செவ்வாய், 26 மே, 2009

2009-05-26


காம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் டிரினிடி கல்லூரியில் அவர் படித்துக்கொண்டிருந்தகாலத்தில் அந்த கல்லூரியின் நான்கு வாசல்களிலும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு சீருந்துகள் நிற்குமாம். அந்த நாட்டு இளவரசனுக்கே ஒரு சீருந்து தானாம்.

இந்த செய்தி உண்மையா கற்பனையா என்று தெரியவில்லை, ஆனால் அந்த அளவு வசதியுள்ளவர் அவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு வசதியிருந்தும், அவர் 9 வருடங்கள் சிறையில் கழித்தார் - தனக்காக இல்லை, தனது நாட்டின் விடுதலைக்காக…

No tags for this post.

Related posts

  • No related posts.
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23,24-05-2009 இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் படக்காட்சிகள்...


மதுரை காமராசர் பல்கலைக்கழகம்


அரங்கில் உள்ள பேராளர்கள்


அரங்கில் உள்ள பேராளர்கள்


ஆய்வுக்கோவை வெளியீடு


துணைவேந்தர் இரா.கற்பகக்குமாரவேல்


கவிஞர் சிற்பி அவர்கள்


துணைவேந்தர் சபாபதிமோகன் அவர்கள்


பேராசிரியர் ஆறு.அழகப்பன் அவர்கள்


துணைவேந்தர் திருவாசகம் அவர்கள்


திருக்குறள் ந.மணிமொழியன்


பேராசிரியர் சுபாசு அவர்கள்


இசையறிஞர் மம்முது அவர்கள்


மு.இளங்கோவன் தமிழும் இணையமும் தலைப்பில் உரை


மு.இளங்கோவனுக்கு அறிஞர்கள் சிறப்பு செய்தல்
இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார் விடுதலைப் புலிகள் சிலர் அகதிகள் முகாம்களில் ஊடுருவியிருப்பதாகவும், சிலர் வன்னிக் காடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் மேலும் சிலர் கிழக்கே சிறு குழுக்களாக இருப்பதாகவும் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக

கூறியஅவர், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும்விடுதலைப் புலி உறுப்பினர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சரணடைய முடியாது -விடுதலைப் புலிகள்

காவல் துறை கேட்டுக் கொண்டது போல தாம் சரணடைய முடியாது என்று பிபிசி தமிழோசையிடம் கூறிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன், நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் சிறு சிறு குழுக்களாக விடுதலைப் புலிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

தமது துப்பாக்கிகளை மவுனிப்பது என்ற நிலை நீடித்தாலும் கூட, மக்களின் தேவைகளுக்காக அரசியல் முன்னெடுப்புக்களில் பங்கு பெறுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளதாகவும் தயா மோகன் கூறினார்.
வன்னியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிக்க ஒரு நாளைக்கு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. WORLD VISION தொண்டு நிறுவனமே தற்போது வன்னி மக்களுக்கான உணவு மற்றும் குடி நீர் என்பனவற்றை விநியோகித்து வருகிறது. ஒரு தனி நபருக்கு $3.50 டாலர்கள் ஒரு நாளைக்கு தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

சுமார் 300,000 பொதுமக்கள் அகதிகளாகி 4 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந் நிறுவனம், தனது கையிருப்பில் இருந்த அனைத்து நிதிகளையும் இலங்கைக்கு செலவழிப்பதாகக் கூறியுள்ளது. இத் தொண்டு நிறுவனம் தற்போது, ஜ.நா மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களை தமக்கு நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இடம்பெயர்ந்து அல்லலுறும் சுமார் மூன்று லட்சம் மக்களில் 90,000 பேர் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. இதில் அனாதைச் சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்றிருக்கும் யுத்தக்குற்றங்கள் சுதந்திர அமைப்பினூடாக விசாரிக்கப்படவேன்டும் என நவனீதம் பிள்ளை வேண்டுகோள்
அம்மா ஒரு நாள் வீட்டிற்கு வருவா என தடுப்பு முகாம்களில் பல சிறார்கள் காத்திருக்கின்றனர்..... என்ன கொடுமை இது, அவர்கள் இறந்ததைக் கூட விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக எமது சிறார்கள் தடுப்பு முகாம்களில் தமது தாய் தந்தையர் ஒரு நாள் வருவார்கள் எனக் காத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் புல்மோட்டை தடுப்பு முகாமிற்கு விஜயம்செய்த, பணியாளரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கண்ணீர் மல்க கூறிய கதை நெஞ்சை உருக்கியது. தடுப்பு முகாம்களில் பல குழந்தைகள், தமது சகோதரருடன் இருப்பதாகவும், அவர்களின் தாய் தந்தையர் இறந்த விடையம் தெரியாத நிலையில் அவர்கள் ஒரு நாள் தம்மை பார்க்கவருவார்கள் என்று கூறியவாறு, அரை குறை உடுப்புடன் அங்கே சிறார்கள் இருப்பதாக ஒரு வெளிநாட்டவர் குறிப்பிட்டார்.

அந்தச் சிறார்களுக்கு தமது தாய் தந்தையர்கள் இறந்திருப்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் கூடவராத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம் பெயர் வாழ் எம் உறவுகளே, நீங்கள் விரும்பினால் அவர்களில் ஒருவரை தத்தெடுத்து வளக்கலாம். வீட்டிற்கு ஒருவராக நாம் அவர்களை தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிகள் பாதுகாக்கப் படுவார்கள். சற்றே சிந்தியுங்கள், ஒரு அமைப்பை உருவாக்கி அல்லது ஏற்கனவே சிறார்களுக்கு உதவும் ஒரு அமைப்பினூடாக இவர்களை தத்தெடுக்க ஆவணம் செய்யுமாறு அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

கருத்துகள் இல்லை: