புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29

இதற்கு முன் போட்ட பதிவில் படம் பெரிதாகாமையால் பலர் ஏப்ரல் 1 என நினைத்துவிட்டனர். இப்போது படங்களின் லின்க்கைத் தருகிறேன்.

தமிழில் வெளிவரும் ஏடுகளில் நடுநிலையான ஒரே ஏடு துக்ளக்தான் என்பது பெரும்பான்மையானோரின் நம்பிக்கை. ஆனால், விகடன் குமுதம் போன்ற விற்பனை உத்திகள் கைவராததால் வெளிநாடுகளில் இந்த ஏடு கிடைப்பது அபூர்வமே.

சென்ற சில வருடங்களாக துக்ளக் இணையத்தில் கிடைத்தாலும், இணையதள சந்தா அதிகமாக (20$ வருடத்திற்கு) இருப்பதால் படிப்பது கஷ்டமாகவே இருந்துவந்தது.

இந்நிலையில் தெரிந்தவர் ஒருவர் ஒரு சுட்டி கொடுத்தார். இலவச தளம்தான். ரெஜிஸ்ட்ரேஷன் கூட தேவையில்லை.. எல்லாவற்றையும்விட, இந்தத் தளத்தின் வேகம் ஆச்சரியப்படவைத்தது. சில வேளைகளில் அதிகாரபூர்வ வலைத்தளத்தைவிடவும் முன்னரே இங்கே அட்டைப்படங்கள் கிடைத்துவிடுகின்றன.

இந்த சுட்டியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு முன் தார்மீகரீதியாக இது சரிதானா என நிறையவே யோசித்தேன். கடைசியில் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வது தவறாகாது என்பதால் வலைக்குடும்பத்துடன் சில அட்டைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியில் முட்டாள் ஆனது நான் தான் :-( படங்கள் பெரிதாகாத முதல் பதிவினால் சொதப்பிவிட்டது.
துக்ளக் வெவ்வேறு நிலைமாற்றங்களுக்கு எப்படி அட்டைப்படம் போடும் என்பதுதான் கான்செப்ட்!
படம் 1 - 15/05/09, ஜ மு கூ வென்றால்:


படம் 2 : மூன்றாம் அணி வென்றால்:

படம் 3 : தே ஜ கூ வென்றால்:




- செல்லமுத்து குப்புசாமி



























































சித்த மருத்துவம் பற்றிய அருமையானதொரு பதிவு...இங்கே க்ளிக்


சில கயவாளிகள் அநாகரீக கமெண்டுகளை போடுவது போல் தெரிகிறது. அண்ணன் உண்மைத்தமிழனில் இருந்து பரிசல்காரன் வரை இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

என்னுடைய எண்ணம், பழைய நபர்கள் இந்த செயலை செய்ய துணியமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். தமிழக போலீசாரின் திறமை பற்றி...

நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால்...பழைய தமிழ் இணைய வரலாறு தெரியாமல் தேன் கூடுகளில் கை வைக்கிறீர்கள். தமிழக சைபர் க்ரைம் சிறப்பாக செயல்படுகிறது.

கூகிளில் நிறுவனத்தில் இருந்து ஸ்கைப் நிறுவனம் வரை தமிழக போலீஸ் கேட்கும் தகவல்களை உடனே தர தயாராக உள்ளது.

போலீசார் கேட்கும் தகவல்கள் உடனுக்குடன் மின்னஞ்சலில் ஓடிவருகிறது. இந்த நிறுவனங்களில் இதற்கென தனி குழு பணியாற்றுகிறது.

நீங்கள் ப்ராக்ஸி உபயோகப்படுத்தினாலும் சரி, ப்ரவுசிங் செண்டர் கணிப்பொறியில் இருந்து திருட்டுத்தனம் செய்தாலும் சரி, கண்டிப்பாக மாட்டிக்கொள்வீர்கள்.

ஆர்க்குட்டில் ஏற்கனவே இதுபோன்ற பல விஷயங்கள் நடந்தாலும், தமிழ் இணைய உலகில் இருப்பவர்கள் இந்த விஷயங்களை ஏற்கனவே வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள்.

சிறைத்துறை ஐ.ஜியில் இருந்து ஐ.ஏ.எஸ் ஆபீஸர் வரை தமிழ் இணைய தளங்களை பார்வையிடுகிறார்கள். அரசியல்வாதிகளில் இருந்து பெரிய மனிதர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் குழுமும் இடமாக இணைய உலகு மாறிவிட்டது.

அதனால் உங்கள் சில்லுண்டித்தனங்களை விட்டுவிட்டு மாறிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள். மீண்டும் சொல்கிறேன், எந்த இணையம் 100 சதவீதம் பாதுகாப்பில்லை என்று நினைத்து இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறீர்களோ, அதே இணையம் உங்களுக்கும் 100 சதவீதம் பாதுகாப்பில்லை.

இது இருபுறமும் கூரான கத்தி என்பதை உணருங்கள். ஒரே நாளில் உங்கள் வீடு தேடி போலீஸ் வரும். தயவுசெய்து திருந்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்கிறேன்...


More than a Blog Aggregator

by செந்தழல் ரவி

இனி அந்த காங்கிரஸ் கட்சியோடு ஒருநாளும் கூட்டணியில்லை என்று உண்ணாவிரத மேடையில் நீ முழங்கியபோது...

அட...இவனல்லவா என் தலைவன்...என்று இதயத்தில் உன்னை வைத்தேன்...

ஆனால் இன்றைக்கு...

மிஸ்டர் தங்கபாலு, ஐயாம் Sorry...

காங்கிரசோடு என்றைக்கும் எனக்கு மோதல் இல்லை..

மூப்பனார்தான் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தார்...

காங்கிரசு உதவியோடு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்...

என்றெல்லாம் சொல்கிறாயே ?

நீயும் சராசரி அரசியல்வாதிகளில் ஒருவன் தானோ ??

ஆகட்டும்...

ரத்தம் தோய்ந்த அந்த "கை" உன்னை எவ்வளவு தூரம் கூட்டிச்சென்றாலும் பரவாயில்லை...

இனி அரசியல் ஸ்டேட்மெண்டுகள் விடுவதை நிறுத்திக்கொள்..!!!
விளம்பரங்கள் நான் விரும்பி படிக்க இருந்த பாடமுங்க. நமக்கு கெடச்ச மார்க் வெச்சு (டிகிரி பெயிலானதை எப்படியெல்லாஞ் சொல்லவேண்டி இருக்கு பாருங்க) சீட்டு தர மாட்டேன்னு சொல்லிபுட்டாங்க PSG Techகாரவுங்க. அங்கன Averstising and Communicationன்னு ஒரு PG படிப்பு இருந்துச்சுங்க, இன்னமும் இருக்கான்னு தெரியல. அதுல தான் சேரலாமுன்னு இருந்தேன், டிகிரி கெடைக்காததால பொட்டி கட்டுற பொழப்புக்கு வரவேண்டியாதாப் போயிருச்சுங். அதுல இருந்து என்னமோ இந்த வெளம்பரம் எல்லாம் நமக்கு ரொம்ப புடிக்கும். YouTube வந்தப்பொறம் வெளம்பரம் பார்க்குறதையே பொழப்பா எல்லாம் வெச்சிருந்தேன். எதுக்கு இப்படி கத சொல்றான் இவன்னு பார்க்குறீங்களா? போனவாரம் ஒரு வெளம்பரம் பார்த்தேனுங். வெளபரத்தைப் பாருங்க. பொறவால பேசுவோம்.


இதாட்டமே இந்தியாவுலயும் ஒரு வெளமபரம் பார்த்திருக்கேன்.ஒரு ஏர் கண்டீசன் வெளம்பரம்னு நெனக்கிறேன். இத Inspirationனு சொல்லுவீங்களா? இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா?

நன்றி பரசு:
இதுதாங்க நாஞ்சொன்ன இந்திய வெளம்பரம்.

கருத்துகள் இல்லை: