செவ்வாய், 26 மே, 2009

2009-05-26

கல்கியின் வாசகர்கள் யாவருக்கும் சிற்பி என்ற உடனே நினைவுக்கு வருவது ஆயனச் சிற்பியும் அவரது மல்லைக் கனவுகளும்தான். சிவகாமியின் சபதத்தில் சிற்பக் கலைக்கும், நாட்டியக் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கல்கி பொன்னியின் செல்வனில் சோழர்களின் பெருமையையும், இராஜராஜ சோழனின் கலைத் தாகத்தையும் யாவரும் அறியும் படிச் செய்தார். பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து காவிரி மைந்தன் எழுதிய அனுஷாவெங்கடேஷ், சிவகாமியின் சபதத்தை தொடர்ந்து காஞ்சி என்ற ஒரு நாவல் எழுதுவதாக கேள்வி. கல்கி முடிக்காமல் விட்டுச் சென்ற ஆயனச் சிற்பியின் கனவுகளை இவர் நிறைவேற்றுகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். கல்கியின் எழுத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு உருவான பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் இணைந்திருக்கும் நாங்கள், பல்லவர்களும், சோழர்களும் வளர்த்து வந்த சிற்பக் கலையை சாதாரண மக்களும் அறிந்து போற்றச் செய்யவேண்டும் என்று செய்து வரும் முயற்சியில் உருவான ஒன்று இந்த சந்திப்பு.

கல்லிலே கலை வண்ணம் காட்டும் நண்பர் சிங்கை திரு. விஜயகுமார் (VJ) அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கும்பகோணத்தில் வாழ்ந்து வரும் பாரம்பரியம் மிக்க ஸ்தபதி திரு. உமாபதி ஆச்சார்யா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழக இனிமையான இவர், பரம்பரை பரம்பரையாய் தாங்கள் கற்று வரும் சிற்பக் கலையின் இரகசியங்களை, சிற்பங்கள் செதுக்கும் முறையை யாவரும் அறிய வேண்டும், இந்தக் கலையின் முக்கியத்துவத்தை உலகம் அறிய வேண்டும் என்று ஆவல் கொண்டு இந்தப் பேட்டியினை மனமுவந்து அளித்துள்ளார். அமைதியும் பக்தியும் தவழும் இவரது இல்லத்தில் நுழைந்த உடனேயே நாம் புனிதமானதொரு இடத்தில் இருக்கிறோம் என்று உள்மனது அறிவித்தது. அவரும் அவரது சகோதரர் திருவீழிநாதனும் பேசிய விதமும், அவர்களது ஓலைச் சுவடிகளையும், நூல்களையும் பாதுகாக்கும் விதமும், அவர்களது தொழில் கூடத்தை வைத்திருக்கும் விதமும் அதை மெய்பிப்பதுபோல் இருந்தது.

சிற்பசாஸ்திரம், சிற்பங்கள் செதுக்கும் முறை, சிற்பங்கள் செதுக்குவதற்கு முன் தயார் செய்யப்படும் ஓவியங்கள் ஆகியவற்றைப் பற்றி பல ஆச்சர்யமூட்டும் தகவல்களை நம்முடன் பரிமாறிக்கொண்டார். கற்சிற்பங்கள் மட்டுமின்றி உலோகத்தில் சிற்பங்கள் செய்வதிலும் தேர்ந்தவர்கள் என்று அறிந்துகொண்டேன் இந்த சந்திப்பில். மேலும் சிற்ப சாஸ்திரம் சம்பந்தப் பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார், இவர் ஆராய்ச்சிகள், தேடல்கள் வெற்றி பெற வேண்டும் அதனால் இந்தக் கலையின் மகத்துவத்தை உலகோர் யாவறும் அறிந்து பயன் பெறவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு யாம் பெற்ற இன்பத்தை யாவரும் பெறவேண்டுமென இந்த வீடியோப் பதிவினை வழங்குகிறோம்.

பார்த்து மகிழுங்கள், மேலும் தங்களுக்கு சிற்பக் கலையில் இருக்கும் சந்தேகங்களை தவறாமல் எங்களுக்கு அனுப்புங்கள். தங்களுடைய வினாக்களை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் திரு. உமாபதி ஆச்சார்யா அவர்கள்.

Email : svprsk@gmail.com

பாகம் - 1


பாகம் - 2


பாகம் - 3


பாகம் - 4

சந்தேக  நடமாட்டம்  குறித்து  கிடைத்த  தகவலின்  பேரில் இலஙகை  கொழும்பு  வெள்ளவத்தை  போலீஸ்  நடாத்திய தேடுதலின்  போது  ---

Police search

ஓர்  இளைஜன்  ஏழாம்  மடியில்  இருந்து  பாய்ந்து  தற்கொலை செய்துகொண்டார்  ---

அவர்  தங்கிய  அறையில்  இருந்து  ''தற்கொலை  குண்டுதாரி'' அணியும்  மேல்  அங்கிகள் பல  கண்டு  பிடிக்கப்  பட்டுள்ளது --- 

a suicide bomber's explosives.

இச்  செய்தியின்  பின்னணி  என்ன  ?

வெள்ளவத்தை  ஒரு  யாழ்  தமிழர்  பரவலாக  வாழும் பகுதி  ---  கொழும்பில்  இலங்கை  தமிழரது  முக்கியமான பகுதி ---  புலிகளின்  அசம்பாவிதம்  எது  நடந்தாலும் கொழும்பு  போலிஸ்  தேடுதல்  >  கைது  செய்தல்  நடாத்தும் பகுதி  ---

Nachchi Amman Temple in Jaffna, ...

இங்கிருந்து  துப்பு  கொடுபட்டது  புலிகளுக்கு  எதிரான  செயல்  --- 

A Suicide Kit of LTTE Tamil Tigers

கொழும்பில்  தமிழன்  என்றால்  பயங்கரவாதி  என்ற   நிலை  மற்றும்  அமைதியை  குழப்பும்  சூத்திரதாரி என்றும்  எமது  தமிழருக்கு  பட்டம்  சூட்டப்பட்டது எதனாலே ?

முகத்தை  மூடி  அங்கி  அணியும்  முஸ்லிம்களை கண்டு  மற்றைய  மக்கள்  பயப்படுவது  எதனாலே ?

Muslim woman with a purdah,

இவ்  இரண்டுக்கும்  ஒரே  நோக்கில்  விடை
காண்கின்றீர்களா ?

அது  தான் இன்றைய  நிலை  ---  இது  மாறவேண்டும் !

இந்த  நிலை > பொது  அபிப்ராயம்  >  மாறுவதற்க்கு  மாற்றான்  கண்களை  நாம்  மாற்றவே  முடியாது  !!

HONEST MAN

நாமே  மாறி  நேர்மையானவன்  >  கண்ணியமானவன்  >படித்தவன்  >  பண்பானவன்  என்ற  எமது  பழைய  > 
முன்னைய  பெயரை  மீள  பெற்றுக் கொள்ளவேண்டும் !!!

சந்தேக  நடமாட்டம்  குறித்து  கிடைத்த  தகவலின்  பேரில் இலஙகை  கொழும்பு  வெள்ளவத்தை  போலீஸ்  நடாத்திய தேடுதலின்  போது  ---

Police search

ஓர்  இளைஜன்  ஏழாம்  மடியில்  இருந்து  பாய்ந்து  தற்கொலை செய்துகொண்டார்  ---

அவர்  தங்கிய  அறையில்  இருந்து  ''தற்கொலை  குண்டுதாரி'' அணியும்  மேல்  அங்கிகள் பல  கண்டு  பிடிக்கப்  பட்டுள்ளது --- 

a suicide bomber's explosives.

இச்  செய்தியின்  பின்னணி  என்ன  ?

வெள்ளவத்தை  ஒரு  யாழ்  தமிழர்  பரவலாக  வாழும் பகுதி  ---  கொழும்பில்  இலங்கை  தமிழரது  முக்கியமான பகுதி ---  புலிகளின்  அசம்பாவிதம்  எது  நடந்தாலும் கொழும்பு  போலிஸ்  தேடுதல்  >  கைது  செய்தல்  நடாத்தும் பகுதி  ---

Nachchi Amman Temple in Jaffna, ...

இங்கிருந்து  துப்பு  கொடுபட்டது  புலிகளுக்கு  எதிரான  செயல்  --- 

A Suicide Kit of LTTE Tamil Tigers

கொழும்பில்  தமிழன்  என்றால்  பயங்கரவாதி  என்ற   நிலை  மற்றும்  அமைதியை  குழப்பும்  சூத்திரதாரி என்றும்  எமது  தமிழருக்கு  பட்டம்  சூட்டப்பட்டது எதனாலே ?

முகத்தை  மூடி  அங்கி  அணியும்  முஸ்லிம்களை கண்டு  மற்றைய  மக்கள்  பயப்படுவது  எதனாலே ?

Muslim woman with a purdah,

இவ்  இரண்டுக்கும்  ஒரே  நோக்கில்  விடை
காண்கின்றீர்களா ?

அது  தான் இன்றைய  நிலை  ---  இது  மாறவேண்டும் !

இந்த  நிலை > பொது  அபிப்ராயம்  >  மாறுவதற்க்கு  மாற்றான்  கண்களை  நாம்  மாற்றவே  முடியாது  !!

HONEST MAN

நாமே  மாறி  நேர்மையானவன்  >  கண்ணியமானவன்  >படித்தவன்  >  பண்பானவன்  என்ற  எமது  பழைய  > 
முன்னைய  பெயரை  மீள  பெற்றுக் கொள்ளவேண்டும் !!!



1. கணினிக்கு பிராசஸர் என்றாலே இன்டெல்தானா?

AMD பிராசஸரும் மார்கெட்டில் இருக்கு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இன்டெலுக்கு அடுத்து AMD-தான்.

AMD, இன்டெலுக்கு மார்க்கெட்டில் tough fight கொடுப்பதால்தான் ஏதோ நீங்களும், நானும் கணினி வாங்க முடியுது.

இல்லாட்டி நோஞ்சான் பிராஸசரை, அநியாய விலைக்கு வாங்க வேண்டும்.

அதனால்தான், AMD-யை நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பெரிய Thanks சொல்லனும்.

சரி! இப்ப எதுக்கு AMD-யை இழுக்கனும். AMD கம்பெனி ஆரம்பித்து 40 வருடம் ஆகிவிட்டது. Happy Birthday AMD!

அடுத்த 40 வருடத்தில் AMD-யோ இன்டெலோ இருக்குமான்னு சொல்லவே முடியாது. அவ்வளவு வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

2. முக்கி முனகி இப்பத்தான் முதல் முறையாக desktop மார்கெட்டில் 1 சதவீதம் பங்கை லினக்ஸ் அடைந்திருக்கிறது என்று Net Applications என்ற கம்பெனி மதிப்பிட்டு இருக்கிறது.

இலவசமாக கொடுத்தே இந்த நிலைமை. அப்ப லினக்ஸ் அவ்வளவுதானா?

இதை ஆயிரக்கணக்கான சர்வர்களில் லினக்ஸ் மட்டுமே வைத்துக்கொண்டு சர்ச், ஜீமெயில், மேப்ஸ்னு செமையா அமர்க்களம் செய்துகொண்டு, மற்ற கம்பெனிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் கூகிள் கிட்டே போய் கேளுங்க.

3. இந்த எழவு வைரஸ் எப்படிதான் வந்துதோ என்று விஷயம் தெரியாமல் தலையில் அடித்துக் கொள்பவர்களுக்கு இனிப்பான செய்தி.
சாதா சிடி, டிவிடி தவிர வேறு எந்த removable media-விற்கும் விண்டோஸ் 7-லிருந்து autorun வசதி default-ஆக கொடுக்கப் போவதில்லை என்று மைக்ரோசாஃப்ட் சொல்லியிருக்கிறது.

இந்த autorun வசதியை வைத்துக் கொண்டு தன் சந்ததியை இஷ்டத்துக்கு பெருக்கிக் கொண்டு கும்மாளம் அடித்த வைரஸ், மால்வேர், ஸ்பைவேர்லாம் தங்களுக்கு வரப்போற சோதனையை நினைத்து ரொம்பதான் நொந்து போயிருக்கும்.

Don't miss a single post.
Please add this site's RSS feed in Google Reader or any other RSS reader


1. கணினிக்கு பிராசஸர் என்றாலே இன்டெல்தானா?

AMD பிராசஸரும் மார்கெட்டில் இருக்கு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இன்டெலுக்கு அடுத்து AMD-தான்.

AMD, இன்டெலுக்கு மார்க்கெட்டில் tough fight கொடுப்பதால்தான் ஏதோ நீங்களும், நானும் கணினி வாங்க முடியுது.

இல்லாட்டி நோஞ்சான் பிராஸசரை, அநியாய விலைக்கு வாங்க வேண்டும்.

அதனால்தான், AMD-யை நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பெரிய Thanks சொல்லனும்.

சரி! இப்ப எதுக்கு AMD-யை இழுக்கனும். AMD கம்பெனி ஆரம்பித்து 40 வருடம் ஆகிவிட்டது. Happy Birthday AMD!

அடுத்த 40 வருடத்தில் AMD-யோ இன்டெலோ இருக்குமான்னு சொல்லவே முடியாது. அவ்வளவு வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

2. முக்கி முனகி இப்பத்தான் முதல் முறையாக desktop மார்கெட்டில் 1 சதவீதம் பங்கை லினக்ஸ் அடைந்திருக்கிறது என்று Net Applications என்ற கம்பெனி மதிப்பிட்டு இருக்கிறது.

இலவசமாக கொடுத்தே இந்த நிலைமை. அப்ப லினக்ஸ் அவ்வளவுதானா?

இதை ஆயிரக்கணக்கான சர்வர்களில் லினக்ஸ் மட்டுமே வைத்துக்கொண்டு சர்ச், ஜீமெயில், மேப்ஸ்னு செமையா அமர்க்களம் செய்துகொண்டு, மற்ற கம்பெனிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் கூகிள் கிட்டே போய் கேளுங்க.

3. இந்த எழவு வைரஸ் எப்படிதான் வந்துதோ என்று விஷயம் தெரியாமல் தலையில் அடித்துக் கொள்பவர்களுக்கு இனிப்பான செய்தி.
சாதா சிடி, டிவிடி தவிர வேறு எந்த removable media-விற்கும் விண்டோஸ் 7-லிருந்து autorun வசதி default-ஆக கொடுக்கப் போவதில்லை என்று மைக்ரோசாஃப்ட் சொல்லியிருக்கிறது.

இந்த autorun வசதியை வைத்துக் கொண்டு தன் சந்ததியை இஷ்டத்துக்கு பெருக்கிக் கொண்டு கும்மாளம் அடித்த வைரஸ், மால்வேர், ஸ்பைவேர்லாம் தங்களுக்கு வரப்போற சோதனையை நினைத்து ரொம்பதான் நொந்து போயிருக்கும்.

Don't miss a single post.
Please add this site's RSS feed in Google Reader or any other RSS reader


More than a Blog Aggregator

by கிருஷ்ணா


பல்லவி
சரவண பவ என்னும் திருமந்திரம்..
அதை நாளும் சொல்ல எங்கள் துயர் தீர்ந்திடும்..
அறுபடை மலை வாழும் அருட்குமரா..
உன்னை எண்ண எண்ண நெஞ்சில் இருள் நீங்கிடும்.. X 2

(சரவண பவ..)

சரணம்
கர்வம் என்ற பாம்பினை..
அடக்கியாளும் மயில் துணை..
பாதையில் தொல்லை நீங்கவே..
வெற்றி தரும் வேல் துணை..

சூரனை வதமும் செய்திட..
சிவனின் நெற்றிக் கண்ணிலே
உதித்து வந்த கார்த்திகேயா..
ஈசனின் இளைய மைந்தனே..

இச்சை வடிவான வள்ளி..
ஒருபுறம் கை சேர..
கிரியை எனும் தெய்வானை..
மறுபுறம் தோள் சேர..

இருப்பதெல்லாம் உன் பொருளே..
நடப்பதெல்லாம் உன் செயலே..
கேட்பதெல்லாம் உன் புகழே..
காண்பது எல்லாம்.. உன் அழகே..
முருகா.. முருகா.. முருகா.. முருகா.. –-2x (சரவண பவ..

(இருப்பதெல்லாம்..

பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசைவட்டு : புளிசாதம்


கருத்துகள் இல்லை: