா‌ற்று‌‌ங்க‌ள்: கடிதம் எழுதி வைத்துவிட்டு சிவகா‌சி‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் தொ‌ண்ட‌ர் ‌தீ‌க்கு‌ளி‌த்து மரண‌ம் : ஈழ‌த் த‌மிழ‌ர்களை கா‌ப்பா‌ற்று‌‌ங்க‌ள் எ‌ன்று‌ம் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கூட்டணி ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியு‌ம் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் நேற்று இரவு தீக்குளித்து மரண‌ம் அடை‌ந்தா‌ர்.
நண்பர் புதுகை அப்துல்லா ஒரு பதிவு எழுதி இருக்கிறார்! கிர்மினல்கள்! கிர்மினல்களே! என்ற அந்த பதிவில் நேசமுடன் இஸ்லாம் என்ற பதிவரின் பதிவில் பெற்ற மகளை கற்பழித்த ஹிந்து தந்தை கைது. என்ற தலைப்பில் இடப்பட்டு இருந்த பதிவில் ''ஹிந்து தந்தை'' என்று மதத்தை குறிபிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், முஸ்லிம் தீவிர வாதிகள் என பொதுவில் கூறபடுவதால் மன வேதனையை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.அதனை தொடர்ந்து
அன்று கலைஞர் என்ன சொன்னார் என்பதை நினைவுபடுத்த கடமைப் பட்டிருக்கிறேன். தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழநாடு எனும் தலைப்பில் தி.மு.க. வெளியீட்டுச் சௌலாளர் சி.டி.தண்டபாணி முன்னுரையுடன் கலைஞர் பேசியதின் ஒரு பகுதியை இங்கு சொல்ல விரும்புகிறேன்.
"இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவி விட்டார் கருணாநிதி' என்று குற்றம்சாட்டினர் பாமக நிறுவனர் ராமதாஸ். திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது.

கருத்துகள் இல்லை: