புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29

கேள்வி ஒன்று:
ஒரு ஓட்டப் பந்தயத்தில் நீங்கள் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். முதலிலிருந்து இரண்டாவதாக ஓடும் ஆளையும் முந்தி விட்டீர்கள். இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?

.
..
...
....

பதில்:
இரண்டாவது ஆளையும் முந்தி விட்டால் முதலிடம்தானே. இது என்ன கேள்வி என்கிறீர்களா?
தவறு.
இரண்டாவது ஆளை முந்தி நீங்கள் அவரிடத்தில்தானே வருவீர்கள்.
அதாவது... இரண்டாவது இடத்தில். சரிதானே!.


கேள்வி இரண்டு:
முதல் கேள்விக்கு எடுத்தது போல, நிறைய நேரம் எடுத்து யோசிக்காமல், வேகமாக பதில் சொல்லுங்கள். சரியா?

ஒரு ஓட்டப் பந்தயத்தில் கடைசி ஆளை நீங்கள் முந்தி விட்டீர்கள் என்றால் அப்போது உங்களின் இடம் எது?

.
..
...
....

பதில்:
இதில் தப்பாக சொல்ல வழியே இல்லை. கடைசிக்கும் முதல் ஆள். இதுதானே உங்கள் பதில்.
தவறு.
கடைசி ஆளை எப்படிங்க முந்த முடியும்.நீங்களே கடைசி ஆளாய் இருந்தாலும் கூட, கடைசிக்கும் முதல் ஆளைத்தானே முந்த முடியும்.

சே! என்று தானே சொன்னீங்க. பின்னால் உள்ள இரண்டிலும் வெற்றிதான். வாங்க!.

கேள்வி மூன்று:
சாதாரண கூட்டல் கணக்குதான். சின்ன தந்திரம் இருக்கிறது. மனதில்தான் போடணும். கால்குலேட்டர் எடுக்கக் கூடாது. சரியா?

ஒரு 1000 எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு 40 சேருங்கள். இதில் மேலும் ஒரு 1000 சேருங்கள். இப்போது அதில் ஒரு 30 சேருங்கள். அதில் இன்னொரு 1000 சேருங்கள். இதில் ஒரு 20ஐ சேருங்கள். மீண்டும் ஒரு 1000 சேருங்கள். அதில் ஒரு 10ஐ சேருங்கள். மொத்தம் எவ்வளவு?

.
..
...
....

பதில்:
5000 வந்திருக்கிறதா?
சரியான பதில் நான்காயிரத்து நூறுதான்.
நம்பவில்லையா?
இப்போது கால்குலேட்டர் கொண்டு கூட்டிப் பாருங்கள்.

போகட்டும் விடுங்கள். அடுத்த கேள்விக்கு சரியான விடை சொல்லி விடுவீர்கள். போவோமா?

கேள்வி நான்கு:
Maryயுடைய தந்தைக்கு ஐந்து பெண் குழந்தைகள்.
அவர்களுடைய பெயர்கள் முறையே
1. Nana 2.NeNe 3.Nini 4.Nono எனில்
ஐந்தாவது குழந்தையின் பெயரென்ன?

.
..
...
....


பதில்:
NuNu என்று சொன்னால் சரியானதுதான் என்று சொல்ல மாட்டேன்.
தவறு. அவளுடைய பெயர் Mary.
சந்தேகம் வந்தால் கேள்வியை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

சரி விடுங்க.
கடைசியாக போனஸ் கேள்வி. சொல்லிடுவீங்க

போனஸ் கேள்வி:
ஒரு வாய் பேச இயலாதவர் tooth brush வாங்க ஒரு கடைக்குச் சென்றார். கடைக்காரரிடம், ஒருவன் பல் விளக்குவது போல செய்கை காண்பித்து, அதைக் கடைக்காரருக்கு புரிய வைத்து, வெற்றிகரமாக வாங்கி விட்டார். இப்போது ஒரு பார்வையற்றவர் sunglasses வாங்க அதே கடைக்கு வந்திருப்பதாகக் கொள்வோம். அவர் எப்படி கடைக்காரருக்கு விளங்க வைப்பார்?

.
..
...
....


பதில்:
இதென்ன பெரிய அதிசயமா? அவர் வாயால் கேட்டு வாங்கி வருவார். அவர் பார்வையற்றவர்தான் பேசத் தெரியாதவர் அல்லவே.
(நன்றி: பர்வீன், நஜீர் அஹ்மத்)

மேலேயுள்ள மரம் ஆந்திராவிவின் அடர்ந்த காடுகளில் எங்கோ இருப்பதாக சொல்கிறார்கள். யாராவது பார்த்தவர்கள் இருக்கின்றீர்களா?. பெரிய அடிக்கட்டையைப் பார்த்தால் ஆலமரம் போன்ற தோற்றம் தரும் இம்மரம் ஒரு தனிப்பிறவி.

மரத்தின் அடிப்பாகத்தையும் கிளைகளையும் நோக்கினால் விதவிதமான உயிரினங்கள் அதைச் சுற்றி படர்ந்துள்ளது போலவே வளர்ந்து இருக்கிறது.
















More than a Blog Aggregator

by " உழவன் " " Uzhavan "
பத்து ரூபாய்
தோசைக்கு
முப்பதும்,

பதினைந்து ரூபாய்
பழச்சாறுக்கு
நாற்பதும் கொடுத்ததோடு
பகட்டுக்காக
டிப்ஸ் வேறு கொடுத்துவிட்டு,

வாசல்முன் வந்து நிற்கும்
காய்கறிகாரனிடமும்

அறுந்துபோன செருப்பைத்
தைத்துக் கொடுப்பவனிடமும்

இரண்டு ரூபாயாவது
பேரம் பேசாவிட்டால்
மனம் அடங்காது
போவது ஏனோ?

உழவன்

இக்கவிதை முத்துக்கமலம் மின்னிதழில் ஏப்ரல் 2009 ல் வெளியாகியுள்ளது.


More than a Blog Aggregator

by " உழவன் " " Uzhavan "
குத்தி
மடித்தது போய்
பொத்தானை
அழுத்தும்
காலம் !

இன்னும்
நாங்கள் தான்
அப்படியே !

உழவன்
இக்கவிதை 15.04.2009 அன்று இளமை விகடனில் வெளியாகியுள்ளது.


More than a Blog Aggregator

by மாயவரத்தான்....
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் முகவை குமாரை (அதாங்க ரித்தீஷ்!) பாராளுமன்ற உறுப்பினராக நிற்க வைத்து மக்களை பெரும் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார் மு.க. தேர்தலில் ஜெயிக்கலைன்னா மீண்டும் அண்ணாச்சி நடிக்க வந்திடுவாருல்ல? ஒரு மாநிலத்துக்காக ஒரு தொகுதி பலியாவுறது தப்பில்ல மக்கா.


More than a Blog Aggregator

by மாயவரத்தான்....
Very soon..


கருத்துகள் இல்லை: