செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07



More than a Blog Aggregator

by கதைச் சங்கம்
தெனாலி ராமன் வரலாறு


சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

சிறுவயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை. சிறுவயதிலேயே விகடமாகப் பேசுவதில் வல்லமைப் பெற்றான். அதனால் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.

காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின், வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான். அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.

தெனாலி ராமனுக்கு காளி மகாதேவியின் அருள் கிடைத்தது எப்படின்னு அடுத்த பதிவுல பார்ப்போமா?


More than a Blog Aggregator

by கதைச் சங்கம்
சுட்டி குழந்தைகளுக்கு சின்ன சின்ன கதைகள்.

தூங்க வைக்க, அறிவை வளர்க்க, மகிழ்விக்க சின்ன சின்ன கதைகள், படங்களுடன் (முடிந்தவரை).


More than a Blog Aggregator

by கதைச் சங்கம்
தெனாலியுடன் ராஜகுருவின் நட்பு
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.


அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார்.

நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார்.

தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக
சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை.

தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான்.


More than a Blog Aggregator

by கதைச் சங்கம்
காளிமகாதேவியின் அருள் கிடைத்தல்
அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஆறு, ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. தண்ணீர்ப்பஞ்சமும் உணவுப்பஞ்சமும் தலை விரித்தாடியது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்தது. ஆறு, ஏரி, குளம் குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்தது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை புகழ்ந்து வணங்கி ஆசிப்பெற்றனர்.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த தெனாலிராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து
"தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்?" வினவினார்.

அதற்கு தெனாலி ராமன் "மழை பெய்வதும், பெய்யாமல் போவதும், இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன், தங்கள் மகிமையால் தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது, ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். அப்போது பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதைப்பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததால்தான் பனம்பழம் கீழே விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலதான் இந்த ஊர் மக்கள் செயல் இருந்ததால் சிரித்தேன்" என்றாராம் தெனாலிராமன்.
இதைக்கேட்ட கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து "தம்பி, உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப்பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய்" என்று நல்லாசி கூறினார்.

இதைக்கேட்ட தெனாலிராமன், காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தார். காளியின் திருஉருவத்தைக்காண பலவாறு வேண்டி தவம் இருந்தார். கடைசியில் தெனாலிராமன் முன் காளி தோன்றினாள். அவளது உருவத்தைப் பார்த்து பயப்படுவதற்கு பதிலாக பலமாக சிரித்தார்.

அவர் சிரிப்பதை பார்த்த காளி "என் உருவத்தை பார்த்து எல்லாரும் அஞ்சுவார்கள். நீயோ ஏன் சிரிக்கிறாய்?" என்று வினவினாள்.

அதற்கு தெனாலிராமன் "எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. உனக்கோ ஆயிரம் தலை உள்ளது, ஆனால் இரண்டு கைகளே உள்ளது. உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன், அதனால் எனக்கு சிரிப்பு வந்தது" என்றார்.

இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்துவிட்டாள். பின்னர் "மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுதிகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும்போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன்" எனக்கூறி மறைந்தாள்
சமீபத்தில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள மரியாதைக்குரிய படம் மரியாதை. விஜயகாந்த் என்றாலே நிறைய பேருக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. அதுவும் சமீபகாலமாக அது அதிகமாய் போக, அனைவரும் முந்தி அடித்துகொண்டு படத்தை பார்க்க துடிக்கின்றனர். அன்று ஒரு திரையரங்கில் இப்படத்தின் போஸ்டர் பார்த்தேன். போஸ்டரை பார்த்தே அரை மணி நேரம் சிரித்தேன். படத்தை பார்த்தால் எவ்வளவு மஜாவாக இருக்கும்!

இப்போது விக்ரமன் படங்கள் அவ்வளவாக ரசிகர்களை கவருவதில்லை. அதை அறிந்தே அவர் விஜயகாந்தை ஹீரோவாக போட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.அவரது சிஷயர்கள் கேஸ் ரவிகுமார் போன்றோர் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கிறார்கள். நாமும் அப்படி எடுக்கவேண்டும் என்று நினைத்து இப்படத்தை அதிக பொருட்செலவில் எடுத்துள்ளார். பாருங்க இந்த ஸ்டில்லை...

பொதுவாக ஒரு கேமிரா வைத்து எடுக்கலாம். ஆனால், ஒரு கேமிராவுக்குள் அதுவும் ஒரு frameக்குள் இருவரையும் கொண்டு வந்திருக்க முடியுமா? ஆக, அநேகமாக ரெண்டு மூணு கேமிராவை வைத்து இந்த ஸ்டில்லை எடுத்து இருப்பார்! ஒரு சின்ன ஸ்டில்லுக்கே இப்படி என்றால்... முழு படத்தை எந்த மாதிரி எடுத்து இருப்பார் என்பதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்! ஆக, அதிக பொருட்செலவு தானே!

விக்ரமன் படம் என்றாலே ஒரு 'லல்லலா லல்லலா..." தீம் மியூசிக் இருக்கும் அதுக்கு சொந்தக்காரர் ராஜ்குமாராக தான் இருப்பார்! ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி! யப்பா... என்ன நடக்கபோகுதே. மனதில் பீதியையும் மீதியை வயிற்று கலக்களால் போக நேரிடும் பேதியையும் நினைத்து பார்த்தாலே... நெஞ்சு பகீர் என்கிறது. அதுவும் இப்படத்தில் "இன்பமே, உந்தன் பெயர் பெண்மையோ" பாடலை ரீமிக்ஸ் செய்து நம்மை இன்னும் ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிட்டது 'மரியாதை'. இப்பாடல் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டதாம்!(கொடுமை.. சரி விடுங்க)

படத்தில் மீரா ஜாஸ்மின், சீனியர் நடிகை மீனா, சீனியரின் சீனியர் நடிகை அம்பிகா... இன்னும் எத்தன ஹீரோயின் இருக்க போறாங்கன்னு தெரியல. மீனா, அம்பிகா.. சரி ஒகே.. வயசாச்சு.. பரவாயில்ல. ஏங்க மீரா ஜாஸ்மீன், உங்களுக்கு ஏங்க இப்படி... ! பாவமா இருக்கு உங்கள நினைச்சா...அவ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படத்தை பார்த்தே தீருவேன் என்று சில நண்பர்கள் ஆவலாய் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட்.
எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், தனஷ்-சிம்பு என்று ஒரு பட்டியல் இருக்கிறது! அந்த வரிசையில் ரீத்தீஷ்-சாம் ஆண்டர்சன் வந்துள்ளனர். ஜே கே ரித்தீஷுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இவருக்கு ஆண் ரசிகர்கள் தான் அதிகம்! யார் ஒருத்தருக்கு பெண் ரசிகர்கள் இருக்கிறதோ அவருக்கு தான் மவுசு அதிகம், நம்ம சூர்யா, மாதவன பாருங்க அந்த மாதிரி. ஜே கே ரீத்திஷ் கலக்கிகொண்டிருக்கிறார் என்று ஒரு புரம் இருக்க, அவரை வீழ்த்த வந்துவிட்டார் சாம் ஆண்டர்சன். நடிப்பிலும் சரி, ஆடல் காட்சிகளிலும் சரி, உணர்ச்சிபூர்வமான காட்சிகளிலும் சரி மனதைவிட்டு நீங்கா இடத்தில் stool போட்டு உட்கார்ந்து இருக்கிறார்.

ஹீரோயினிடம் அவர் இயல்பாய் பேசியதை பார்த்து நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்த பெண் ரசிகர்கள் ஏராளம். அந்த வீடியோவை பாருங்க....



ஹீரோயின் நம்மைவிட அரை அடி உயரம் என்றபோதிலும், தனது வசீகர பார்வையால் ஹீரோயின் மனதில் நமது செருப்புகளிலும் இடம் பிடித்துவிடுகிறார் இந்த கருப்பு மாதவன்! ஹீரோயினிடம் தண்ணி அடிச்சுட்டு பாட சொல்வது தமிழ் சினிமாவின் இன்னொரு புதுமை!

ஆங்கில புலமை கொண்ட விஜய்காந்துக்கே மிரட்டல் விடும் அளவுக்கு எங்கள் மார்டன் சூர்யா ஆங்கிலம் பேசுவது அருமையிலும் அருமை! மஞ்ச காட்டு மைநா என்று பெண்களை பார்த்து பாடும் காலம் மலை ஏறிபோச்சு. வந்துவிட்டார் எங்கள் மஞ்ச காட்டு நைனா!



ஒவ்வொரு படத்தின் ப்ளஸ் அதன் கிளைமெக்ஸ் காட்சியாக இருக்கவேண்டும். அப்படி நிறைய படங்கள் அமைவதில்லை. நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, சேது போன்ற ஒருசில படங்களே கிளைமெக்ஸில் நம்மை உருக வைத்தது. அந்த வரிசையில் இப்படத்தின் கிளைமெக்ஸ் தாய்க்குலங்களின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. இந்த காட்சியை பார்த்த பிறகு, இவருக்கு நிறைய பெண் ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல், 60 அடி உயரத்தில் இவருக்கு ஒரு கட் அவுட், கண்ணம்மாபேட்டையில்!

நமது கலாச்சாரத்தில் புதுமையை புகுத்தி, கல்யாணம் முடிந்து காரை சுற்றி வருகிறார் இந்த பெண்களின் நாயகன்! நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள். ஆக, ஒரு கைகுட்டையை கையில் வைத்து கொள்ளுங்கள்.... இதுக்கு மேல என்னால எழுத முடியல... கண்ணு கலங்கிட்டு!! :(


அவரின் தீவிர ரசிகர்கள் அவருக்கு கொடுக்க போகும் பட்டம் "புரட்சி புறா"

கருத்துகள் இல்லை: