வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-17

புலிகளின் நிர்வாகக் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டார்.
இலங்கை வரலாற்றில் நாட்டின் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தது இதுவே முதற் தடவையாகும்.

நேற்றுக் காலை 10 மணியளவில் விசேட ஹெலிகொப்டர் மூலம் கிளிநொச்சிக்குச் சென்ற ஜனாதிபதியை இராணுவத்தின் 57 ஆம், 58 ஆம் படைப் பிரிவுகளின் கட்டளைத் தளபதிகள் வரவேற்றனர்.

அங்கு படையினருக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி, படையினருடன் புத்தாண்டு பாற்சோறு உண்டு மகிழ்ந்தார். அதன் பின்னர், ஒவ்வொரு படையணியும் மனிதாபிமான நடவடிக்கையில் இதுவரை கடந்து வந்த பயணம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

"உலகில் ஆயுத ரீதியாக முதலாவது கெரில்லா இயக்கமாக விளங்கிய புலிகள் இயக்கத்திடமிருந்து படையினர் கைப்பற்றிய ஆயுதங்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, படையினர் கைப்பற்றிய பிரதேசங்களையும், புலிகளால் அழிக்கப்பட்ட பிரதேசங்களையும் பார்வையிட்டார்" என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. அதேநேரம், புலிகளின் தலைமையகம், சமாதானச் செயலகமாக செயற்பட்ட இடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் கிளிநொச்சிக்கு முதன் முதலாக விஜயம் செய்தமை வரலாற்றில் முக்கியத்துவமான நிகழ்வாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். படையினரின் நடவடிக்கைகளுக்காக அவர்களை ஜனாதிபதி பாராட்டியதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நிலவரங்களை நேரில் தெரிந்து கொண்ட ஜனாதிபதி, வன்னிப் படைத் தலைமையகத்திற்கும் சென்று அதிகாரிகளையும், வீரர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். தலைமையகத்தின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

கிளிநொச்சி விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதிக்கும். ருவான்வெலிசாயவுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அவரின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால்,
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவுக்கு சென்று அங்குள்ள தலைமைகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவருகின்றது. ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி ஒன்று வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். அது குறித்து அரசாங்கத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்திருந்தனர். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை என்றே அரசாங்கம் கருதுகின்றது.

முதலில் ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதன்பின்னரே அவர்கள் ஏனைய விடயங்கள் குறித்து ஆராயவேண்டும். காரணம் பிரச்சினைகளுக்கான தீர்வை இரு தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே காண முடியும்.
புலிகளின் நிர்வாகக் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டார்.
இலங்கை வரலாற்றில் நாட்டின் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தது இதுவே முதற் தடவையாகும்.

நேற்றுக் காலை 10 மணியளவில் விசேட ஹெலிகொப்டர் மூலம் கிளிநொச்சிக்குச் சென்ற ஜனாதிபதியை இராணுவத்தின் 57 ஆம், 58 ஆம் படைப் பிரிவுகளின் கட்டளைத் தளபதிகள் வரவேற்றனர்.

அங்கு படையினருக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி, படையினருடன் புத்தாண்டு பாற்சோறு உண்டு மகிழ்ந்தார். அதன் பின்னர், ஒவ்வொரு படையணியும் மனிதாபிமான நடவடிக்கையில் இதுவரை கடந்து வந்த பயணம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

"உலகில் ஆயுத ரீதியாக முதலாவது கெரில்லா இயக்கமாக விளங்கிய புலிகள் இயக்கத்திடமிருந்து படையினர் கைப்பற்றிய ஆயுதங்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, படையினர் கைப்பற்றிய பிரதேசங்களையும், புலிகளால் அழிக்கப்பட்ட பிரதேசங்களையும் பார்வையிட்டார்" என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. அதேநேரம், புலிகளின் தலைமையகம், சமாதானச் செயலகமாக செயற்பட்ட இடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் கிளிநொச்சிக்கு முதன் முதலாக விஜயம் செய்தமை வரலாற்றில் முக்கியத்துவமான நிகழ்வாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். படையினரின் நடவடிக்கைகளுக்காக அவர்களை ஜனாதிபதி பாராட்டியதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நிலவரங்களை நேரில் தெரிந்து கொண்ட ஜனாதிபதி, வன்னிப் படைத் தலைமையகத்திற்கும் சென்று அதிகாரிகளையும், வீரர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். தலைமையகத்தின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

கிளிநொச்சி விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதிக்கும். ருவான்வெலிசாயவுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அவரின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



'துணை நடிகை பூஜா கூப்பிட்டதால், அவருடன் உல்லாசமாக இருக்கவே புதுக்கோட்டைக்குப் போனேன். அவரைத் திருமணம் செய்து கொள்ள அல்ல...' என்று பூஜாவின் காதலன் ஆட்டோ டிரைவர் ஜெகன் கூறியுள்ளார்.

சென்னை போளூரை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகள் பூஜா (வயது 21). தெனாவெட்டு, அதிசயமணல் மாதா உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் படப்பிடிப்புக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரை யாரோ கடத்திவிட்டதாக தாயார் காமாட்சி வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் பூஜா மாயமானதாக வழக்குபதிவு செய்து, தேடினர். இந்தச் செய்தி பரபரப்பாக பேசப்படவே, ஜெகன் என்ற ஆட்டோ டிரைவர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்து, 'பூஜா கடத்தப்படவில்லை, என்னுடன்தான் வந்தார். இப்போது புதுக்கோட்டையில் தங்கி இருக்கிறார்' என்று கூறினார்.

உடனே புதுக்கோட்டை விரைந்த போலீஸ், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தது. இத்ல், பூஜாவுக்கு திருமணமாகி திலீப்குமார் என்ற கணவனும், லட்சுமி என்ற 3 வயது பெண் குழந்தையும் இருப்பதாகத் தெரிய வந்தது.

தற்கொலை செய்து கொள்வேன்!..

திருமணத்துக்கு முன்பே ஜெகனை தீவிரமாக காதலித்துள்ளார் பூஜா. இப்போது அவரையே திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் புதுக்கோட்டைக்கு 2 பேரும் சென்றார்களாம்.

இப்போது ஜெகனுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கேட்டாராம் பூஜா. ஆனால் ஜெகன் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

'உல்லாசமாக இருக்கலாம் என்பதால்தான் நான் பூஜாவுடன் புதுக்கோட்டைக்குச் சென்றேன். ஆனால் அவரைக் கல்யாணம் செய்வதெல்லாம் முடியாத காரியம். எனக்கு அதில் இஷ்டமில்லை. மீறி கட்டாயப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு ஏற்கெனவே மனைவி குழந்தைகள் உள்ளனர்' என கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஜெகன்.

தலையிலடித்துக் கொண்ட போலீஸ், ஜெகனை எச்சரித்து அனுப்பியது. பூஜாவுக்கும், 'தயவு செய்து இந்தமாதிரி புகாரில் எல்லாம் சிக்க வேண்டாம்' என புத்திமதி கூறி அனுப்பி வைத்தது.

கருத்துகள் இல்லை: