சனி, 1 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-01



More than a Blog Aggregator

by பொடியன்-|-SanJai








இந்திய இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட் டுக்கான வரம்பை 26 சதவீ தத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய் துள்ளது. இன்சூரன்ஸ் துறையை காவுகொடுக்கும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாடு முழுவ தும் இன்சூரன்ஸ் ஊழியர் கள் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளியன்று காலை செய்தியாளர்க ளிடம் பேசுகையில் இன்சூ ரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டுக்கான வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்த வகை [...]
கடந்த அறுபது ஆண்டு காலமாக தொடர்ந்து சிங்கள இனவெறி அரசினால் பாதிக்கப்பட்டு, உரிமை மற்றும் உடமை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களின் மீது இராணுவ அடக்கு முறைகளைக் கையாளும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும், இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதை வலியுறுத்தியும் மகாராஷ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் அடையாள உண்ணாவிரதம் தானே தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்றது. 

அது நீலமோ,சாம்பலோ
தெரியவில்லை
இரண்டும் கலந்தவோர்
அடர்நிறம் போர்த்திய அதிகாலை !

ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும் !

அடர்ந்த வனாந்தரத்துள்
மெல்லிய துயரத்தோடு
தனித்தாடும் ஆண்மயிலின்
இறகுகளின் முனையில்
அந்நிறத்தைக் காணலாம் !

அன்றியும் ,
மாலைவெயிலை
எதிர்கொண்டு நடக்கையில்
சட்டெனத் திரும்பிப்பார்ப்பீர்களாயின்
நிழலில் ஒரு கணம் - அந்
நிறம் தோன்றக்கூடும் !

வனம் கலைத்துச் செல்லும் பறவை
வான்வெளியில்
சிறகுதிர்த்துச் செல்வது போல
உங்கள் மனப்பரப்பில்
அந்நிறம் இப்பொழுது
கிளைபரப்பத் தொடங்கியிருக்கும் !

தொலைதூரப் பெருங்கடல்
தொடுவானுடன் சங்கமிக்கும்
புள்ளியொன்றில் தோன்றுமே…
அதே நிறம்தான் !

விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும் !
அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !

- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை,
இலங்கை.

“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Thanks:Piravakam@googlegroups.com
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

      
நம்மைத் தெரிந்து கொள்வது என்றால் உலகத்தோடு நமக்குள்ள உறவை, அதாவது கருத்துலகம் மக்கள் உலகம் மட்டுமின்றி இயற்கை மற்றும் நம்முடைய உடைமைகள் ஆகியவற்றோடும் நமக்குள்ள உறவைத் தெரிந்து கொள்வது என்பதாகும். அது தான் நம் வாழ்க்கை. வாழ்க்கை என்பது முழுமையோடு கொண்டுள்ள உறவுத் தொடர்பு. அந்த உறவை விளங்கிக் கொள்வதற்கு ஏதாவது நிபுணத்துவம் தேவைப்படுகிறதா? இல்லை என்பது தெளிவு. என்ன தேவைப்படுகிறது என்றால் வாழ்வை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திவிட்டு வந்து பேசுங்க:ள் என்றெல்லாம் நீட்டி முழக்கினர் அதன் பொத்க்குழுவினர். ஆமால் அதையெல்லாம் மீறி இயக்குநர் பாரதிராஜா அவர்களை விமர்சித்தார் நடிகர் ராதாரவி.
அதையெல்லாம் விடக் கொடுமை... குழப்பத்தின் உச்சம்....
"இலங்கைத் தமிழர்களை, இலங்கை வாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டும்; அப்படி அழைத்தால் இந்தியா உதவும்" என்று ஏதோ ஒரு கூமுட்டை கூறியதை வழிமொழிந்து உணர்ச்சிகரமாக அந்தக் கருத்தை ஆதரித்து. ராதாரவி பேசிக் கொண்டிருந்தார் அப்போது போராட்டத்தை வாழ்த்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அரங்கத்தில் நுழைந்துகொண்டிருந்தார். ராதாரவி பேசியதும், அடுத்து திருமா அவர்களை வருங்கால நடிகர்சங்க உறுப்பினர் என்று வரவேற்று எங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வாழ்த்திப்பேச அழைத்தார்கள். வந்தார்... "உங்கள் கட்டுப்பாட்டை மதிக்கிறேன் அதே நேரத்தில், ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்றழைத்தால் தான் இந்திய அரசு உதவும் என்றொரு கருத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் இந்தியர்கள் அல்லர்; பூர்வகுடித் தமிழர்கள்" என்ற உண்மையை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் குழப்ப வாதிகளுக்கு பதில் சொல்லிவிட்டு ரூ.50000 நன்கொடையும் வழங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
நடிகர்கள் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: