வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-27



More than a Blog Aggregator

by நட்புடன் ஜமால்
______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________
அது செல்போனில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ. பெங்களூரு நகரில் இருக்கும் மிக முக்கியமான ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவாசல். முகத்தில் தாடியோடும், நிறைய கவலைகளோடும் ஒரு மனிதர் அங்கே நிற்கிறார். கீழே கையில் ஆறு மாத குழந்தையோடு அவரின் மனைவி அமர்ந்து இருக்கிறார். அருகே இரண்டு பெரிய பைகள். அந்த புகைப்படத்தை எனக்கு காமித்தவர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் (முன்னாள்) மாணவர். "என்னடா இது?'.. நான் கேட்ட போது அவர் சொன்ன பதில்.."இது தான் சார் ரெசஷனோட உண்மையான முகம். அமெரிக்கால போன மாசம் வரைக்கும் வேலை.. கை நிறைய சம்பளம்.. ஆனா இன்னைக்கு.. பத்தி விட்டுட்டாங்க.. எங்க கம்பனி வாசல்ல வந்து குவார்டர்ஸ் கேட்டு நின்னுக்கிட்டு இருந்தப்ப எடுத்தேன்..."

அடுத்து அவர் சொன்னது இன்னும் அதிர்ச்சி. "என்னையவே இன்னும் ரெண்டு மாசத்துல கிளப்பி விட்டுருவாங்கன்னுதான் சார் நினைக்கிறேன். அஞ்சு டெஸ்ட் வைப்பாங்க.. அதுல எல்லாத்தையும் கிளியர் பண்ண முடியாட்டி நோட்டிஸ் தான். அந்த கொஸ்டின் பேப்பர்ல இருக்குற கேள்விக்கு ஒரு பயலும் பதில் சொல்ல முடியாது. அவ்வளவு கஷ்டமா இருக்கும். வேலை இல்லன்னு சொல்லாம, கம்பனியோட பேர் கெடாம இப்படித்தான் ஆளுங்கள வெளிய அனுப்பிக்கிட்டு இருக்கான்..சின்ன கம்பனில நேரடியா வேலை இல்லன்னு சொல்லிடுறான். ஆனா எங்க கம்பனி பெரிசுல்ல.. அசிங்கமா வேலை இல்லன்னு சொல்றதுக்கு பதிலா இது ஒரு டெக்னிக்கு..நானே அடுத்து மேல்படிப்பு படிக்கலாம்மான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்..."

இன்னைக்கு எல்லாரயும் போட்டு உலப்பிக்கிட்டு இருக்குற விஷயம்.. ரெசஷன் (Recession) என்கிற உலகப் பொருளாதார சரிவு. இங்க அடிச்சா அங்க வலிக்கும்னு சொல்ற மாதிரி அமெரிக்கால ஆரம்பிச்ச இந்த சரிவு இன்னைக்கு உலகம் பூரா பரவிக்கிட்டு இருக்கு. உண்மையச் சொல்லணும்னா இந்தியால இன்னும் தீவிரமா இந்த சரிவோட பாதிப்பு தெரிய ஆரம்பிக்கலை. அடுத்து வர நாட்கள்ல இன்னும் நெலமை மோசமாகும்னு சொல்றாங்க.
சமீபத்தில் நீங்க இந்த மாதிரி செய்திகளை நிறைய கேட்டு இருக்கலாம். ஐ.டி துறைல மொத்தமா இத்தன பேருக்கு வேலை போச்சு... அப்படின்னு எல்லாம்.... நேத்து வரைக்கும் ராஜாவா இருந்த ஐ டி மக்கள் ஒரே நாள்ல ஒண்ணுமில்லாம போனது எப்படி..? இந்த சரிவால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பது சாப்ட்வேர் நிறுவனங்களும் , அதைச் சார்ந்த மற்ற எல்லா தொழில்களும்தான். இந்த ரெசஷனால பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய மிக முக்கியமான இன்னொரு தொழில்.. கல்வி.

குறிப்பாக பொறியியல் கல்லூரிகள். இன்னைக்கு ரொம்ப ஈசியா ஆரம்பிக்கக் கூடிய, நிறைய லாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் என்னன்னு பார்த்தீங்கனா.. பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கறதுதான். நான் படிச்ச காலத்துல (98-02) எல்லாம் எங்களுக்கு ப்ளேஸ்மென்ட் அப்படின்னா என்னன்னு கூடத் தெரியாது. ஆனா இன்னைக்கு இருக்குற மாணவர்கள் காலேஜுக்கு உள்ள நுழையும்போதே ரொம்பத் தெளிவா கேக்குற முதல் கேள்வி.. ப்ளேஸ்மென்ட் இருக்கான்னுதான்.. அந்த நிலை உருவானதுக்கு காரணம்.. சாப்ட்வேர் கம்பனிகள். நாலு வருஷம் படிச்சு முடிச்ச உடனே கைல முப்பதாயிரம் ரூபா சம்பளத்தோட வேலை. அதனால பொறியியல் கல்லூரில சேரக்கூடிய மக்களோட எண்ணிக்கை ஜாஸ்தி ஆச்சு.
(தொடரும்.....)

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)


More than a Blog Aggregator

by ஷீ-நிசி



பச்சைக் கிளியொன்று
மிச்ச சிறகுகளோடு
வெளியில் வந்து..

அடுக்கிவைத்த
கட்டுகளைச் சுற்றி உலாவி,
கலைத்துபோட்ட
சீட்டுகளுக்குள்ளே துலாவி,

ஆறரிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.

சொன்ன சொல் கேட்டால்,
தின்ன நெல் தருபவனிடம்
கொடுத்துவிட்டு,

மீண்டும் திரும்பியது
கூண்டுக்குள்ளேயே!!

போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை


More than a Blog Aggregator

by கிருஷ்ணா
வீடில்லை
கூடில்லை..
வாடகை
தரவும் காசில்லை..

சோறில்லை
நீறில்லை
சோதனைக்கு
ஓர் எல்லையில்லை..

ஊனில்லை
உறக்கமில்லை
என் உயிரே
எனக்கு சொந்தமில்லை...!

ஏடில்லை
எழுத்தில்லை..
ஏட்டுக்கல்வியும்
எனக்கில்லை..

மானமில்லை
ஈனமில்லை
மேனியிலே
நல்ல துணியுமில்லை..

கூனுமில்லை
குருடுமில்லை
ஆனாலும்
குடித்தனம்
எனக்கு தேவையில்லை..!

வேலையில்லை
வெட்டியில்லை
வேதனையை
சொல்லி அழ யாருமில்லை..

அழகில்லை
அறிவுமில்லை..
ஆறுதல் சொல்லவோர்
நாதியில்லை..

கண்ணனில்லை
மன்னனில்லை
உன்
காதலுக்கு
ஏற்றவன் நானில்லை..!!

K.கிருஷ்ணமூர்த்தி


More than a Blog Aggregator

by ஆ.முத்துராமலிங்கம்



ஆதியிலிருந்தே
சொல்லி வைக்கப்பட்டிருந்த
மரபை உதறி அன்று நன்
உனக்கு முன் எழுந்து
உன் வேலைகளை
செய்திருந்தேன்.

உன் கைகளுக்குப் பழகிப்போன
கோலமாவும்
வாயுவடுப்பும்
பால் குக்கரும்
புதிதான என்னை
நிராகரித்து அதனதன்
போக்கில் தன்னிச்சையுடன்
செயல்பட்டுக் கொண்டன.

எனக்கு சிறிதும் பரிட்சயமற்ற
அந்த அதிகாலை இருள்
நம் வீட்டின்
சமயலறை,
வராண்டா,
மாடிப்படி,
வெளிக் கதவு,
என்று அனைத்தின்
முகங்களையும் மாற்றி
வைத்திருந்தது.

நீ குழந்தை போல்
தூங்கிக் கொண்டிருந்தாய்.

இதற்க்கு முன் பார்த்திரவே
இல்லாத நீ தூங்கும் அழகு
என் ரசனையை கிழித்து
இருள் அடர்ந்த பிரபஞ்சத்தினுள்
எறிந்தது.

இன்னும் ஆகாயத்தை விட்டு
விலகாத நிலவும், சில
நட்ச்சத்திரங்களும்
நீ தூங்கும் அழகில்
கிரங்கி கிடந்தவையோ
என்று என்னத் தோன்றியது.

இத்தனை நாளும் உன் தூக்கதை
குடித்து விட்டுதான் ஒவ்வொரு இரவையும்
ஒரு குடிகாரனின் நினைவுதப்பிய
நிலையில் கழித்திருப்பதை என்னி
வருந்திக் கொண்டேன்.

பால்காரனின் சப்த்தத்தையும்
பேப்பர்காரனின் சப்த்தத்தையும்
தடுத்த என்னால்
பறவைகளின் சப்த்தத்தை
தடுக்க முடியவில்லை.

பறவைகளின் சப்த்தத்தில்
விழித்த உனக்கு சூடு நிரம்பி
காபியுடன் உன்னறுகில் வந்தமர்ந்தேன்.

என்னை ஆச்சரியத்தில்
பார்த்த நீ
வெடக்கத்தில் கவிழ்து கொண்டாய்.

வழுக்கட்டாயமாக
உன் வெட்க்கத்தை உடைத்து
காபிக் கோப்பையை உன்
கைகளில் தினித்தபோதும்
உன் நானம் அதை நழுவ விட்டுவிட்டது.

"காபி கவிழ்து
கறையானது
என் ஆடை
உன் வெட்க்கம்
படிந்து
இறையானது
என் மனம்"

இப்படி என் டைரியில்
குறித்து வைத்துக்கொண்டேன்
அன்றைய இரவின் கடைசிப் பொழுதொன்றில்.






யூத்ஃபுல் விகடனுக்கு என் நன்றிகள்.

கருத்துகள் இல்லை: