வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30

என்னடா இவன் தலைப்பை இப்பிடி வச்சிருக்கானேன்னு நினைக்கிறீங்களோ ???
கூகிள் வேலைத் தளத்தின் சில படங்கள் பாருங்கள். நீங்களே அங்கே வேலை செய்ய விரும்புவீர்கள்...
:-)

இந்த பந்து போன்ற அமைப்பு ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்குமாம்...

ஒரு மாடியிலிருந்து இன்னொரு மாடிக்கு வர இலகுவான வழி...

தேவையான உணவு கிடைக்கும், எந்நேரமும் !

பெரிய திரை கொண்ட கணனிகள், வேலை செய்ய இலகுவாக...

மேசைக்கு முன்னுக்கே இருந்தா புதிய ஐடியா ஏதும் வராதுன்னு ஐடியா வரவழிக்க சொகுசாக அறைகள்...

சிறிது நேரம் உல்லாசமாக இருக்க பிலியர்ட்ஸ்,வீடியோ கேம்ஸ்ன்னு.. ஐ ஜாலி...

பிரத்தியேக தேவைகளுக்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வசதியாக...

பழுதடைந்த கணனிகளை திருத்தும் இடம்...
(Drinksம் உண்டாம்ல...)

உடல்நலத்தைப் பேண masseursகளால் மசாஜ் செய்துவிடப்படும்...

தானாகவே மசாஜ் செய்துவிடும் கதிரை...
நீர்வாழ் உயிரினங்களின் அழகை ரசித்தபடியே...

நூலகம். புரோகிராமிங் பத்தி கொஞ்சம் அதிகமாவே இருக்கு...

Commercial Google Office...


இப்பிடில்லாம் பார்த்தா கூகிள்ல நாமளும் வேலை செய்யனும்ன்னு தோனுமா இல்லையா??
அதுசரி நாம மட்டும் ஆசைப்பட்டா போதுமா???
இப்பிடி ஆளாளுக்கு ஆசைப்பட்டா கூகிளுக்கு என்ன ஆவுறது ???
:-)

வேலை செய்யும் ஆயிரக்கணக்கான என்ஜினியர்களும் செம புத்திசாலிகளாம்ல...
:-)

வாழ்க கூகிள், வளர்க கூகிள்...

தன் மகன் சிம்புவை இம்சை அரசன் என்றும் தேவையின்றி படத்தில் தலையிடுவதாகவும் கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் தருண் கோபி மீது கடும் கோபம் கொண்டுள்ளாராம் இயக்குநர் மற்றும் லதிமுக தலைவர் டி ராஜேந்தர்.

திமிரு, காளை படங்களை இயக்கியவர் தருண் கோபி. இவர் இப்போது 10 கதாநாயர்களுள் ஒருவராக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டின்போது சிம்புவை தாறு மாறாகத் திட்டி பேட்டியளித்த தருண் கோபி, அவரை இம்சை அரசன் என்று கூறினார். தன் வேலையைப் பார்க்காமல் இயக்குநரின் வேலைகளில் குறுக்கிட்டு படத்தைக் கெடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

காளை படத்தின் நாயகன் விஷாலை ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கத் தெரியாதவர் என்று விமர்சித்திருந்தார்.

கடந்த இரு தினங்களாக மீடியா முழுக்க இந்த செய்தியே ஆக்கிரமித்துக் கொண்டது.

இந்த விவரங்களைப் பத்திரிகைகள் மூலமாகவும், தங்களுக்கு வேண்டப்பட்ட செய்தியாளர்கள் மூலமும் தெரிந்து கொண்ட டிஆர், தருண் கோபி மீது கடும் ஆத்திரத்தில் உள்ளாராம்.

வேலையின்றி சும்மா கிடந்த தருண் கோபிக்கு வாய்ப்புக் கொடுத்த தன் மகன் மீதே சேற்றை வாரி இறைப்பதா என கொதித்துப் போய் உள்ளாராம். 'எங்கடா இருக்கான் அந்த கோபி... போட்றா லைனை... இப்ப காட்டறேன் சிம்பு யாரென்று?' என ஆத்திரப்பட்டவர், தருண் கோபி மீது நடிகர் சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் கூறியுள்ளார். இது பலனளிக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளாராம்.

அழகர் மலை படத்தில் ஒரு பாடல் காட்சியில் பானு, அந்தக் காலத்து நாயகிகளான வாணிஸ்ரீ, அம்பிகா போன்ற கெட்டப்களில் வந்து ஆடிப் பாடுகிறாராம்.

தாமிரபரணி பானு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அழகர்மலை மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

இடையில் அப்பாவுக்கும், இவருக்கும் பெரும் லடாய் ஆகி, போலீஸ் வரை பஞ்சாயத்துப் போனது நினைவிருக்கலாம். தற்போது அப்பா தொல்லை சற்று ஓய்ந்திருப்பதால் மறுபடியும் நடிக்க ஆர்வத்துடன் களம் இறங்கியுள்ளார்.

எல்லாம் அவன் செயல் பட நாயகன் ஆர்.கே.வுக்கு ஜோடியாக அழகர்மலை படத்தில் நடித்து வருகிறார் பானு. இப்படத்தை தயாரிப்பாவர் சங்கிலி முருகன், இயக்குபவர் எஸ்.பி.ராஜகுமார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்போது ரீமிக்ஸ், ரீ பிக்ஸ் ஆகியவை வெகு பிரபலம் என்பதால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில், அந்தக்காலத்து நாயகர்கள், நாயகிகள் போன்ற கெட்டப்களில் ஹீரோ, ஹீரோயினை ஆட விட்டுள்ளனர்.

முத்தம்மா முத்தம்மா என்ற பாடலில் ஆர்.கே., எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., பாக்யராஜைப் போலவும், நாயகி பானு, வாணிஸ்ரீ, அம்பிகா போலவும் கெட்டப் மாற்றம் செய்து ஆடுகிறார்களாம்.

அதேபோல முன்னாள் நாயகி சுகன்யா, ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அவருடன் ஆடியிருப்பவர் முன்னாள் நாயகன் சரவணன். இதுதவிர இன்னொரு முன்னாள் நாயகனான நெப்போலியன், இப்படத்தில் ஆர்.கே.வின் அண்ணனாக வருகிறார். அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் முன்னாள் நாயகி ரஞ்சிதா.

வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

காதல் தண்டபாணிக்கு இப்போது நேரம் செம பிரைட்டாக இருக்கிறது போலும். தெலுங்கில் முன்னணி வில்லனாக மாறி வருகிறாராம் இந்த காதல் 'வில்லன்'.

காதல் படத்தில் சந்தியாவின் அப்பாவாக, மிரட்டல் கேரக்டரில் நடித்து தமிழுக்கு புது வில்லனாக வந்து வாய்த்தார் திண்டுக்கல்லைச் சேர்ந்த தண்டபாணி.

அதன் பின்னர் தண்டபாணியை எல்லோரும் சேர்ந்து முழு நேர வில்லனாக்கி விட்டார்கள். ஆனால் எல்லா படத்திலும் ஒரே மாதிரியாக வசனம் பேசி நடித்து வந்தார் தண்டபாணி.

இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல தண்டபாணிக்கே கூட கடுப்பாகி விட்டது. என்னங்கடா இது இப்படி ஒரே மாதிரியாகவே நடிக்க வைக்கிறாய்ங்க என்று சலித்துப் போன தண்டு, இப்போது தெலுங்குக்குத் தாவி விட்டார்.

தெலுங்குப் பக்கம் வில்லன்களுக்கு கொஞ்சம் பஞ்சம் என கேள்விப்பட்டு அங்கு போனவருக்கு இப்போது செம மார்க்கெட். வித்தியாசமான முகத்துடன், விகாரமான குரலுடன் தண்டபாணி இருப்பதால், பிசியாகி விட்டார் தெலுங்கில்.

ஒரு நாளைக்கு லட்சம் ரூபாய் சம்பளம் என பிளாட் ரேட்டில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் தண்டபாணி.

சிம்பு படத்தில் ஓரிரு காட்சிகளில் தோன்ற பாப் பாடகி சகீராவை அணுகியுள்ளார்களாம் போடா போடி படக் குழுவினர்.

கொலம்பியாவைச் சேர்ந்தவர் ஷகீரா. பாப் பாடகி. இவரது பாடலை விட இடுப்பசைவுக்குத்தான் ஏகப்பட்ட ரசிகர்கள். இடுப்பை, வளைத்து ஒடித்து ஆடிப் பாடும் ஷகீராவுக்கு உலகெங்கும் எக்கச்சக்க ரசிகர்கள்.

ஹாலிவுட் பக்கமே உலாவிக் கொண்டிருக்கும் ஷகீராவை பாலிவுட்டுக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. ஷகீராவுக்குமே கூட பாலிவுட் ஆசை மனதில் உள்ளது.

இந்த நிலையில் கோலிவுட்டிலும் ஷகீராவை இழுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிம்புவும், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் ஜோடி போட்டு நடிக்கும் போடா போடி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் ஷகீராவை இழுத்துப் போட முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க கனடாவில் நடைபெறவுள்ளது. ஷகீரா தற்போது கனடாவில்தான் இருக்கிறார் என்பதால், எப்படியாவது ஷகீராவை இதில் நடிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளதாம் போடா போடி யூனிட்.

ரஷ்ய தொழிலதிபர் விலாடிஸ்லோவ் டோரனின் என்பவரை காதலித்து வரும் சூப்பர் மாடல் நவோமி கேம்ப்பெல் விரைவில் மாடலிங்குக் குட்பை சொல்லப் போகிறார். குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

உலகின் முதல் கருப்பர் இன சூப்பர் மாடல் என்ற பெருமைக்குரியவர் நவோமி கேம்ப்பெல். சிறிய வயதிலேயே மாடல் அழகியாக மாறியவர். விரைவிலேயே சூப்பர் மாடல் அழகி என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தார்.

தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர் விலாடிஸ்லோவை காதலித்து வருகிறார். காதலை கல்யாணமாக்கி, குடும்பம் நடத்தும் ஆசை வந்து விட்டதாம் நவோமிக்கு.

எனவே விரைவில் மாடலிங்குக்கு குட்பை சொல்லப் போவதாக கூறியுள்ளார் நவோமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு எனக்கு, மாடலிங்குக்கு வந்து 25 வருடங்களாகும். ஆனால் இது எனக்குப் போதும் என்று தோன்றுகிறது.

நானும் பெண்தான். எனக்கும் தாயாகும் ஆசை வந்து விட்டது என்றார் நவோமி.

இங்கிலாந்தைச் சேர்ந்த நவோமி சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டு பூணை நடை போட்டார்.

மேலும், சுஷ்மிதா சென், ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்த கர்மா அன்ட் ஹோலி என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

சூப்பர் மாடல் நவோமி, சூப்பர் 'மதராக' விளங்க வாழ்த்துவோம்..

கருத்துகள் இல்லை: