வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30


தேவையானப் பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
உளுத்த மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

பயத்தம் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்த மாவைப்போட்டு, உப்பு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வேகவைத்த பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, வென்னீர் விட்டு வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு காயவைக்கவும். எண்ணை சூடானதும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, கைகளால் தட்டி நடுவில் துளையிட்டு எண்ணையில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: உளுத்த மாவு இல்லையென்றால், இட்லி மாவு ஒரு கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
உளுத்த மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

பயத்தம் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்த மாவைப்போட்டு, உப்பு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வேகவைத்த பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, வென்னீர் விட்டு வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு காயவைக்கவும். எண்ணை சூடானதும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, கைகளால் தட்டி நடுவில் துளையிட்டு எண்ணையில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: உளுத்த மாவு இல்லையென்றால், இட்லி மாவு ஒரு கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்.
அரசியல்வாதிகள் மீது செறுப்பு எறிவதற்கு கிராமத்து மக்கள் ப்யிற்சி
எடுத்துக் கொள்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் ரூர்வி என்னும் கிராமத்தில், விளையாட்டு மைதானத்தில் ஒரு உருவ பொம்மையை வைத்து, சிலர் வரிசையில் வ்ந்து ஒவ்வொருவராக செறுப்பைக் கையில் எடுத்து பொம்மையின் முகத்தில் குறி பார்த்து எறிகிறார்கள்.  
அரசியல்வாதிகள்  தங்கள் கிராமத்திற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் வருவதால் இனி இப்படி செய்ய இருப்பதாய் வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை பேட்டியும் கொடுத்தனர். 
அரசியல்வாதிகள் திருந்துவார்களா என்ன???? 
அரசியல்வாதிகள் மீது செறுப்பு எறிவதற்கு கிராமத்து மக்கள் ப்யிற்சி
எடுத்துக் கொள்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் ரூர்வி என்னும் கிராமத்தில், விளையாட்டு மைதானத்தில் ஒரு உருவ பொம்மையை வைத்து, சிலர் வரிசையில் வ்ந்து ஒவ்வொருவராக செறுப்பைக் கையில் எடுத்து பொம்மையின் முகத்தில் குறி பார்த்து எறிகிறார்கள்.  
அரசியல்வாதிகள்  தங்கள் கிராமத்திற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் வருவதால் இனி இப்படி செய்ய இருப்பதாய் வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை பேட்டியும் கொடுத்தனர். 
அரசியல்வாதிகள் திருந்துவார்களா என்ன???? 

"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் , நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்" லூக்கா 6:35

குஷ்டரோகிகள் மத்தியிலே ஊழியம் செய்த கிரகாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் எரித்துக் கொன்றார்கள். கிரகாம் ஸ்டெய்ன்ஸ் அவர்களின் துணைவியார் திருமதி.கிளாடிஸ் அம்மையார் அவர்கள் நான் என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளையும் எரித்துக் கொன்றவர்களை மன்னிக்கிறேன் என்று அறிக்கை விட்டார்கள். இதன் மூலமாக கிறிஸ்துவின் மன்னிப்பின் குணத்தை அநேக மக்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களது இந்த மன்னிப்பின் குணம் தாங்கள் உன்னதமானவரின் பிள்ளைகள் என்பதை இந்த உலக மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.


நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தான் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட அறிவுறைகளை மக்களுக்கு வழங்கியதோடு மட்டும் இல்லாது தன்னுடைய வாழ்க்கையிலும் நடத்திக் காட்டினார். பிரதான ஆசாரியர்கள் அவரைப் பிடிக்க வரும்போது பேதுரு பிரதான ஆசாரியனின் வேலைக்காரரின் காதை வெட்டி விடுகின்றான். கர்த்தரோ அந்த பிரதான ஆசாரியரின் வேலைக்காரனின் காதைக் குணப்படுத்தி அற்புதம் செய்தார். ஆம் பிரியமானவர்களே நம்மிடம் இயெசு கிறிஸ்துவிடம் காணப்பட்ட பகைவர்களை நேசிக்கின்ற மன்னிக்கின்ற குணம் காணப்படுகின்றதா? இல்லையென்றால் நாம் இன்றே உன்னதமானவரின் பிள்ளைகளாக மாறுவதற்காக கர்த்தர் நமக்குச் சத்துருக்களைச் சிநேகிக்கின்ற மன்னிக்கின்ற குணத்தை அருளும்படி மன்றாடுவோம்.



சிந்தனை: நான் உன்னதமானவரின் பிள்ளையாக மாறிவிட்டேனா?


ஜெபம்: அன்பின் தேவனே நான் உம்முடையப் பிள்ளையாக நடப்பதற்கு என்னுடையச் சத்துருக்களைச் சிநேகிக்கவும் மன்னிக்கவும் கூடிய நல்ல குணத்தைத் தந்து வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் , நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்" லூக்கா 6:35

குஷ்டரோகிகள் மத்தியிலே ஊழியம் செய்த கிரகாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் எரித்துக் கொன்றார்கள். கிரகாம் ஸ்டெய்ன்ஸ் அவர்களின் துணைவியார் திருமதி.கிளாடிஸ் அம்மையார் அவர்கள் நான் என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளையும் எரித்துக் கொன்றவர்களை மன்னிக்கிறேன் என்று அறிக்கை விட்டார்கள். இதன் மூலமாக கிறிஸ்துவின் மன்னிப்பின் குணத்தை அநேக மக்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களது இந்த மன்னிப்பின் குணம் தாங்கள் உன்னதமானவரின் பிள்ளைகள் என்பதை இந்த உலக மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.


நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தான் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட அறிவுறைகளை மக்களுக்கு வழங்கியதோடு மட்டும் இல்லாது தன்னுடைய வாழ்க்கையிலும் நடத்திக் காட்டினார். பிரதான ஆசாரியர்கள் அவரைப் பிடிக்க வரும்போது பேதுரு பிரதான ஆசாரியனின் வேலைக்காரரின் காதை வெட்டி விடுகின்றான். கர்த்தரோ அந்த பிரதான ஆசாரியரின் வேலைக்காரனின் காதைக் குணப்படுத்தி அற்புதம் செய்தார். ஆம் பிரியமானவர்களே நம்மிடம் இயெசு கிறிஸ்துவிடம் காணப்பட்ட பகைவர்களை நேசிக்கின்ற மன்னிக்கின்ற குணம் காணப்படுகின்றதா? இல்லையென்றால் நாம் இன்றே உன்னதமானவரின் பிள்ளைகளாக மாறுவதற்காக கர்த்தர் நமக்குச் சத்துருக்களைச் சிநேகிக்கின்ற மன்னிக்கின்ற குணத்தை அருளும்படி மன்றாடுவோம்.



சிந்தனை: நான் உன்னதமானவரின் பிள்ளையாக மாறிவிட்டேனா?


ஜெபம்: அன்பின் தேவனே நான் உம்முடையப் பிள்ளையாக நடப்பதற்கு என்னுடையச் சத்துருக்களைச் சிநேகிக்கவும் மன்னிக்கவும் கூடிய நல்ல குணத்தைத் தந்து வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை: