புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29


தே.பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 3 பெரியது
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 4 மேஜைகரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
புதினா - 1 கட்டு
தயிர் - 250 கிராம்
எலுமிச்சைப் பழம் - 1
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கலந்த மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 100 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கேற்ப

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 3

மேலேதூவ:

ஏலக்காய் - 5 (பொடித்துக் கொள்ளவும்)
ஜாதிக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த வறுத்த வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீயை வடித்துக் கொள்ளவும்.

*வெங்காயம்+தக்காளி +கொத்தமல்லிதழை+புதினா இவற்றை அரிந்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயைக் கீறவும்.




*மட்டனை சுத்தம் செய்து 1 மேஜைக்கரண்டிஇஞ்சிபூண்டு விழுது+கரம் மசாலா+125 கிராம் தயிர்+1/2 டேபிள்ஸ்பூன் கலந்த மிளகாய்த்தூள் +1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும்.



*பாத்திரத்தில் பட்டர்+எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம் செர்த்து வதக்கவும்.

*பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி+தயிர்+மீதமிருக்கும் தூள் வகைகள் இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

*குக்கரைத் திறந்து கறியைத் தனியாக வைத்து,தண்ணீயை அளந்துக் கொள்ளவும்.

*மசாலா நன்கு வதங்கியதும்,1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் விகிதம் மொத்தம் 6 கப் தண்ணீர் சேர்க்கவும்[கறி வேக வைத்த தண்ணீர்+தண்ணீர்].

*நன்கு கொதித்ததும் எலுமிச்சை சாறு+உப்பு+கறி+அரிசி சேர்க்கவும்.

*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

*தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் 10 நிமிடம் பிரியாணியை அவனில் வைக்கவும்.

*அரிசி நன்கு வெந்து பொலபொலவென இருக்கும் போது சமபடுத்தி மேலேதூவ சொன்ன பொருட்களை தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.

பி.கு:
அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் மாறலாம்





கடந்த 25 ஏப்பிரலில் என்டிவியில் நடந்த விவாதம்
இதில் ஈழத்தின் எதிரிகளான,அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சோ ராமசாமி, இந்துராம், சுப்பிரமணியசாமி மற்றும் பாஜக தலைவர் இல.கணேசன், 'தமிழ்மையம்'அருட்தந்தை ஜெகத்கஸ்பர்,அதிமுக மைத்ரேயன் ஆகியோர் பங்கேற்றனர்.
யுத்தம் என்றால் என்ன?

இரத்தம் சிந்துவது என்றால் என்ன?

அங்கங்களை இழப்பது என்றால் என்ன?

உடல் சிதற உறவுகளை இழப்பது என்றால் என்ன? என்பதை

சோ. இரமசாமி போன்றவர்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு போய் காட்டினால் தான் புரிந்து கொள்வார்கள் போல் உள்ளது!
கனரக ஆயுதங்களாலும் விமானங்களாலும் பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்த போவதில்லை என அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்தும், இராணுவம் மேற்கொண்டு வருகின்ற எறிகணை வீச்சுகள் தொடர்பில் நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இதன் பொருட்டு, உதவி இராஜாங்க செயலர் ரிச்சட் பவுச்சர், இணைத்தலைமை நாடுகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக, இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் போன்று, அமெரிக்கா தமது விசேட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்புமா? என கேள்வி எழுப்பப்பட்ட போது, அது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதுவரையில் சிந்திக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையின் நிலவரம் குறித்து ரிச்சட் பவுச்சர் முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் ரொபர்ட் வூட் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தியா போன்ற நாடுகளுடன் கூட்டினைந்து இலங்கை விவகாரம் குறித்து முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரொபர்ட் வூட், அவ்வாறான எண்ணம் இல்லாத போதும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன் தொலை பேசி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாக ரொபர்ட் வூட் தெரிவத்துள்ளார்.

எந்த நிலையிலும் வடக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபினமான நடவடிக்கைகள் குறித்து, அமெரிக்கா முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் ரொடர்ட் வூட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை அரசாங்கம் விசா அனுமதி வழங்க மறுத்தமை குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்;டார்.

கனரக ஆயுதங்களாலும் விமானங்களாலும் பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்த போவதில்லை என அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்தும், இராணுவம் மேற்கொண்டு வருகின்ற எறிகணை வீச்சுகள் தொடர்பில் நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இதன் பொருட்டு, உதவி இராஜாங்க செயலர் ரிச்சட் பவுச்சர், இணைத்தலைமை நாடுகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக, இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் போன்று, அமெரிக்கா தமது விசேட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்புமா? என கேள்வி எழுப்பப்பட்ட போது, அது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதுவரையில் சிந்திக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையின் நிலவரம் குறித்து ரிச்சட் பவுச்சர் முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் ரொபர்ட் வூட் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தியா போன்ற நாடுகளுடன் கூட்டினைந்து இலங்கை விவகாரம் குறித்து முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரொபர்ட் வூட், அவ்வாறான எண்ணம் இல்லாத போதும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன் தொலை பேசி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாக ரொபர்ட் வூட் தெரிவத்துள்ளார்.

எந்த நிலையிலும் வடக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபினமான நடவடிக்கைகள் குறித்து, அமெரிக்கா முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் ரொடர்ட் வூட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை அரசாங்கம் விசா அனுமதி வழங்க மறுத்தமை குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்;டார்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற அமெரிக்காவின் உடனடி தலையீடுதான் ஒரே நம்பிக்கை என்று அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.


இது தொடர்பாக இன்று புதன்கிழமை அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு வைகோ அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு:

அமெரிக்க குடியரசு தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம்.

இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழ் இனப்படுகொலைத் தாக்குதல்களை, கண்ணீருடனும் வேதனையுடனும் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

இருண்டு கிடக்கின்ற இலங்கைத் தமிழர்கள் வாழ்வில், அமெரிக்காவின் உடனடித் தலையீடுதான் ஒரே நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் தெரிகிறது.

1977 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடந்த முக்கிய நிகழ்வு ஒன்றைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

அமெரிக்காவின் மசாசூசெட் மாநிலச் சட்டமன்றத்தில் மேரி எலிசபெத் ஹோவே அம்மையார் அவர்கள், ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து மிக முக்கியமான தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள்.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மசாசூசெட் மாநில ஆளுநர் எட்வர்டு ஜெ கிங், 1977 மே மாதம் 22 ஆம் நாளை, 'தமிழ் ஈழம் நாள்' என்று அறிவித்தார்.

இலங்கையில் இருதரப்பினரும் போரை நிறுத்தவேண்டும் என்று தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, விடுதலைப் புலிகள் உடனடியாக போர்நிறுத்தம் அறிவித்து விட்டனர். ஆனால், திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகின்ற இலங்கை அரசு தாக்குதலை நிறுத்தவில்லை.

இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்ச, உலக நாடுகளை ஏமாற்றி வருகிறார்.

விமானக் குண்டுவீச்சையும் கனரக ஆயுதத் தாக்குதலையும் பயன்படுத்த மாட்டோம் என்று ஏப்ரல் 27 ஆம் நாள் அவர் சொன்னார்.

ஆனால், அன்று மாலையிலேயே விமானங்கள் குண்டுகளை வீசியதிலும், 27, 28 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்ற கடுமையான தாக்குதல்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

நாற்பதுகளில் யூதர்களை நாஜிகள் இனப்படுகொலை செய்ததுபோல், இன்று இலங்கையில் தமிழ் இனத்தையே இலங்கை அரசு கரு அறுத்து வருகிறது.

இந்தப் பிரச்சினையில் தாங்கள் நேரடியாக உடனே தலையிட்டு உலகின் தொன்மையான பழங்குடிகளுள் ஒருவரான தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டிக் கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள
வைகோ
பொதுச் செயலாளர்
(மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சி)
(மற்றும்: ஆசிரியர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "ஆம் நம்மால் முடியும்")

இலங்கை தமிழர்களை காப்பாற்ற அமெரிக்காவின் உடனடி தலையீடுதான் ஒரே நம்பிக்கை என்று அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.


இது தொடர்பாக இன்று புதன்கிழமை அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு வைகோ அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு:

அமெரிக்க குடியரசு தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம்.

இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழ் இனப்படுகொலைத் தாக்குதல்களை, கண்ணீருடனும் வேதனையுடனும் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

இருண்டு கிடக்கின்ற இலங்கைத் தமிழர்கள் வாழ்வில், அமெரிக்காவின் உடனடித் தலையீடுதான் ஒரே நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் தெரிகிறது.

1977 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடந்த முக்கிய நிகழ்வு ஒன்றைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

அமெரிக்காவின் மசாசூசெட் மாநிலச் சட்டமன்றத்தில் மேரி எலிசபெத் ஹோவே அம்மையார் அவர்கள், ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து மிக முக்கியமான தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள்.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மசாசூசெட் மாநில ஆளுநர் எட்வர்டு ஜெ கிங், 1977 மே மாதம் 22 ஆம் நாளை, 'தமிழ் ஈழம் நாள்' என்று அறிவித்தார்.

இலங்கையில் இருதரப்பினரும் போரை நிறுத்தவேண்டும் என்று தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, விடுதலைப் புலிகள் உடனடியாக போர்நிறுத்தம் அறிவித்து விட்டனர். ஆனால், திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகின்ற இலங்கை அரசு தாக்குதலை நிறுத்தவில்லை.

இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்ச, உலக நாடுகளை ஏமாற்றி வருகிறார்.

விமானக் குண்டுவீச்சையும் கனரக ஆயுதத் தாக்குதலையும் பயன்படுத்த மாட்டோம் என்று ஏப்ரல் 27 ஆம் நாள் அவர் சொன்னார்.

ஆனால், அன்று மாலையிலேயே விமானங்கள் குண்டுகளை வீசியதிலும், 27, 28 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்ற கடுமையான தாக்குதல்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

நாற்பதுகளில் யூதர்களை நாஜிகள் இனப்படுகொலை செய்ததுபோல், இன்று இலங்கையில் தமிழ் இனத்தையே இலங்கை அரசு கரு அறுத்து வருகிறது.

இந்தப் பிரச்சினையில் தாங்கள் நேரடியாக உடனே தலையிட்டு உலகின் தொன்மையான பழங்குடிகளுள் ஒருவரான தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டிக் கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள
வைகோ
பொதுச் செயலாளர்
(மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சி)
(மற்றும்: ஆசிரியர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "ஆம் நம்மால் முடியும்")

கருத்துகள் இல்லை: