வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-18


இன்று கிருத்திகை திருநாள். இன்று முருகனை நினைக்கும் நேரத்தில் திரு. கல்கி என்கிற ரா.கிருஷ்ணமுர்த்தி அவர்களின் ஒரு பாடலை பார்ப்போம் கேட்போம்.கல்கி என்றாலே அவர் கதை அதுவும் சரித்திர கதை மட்டும்தான் எழுதுவார் என்று நினைக்கவேண்டாம். கவிதைகளும் சிறப்பாக எழுதுவார்.பாடல் இதோ மலை போல வந்த துன்பத்தை மாதயயை புரிந்து பனிபோல நீக்கியதற்கு நன்றியாக.


ராகம்: செஞ்சுருட்டி

மாலைப் பொழுதினிலே-- ஒருநாள்

மலர் பொழிலினிலே

கோலக் கிளிகளுடன் -குயில்கள்

கொஞ்சிடும் வேளயிலே



மாலை குலவு மார்பன் --மருவில்

மாமதி போல் முகத்தான்

வேலொன்றும் கையிலேந்தி-- என்னையே

விழுங்குவான் போல் விழித்தான்



ராகம்: பெஹாக்


நீலக் கடலினைப் போல் என் நெஞ்சம்

நிமிர்ந்து பொங்கிடவும்

நாலு புறம் நோக்கி-- நாணி நான்

யாரிங்கு வந்த"தென்றேன்.


"ஆலிலை மேல் துயின்று-- புவனம்

அனைத்துமே அளிக்கும்

மாலின் மருமகன் யான் -- என்னையே

வேலன்! முருகன்! என்பார்.



ராகம்: சிந்து பைரவி


சந்திரன் வெள்குறும் உன்முகத்தில்

சஞ்சலம் தோன்றுவதேன்?

தொந்தம் இல்லாதவளோ-- புதிதாய்

தொடர்ந்திடும் உறவோ..?


முந்தைப் பிறவிகளில் உன்னை நான்

முறையினில் மணந்தேன்

எந்தன் உயிரல்லவோ-- கண்மணி

ஏனிந்தஜால"மென்றான்.


ராகம்: மோஹனம்
உள்ளம் உருகிடினும்-- உவகை

ஊற்றுப் பெருகிடினும்

கள்ளத் தனமாக-- கண்களில்

கனல் எழ விழித்தேன்.



புள்ளி மயில் வீரன் -- மோஹனப்

புன்னகைதான் புரிந்தான்

துள்ளி அருகில் வந்தான் -- என் கரம்

மெள்ளத் தொடவும் வந்தான்.


ராகம் : மாயா மாளவ கௌளை


பெண்மதி பேதமையால்-- அவன் கை

பற்றிடுமுன் பெயர்ந்தேன்!

கண் விழித்தெ எழுந்தேந் - துயரக்

கடலிலே விழுந்தேன்



வண்ண மயில் ஏறும் பெருமான்

வஞ்சனை ஏனோ செய்தான்?

கண்கள் உறங்காவோ அக்குறை

கனவைக் கண்டிடேனோ?


திரு. டி. எம். கிருஷ்ணா அவர்களின் குரலில்







-
இதே பாடலை திருமதி எம்.ஸ். அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம்">
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!


விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!


மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!




திரைப்படம் - கந்தரலங்காரம்
இசை - குன்னக்குடி வைத்தியநாதன்
முன்னர் ஜிமெயில் தமிழில் இடைமுகம் அளித்தது. இப்போது தமிழிலேயே மடலும் அனுப்பலாம்.

உங்கள் ஜிமெயில் பக்கத்தில், SETTINGS ஐ அழுத்தவும். General பகுதியில் Languague என்ற பத்தியில் Enable Transliteration ஐ தேர்வு செய்து உங்கள் தேர்வு மொழியாக 'தமிழ்' மொழியை தேர்தெடுங்கள்

இனி தமிழிலேயே எல்லோருக்கும் எளிதாக மடல் அனுப்பலாம். மற்ற தட்டச்சு நிரலிகளை விட கூகுள் நிரலி செயல்படாது எனினும், அவை இல்லாத நேரங்களில் மற்றும் அவற்றை தேட முடியாத சூழலில் ஜிமெயிலில் இருந்தே தமிழில் மடல் அனுப்புவது எளிதாக இருக்கும்

செய்தியை அறிய தந்த நண்பர் சுப்ரமணியத்திற்கு நன்றி :)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - பாவேந்தர் பாரதிதாசன்


More than a Blog Aggregator

by பிரேம்குமார்


வாரம் சீக்கிரமாக ஓடி வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. புதுவைக்கு கிளம்ப வேண்டும். நாவலூரில் வேலை செய்வதால் கோயம்பேடு பேருந்து நிலையம் போக தேவையில்லை. அங்கு போகும் நேரத்திற்கு புதுவைக்கே போய்விடலாம். இங்கிருந்து கோவளம் போய்விட்டால் எப்படியும் ஒரு பேருந்தை பிடித்துவிடலாம். ஒவ்வொரு வாரமும் இப்படி பயணம் செய்வது சில சமயம் அலுப்பை தருகிறது. ஆனாலும் என்ன செய்வது? நீயல்லாத சென்னையில் வாரயிறுதிகளை கழிப்பதில் சுத்தமாக எனக்கு விருப்பமில்லை

அதோ, புதுவை போக்குவரத்து கழகப் பேருந்து வந்துவிட்டது. வழக்கம் போல பேருந்து நிரம்பியிருக்கிறது. மறுயோசனையின்றி படிக்கட்டில் அமர்ந்துவிட்டேன். படிக்கட்டில பயணம் செய்வது ஆபத்தானது. தூங்க முடியாத சிக்கலும் இருக்கிறது. இருப்பினும் ஏனோ அது மிகவும் பிடித்திருக்கிறது. அணு அணுவாய் சாவதாய் முடிவெடுத்தப்பின் காதல் சரியான வழி தான் என்று சொல்கிறார்கள். ஆனாலும் காதலுக்காக எதையும் செய்ய துணிபவர்கள் தான் அதிகம்.

ரொம்ப நேரம் காலை மடக்கி உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை. உள்ளம் சொல்வதையெல்லாம் உடம்பு கேட்க மறுக்க ஆரம்பித்திவிட்டது. உடற்பயிற்சி செய்தால் தானே? கல்லூரியில் சேர்ந்ததும் தான் உடற்பயிற்சி செய்யவே ஆரம்பித்தேன். காதலின் கரங்களில் சேர்ந்ததும் அதை விட்டாயிற்று. காதலி கிடைக்கும் வரை தான் உடல் அழகாக இருக்கவேண்டும். காதலி கிடைத்ததும் உள்ளம் அழகாக இருந்தாலே போதும். அப்படித்தானே முகில் என்று அப்போது கேட்டு சிரித்தார் மாமா. அப்போது உடலை பற்றி கவலைப்படாத உள்ளம் இப்போது அதை நொந்து என்ன பயன்?

இரண்டரை மணி நேரப் பயணம் தான், எனினும் பேச்சுத்துணை இல்லாமலோ அல்லது தூங்காமலோ பயணம் செய்வது எனக்கு விருப்பமில்லாது ஒன்று. உனக்கு பிறகு பேச்சுத்துணையாக யாரும் தேவைப்படவில்லை. அல்லது மனம் ஒப்பவில்லை. இப்போது தான் நினைவுக்கு வந்தது. இசைப்பேழையில் இருக்கும் பாட்டுகளை கேட்கலாம். எல்லாம் எனக்கு மிக மிக விருப்பமானவை. ரகுமான் இசையமைத்த பாடல்கள்.

இல்லை. அவை என் விருப்பப் பாடல்கள் மட்டுமன்று. நமக்கு மிகவும் பிடித்தமானவை. ஒவ்வொரு பாடலிலும் உன் நினைவும் சேர்ந்திருக்கும். ஒவ்வொரு பாடலை பற்றியும் எவ்வளவு பேசியிருப்போம். எத்தனை முறை அந்த இசையுடன் பயணித்திருப்போம். வேண்டாம், இப்போது கல்யாணியில் அமைந்த பாடல் கூட எனக்கு முகாரியாக கேட்கும்.

மகாபலிபுரத்தை தாண்டியாயிற்று. இன்னும் ஒன்றரை மணி நேரம்தான். கிழக்கு கடற்கரை சாலையின் அழகை மீறி ஏதோவொரு சலிப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. சாலையின் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டை இப்போது தான் கவனித்தேன். பேருந்தின் வேகத்திற்கேற்ப அதுவும் மூச்சிரைக்க ஓடிவருவது போல் தோன்றுகிறது. பேருந்து நகர நகர அந்த மஞ்சள் கோடு பேருந்து சக்கரங்களோடு ஒட்டுவதும் விலகுவதுமாய் இருந்தது. ஒவ்வொரு முறை விலகும்போது மீண்டும் அதே வேகத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது. பல சமயங்களில் சக்கரங்களோடு ஒன்றிணைந்து கண்ணுக்கு புலப்படாமல் போய்விடுகிறது. நம் காதல் காலங்களின் ஊடல் பொழுதுகளையும் அதன்பின்னேயான கூடல் கணங்களையும் நினைத்து கொள்கிறேன்.

காதல் கணங்கள் மட்டுமில்லை, அதன் நினைவுகளோடு உறவாடும் தருணங்களும் கூட காலத்தை மறக்கடிக்க செய்யும் சக்திபடைத்தவை போலும். பேருந்து மதுராந்தகம் தாண்டி புதுவைக்குள் நுழைந்துக்கொண்டிருப்பதை நான் உணரவேயில்லை. முத்தியால்பேட்டையில் இறங்க வேண்டியவர்கள் எல்லாம் தயாராக இருக்கும்படி நடத்துனர் சொல்லும் போது இயல்புக்கு திரும்பினேன்.

பையை தேடியெடுத்து முத்தியால்பேட்டை சந்திப்பில் இறங்கியபோது தான் நினைவுக்கு வந்தது. பேருந்தோடு பயணித்துக்கொண்டிருந்த மஞ்சள் கோட்டை காணவில்லை. எந்த இடத்தோடு நின்றுபோனதென தெரியவில்லை. அதிகாலை பனி கொட்டும் மார்கழி மாதத்திலொரு நாள் திடீரென்று நீ காற்றோடு கலந்து போனதை நினைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை!

அணு அணுவாய் சாவதாய் முடிவெடுத்தப்பின் காதல் சரியான வழி தான் - பாவலர் அறிவுமதி
படம் உபயம் : கூகுள்

House of Saddam

ஆறுமணிநேரம் உட்கார்ந்து இந்த படத்தை பார்த்தேன்.ஆனால் துளி கூட போர் அடிக்கவில்லை.நீங்கள் வரலாற்று ஆர்வலராக இல்லாதிருக்கும் பட்சத்தில் படத்தின் மேல் பெரும் வெறுப்பே வந்துவிடும்.

படத்தின் கதை என்பது சதாமின் வாழ்க்கை வரலாறுதான்.படத்து கதாபாத்திரங்கள் இயல்பான நடிப்பால் நம்மை கவர்கின்றனர்.குறிப்பாக சதாமாக நடித்த யிகால் நவோர்....துரோகம் செய்து ஓடிப்போன மருமகனை "நீ என் மகளின் கணவன்.என் பேரபிள்ளைகளின் தகப்பன்.உன்னை நான் கொல்வேனா?பயப்படாமல் மீண்டும் பாக்தாதுக்கு வா" என தேனொழுக பேசி அழைத்துவிட்டு போனை வைத்துவிட்டு கோட்டை சரிசெய்துகொண்டு வில்லத்தனமான லுக் விட்டுக்கொண்டு நடக்கும் அந்த காட்சி அசத்தலோ...அசத்தல்.அவரது முகபாவத்தை பார்த்தவுடனேயே மருமகன் இராக் திரும்பினால் என்ன நடக்கும் என புரிந்துவிடுகிறது.

சதாமின் இரண்டாம் மனைவி சமீராவை தன் வயப்படுத்தும் காட்சியும் அபாரம்.சமீராவின் கணவன் முன்னே அவளை அனைத்து முத்தமிடுகிறார் சதாம்."அவள் என் மனைவி" என பதறுகிறார் கணவர்.."நான் நீயாக இருந்தால் இதை கண்டுகொள்ள மாட்டேன்" என முணுமுணுக்கிறார் சதாமின் மருமகன்..சதாம் திரும்பி கனவனை பார்க்கிறார். அவன் முகத்தில் தோல்விக்களை. வெற்றிப்புன்னகையுடன் முத்தத்தை தொடர்கிறார் சதாம்.

சதாம் ஒரு பள்ளியில் நுழைகிறார்.அங்கே இருக்கும் உன் குழந்தையிடம் தேனொழுக கேட்கிறார்.."கண்ணே..உன் அப்பா சதாம் ஆட்சியை பற்றி வீட்டில் என்ன பேசுவார்?"..அந்த குழந்தை என்ன பதில் சொல்லும் என்ற அதிர்ச்சி நம் மனதில் ஏற்படுகிறது..குழந்தை ஒரு வினாடி யோசிக்கிறது...பிறகு "சதாம் நீடூழி வாழவேண்டும் என அப்பா சொல்வார்" என்கிறது."நல்லது" என புன்னகைத்தபடி பள்ளியை விட்டு வெளியேறுகிறார் சதாம்.

இறுதிக்காட்சிகளில் அமெரிக்க ராணுவத்துக்கு பயந்து ஒளிந்திருக்கும் நிலையில் சதாமின் இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது.மகன்களின் மரணசெய்தியை சதாம் கம்பீரமாக ஏற்கிறார்..ஏரிக்கரையில் சோகமாக மீன் பிடிக்கிறார்.ஆனால் கடைசியில் கோழையை போல் துப்பாகீ குண்டு சத்தம் கேட்டதும் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடைகிரார்.அவர் மார்பில் அமெரிக்க வீரனின் கால் பூட்ஸ் அழுத்துகிறது..

"நான் சதாம்.இராக்கிய ஜனாதிபதி.அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இனி தயார்" என்கிறார் சதாம்.

இராக்கிய மொழி அறியாத அமெரிக்க படைதளபதி 'இவர் என்ன சொல்கிறார்?" என வீரனிடம் கேட்கிரார்.

"இவர் இராக்கிய ஜனாதிபதியாம்.பெயர் சதாம் உசேனாம்.அமெரிக்க அரசுடன் பேசூவார்த்தைக்கு தயாராம்" என்கிறார் மொழிபெயர்ப்பு பணியை செய்யும் அமெரிக்கர்.

"ஓ..." என்கிறார் அமெரிக்க கமாண்டர்..அந்த "ஓ"வில் தான் எத்தனை இளக்காரம்....

சதாமின் மகன் உதய் உசேனாக நடிக்கும் பிலிப் அர்தித்தி இயல்பான நடிப்பில் கலக்குகிறார்.பார்ட்டியில் அழகான பணிபெண்னை சந்திக்கிறார்..கைவிரலில் ஒரே சொடக்கு "ஏய்..வா இங்கே..."அந்த பணிப்பெண்ணுக்கு பின்னால் நிற்கும் ஆண் வேலையாட்கள் முகத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாக ஒட்டியிருக்கிறது.

உதய் உசேன் சைக்கோபாத்.அந்த சைக்கோ பாத்திரத்தை பிலிப் ஆர்தித்தி அழகாக செய்கிறார்.மச்சானை அடிக்கடி வெறுப்பேற்றுவது ரசமான காட்சி...சதாமிடம் உதயை பற்றி அடிக்கடி போட்டு கொடுப்பார் மச்சான்.அதிலிருந்து தப்பி வரும் உதய் ஒரு காட்சியில் மச்சானிடம் கூறுகிறார்.."இதோ பார்.என் அப்பாவுக்கு உன்னை மாதிரி நிறைய உறவினர்கள் இருக்கலாம்.ஆனால் அவருக்கு இருப்பது ஒரே முதல் மகன்..அது நான் தான்.."



More than a Blog Aggregator

by செல்வன்

இஸ்ரேலிய ஆயுத கம்பனி ரஃபேல் இந்திய ராணுவத்துக்கு ஏவுகணைகளை விற்றுவருகிறது. விற்பனை என்று வந்தால் விளம்பரம் இல்லாமல் முடியுமா? ரஃபேல் தனது ஏவுகணைகளை விற்க ஒரு பாலிவுட் பாணி விளம்பரத்தையும் தயாரித்துள்ளது.

இந்திய பெண்கள் இஸ்ரேலிய ரஃபேல் ஏவுகணைகள் முன் "என்னை காப்பாயா?" என ஆடி பாடுகிறார்கள்."கட்டாயம் காப்பாற்றுவேன்.நம் நட்பு என்னாளும் தொடரும்" என இஸ்ரேலிய இளைஞன் ஒருவன் ஆடிபாடுகிறான்.பிண்னணியில் அனுமன், காளிமாதாவின் போர்க்கோல படங்கள்.

சோப்பு,சீப்பு விற்பது போல் ஏவுகணைகளை பாட்டுபாடி விற்கும் இஸ்ரேலின் ரஃபேல் கம்பனியின் டிங்கடிங்கா விடியோ பாடல் பயங்கர ஹிட்டாகிவிட்டது.யுடியூபில் 2.5 லட்சம் ஹிட்டுகளை அனாசயமாக வாங்கிவிட்டது.

எப்படியோ இனிமேல் பீரங்கி, டாங்கி விற்பவர்கள் எல்லாம் சன்டிவி, என்டிடிவியில் பாட்டுபாடி ஆடப்போகும் காட்சிகளை கண்குளிர காணலாம். இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கட் மாட்சுகளை இவர்கள் ஸ்பான்சர் செய்தால் பொருத்தமாக இருக்குமோ என்னவோ?:-)

டிங்கடிங்கா விடியோவை கண்டுமகிழ

கருத்துகள் இல்லை: