சனி, 30 மே, 2009

2009-05-30



More than a Blog Aggregator

by "அகநாழிகை"











விசித்திரமான சுவையைப்
புனைந்திருக்கிறது நம் நட்பு

கொண்டு வந்து வைத்திருக்கும் மதுவில்
நிராசை புலப்படுவதாய்க்கூறி
விடுதியை விட்டு வெளியேறும் நான்
காலம் நேரமற்று மதுகுப்பியை ஏந்த
எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் நீ

பரஸ்பரம் நட்புதான் நமது
சந்தேகிக்கின்றனர்
எப்படி வெளிப்படுகிறது
நட்பு இவர்களுக்குள் என்று
கூடிக்கூடி பேசுகின்றனர்
சுற்றிலும் நம்மைப்பற்றி
நட்பின் ரகசியம் அறியாமல்

ஒரு நாதாங்கியின் தள்ளலில்
உலகையே மூடிவிட்டதாய் எக்காளமிட்டு
பரவசத்தில் உடல் நடுங்க
விரிந்திருக்கிறோம் நாம்
மதுகோப்பைகளின் முன்பு

திரண்டெழுந்த மருவைப்போல
புடைத்திருக்கிறது மூக்கு
திறக்கப்பட்ட மதுவின் மனம் சுவைத்து

நினைவற்றுக்
கிடப்பதைபோல பெருமகிழ்ச்சி உள்ளதா

மிதக்கும் கேள்விகளுடன் அலைகிறோம்
குடிமயக்கம் தழுவ
வெடித்துப்பரவுகிறது
உண்மைகளின் விதைகள்
ஒப்பனைகளைக்கலைத்து

மூடிய அறைகதவுகளுக்கிடையேயான
நீள் கோட்டுத்துவாரங்களில் கசிகிறது
தொங்கிக்கொண்டிருக்கும்
செவிகளின் நிழல்கள்
கூர்ந்து கவனிக்கின்றன
நாம் பேசுவதை.


- பொன்.வாசுதேவன்


More than a Blog Aggregator

by கார்த்திகைப் பாண்டியன்

சத்யம் என்னும் சூப்பர் டூப்பர் பிளாப்பிற்கு பிறகு வந்திருக்கும் விஷாலின் படம். விஜய் ஆகத் துடிக்கும் விஷால் அவரைப் போலவே (சிவகாசி) ஒத்தக்காலில் போஸ் கொடுத்து நிற்கிறார். வில்லனை தந்திரமாக ஏமாற்றி தப்பும் நாயகன் என விஷாலின் முந்தைய படங்களான திமிரு, மலைக்கோட்டை, சண்டக்கோழி ஆகியவற்றையே கலக்கி மீண்டும் கொடுத்து உள்ளார்கள். காமெடியும் ஆக்ஷனும் கலந்த படமாக இருக்கும் என்று பார்த்தால்..?!!!


சின்ன வயதில் தொலைந்து போன அண்ணனைத் தேடி சென்னைக்கு வருகிறார் விஷால். துறைமுகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் போதை மருந்து கடத்தும் கெட்டவன் பிரகாஷ்ராஜ். கட்டப்பஞ்சாயத்து செய்யும் இன்னொரு தாதா கிஷோர். இந்த இரண்டு ரவுடிகளுக்கும் தீராத பகை. ஒரு கட்டத்தில் விஷாலின் அண்ணனை கொலை செய்ய பிரகாஷ்ராஜ் முயலுகிறார். விஷாலின் அண்ணன் யார்.. அவரை விஷாலால் காப்பாற்ற முடிந்ததா?..இதுதான் தோரணை.


ஏதோ ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த நோயாளி மாதிரி இருக்கிறார் விஷால். பக்கம் பக்கமாய் பன்ச் டயலாக் பேசிக் கொல்கிறார். சண்டை காட்சிகள் மட்டுமே ஓகே. காமெடி பண்ணுவதாக நம்ம கழுத்தை அறுக்கிறார். நெஞ்சினிலே படம் போல கிஷோரின் அடியாட்களை எல்லாம் வசனம் பேசியே திருத்துகிறார். தாங்க முடியலடா சாமி.."திறந்த" மனசோடு ஸ்ரேயா. உடைகளாக உள்ளாடைகளை மட்டும் உடுத்தி உல்லாசமாக பாடல்களுக்கு வந்து போகிறார். பிரகாஷ்ராஜையும் கிஷோரையும் இதுக்கும் மேல யாராலையும் வீணடிச்சு இருக்க முடியாது.


படத்தில் அவ்வப்போது நம்மை ஆறுதல் கொள்ள செய்வது சந்தானத்தின் காமெடியும், எம்.எஸ்.பாஸ்கரின் லொள்ளு வசனங்களும்தான். வழக்கம் போல இரட்டை அர்த்த வசனங்களும் உண்டு. அதற்காக ராமர் வேஷம் போட்டுக் கொண்டு சீதா, ங்கோ.... என்றெல்லாம் பேசுவது ஓவர். கண்ணை கசக்கும் அம்மாவாக கீதா இன்னும் எத்தனை படங்களில் நடிப்பாரோ? கெட்ட அரசியல்வாதியாக சாயாஜி ஷிண்டேவும், கமிஷனராக லாலும் தலை காட்டி இருக்கிறார்கள். ஒரே ஒரு பாட்டுக்கு மீனாட்சி குத்தாட்டம் போட்டிருக்கிறார்.


இசை - மணிஷர்மா. தன்னுடைய பழைய பாட்டுக்களையே ரீமிக்ஸ் பண்ணி உள்ளார். "வா செல்லம்" பாட்டு தவிர மற்ற எல்லா பாட்டுமே வேஸ்ட். பின்னணி இசைதான் கொஞ்சம் பராவயில்லை. "வா செல்லம்" பாட்டில் ஆர்ட் வொர்க்கும், "தொட்டுக்கோ" பாட்டில் ஒளிப்பதிவும் அம்சம். ராக்கி ராஜேஷின் சண்டைக் காட்சிகளை நன்றாக படமாக்கி உள்ளார்கள்.


முதல் பாதி முழுக்க வெற்று நகைச்சுவைக் காட்சிகளும் பாட்டும் நிறைந்து இருக்கின்றன. விஷாலின் அண்ணன் யார் என்று தெரிய வரும் இடைவேளை பட்டாசு கிளப்புகிறது. சரி, ஏதோ நடக்கப் போகுதுன்னு நிமிர்ந்து உக்கார்ந்தா..புஸ்ஸ்...ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கு நடுவிலும் சம்பந்தமே இல்லாமல் காதல் காட்சிகள். திரைக்கதை படத்தின் பெரிய பலவீனம். தனது முதல் படத்தில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் சபா ஐயப்பன்.


கொஞ்சம் தோரணை.. நிறைய ரோதனை..


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
ஐம்பது லட்சம் இருந்தால் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம். இந்த தாராளமயம் நல்லதா கெட்டதா என்பது ஒருபுறமிருக்க, இந்த அலையில் தினமொரு தயாரிப்பாளர் கோடம்பாக்கத்தில் கரை ஒதுங்குகிறார். அதில் ஒருவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மகேஷ்.

கண்மணி தென்றலே என்ற படத்தை தயாரிப்பதுடன் படத்தின் ஹீரோவாகவும் மகேஷே நடிக்கிறார். கதை...? அதுதான் சுவாரஸியம்.

பிணத்துக்கு பாடை கட்டுவதுதான் ஹீரோவின் தொழில். எந்தவிதமான பாடை வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம். அரை மணியில் தயாராகிவிடும். தேவையான டிஸைனை தேர்ந்தெடுக்க ஹீரோ கைவசம் எப்போதும் பாடைகளின் ஆல்பம் இருக்கும்.

இந்த வித்தியாசமான கதைக்களத்தில் நடக்கும் காதல், மோதல், காமெடிகளை உள்ளடக்கி தயாராகிறது கண்மணி தென்றலே. ரீத்து என்ற நூறு சதவீத தமிழச்சி படத்தின் நாயகி.

படத்தை நல்லா எடுங்க. இல்லைன்னா ஆர்டர் கொடுக்காமலே ரசிகர்கள் பாடை கட்டிடுவாங்க.

செளந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோ, வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்க இருப்பது தெரியும். கவுதம் வாசுதேவ மேனன் போன்ற பிரபல இயக்குனர்கள் மட்டுமின்றி, திறமையான அறிமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பளிக்க இருக்கிறதாம் ஆக்கர்-வார்னர் தயாரிப்பு நிறுவனங்கள்.

எந்தப் படத்தை தயாரித்தாலும் அதன் ஸ்கிரிப்டை ஆங்கிலத்தில் முதலிலேயே தரவேண்டும் என்பது வார்னர் பிரதர்ஸ் போட்டிருக்கும் நிபந்தனை. இந்த நிபந்தனையை செயல்படுத்த தாமதம் ஆனதால்தான், கோவா படத்தின் தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டதாம் வார்னர் பிரதர்ஸ்.

இதன் காரணமாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஸ்கிரிப்ட் கேட்கிறார் செளந்தர்யா ரஜினி. ஆங்கில ஸ்கிரிப்டை தந்தால் மட்டுமே அடுத்தகட்ட வேலைகள் நகர்கின்றன.

விரைவில் ஆக்கர்-வார்னர் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

மீண்டும் தனது கணவர் சுந்தர் சி-யை வைத்து படம் தயாரிக்கிறார் குஷ்பு.

சுந்தர் சி இயக்குனராக இருந்தபோது அவர் இயக்கிய படங்களை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்தது. சுந்தர் சி இப்போது ஹீரோ! அவ்னி சினி மேக்சும் அவர் நடிக்கும் படங்களை தயாரிக்கிறது.

ஐந்தாம்படை, வாடா, முரட்டுக்காளை படங்களில் நடித்துவரும் சுந்தர் சி அடுத்து மனோ இயக்கத்தில் வேட்டு படத்தில் நடிக்கிறார். அவ்னி சினிமேக்ஸ் சார்பில் படத்தை தயாரிப்பவர் குஷ்பு.

நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது முடிவாகாத நிலையில், சுந்தர் சி-யுடன் இணைந்து காமெடி ஏரியாவில் கலக்கப் போவது யார் என்பதை மட்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் குஷ்பு. அவர், வடிவேலு!

தலைநகரம் படத்துடன் சுந்தர் சி-க்கு டாட்டா காட்டிய வடிவேலு பல்வேறு சமரசத்துக்குப் பிறகும் சுந்தர் சி படங்களில் நடிக்க மறுத்தார். அதனால் அதற்குப் பிறகு சுந்தர் சி படங்களில் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

திடீர் திருப்பமாக வடிவேலு பச்சைக்கொடி காட்ட, விவேக் கழற்றிவிடப்பட்டிருக்கிறார். எல்லாம் குஷ்புவின் முயற்சி என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

கல்லூ‌ரிக்கு செல்லும் டீன் ஏ‌ஜ் பையன் போலிருக்கிறார் பண்டி சரோ‌ஜ்குமார். அவரது பயோடேட்டாவை கேட்டால் ஆச்ச‌ரியமாக இருக்கிறது. கண்களில் ஆர்வமும், வேலையில் சுறுசுறுப்புமாக இருக்கும் அவரது உற்சாகமான பேட்டியிலிருந்து...

அது என்ன பண்டி சரோ‌ஜ்குமார்? தமிழில் இதுவரை கேள்விப்படாத பெயர்...?

என்னுடைய சொந்த மாநிலம் ஆந்திரா. தெலுங்கு குடும்பம். பண்டி என்பது குடும்பப் பெயர். சின்ன வயதிலேயே சினிமா ஆர்வம். தாய்லாந்து தலைநகர் பாங்காங் போய் அங்குள்ள திரைப்படக் கல்லூ‌ரியில் இயக்குனர் பயிற்சி படித்தேன்.

உங்கள் வயது..?

இப்போதுதான் 24 ஆகிறது.

படம் இயக்குவது என்று முடிவான பிறகு தெலுங்குக்கு போகாமல் தமிழுக்கு வர என்ன காரணம்?

தமிழ் ரசிகர்கள்தான் காரணம். தமிழ் ரசிகர்கள் புதுமையை ஆத‌ரிப்பவர்கள். தமிழ் சினிமாவுக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தை மீறி எடுக்கப்பட்ட படங்களை அவர்கள் வெற்றி பெற செய்திருக்கிறார்கள். என்னுடைய போர்க்களமும் அப்படிப்பட்ட படம்தான்.

படத்தின் கதை என்ன?

தனி மனிதன் ஒருவன் பல தீய விஷயங்களுக்கு எதிராக நடத்தும் போராட்டமே படத்தின் கதை.
webdunia photo WD

ஆ‌க்சன் படமா?

ஆ‌க்சன் படம்தான். ஆனால் வழக்கமான ஆ‌க்ச‌ன் படங்களிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கும். பே‌ண்டசி பிளஸ் ஆ‌க்சன் என படத்தை வித்தியாசமான தளத்தில் எடுத்திருக்கிறேன். ஹாலிவுட் பாணியில் படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பிரேமும் தமிழ் சினிமாவுக்கு புதுசாக இருக்கும்.

படத்தின் ஹீரோ?

பொல்லாதவன், வெண்ணிலா கபடிகுழு படங்களில் நடித்த கிஷோர் முதல் முறையாக போர்க்களத்தில் நாயகனாக நடிக்கிறார். ஸ்மிதா என்ற பெங்களுரைச் சேர்ந்த பெண் ஹீரோயின். இவர்களுடன் சத்யன், பிஜு மேனன், பொன்வண்ணன், சந்தானபாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள். நாயகன், பம்பாய் படங்களில் நடித்த டினு ஆனந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு போர்க்களத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்யும் எண்ணமிருக்கிறதா?

தமிழில் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தீர்மானிக்க வேண்டிய விஷயம்.

பொதுவாக அறிமுக இயக்குனர்களின் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதில்லை. உங்கள் படத்துக்கு இசையமைக்க எப்படி ஒத்துக் கொண்டார்?

படத்தின் கதையை கேட்டவர் இசையமைக்க உடனே தனது சம்மதத்தை தெ‌ரிவித்தார். இந்தப் படத்துக்கு முதலில் கமிட்டான டெ‌க்‌னீஷியனே அவர்தான்.

கருத்துகள் இல்லை: