வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-18

இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான டி.எல்.எஃப்., அது உருவாக்கி கொடுக்க ஒத்துக்கொண்ட, ஐ.டி.மற்றும் ஐ.டி.சார்ந்த நிறுவனங்களுக்கான நான்கு சிறப்பு பொருளாதார திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. சோனாப்பூர், காந்தி நகர், புவனேஷ்வர் மற்றும் கோல்கட்டாவில் அது உருவாக்கி தர ஒப்புக்கொண்ட சிறப்பு பொருளாதார திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தை அணுகியிருக்கும் டி.எல்.எப். நிறுவனம், தாங்கள் அந்த திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதாகவும் அதற்கான அனுமதியை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. வர்த்தக அமைச்சகம் தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி அளிக்கும். இன்றைய சூழ்நிலையில், ஐ.டி.மற்றும் ஐ.டி.தொடர்பான தொழில் பாதிக்கப்பட்டிருப்பதால், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இடங்களை பிடிப்பதற்கு டிமாண்ட் இருக்காது என்று டி.எல்.எஃப்., கருதுகிறது. எனவேதான் அது இந்த திட்ட பணிகளில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்
* குழந்தைகளுக்கான புத்தகங்களை Prodigy மூன்று ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. எழுத்துகள், எண்கள், உருவங்கள் என்று மிகச் சிறிய குழந்தைகளுக்கும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கதை வடிவில் அறிவியல் புத்தகங்களை வண்ணத்தில் வெளியிட்டிருக்கிறோம். ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 80 பக்கங்களில் அறிவியல், வாழ்க்கை வரலாறு, சரித்திரம், நாடுகள், கண்டங்கள், உயிரினங்கள், பொதுஅறிவு போன்ற பிரிவுகளில் இதுவரை 180 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

* இன்று மாணவர்கள் மத்தியில் Prodigy புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் எளிமையான இந்தப் புத்தகங்களை விரும்பி வாசிக்கின்றனர்.

* இந்த வேளையில் எங்கள் புத்தகங்களை ஆய்வு செய்வது அவசியம் என்று நினைக்கிறோம். மேலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிய விரும்புகிறோம். எனவே கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளுடன் வேலை செய்பவர்கள் என்று பலரையும் அழைத்து ஓர் எழுத்தாளர் பட்டறை நடத்த முடிவு செய்தோம்.

* எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், குழந்தை எழுத்தாளர் ரேவதி, நியூ ஹொரைசான் மீடியாவின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, முதன்மை ஆசிரியர் பா. ராகவன் ஆகியோர் குழந்தைகளுக்கான எழுத்து, புத்தகங்கள், மொழி, எடிட்டிங் போன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

* அறிவியல் இயக்கத்தின் தலைவர் ராமானுஜம், இரா. நடராஜான்,
அ. வெண்ணிலா, யூமா வாசுகி, ஹேமாவதி, மாதவன், அ. வள்ளிநாயகம் ஆகியோர் கலந்துரையாடல்களுக்குத் தலைமை ஏற்கின்றனர்.

* பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் இந்தப் பட்டறையில் பங்கேற்கிறார்கள்.

* நாளை (ஏப்ரல் 19, 2009) சென்னையில் நடைபெறும் இந்தப் பட்டறை குறித்து திங்கள் கிழமை விரிவான பதிவு வெளியாகும்.
அம்பலமாகும் பிரபாகரனின் குடும்ப வாழ்க்கை
வீடியோ ஒளிப்பதிவு ஆங்கிலத்தில்.... வீடியோ ஒளிப்பதிவு தமிழில்


Luxurious life of Pirabhaharan Family Exposed (English Version)



வீடியோ ஒளிப்பதிவு தமிழில்





More than a Blog Aggregator

by Senthuran
புதுடில்லி, ஏப். 18-
இலங்கையில் இலங்கைஅரசுக்கும் எல்டிடிஇ-இனருக்கும் இடையிலான போராட்டத்தில் சிக்கிக்கொண்டு, உயிரிழந்து வரும் லட்சக்கணக்கான தமிழர்களைப் பாதுகாக்கக்கோரி, உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக, வேல்முருகன் என்னும் காவலர் உலக அளவிலான கின்னஸ் சாதனை நிகழ்ச்சியினை மேற்கொண்டார். இந்நிகழ்பு புதுடில்லி, மந்திர்மார்க்கில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் மேல்நிலைப்பள்ளி விளையாட்டரங்கில் சனிக்கிழமை மதியம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறையில் கோவை மாவட்டம், வால்பாறை காவல்நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணியாற்றும் ஆர். வேல்முருகன், பல்வேறு உலக சாதனைகளைச் செய்துள்ளார். 157 கிலோ மீட்டர் காட்டாற்றில் இடைவிடாது நீச்சல், 15 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் ஓடியது உட்பட இதுவரை 14 உலக சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். இப்போது பதினைந்தாவது சாதனையாக 36 அடி உயரத்திலிருந்து 18 செண்டி மீட்டர் அளவள்ள தண்ணிர் வயிறில் படுவதுபோல் பாய்ந்து சாதனை புரிந்திருக்கிறார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் சிக்கம் என்பவர், 28 அடி உயரத்திலிருந்து 30 செ.மீ. அளவுள்ள தண்ணீரில் பாய்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இத்தகைய என்னுடைய உலக சாதனையை, இலங்கையில் போரில் சிக்கி இறந்து கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு அர்ப்பணம் செய்வதாகவும், இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணா துயரத்தை இந்திய அரசுக்கும், உலகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், தலைநகர் புதுடில்லியில் இந்நிகழ்வினை நடத்தியதாகவும் கூறினார்.
இந்நிகழ்விற்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலர் முகுந்தன், தில்லித் தமிழ்ச் சங்கப் பள்ளி செயலாளர் ஸ் வாமிமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
(ச. வீரமணி)

கருத்துகள் இல்லை: