புதன், 1 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-31



More than a Blog Aggregator

by தெ. சுந்தரமகாலிங்கம்
"டேய்! தாத்தா உன்னைப் பாக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படுறார். போய் ஒரு நாலு நாள் அவர்கூட இருந்துட்டு வாயேன்."

"என்னால நாலு நாள்லாம் இருக்க முடியாதும்மா. எப்படியாவது ரெண்டு நாள் இருந்துட்டு வாரேன்."

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பிறந்த ஊருக்கு வந்ததுமே தாத்தா அவனை அழைத்துக் கொண்டு போய் ஆண்டாள் கோயிலைச் சுற்றிக் காட்டினார்.

"இந்தக் கோபுரந்தான் தமிழ்நாட்டு அரசாங்க முத்திரையில இருக்குதாக்கும்!" - பெருமை பொங்கக் கூறினார் தாத்தா.

மறுநாள் சூரியன் உதிக்கும் போதே மொட்டை மாடிக்குச் சென்ற தாத்தாவைப் பின் தொடர்ந்தான்.

கோபுரத்தை நோக்கியவாறு இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கியவாறு கும்பிட்டுக் கொண்டே ஏதோ ஒரு பாசுரத்தை முணுமுணுத்தார். வழிபாடு முடிந்தது.

மாடியின் ஒவ்வொரு பகுதிக்கும் நகர்ந்து கொண்டிருந்த அவனை வேடிக்கை பார்த்தார் தாத்தா.

"இங்கே கெடைக்கலியே" என்றவன் சற்றுத் தள்ளி நின்று "இங்கேயும் கெடைக்க மாட்டேங்குதே" என்றான்.

"என்னப்பா கெடைக்கலே?"- பரிவுடன் கேட்டார்.

"போங்க தாத்தா, உங்களுக்கு டவர் தெரிஞ்சாப் போதும் நிம்மதி. என் செல்போனுக்கு டவர் கெடைக்கலியே! பேசாம அரசாங்கத்துக்குச் சொல்லி காலத்துக்குத் தகுந்தாப் போல செல்போன் டவரச் சின்னமாப் போடச் சொல்லுங்க. கட்டாயம் எல்லா இடத்துலேயும் கெடைக்க ஏற்பாடு பண்ணுறதுக்கு வழி பிறக்கும். மதச் சார்பற்ற அரசாங்கம்னும் பேர் கிடைக்கும்" என்று பேரன் கூறியது புரியாமல் .
 தமிழகத்தின் முதல்வர் இப்போது செவ்வி ஒன்றில், இலங்கையில் மக்கள் வாக்களித்து சனநாயக ரீதியில் தமிழீழம் உருவானால் அதைப் பார்த்து என்னை விட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இல்லை என்று கூறியிருந்தார். முதல்வர் கருணாநிதி இப்படி கூறி ஈழத்தமிழர் பிரச்சனையை குழப்புகிறார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் அவர் : ஈழத்தமிழர் பிரச்சனையில் கடந்த 50 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிக்கொள்ளும் முதலமைச்சருக்கு இலங்கையின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்களர் என்பதும் 30 சதவீதமே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியாதா? ஈழத்தமிழரிடையே வாக்கெடுப்பு என்று கூறாமல் இலங்கை மக்களிடையே வாக்கெடுப்பு என்று கூறுவது பிரச்சனையை வேண்டுமென்றே குழப்புவதாகும்.
பிரபல நடிகை ரம்பா முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். 'உள்ளத்தை அள்ளித்தா' உட்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் ரம்பா. தற்போது கலைஞர் தொலைக் காட்சியில் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார்.


More than a Blog Aggregator

by சந்தனமுல்லை
பொறுமைக்கு சோதனை + மூளைக்கு வேலை = பப்புவை பால் குடிக்க வைக்கறது! ஆனால், அவள் என்னதான் பிரச்சினை செய்தாலும், அழுதாலும், இப்போது அவளுக்குத் தெரியும் கண்டிப்பா குடிச்சுதான் ஆகணும், தப்பிக்க முடியாதுன்னு!! ஆனா ஒன்னு, அதுக்கு நான் புதுசு புதுசா கண்டுபிடிக்கணும் அவளை amuse செய்ய! ஒருதடவை வொர்க் அவுட் ஆனது அடுத்த முறை சுத்தமாக வேலைக்காகாது!

1. சிடி-கள் - பல சமயங்களில் உதவும், ஆனா "பப்பு குடி, பப்பு குடி" ன்னு ரீப்பிட்டிக்கிட்டே இருக்கணும்! (எங்க ஆயாவை எப்படில்லாம் லொள்ளு கொட்டியிருக்கேன், அதுக்கெல்லாம் சேர்த்துதான் இப்படின்னு நினைக்கிறேன்!)


2. காலை நேரமாயிருந்தால், வேன் கிட்டே போய் குடிக்கலாம் என்றால், வீட்டிலேயே குடிக்கறேன் என்று குடிப்பாள், ஆனால் நான் அதே ரிப்பீட்டு போட்டுக்கிட்டு இருக்கணும்!


3. ஸ்ட்ரா - கொஞ்ச நாள் பலன் தந்தது.

4. ஏதாவது ஆக்டிவிட்டீஸ்-ற்கு பொருட்களை எடுத்து வைத்துவிட்டு, பாலைக் குடிச்சு முடிச்சப்பிறகுதான் என்று ஒரு செக்!

5. பல சமயங்களில் "கதை சொல்வது" உதவியிருக்கிறது. ஆனா ரொம்ப பொறுமை தேவை!

6. ரிவர்ஸ் டெக்னிக் - பப்புவுக்கு அம்மா ரோல் கொடுத்தால், நான் அவள் மடியில் தலை வைத்துக் கொள்ள வேண்டும்! அதனால், பால் தம்ளரை அவளது கையில் கொடுத்து விட்டு, அவள் மடியில் தலை வைத்து திரும்ப அதே ரிப்பீட்டு.."அம்மா, குடிங்க அம்மா"!!


7. எண்கள் - 1 - 10 சொல்வதற்குள் (முன்னாடி இந்த டெக்னிக் வேலை செய்தது..இப்போது எப்போவாவது!!)

8. பேப்பர் கப்ஸ்

9. சாஸர் அல்லது குட்டிக் கிண்ணத்தில்...

...இன்னும் பல!! இப்படியெல்லாம் செய்து தம்ளரை காலி செய்ய வைத்ததும் நமக்கு வருமே ஒரு ஆயாசம்+சோர்வு..கூடவே கொஞ்சம் ஜாலி...இன்னும் கொஞ்ச நேரத்துக்கு ஃப்ரீ-யா இருக்கலாம்-னு! huh! :-)..ஆனால், இவை எதையுமே செய்யாமல் அவளாகவே எடுத்துக் குடிக்கும் ஓர் நாளை கனவு கண்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால், உள்மனசுக்குத்த் தெரியும்..அந்த நாள் வர இரு பத்தாண்டுகள் வேண்டுமென..ஏனெனில் DNA அப்படி!! DNA-வை மீறி அற்புதங்கள் நடக்குமா??

*மாட்டு ஜூஸ் : எஸ்விசேகர், ஒரு டிராமாவில், முதியோர் கல்வி மாதிரி சொல்லிக்கொடுப்பார். ஆரஞ்ச் ஜூசைக்காட்டி இது என்ன, "ஆரஞ்ச் ஜூஸ்", ஆப்பிள் ஜூசைக்காட்டி, இது என்ன, "ஆப்பிள் ஜூஸ்", பாலைக் காட்டியதும் மக்கள்ஸ் சொல்வாங்க, "இது மாட்டு ஜூஸ்" !!
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உள்பட, பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு, கடந்த வரும் அறிவித்த சம்பள உயர்வை விட மேலும் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒத்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆறாவது சம்பள கமிஷன் பரித்துரையின்படி கடந்த வருடம் அவர்களது சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால் அந்த சம்பள உயர்வு போதாது என்றும் இன்னும் கூடுதலாக உயர்த்த வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அரசு அறிவித்திருக்கும் அகவிலைப்படியான, அடிப்படை சம்பளத்தில் 68.8 சதவீதம் என்றிருப்பதை 78.2 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டிருந்தனர். இந்த கோரிக்கையை இப்போது ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அதன்படி கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அகவிலைப்படி உயர்வை 2007 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு கொடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பிற்கு மத்திய அரசு, தேர்தல் கமிஷனிடம், ஆட்சேபனை ஏதும் இல்லை என்ற உத்தரவை பெற்றிருக்கிறது. இருந்தாலும் பொதுத்துறை அதிகாரிகள் கேட்டபடி, ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை சம்பளத்தை மாற்றி அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், எங்களது ஒரு கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த சம்பள உயர்வினால் எங்களுக்கு வெறும் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே சம்பளம் உயரும். எனவே இன்னும் அதிகமான சம்பள உயர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
நன்றி :தினமலர்

கருத்துகள் இல்லை: