திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-03

1959ல் வந்த சிவாஜியின் படங்கள்

தங்கப்பதுமை
நான் சொல்லும் ரகசியம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
மரகதம்
அவள்யார்
பாகப்பிரிவினை

சிவாஜியுடன் பத்மினி கதாநாயகியாய் நடித்த படம் தங்கப்பதுமை.ஜி.ராமனாதன் இசையில் பல பிரபலமான பாடல்கள் இடம் பெற்ற படம்.

நான் சொல்லும் ரகசியம்...இப்படத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை..தோல்வி படம்.

வீரபாண்டிய கட்ட பொம்மன்- சிவாஜி நாடக மன்றத்தால் முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று பின் படமானது. வெள்ளிவிழா படம்.ஜெய்ப்பூர் அரண்மனையில் முதன்முதலாய் படமாக்கப்பட்ட திரைப்படம்.முதல் டெக்னிக் கலர் படம்.லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம்.முதன் முதலாக 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம்.1960...கெய்ரோவில் ந்டைப்பெற்ற ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில்..சிறந்த திரைப்படம், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற படம்.

மரகதம்...மீண்டும் சிவாஜி, பத்மினி..100 நாட்கள் ஓடிய படம்.கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற மர்ம நாவலை தழுவி எடுத்த படம்.வீணை மேதை எஸ்.பாலசந்தர் உடன் நடித்துள்ளார்.

அவள்யார்? சிவாஜி, பண்டரிபாய்...சிறந்த கதை அம்சம் கொண்ட இப்படம்..எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

பாகப்பிரிவினை...இப்படத்தை பார்க்காத முந்தைய தலைமுறையினர் இருக்கமாட்டார்கள்.சிவாஜி,சரோஜாதேவி,எம்.ஆர்.ராதா என பல பிரபலங்கள் நடித்த படம்.'தங்கத்திலே' ஏன் பிறந்தாய், போன்ற அருமையான பாடல்கள்.வெள்ளிவிழா கண்ட படம்.

இந்த வருடம் 6 படங்கள் வந்தாலும்...வியாபார ரிதியாக ஒன்றிரெண்டு தோல்வியுற்றாலும்...எல்லாம் நல்ல படங்கள் என்றே சொல்லலாம்.

அடுத்த வாரம் 1960 படங்கள்.



'irandaayirathil oruvan ' remix album. music by paul jacob, starring.... kandiban, natasha. yuvalaya, mrinalaya, eureka, aparna, menitha and all his friends.



மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...

அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்

முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்

வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்

விழிகளில் பேசியே
களைத்துப் போன
நீ
அருகிலிருந்த
மரத்தில் சாய்கிறாய்
உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...

எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை
சிணுங்கும்
இந்த இருவரிக் கவிதை
முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?

உன் வெட்க ஒளியில்
நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன
நம் முத்தங்கள்
சற்றே கூடுதல் பிரகாசத்துடன்
விடிவெள்ளியாய் மின்னுகிறது
நம் முதல் முத்தம்...
என்ன இருந்தாலும்
நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...

வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்
ஏனெனில்,
இன்று தேவதைகள்
கொண்டாடும் தினம்

தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................



(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)

image

இந்தியா தன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது!!

கடைசி மாட்சின் இரண்டாம் நாளிலேயே 379 முதல் இன்னிங்க்ஸ் முடிந்து தேனீர் இடைவேளையில் 144 ரன் மட்டுமே எடுத்து உள்ளது நியூஸிலாந்து.

என்னங்க, ஜாகீர்கான் பின்னிப் பெடல் எடுக்கிறான்..ஹர்பஜன் சிங்கின் டீக்கு முந்திய கடைசி ஓவரில் 4 முறை எல்.பி அப்பீல்!!

மெக்கெல்லம் மட்டும்தான் நியூஸிலாந்தின் "கிரிக்கெட்குடிதாங்கி"யா நின்னு ஆடிக்கொண்டிருக்கிறார்.

கொஞ்சம் நிதானம் தவறினால் முடிந்தது கதை!

பார்ப்போம் ! தோனி பெரும்பாலும் கைநழுவும் மேட்சுகளையே காப்பாற்றும் ஆபத்பாந்தவன்! கடைசி தோற்க வேண்டிய மாட்ச்சையே ஒரு மாதிரி ட்ரா செய்தாகி விட்டது!

தோனிக்கும் அதிர்ஷட தேவதைக்கும் லவ்வு!

தோனிக்கு அதிர்ஷ்டம் என்றால் பலர் இல்லையில்லை சுத்தமான அக்மார்க் திறமை என்று பேட்டைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். நமக்கெதுக்கு வம்பு!!

தாடி எடுத்த வெட்டோரி நிலைமை புரியாமல் இஷாந்தின் பவுண்ஸரை தொட்டுக்கொண்டு இருந்தார். ஒருநாள் ஆட்டம் போல ஆடினா விடுவோமா. முடிந்தது வெட்டோரியின் கதை!!

ஜமால்!

இதெல்லாம் இருக்க நம் அன்பு ஜமால் பதிவுலகின் புதிய மொக்கைப் பேரரசர் ஆகியுள்ளார்.

ஆமாங்க 10 வரி எழ்தாமல் 10000 பின்னூட்டம் வாங்கியுள்ளார்.

மொக்கைப் பேரரசனின் அன்பு பதிவுலகமெல்லாம் வழிந்து ஓடுகிறது..

வாழ்த்துக்கள் ஜமால்!!

ஜமால்!! இந்த சுட்டியைத் தட்டி ஜமாலில் தளம் செல்லவும்!!

இதை நான் எழுதி முடிக்கும்போது இந்தியா 8 வது விக்கெட்டைத்தூக்கி விட்டது. நியூஸிலாந்து 167/8..

ஒகே ஒட்டு தமிலிஷிலும்,தமிழ்மணத்திலும் போடுங்க!!

கருத்துகள் இல்லை: