புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29

சிலசமயங்களில்
என்னை அடக்கிவிட்டு
நான் மறந்த நிலையில்
என்னயே ஆட்சி செய்கிறது.
சில உணர்வுகளை
மூளை சரி செய்யமுன்
முந்திக்கொள்கிறது
அந்த நச்சுப் பிசாசு.
காறித் துப்பும் அளவிற்கு
காழ்ப்பு வார்த்தைகள்.
எங்குதான் கற்றுக்கொண்டதோ !

மின்னலின் வேகத்தோடு
மனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !

பார்வைகளில்
பட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
பட்டென்று கட்டவிழ்த்து,
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு,
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !

சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !

தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
காவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.

கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!

ஹேமா(சுவிஸ்)


More than a Blog Aggregator

by kanchana Radhakrishnan

தேவையானவை:

சேமியா 2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
தக்காளி 3
பீன்ஸ் 15
காரட் 3
பச்சை பட்டாணி 1/2 கப்
-----
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை .
----
எண்ணைய்,உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
வெங்காயம்,பீன்ஸ்,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பச்சைமிளகாய்,துருவிய காரட்,பீன்ஸ்,பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும் காய்கறிகள்நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு
சேர்க்கவும்.தேவையான அளவு உப்புடன்,இஞ்சிபூண்டு விழுது,மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.
பொல பொல வென்று வந்ததும் இறக்கவும்.



வேணாம் பாஸ்..!

சொன்னாக் கேளுங்க...!

இதை தயவு செஞ்சி பாக்க வேண்டாம்...!

சொன்னாக் கேக்க மாட்டீங்க..!


சரி..! OK..! பாத்துக்கங்க..!


நாம சின்ன வயசுல இருந்தே, "இதைச் செய்ய்யாதே..! அதைச் செய்ய்யாதேன்னு..!"
"இங்க போகாதே..! அங்க போகாதேன்னு..!"
எப்படியெல்லாம்... எதிர் மறைக் (Negative) கட்டளைகளால் சூழப்படுகிறோம்...

அதை நாம எப்படி எதிர்கொள்கிறோம்ங்கறதை விளக்குவதற்க்காக மனோதத்துவ நிபுணர் "டெரன் பிரவுன்"- ங்கறவரு நடத்திக் காட்டிய பரிசோதனையின் வீடியோக் காட்சிதான் அது.

அந்த சின்னப்பசங்க கிட்ட ஒரு பெட்டியக் காட்டி...
இது்லக் கைய வச்சிராதீங்கன்னு... திரும்பத் திரும்ப சொன்னப்பறம் அவங்க என்ன பண்ணினாங்க...?

அப்புறம் என்ன நடந்திச்சு..?-ங்கறதைத்தான் நீங்க வீடியோவுல பாத்தீங்க.

சரி...! நான் ஒண்ணு சொல்றேன்.

"இப்ப நீங்க நீல நிறத்தைப் பத்தி நினைக்கக் கூடாது-ன்னு" நான் சொன்னா...

முதல்ல உங்க மனசுல நீல நிறத்தை நினைச்சுப் பாத்துட்டுத்தான், அதை நினைக்காம இருக்க முயறசி பண்ணுவீங்க.

சரியா..?

இன்னொரு உதாரணம்:


"நான சிகரெட் பிடிக்கக் கூடாது-ன்னு நீங்க நினைச்சீங்க-ன்னா...,"

முதல்ல உங்களுக்கு சிகரெட் நினைப்பு வந்து... அப்புறம்தான் அது வேணாம்-ன்னு நினைப்பீங்க.

இப்ப என்ன ஆகும்- ன்னா... ஆல்ரெடி உங்களுக்கு நீங்களே சிகரெட்டை நினைவுபடுத்திட்டீங்க.
அப்புறமென்ன..?

இன்னேரம் புகை பிடிக்கறதுக்கான முஸ்தீபுல இறங்கியிருப்பீங்க. (புகைப் பழக்கம் உள்ளவர்கள் மட்டும்.)

பைக்ல வெளிய கிளம்பறீங்க.
"இன்னிக்கு எந்த விபத்தும் நிகழக் கூடாதுன்னு" நினைச்சிட்டே போனீங்கன்னா...
கண்டிப்பா ஒரு சின்ன சிராய்ப்போடயாவது வீடு திரும்புவீங்க.

(ஏன்னா நீங்கதானே விபத்தை உங்க நினைப்புலயே கொண்டு போறீங்க?)

ஆக நம்ம மனசை...
நமக்கு எது தேவையோ... அதை நினைக்க பழக்கணும்.

தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விலக்கி...
அங்கே நமக்குத் தேவையான நேர்மறைச் சிந்தனைகளை நிரப்ப வேண்டும்.

"இன்னிக்கி நான் பாதுகாப்பாய் பைக்ல போய் வருவேன்-ன்னு நினைச்சுட்டே வண்டிய எடுங்க."

Relace your Negative thoughts by Positive thoughts.


எப்படி...?

அடுத்த பதிவுல இன்னும் விரிவா பாப்போம்.


"நன்றி: இங்க இருந்துதாங்க பாஸ...,் இந்த வீடியோவைச்் சுட்டேன்.
ஹி..! ஹி..! ஹி..!"


பதிவப்படிச்சுட்டு நல்லா இருந்திச்சுன்னா... பின்னூட்டம் போட்டே ஆக வேண்டிய கட்டாயமில்லை பாஸ். ஜஸ்ட்... மேல தமிழ்மண கருவிப்பட்டைல கட்டைவிரல் மேல இருக்க இடத்துல ஒரு தடவை க்ளிக் பண்ணுங்க. போதும். (அதுக்காக பின்னூட்டமே வாணாம்-னு அர்த்தமில்லை. விரும்பினால் போடுங்க. சரியா..?)

"அப்படியே இங்க க்ளிக் பண்ணி இந்த பதிவையும் படிச்சுப்பாருங்களேன். (விரும்பினால்)"

IDPs moved into hundreds of thousands to government controlled areas and taken to Vavuniya is begging for food and water.

Even though government and the local and International NGOs are trying there maximum to cater this people,

It has gone beyond the control and people are dying of starvation.

To get to know the real picture of this situation, Log On:

http://www.inllanka.com/infonation/news/more_news.asp?ty=lo&id=6538

Please spread this message to maximum people as possible and get their attention to safeguard these people from dying of starvation.

We are now trying our best to collect dry food items, water bottles and money to buy those items in large scale. Those things will be sent through Lion's Club, Sevalanka NGO & Social Service Ministry and we will make sure the distribution.

If anyone interested to feed this people to prevent them from dying of starvation, please contact me asap.

Its an urgent help in need

Rgds
K.Rushangan
Director
KISS
Knowledge Information & Skills Sharing
Journalists - LankaEwatch
www.lankaewatch.com
 
அய்யப்ப மாதவனின் நிசி அகவல் விமர்சனக்கூட்டத்திற்குப் போயிருந்தபோது,அங்கு சந்தித்துக்கொண்ட படைப்பாளிகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டதைப் பார்த்தபோது,"இதென்ன? கொஞ்சம் அதிகப்படியா இருக்குதே! அப்படியே மேலை நாட்டுக் கலாச்சாரத்தை இதுலயும் கடைபிடிக்கறாங்களே?" அப்படின்னு நினைச்சேன்.ஆனா,இப்பதான் புரியுது,அதிலுள்ள அர்த்தம்.(இது மாதிரி நான் புரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது). யாத்ராவை நான் இப்போது நேரில் சந்தித்தால் நானும் அப்படித்தான் ஆரத் தழுவுவேன்.இப்போதைக்கு மானசீகமாய்.

குரு சுந்தர்ஜி கூட இவரை அறிமுகப்படுத்தி எழுதியிருந்தபோது, 'நாமெல்லாம் இவர் கண்ணுக்கு ஏன் தெரிய மாட்டேங்கறோம்னு' சின்னப்புள்ளத்தனமா யோசித்துப் பொறாமைப் பட்டேன்.ஆனா, அதுதான் குரு. சரியான கண்டுபிடிப்பு.

வலையுலகம் பக்கம் இப்போதுதான் வந்திருக்கும் இவர் வருகைக்கு நாமெல்லாம் மகிழவேண்டும். களிப்பு ஏற்படுத்தும் படைப்புகளை எழுதுபவர்கள் ஒரு ரகம்.மெல்லிய உணர்வுகள், தக்கையாய் மனதை மிதக்கவைக்கும் ரசனையான படைப்புகளை எழுதுபவர்கள்.

வலியை, அதிர்வுகளை, நிலைகுலைவை ஏற்படுத்தும் படைப்பாளிகள் ஒரு ரகம்.வலிகள்தான் நிறைய படைப்பாளிகளுக்கான பொதுவான அம்சமாக, அவர்களை எழுதவைக்கும் காரணியாக அமைந்திருப்பதை நான் பலரிடத்தில் பார்த்திருக்கிறேன்.இதுவே, அவர்களின் காத்திரமான படைப்புகளுக்கு அடித்தளம்.யாத்ராவின் கவிதைகளும் வலி மிகுந்ததாய்,அதிர்வுகளை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. இது பொதுவான ஒரு பார்வைதான். ரசனையான மற்றும் பலவிதமான கவிதகளையும் இவர் எழுதியுள்ளார்.
நிறைய படித்திருக்கிறார். வாசிப்பில்மிகத் தேர்ச்சி பெற்றவராயிருக்கிறார். ஒரு படைப்பாளியாய் இருப்பதினும் பெரியது, தேர்ந்த ஒரு வாசகனாய் இருப்பது. இதன் அருமையும், ஏக்கமும் எனக்கு நன்றாகவே தெரியும்.

இயற்பெயர் செந்தில்வேல். என் பெயரிலும் வேல் இருக்கிறது என்றெல்லாம் ,இவரோடு ஒப்பிட்டுக்கொண்டு மகிழ்ந்துகொள்கிறேன்.

இவரை இதழ்களுக்கு படைப்புகளை அனுப்பச் சொன்ன புண்ணியவான்களில் நானுமொருவன்.இதை இவர் மிகவும் சிலாகிக்கிறார். ஆனால், உண்மையில் இப்படியொரு பெருமையை, மகிழ்ச்சியை யாத்ரா எனக்கு அளித்ததற்கு நான்தான் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.(இந்த இடத்தில் வடகரை வேலன் அண்ணாச்சியை நினைக்கிறேன். இவர், இதுபோல், எப்போதும் மகிழ்ச்சியில் இருப்பவர்)இவரின் படைப்பு வேகம், ஆற்றல் மிகவும் ஆச்சரியமளிக்கிறது.இத்தனையையும் இவர்,ஏற்கனவே எழுதியது இல்லையாம். இப்போதுதான் எழுதிக்கொண்டு வருகிறாராராம்.ஏற்கனவே எழுதியவற்றை கிழித்துப் போட்டுவிட்டாராம். எவ்வளவு பெரிய இழப்பு என்று மனம் துடிக்கிறது.

தொடர்ச்சியாக உயிரோசை, நவீன விருட்சம், மற்றும் சில வலைத்தளங்கள் அவர்களாகவே விரும்பிக் கேட்டுப் பிரசுரம் செய்வது என துவக்க நிலையிலேயே பிரமிப்பூட்டுகிறார். இவர் அடையக் காத்திருக்கும் வெற்றிகள், உச்சம் வெகு தொலைவிலில்லை. அனேகமாக, வருகிற புத்தகக் கண்காட்சியில், இவரின் தொகுப்பு கிடைக்கப் பெறலாம்.

இது என்னைப்பொறுத்தவரை முழுக்க முழுக்க ஒரு சுய நலமானப் பதிவு.இவருக்கு கிடைக்கும், கிடைக்கப்போகும் வெளிச்சத்தை என் பக்கம் திருப்பிக்கொள்ளும் சுய நலம்.(எனவே,யாத்ரா,இப்பதிவுக்காக நன்றியையோ, நெகிழ்ச்சியையோ தெரிவித்து என்னைக் குற்ற உணர்வில் ஆழ்த்திவிடவேண்டாம் என்று, அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.)

கவிஞனே, யாத்ரா! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதில் முந்திக்கொள்கிறேன்.


More than a Blog Aggregator

by ச.முத்துவேல்
கால்கள் இரண்டும்
அசந்து போனாலும்
நீட்ட முடிவதில்லை
எனது அறையில்.

புத்தகங்களாலும்
தாள்களாலும்,எழுத்துக்களாலும்
நிறைந்தது எனது அறை.

பள்ளிப் பருவத்தில்
விமலாவுக்கு
செய்து தந்த சத்தியம்
இப்படி என்னைத் தடுக்கிறது.

புத்தகங்களை,எழுத்துக்களை
மிதிக்கக் கூடாதாம்
அவைகளை நோக்கி
கால்களை நீட்டக் கூடாதாம்
சரசுவதியாம்
படிப்பு ஏறாதாம்

இன்று இவைகளை
நம்ப மறுத்தாலும்
விமலாவின் நினைவு
நெருடுகிறது.

கால்களைத் தூக்கி
தலைமேல் வைத்துக்கொள்ளுங்கள்
என்கிறாள் என் மனைவி

என் தலையெழுத்தை
அறியாமல்.

கருத்துகள் இல்லை: