சனி, 1 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-01

மன்சூரின் நக்கலுக்கு தான் சரியானகைத் தட்டல்.
பெரிதாக உணர்சிவசப்படுவார் என ராதாரவி முன்னரே எச்சரிக்கை விடுத்ததும்,மைக்கின் முன் வந்தவுடன் பேச முடியாத ஊமை போல் நடித்து அசத்தினார். பின்னர் என் சகோதரனின் துயரத்தை பேசகூடமுடியவில்லை என்று சூடாக பேசினார். ஆவேசமாக பேச கூடாது என்ங்கிரீர்களே,பின் ஏன் சினிமாவில் கதாநாயகன், வில்லனை அடிக்க வேண்டும். ஐயா ஐயா நீங்க ரொம்ப நல்லவரு தயவுசெய்து ஹீரோயின விட்ருங்க என்று கெஞ்ச வேண்டியது தானே. 
பாயிண்ட் எனக்கு சரியா தான் படுது. ஒரு வில்லன் நடிகருக்கு இருக்கும் மனிதநேயம் கதாநாயகர்களுக்கு இல்லை. 

நடிகரல்லாது ஆனாலும் நடிகர்களை பாராட்ட வந்த வெள்ளையனை எல்லா நடிகர்களும் பாராட்டினர்.

அஜித் உண்மையிலேயே சாப்பிடால் வந்திருப்பார் போல,அவரால் உட்கார்ந்திருக்கவே முடியவில்லை.

மற்றவர்கள் பேவதை காட்டிலும் ரஜினி,கமல் பேசுவதையே அடிக்கடி காட்டி கொண்டிருந்தார்கள்.

ரஜினி எந்திரனுக்கு தயாராகி விட்டார் போல மழுமழு என்று வளித்து கொஞ்சம் வயதை குறைத்திருந்தார்.

மனோரமா ஆச்சி காலை ஏழு மணிக்கே வந்திருந்து தன் இனத்தின் மீதுள்ள பாசத்தை காட்டியுள்ளார்.

ராதாரவி யாரையும் சூடாக பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு பயங்கர சூடாக பேசினார்.  அரிதாரம் பூசியர்கள் கூட்டத்திற்க்கு வர வேண்டாம் என்று சொன்னவர்களை சாடினார். அது யாரென்று தெரியவில்லை.  இயக்குனர்கிங்க்கே வெளிச்சம்.

பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி விளம்பரம் போட்டு உயிரை வாங்கிய சன் நிறுவனத்துக்கு திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமையை தரக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

மீண்டும் ராதாரவி
 இலங்கை வாழ் தமிழர்களுக்கு இன ரீதியாக பாகுபாடுகாட்டப்படுகிறது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக ஒருவன் தூக்குமேடையிடம் சண்டையிட்டு கொண்டிருக்கிறான். அவனுக்காக இந்தியாவே குரல் கொடுக்கிறது. ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் சகோதரனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே குரல் கொடுக்கப்படுகிறது. அதனால் இனி அவனை ஈழதமிழன் என்று அழைக்கவேண்டாம். அவனை இலங்கை வாழ் இந்தியன் என்று அழைப்போம்.

திருமாவளவன்
ராதாரவி சொன்னது போல் இலங்கை வாழ் தமிழர்கள் வந்தேறிகள் அல்ல!
அவர்களது பூர்வீகமே இலங்கை தான். சிங்களர் தான் வந்தேறிகள். 

திருமா சொல்வது உண்மையென்றாலும் நமது பக்கத்து நாட்டில் கண்முன்னே நடக்கும் இன படுகொலைகளை பார்த்து கொண்டிருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு அழகல்ல


01.11.2008. சீன உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்ட வெனிசுலாவின் செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வெற்றிகரமாக சுற்றத் துவங்கியது. தென் அமெரிக்க விடுதலையின் நாயகன் என்று அழைக்கப்படும் சைமன் பொலிவாரின் பெயரை அந்த செயற்கைக்கோளுக்கு வெனிசுலா அரசு சூட்டியது. 15 ஆண்டு காலம் விண்ணை வலம் வரவிருக்கும் இந்த செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான திட்டம் 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அனைத்து தென் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியத்தீவு நாடுகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும். தொலைத்தொடர்புத்துறையில் பெரும் அளவு மாற்றத்தை இந்த செயற்கைக்கோள் ஏற்படுத்தும் என்று [...]

நம்மை சுற்றிலும் இருந்த கதை சொல்லிகளின் கதைகளைக்கேட்டே வளர்ந்த பால்யங்களைக் கொண்டிருந்ததாலோ என்னவோ, கதை கேட்பதைக்குறித்தான அலுப்பேதுமின்றியே நான் வளர்ந்திருக்கிறேன்.

தாட் தாட் என குதிரையில் சென்ற இராஜகுமாரன் முதல் பள்ளியின் நான்கு வாசல்களில் எந்த வாசல் வழியே மகன் வந்தாலும் ஏறிச்செல்வதற்கு ஏற்றாவாறு அத்தனை வாசல்களிலும் சாரட் வைத்து காத்திருந்த நேருவின் கதை வரை தந்தை சொல்ல கேட்டதுண்டு, இப்போதும் கதை சொல்லும் என் மகவுகளின் வார்த்தை சரிவிலேயே என் இரவு எப்போதும் கரை தட்டும்.

ஆனாலும் முன் முடிவுகளைத்தராத கதைகளையெதையும் நான் அதிகம் கண்டதில்லை. பல சமயம் சம்பவங்களின் கோர்ப்பு முடிவுகளின், கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்களை தானாக ஈன்றெடுத்து விடும். சிலசமயம் தத்துவ விசாரங்கள் முன் சொன்ன, படித்திருந்த, கேட்டிருந்த, நம் மனம் யோசித்திருந்த தளங்களை கண்முன்னே காட்டிச்செல்லும்.

வாசிப்புகளின் தேர்வு குறித்தான கர்வம் எப்போதும் எந்த வாசகனுக்கும் இருக்காமலிருந்ததில்லை. என்னுள்ளும் எத்தனையோ கர்வங்களை விதைத்துச்சென்றிருந்த புத்தக வரிசைகளுண்டு ஆனாலும், வாசிப்பு முடிந்தும் அடுத்திப்போது என்ன செய்ய வேண்டுமென்ற எந்த யோசனையையும் கொண்டு தராது மின் விளக்குகள் போன நொடியில் ஏற்படும் மையிருட்டுக்கு கண்கள் பழகுவதற்கு முன் ஏற்படும் ஒரு அமைதியையும், குளுமையையும், அதே சமயம் குழப்பத்தையும் ஏற்படுத்தியது
மௌனியின் கதைகள்.

மொத்தம் 24 கதைகளோடு சிறு பத்திகளும் சேர்ந்து மொத்தம் 336 பக்கங்கள் நம் அகவெளியின் எத்தனையோ அடுக்குகளில் இது வரை புதைந்திருந்த காதலை, குழப்பத்தை, பயத்தை, நகைச்சுவையை, தேடலை, வாழ்க்கை குறித்த முன் முடிவுகளை, மிகவும் நுண்ணிய உணர்வுகளை எந்த ஒப்பனைகளுமற்று என் முன் நடமாட வைத்தது. அடுத்து இது தான் என்ற எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வொட்டாது வெறுமே பார்வையாளனாக நம்மை இருக்க வைத்து கதைகள் தானே நகர்ந்து செல்கிறது என்று சொல்லலாம்.

அவரது கதைகள் வெளிக்கிட முடியாத மனோ உணர்வுகளின் அணிவகுப்பு. நிராகரிப்பும், காதலும், சாவும், வாழ்வும் ஒரே நோக்கில் எந்த பாகுபாடுகளுமின்றி காட்சிப்படுத்தப்படுகிறது. அக்காலத்தில் புனிதப்படுத்தப்பட்ட எத்தனையோ உறவுகளை, நிலைகளை கேள்விக்குறியாக்கும் அவரது பார்வைகள் எத்தனையோ வருடங்களுக்குப் பின்பும் விகசிக்கவைக்கிறது. வாழ்க்கை குறித்த சாமானியனின் பார்வையோடு அகத்தேடல்கள் நிறைந்த ஒரு ஞானியின் பார்வையும் இணைந்த நாயகபாவம் அவரின் கதைகளில் கண்கூடாக காணமுடிகிறது. பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்பில் தொக்கி நிற்கும் பால் வேறுபாட்டை மௌனியின் எழுத்துக்களில் நம்மால் தேடினாலும் உணரமுடிவதில்லை. பெண்களைக்குறித்தான அவரது பார்வைகள் அசாதராணமானது. மிகுந்த நிதானமான சிந்தனை மிகுந்த கதா நாயகிகள் இவரது எழுத்துக்களில் பளிச்சிடுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த கதைகள் எத்தனையோ உண்டு. எப்போது வாசித்தாலும் அப்போது புதியதாய் புரிந்து கொள்ள அடுக்கடுக்கடுக்காய் இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது அவ்வெழுத்துக்கள்.

ஒரு நாயகனின் வாழ்வின் பல்வேறு சம்பவங்களின் தனித்தனி வெளிப்பாடாகவும் இக்கதைகளைக் கொள்ளலாம். முடிவில் ஒவ்வொரு கதைக்கும் உண்டான தொடர்பான சம்பவங்களைக்கொண்டு மற்றொரு கதையை கோர்க்க முயன்றால் அத்தனை கதைகளும் ஒரே சங்கிலியில் வந்து சேரும். நகுலனின் எழுத்துக்களிலும், கோபி கிருஷ்ணணின் எழுத்துக்களிலும் இத்தகைய தன்மையை கண்டிருந்தாலும் மௌனியின் கதைகள் சொல்லும் அகவெளி நமக்கு மிகவும் நெருக்கமாயிருப்பதாகவே படுகிறது. சாமானியனின் மன ஓட்டங்களை பதிவித்து சென்றுள்ளத்ய் இவ்வெழுத்துக்கள்.

ஒவ்வொரு கதைகளும் பிரசுரமாயிருக்கும் ஆண்டுகளின் குறிப்புகளும் இருப்பது நமக்கு அந்தக்கதை நிகழ்வுகளின் கால ஓட்டத்தை உணர்ந்து கொள்ள வெகு எளிதில் ஏதுவாகிறது. அத்தனை கதைகளைப்பற்றியும் எழுதும் ஆசையிருந்தாலும், ஒரு சில கதைகளை குறித்து மட்டுமாவது விரிவாக எழுதும் எண்ணமிருக்கிறது பார்ப்போம்.. எவ்வளவு தூரம் முடிகிறதென்று...


நண்பர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நமது விவாதகளத்தில் குறிப்பிட்ட செய்தி ஒன்று அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்பதால் இங்கு அதை பதிவாக பதிவு செய்கின்றேன். நன்றி முஹம்மது இஸ்மாயீல். ஹ

******************

 

மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு October 13, 2008

மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன. கடலுக்கடியில் பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.

 

1. http://www.paristamil.com/tamilnews/?p=15315

2. http://www.tamilnews.dk/article/SpecialNews/6722/

3. http://www.ajeevan.ch/content/view/6565/11/

30 Oct 2008
03:33 PM IST

மேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஏனெனில் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின் வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான அதிர்வுகளை மட்டுமே உணர முடியும். ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின் போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த http://www.petquake.org என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008 to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

இந்தியதட்டைப்பற்றிய விக்கிபீடியாவின் பக்கம்.

http://en.wikipedia.org/wiki/Indian_Plate

என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை (Number) என்னுடைய +919442093300 என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை எங்களின் “ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை” யின் (http://www.ina.in/itws/) தகவல் தளத்தில் இணைத்து விடுவேன். அதன் பிறகு “இறைவன் நாடினால்” உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை இன்று வரை முன்னறிய எந்த தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க எங்களால் முடிந்த 100% இலவச சேவையாகும்.ஏனெனில் எங்களைப் பொருத்தவரை சில நானொகிராம் எடை கொண்ட அமீபாவாகட்டும் அல்லது பல டன் எடை கொண்ட நீலத்திமிங்கலமாகட்டும் இரண்டுமே ஒன்றுதான். இவை இரண்டிற்க்கும் அந்த “உயிர்” என்னும் விஷயம் போய் விட்டால் அதன் இயக்கம் நின்று போய் செத்து மிதந்து விடும். இதில் மனிதன் என்ற உயிரினமும் அடங்கும். என்ன சொல்வது சரிதானே?

உங்களின் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதென்ன “இறைவன் நாடினால்” ? இதற்கான விளக்கம் இதே,பெரும் பூ்கம்பங்களின் பொழுது கடலடியில் மனிதர்களால் போடப்பட்டிருக்கும் ஒளிவடக்கம்பிகள் (Fiber Optic Cable) பூமித்தட்டுகளின் நகர்வால்அறுந்து போக வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே பல முறை இது போல நடந்துள்ளது.உலகின் பெருமளவு தகவல் தொடர்பு இந்த ஒளிவடக்கம்பிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. மேலும் ஒளிவடக்கம்பிகள் அறுபட்ட அச்சமயத்தில் தகவல்கள் (Datas) அனைத்தும் செயற்கைகோள்களின் வாயிலாகவே அல்லது மற்ற அறுபடாத ஒளிவடக்கம்பிகளின் வளைய இணைப்பின் (OFC Ring Network) மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.இதனால் அச்சமயத்தில் பிணையத்தில் பெருமளவு தகவல் நெரிசல் (Network Congestion) ஏற்ப்பட்டு அனுப்பட வேண்டிய தகவல்கள் சேருமிடத்திற்க்கு கால தாமதமாக (Network Delay and Packet Latency) வந்து சேரும் அபாயம் உண்டு. மேலும் அந்நேரத்தில் சூரியனால் மின்காந்தப்புயல் ஏற்ப்பட்டால் (Solar Flare) செயற்கைகோள்களின் வாயிலாக நடைபெறும் தகவல் பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படும்.எங்களது சேவைக்கான கணணிகள் உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தாலும் சரியான நேரத்தில் குறுந்தகவல் வந்து சேரும் என்பதற்க்கு எந்த ஒரு உறுதியும் தரவியலாது. அதனால் தான் உங்களிடம் அப்படி கூறினேன்.இதைத்தான் விஞ்ஞானத்தில் நிச்சயமற்றதன்மை (Uncertainty) எனக்கூறுவார்கள். ஆதலால் இதன் பொறுப்பினை அந்த ஆதி இறையிடமே ஒப்படைத்து விட்டோம். வேறன்ன செய்ய ?

சுருங்க கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள, மனித இனம் State of Art - Cutting Edge Technology என்று பீற்றி கொள்ளும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இயற்கையின் சக்திக்கு முன்னால் State of Worst - Rusted Edge Technology தான். இதுதான் நிதர்சனமான உண்மையுங்கூட. இந்த விஷயத்தில் உலக வல்லரசு ஆகட்டும் அல்லது வல்லூறு அரசு ஆகட்டும். அனைவரின் நிலையும் ஒன்றுதான். நாம் யாரையும் குறை கூறவியலாது. அந்த ஆதி இறை எதை நிர்ணயம் செய்த்தோ அது நடந்தே தீரும். ஆகவே நாங்கள் உங்களைனைவரையும் வேண்டிக்கொள்வது ஒரெ விஷயம்தான். நீங்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாகவே அல்லது அந்த ஆதி இறையே இல்லை எனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் சில நொடிகள் உங்களின் தூய ஆழ்மனத்தினால் எங்களின் இந்த சிறிய முயற்சி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது வாழ்த்துங்கள்.அது போதும் எங்களுக்கு.தனி மனிதனின் பிரார்த்தனையின் அதிர்வை விட அனைவரின் பிரார்த்தனைக்கான அதிர்வனாது மிக அதிகம். இப்பிரபஞ்சத்தில் ஒளியை (Light) விட வேகமானது மனதின் வேகம்.அதன் ஆற்றலும் அபாரமானது. இது நாங்கள் கண்டுணர்ந்த உண்மை.

இதற்கென ஹிந்து கோவிலிலே, யூத ஸவுலிலே, புத்த விகாரையிலே, கிறிஸ்த்தவ சர்ச்சிலே, இஸ்லாமிய மசூதிக்குள் அல்லது சீக்கிய குருத்துவாராவிலே சிறப்பு பிரார்த்தனைகள் தேவையில்லை.அது தேவையற்றதும் கூட. எங்களுக்கு இந்த கடவுள் & கோ மீது சிறு பயமுண்டு. ஏதாவது சிறு காரணத்தை காட்டி இந்த கடவுள் & கோ மக்களிடையே பெரும் பிளவை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். மேலும் இப்பிரபஞ்சத்தை அளவிடும் போது நம் பூமியானது மிகச்சிறிய மண்ணுருண்டை தான். அந்த மண் உருண்டையின் ஏதோவொரு சிறு பகுதியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி வசிக்கின்றது என்பது அசாத்தியமானது.ஆகவேதான் நாங்கள் மறுபடியும் உங்களின் ஆழ்மனத்திலிருந்து அந்த ஆழ்மனத்தில் வசிக்கும் மனசாட்சி வழியாக பிரார்த்திக்க வேண்டுகிறாம். இதைவிட சிறப்பான கருவி இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தியிடம் தொடர்பு கொள்வதற்க்கு இப்பிரபஞ்சத்தில் வேறொங்கும் இல்லை. அந்த யோகனா (யூனுஸ் நபி) சமூகத்தை போல, தற்போதைய சமூகமும் பேரழிவில் இருந்து தப்புமா என்று பார்ப்போம். இதற்க்கு காலம் தான் சரியான பதில் தரும்.

இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்திற்க்காக
(Indian Techies Zone)

முஹம்மது இஸ்மாயீல். ஹ,
Muhammad Ismail .H, PHD,
+919442093300

 

************
Thanks:Pkp.blogspot.com

      
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திவிட்டு வந்து பேசுங்க:ள் என்றெல்லாம் நீட்டி முழக்கினர் அதன் பொத்க்குழுவினர். ஆமால் அதையெல்லாம் மீறி இயக்குநர் பாரதிராஜா அவர்களை விமர்சித்தார் நடிகர் ராதாரவி.
அதையெல்லாம் விடக் கொடுமை... குழப்பத்தின் உச்சம்....
"இலங்கைத் தமிழர்களை, இலங்கை வாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டும்; அப்படி அழைத்தால் இந்தியா உதவும்" என்று ஏதோ ஒரு கூமுட்டை கூறியதை வழிமொழிந்து உணர்ச்சிகரமாக அந்தக் கருத்தை ஆதரித்து. ராதாரவி பேசிக் கொண்டிருந்தார் அப்போது போராட்டத்தை வாழ்த்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அரங்கத்தில் நுழைந்துகொண்டிருந்தார். ராதாரவி பேசியதும், அடுத்து திருமா அவர்களை வருங்கால நடிகர்சங்க உறுப்பினர் என்று வரவேற்று எங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வாழ்த்திப்பேச அழைத்தார்கள். வந்தார்... "உங்கள் கட்டுப்பாட்டை மதிக்கிறேன் அதே நேரத்தில், ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்றழைத்தால் தான் இந்திய அரசு உதவும் என்றொரு கருத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் இந்தியர்கள் அல்லர்; பூர்வகுடித் தமிழர்கள்" என்ற உண்மையை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் குழப்ப வாதிகளுக்கு பதில் சொல்லிவிட்டு ரூ.50000 நன்கொடையும் வழங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
நடிகர்கள் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்
திராபை(-:

கருத்துகள் இல்லை: