
நன்றி : தினமலர்

நன்றி : தினமலர்
வடமாவட்டங்கள் பாமகவின் கோட்டை. ராமதாஸ் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனைபேரும் இந்தக் கருத்தைப் பரிபூரணமாக நம்புகிறார்கள். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏழு தொகுதிகளும் அதைத்தான் வெளிப்படுத்தியுள்ளன. நிற்க.
கூட்டணி என்பது எதற்காக?
உனக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் எனக்கு ஆதரவு குறைவாக இருக்கிறது. அதேபோல நான் பலமாக இருக்கும் தொகுதிகளில் உன்னுடைய பலம் மிகவும் சொற்பம். நாம் தனித்தனியாகப் போட்டியிட்டால் வாக்குகள் சிதறும். உழைப்பு வீணாகும். சரி. வா. இணைந்து போட்டியிடுவோம். தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வோம். என் தொகுதிகளில் சிலவற்றை உனக்குத் தருகிறேன். உன் தொகுதிகளில் இருந்து எனக்குக் கொஞ்சம் கொடு. வெற்றியைப் பகிர்ந்துகொள்வோம். இதுதான் தேர்தல் கூட்டணிக்கான அடிப்படை. (செல்வாக்கு அதிகம் இல்லாத இடங்களில் கட்சியை வளர்க்க கூட்டணி மூலம் கிடைக்கும் வெற்றி உதவிசெய்யும்)
வடமாவட்டங்களில் பாமக வலுவாக இருக்கிறது என்றால் அந்தக் கட்சி நியாயமாக என்ன செய்யவேண்டும்? தனக்கு ஒதுக்கப்பட்ட ஏழு தொகுதிகளில் வட மாவட்டங்களில் இருந்து நான்கையும் வெளிமாவட்டங்களில் இருந்து மூன்றையும் (குறைந்தபட்சம் இரண்டு) வாங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் கூட்டணிக்கட்சிகள் வலுவாக இருக்கும் தொகுதிகளில் இவர்களுடைய வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் உருவாகும். பாமகவின் வாக்குகளை சக கூட்டணி வேட்பாளருக்கு வழங்கி அவர்களின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
ஆனால் பாமகவின் ஃபார்முலா விநோதமானது. நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவல் கொண்டு வா. இரண்டையும் கலந்து ஊதிப் புடைத்து பகிர்ந்து சாப்பிடலாம். புடைத்த பிறகு கல், கசடோடு உமி பறந்துவிடும். எஞ்சியிருக்கும் சுத்தமான அவலை இருவரும் பகிர்ந்துகொள்ளலாம்.
இந்த ஃபார்முலாவின்படி பாமக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக, இடதுசாரிகள், மதிமுக எல்லோரும் சேர்ந்து வாக்களிப்பார்கள். பாமக வேட்பாளர்கள் சுலபத்தில் வெற்றி பெறுவார்கள். ஆனால் பாமகவுக்கு செல்வாக்கே இல்லாத பிற தொகுதிகளில் சக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அவரவர் வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்க வேண்டும்.
கடந்த காலத் தேர்தல்களில் பாமக கடைப்பிடித்துவரும் வெற்றிகரமான ஃபார்முலா இது. தேர்தலுக்குத் தேர்தல் பாமகவுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது. இதை திமுக புரிந்து கொண்டது. கூட்டணிக்கு வாருங்கள் என்று கேட்க குறைந்தபட்சம் தன்னுடைய மாவட்டச் செயலாளரைக்கூட அனுப்பவில்லை.
கூட்டணி மாறுவது என முடிவெடுத்தார் ராமதாஸ். வருவது வரை லாபம் என்று அதிமுக அழைத்துக் கொண்டது. ஏழு தொகுதிகளையும் அவர்களுடைய கோட்டையிலேயே வழங்கி விட்டது. ராமதாஸ் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார்.
பாமகவின் அவல் - உமி ஃபார்முலாவை அதிமுக தொண்டர்கள் புரிந்துகொள்ளாதவரை எப்போதுமே பாமக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி!
கூட்டணி என்பது எதற்காக?
உனக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் எனக்கு ஆதரவு குறைவாக இருக்கிறது. அதேபோல நான் பலமாக இருக்கும் தொகுதிகளில் உன்னுடைய பலம் மிகவும் சொற்பம். நாம் தனித்தனியாகப் போட்டியிட்டால் வாக்குகள் சிதறும். உழைப்பு வீணாகும். சரி. வா. இணைந்து போட்டியிடுவோம். தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வோம். என் தொகுதிகளில் சிலவற்றை உனக்குத் தருகிறேன். உன் தொகுதிகளில் இருந்து எனக்குக் கொஞ்சம் கொடு. வெற்றியைப் பகிர்ந்துகொள்வோம். இதுதான் தேர்தல் கூட்டணிக்கான அடிப்படை. (செல்வாக்கு அதிகம் இல்லாத இடங்களில் கட்சியை வளர்க்க கூட்டணி மூலம் கிடைக்கும் வெற்றி உதவிசெய்யும்)
வடமாவட்டங்களில் பாமக வலுவாக இருக்கிறது என்றால் அந்தக் கட்சி நியாயமாக என்ன செய்யவேண்டும்? தனக்கு ஒதுக்கப்பட்ட ஏழு தொகுதிகளில் வட மாவட்டங்களில் இருந்து நான்கையும் வெளிமாவட்டங்களில் இருந்து மூன்றையும் (குறைந்தபட்சம் இரண்டு) வாங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் கூட்டணிக்கட்சிகள் வலுவாக இருக்கும் தொகுதிகளில் இவர்களுடைய வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் உருவாகும். பாமகவின் வாக்குகளை சக கூட்டணி வேட்பாளருக்கு வழங்கி அவர்களின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
ஆனால் பாமகவின் ஃபார்முலா விநோதமானது. நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவல் கொண்டு வா. இரண்டையும் கலந்து ஊதிப் புடைத்து பகிர்ந்து சாப்பிடலாம். புடைத்த பிறகு கல், கசடோடு உமி பறந்துவிடும். எஞ்சியிருக்கும் சுத்தமான அவலை இருவரும் பகிர்ந்துகொள்ளலாம்.
இந்த ஃபார்முலாவின்படி பாமக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக, இடதுசாரிகள், மதிமுக எல்லோரும் சேர்ந்து வாக்களிப்பார்கள். பாமக வேட்பாளர்கள் சுலபத்தில் வெற்றி பெறுவார்கள். ஆனால் பாமகவுக்கு செல்வாக்கே இல்லாத பிற தொகுதிகளில் சக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அவரவர் வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்க வேண்டும்.
கடந்த காலத் தேர்தல்களில் பாமக கடைப்பிடித்துவரும் வெற்றிகரமான ஃபார்முலா இது. தேர்தலுக்குத் தேர்தல் பாமகவுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது. இதை திமுக புரிந்து கொண்டது. கூட்டணிக்கு வாருங்கள் என்று கேட்க குறைந்தபட்சம் தன்னுடைய மாவட்டச் செயலாளரைக்கூட அனுப்பவில்லை.
கூட்டணி மாறுவது என முடிவெடுத்தார் ராமதாஸ். வருவது வரை லாபம் என்று அதிமுக அழைத்துக் கொண்டது. ஏழு தொகுதிகளையும் அவர்களுடைய கோட்டையிலேயே வழங்கி விட்டது. ராமதாஸ் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார்.
பாமகவின் அவல் - உமி ஃபார்முலாவை அதிமுக தொண்டர்கள் புரிந்துகொள்ளாதவரை எப்போதுமே பாமக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி!
இந்திய கடல் பகுதியினுள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்த ஒரு தொகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை மீனவர்கள் 24 பேர் கடந்த ஜனவரி மாதம் 30 ம் திகதியளவில், இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் சென்னை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், இந்திய மத்திய அரசாங்கத்தின் பணிப்புரையின் கீழ் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை இந்திய கடலோர காவற்படையினர் தமது படகுகளில் அழைத்து வந்து, இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. TNC
பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பத்து நாடுகள் கலந்து கொள்ள இருக்கும் இந்தப் போட்டிகைள நடத்த தயாராக இல்லை என துபாய் விளையாட்டு நகர் அலுவல் ரீதியாக ஆசிய ஹாக்கி அமைப்புக்கு தகவல் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
2010 உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றாகக் கருதப்படும் இந்தப் போட்டிகளை மலேசியா நடத்த வேண்டும் என ஆசிய ஹாக்கி அமைப்பு கோரியுள்ளது.
பத்து நாடுகள் கலந்து கொள்ள இருக்கும் இந்தப் போட்டிகைள நடத்த தயாராக இல்லை என துபாய் விளையாட்டு நகர் அலுவல் ரீதியாக ஆசிய ஹாக்கி அமைப்புக்கு தகவல் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
2010 உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றாகக் கருதப்படும் இந்தப் போட்டிகளை மலேசியா நடத்த வேண்டும் என ஆசிய ஹாக்கி அமைப்பு கோரியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக