வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-18

இது இருட்டுப் பிர‌தேச‌ம் வேத‌னைக‌ளும், சோத‌னைக‌ளும் நிறைந்த‌ பூமி... இருள் ம‌ட்டுமே இங்கு நிர‌ந்த‌ர‌ம் வெளிச்ச‌க் க‌திர்க‌ள் அவ்வ‌ப்போதுதான் வ‌ந்து போகும்...
(பதினெட்டு வயதுக்கும் இளையோர் வெளியேரிடவும்)


தயவு செஞ்சு யாராவது அது காளான் அப்படின்னு எடுத்து சொல்லுங்களேன்.....


ஹைய்யோ ஹைய்யோ......
Be Cool...
Stay Cool...
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் போரின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு வசதியாக இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை அவசரக் கோரிக்கையினை விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் அறிவித்த இரண்டு நாள் போர் நிறுத்தம் எந்தவிதமான பலன்களையும் தராமல் முடிவடைந்திருக்கின்றது. இந்நிலையில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள நிலைமைகள் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் இருவரை சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்பு கொண்டபோது அங்குள்ள மோசமான நிலைமைகள் தொடர்பாக அவர்கள் விவரித்துள்ளார்கள் எனவும் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான விநியோகங்கள் அங்கு போதுமானதாக இல்லாமையால் அவசரமான மனிதாபிமான உதவிகள் அங்கு தேவைப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கின்றது. போர் தீவிரமடைந்திருந்த வியாழக்கிழமை மட்டும் காயமடைந்த 92 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக மருத்துவத் துறைப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை 75 பொது மக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த மற்றொரு மருத்துவப் பணியாளர், இதில் 12 பேர் பலியானதாகவும் தெரிவித்தார்.

மருந்துப் பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்த அவர், மயக்க மருந்து, சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிளேட் மற்றும் அடிப்படையான ஏனைய மருத்துவப் பொருட்களும் கையிருப்பில் இல்லை எனத் தெரிவித்துள்ளார். போர் இடம்பெறும் பகுதி இலங்கை அரசாங்கத்தினால் முற்றுகையிடப்பட்டு உதவிப் பணியாளர்களோ அல்லது சுயாதீனமான மனித உரிமைகள் அவதானிகளோ அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தச் செய்திகளை உறுதிப்படுத்த முடியாது இருக்கின்றது.

தொடரும் இந்தப் போரால் இந்த வருட தொடக்கத்தில் இருந்து 2,800க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும், 7,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் இருப்பதாக மார்ச் மாதத்தில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையிலான போர் இடை நிறுத்தம் ஒன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தொடரும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் தமது உயிர்களையிட்டு அச்சத்துடனேயே உள்ளனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக சுயாதீன கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். விடுதலைப் புலிகளும் பொது மக்களை கவசமாகப் பயன்படுத்தக் கூடாது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாக்கும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் படையினரிடம் சரணடைவதனைத் தடுத்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சரணடைவதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மறைமுக ஆதரவு அம்பலப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் அண்மையில் இணைய தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் மூலம் பிரபாகரனை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகளின் திட்டத்தை விளங்கிக்கொள்ள முடியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சக்திகளின் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் அடி பணிந்து யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்படக் கூடாதென ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஈழப் பிரச்சினை முற்றியதற்கு காங்கிரஸ் கட்சியும், முதல்வர் கருணாநிதியும்தான் இதற்குக் காரணம். இவர்களில் கருணாநிதிதான் துரோகி நம்பர் ஒன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.  டெஹல்கா இதழுக்கு வைகோ பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : 

கருத்துகள் இல்லை: