வெள்ளி, 3 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-02


சென்னையில் நேற்று மட்டும் ரூ.13 லட்சம் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த குற்றம் தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் உள்பட 4 முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.

கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுவதில் ஒரு திரைப்பட இயக்குநர்தான் முக்கியப் பங்காற்றினார் என கைதானவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியைத் தொடர்ந்துள்ளனர் போலீசார்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு கடந்த வாரம் வந்த ரகசிய கடிதம் ஒன்றில் சென்னை கே.கே.நகர், கோத்தாரி நகரில் ராமாபுரம் மெயின் ரோட்டில் 70ம் நம்பர் வீட்டில் தீவிரவாதிகள் தங்கியுள்ளனர் என்றும், அங்கு துப்பாக்கிகள், வெடிப் பொருட்கள் மற்றும் ஏராளமான பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தாம்.

அத்துடன் வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ள பெண்கள், உள்ளூர் கல்லூரி மாணவிகளை வைத்து பெரிய அளவில் விபச்சாரம் நடப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதைத் தட்டிக் கேட்பவர்களை துப்பாக்கி காட்டி அவர்கள் மிரட்டுவதாகவும் தகவல் தெரிவித்திருந்தனர்.

உடனடியாக அந்த வீட்டை சோதனையிடும்படி உத்தரவிட்டார் கமிஷனர். மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் கந்தசாமி, இன்ஸ்பெக்டர்கள் பழனிச்செல்வம், செல்லப்பா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த போலீசார் சோதனையிட்டதில், அந்த வீட்டின் ஒரு அறைக்குள் 1,000, 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இதைத் தவிர ரூபாய் நோட்டுகள் போல் தயார் செய்யப்பட்ட வெறும் காகித கட்டுகளும் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ரூபாய் நோட்டுகளை சோதித்ததில் அவை கள்ள நோட்டுகள் என்று தெரிய வந்தது. மொத்தம் ரூ.13 லட்சம் இருந்தது.

கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டின் இன்னொரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணையும் மீட்டனர். இவரை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தனராம்.

இது தொடர்பாக அந்த வீட்டிலிருந்த தினகரன் (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவராம். அவர் கொடுத்த தகவலின்பேரில் சென்னை படாளத்தை சேர்ந்த அவரது கூட்டாளிகள் கோதண்டராவ் (63), ராமர் (59), பிச்சைக்கனி ராஜா (67) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தினகரனை விசாரித்ததில் வளசரவாக்கத்தில் வசிக்கும் திரைப்பட இயக்குநர் ஒருவர்தான் தியாகு என்பவர் மூலம் இந்த கள்ள நோட்டுத் தொழிலில் தன்னை ஈடுபடுத்தினார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தக் கள்ள நோட்டுக்கள் அனைத்தும் கேரள மாநிலம் குமுளியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.

அந்த சினிமா இயக்குநர் மற்றும் அவர் அறிமுகம் செய்து வைத்த தியாகு ஆகியோரைத் தேடி போலீசார் விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிறகே இயக்குநரைப் பற்றிய விவரங்கள் தரப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

அரசியல் பற்றி யோசிக்கும் தகுதி இப்போது எனக்கில்லை. ஆனால் ஒருவேளை அரசியலுக்கு வந்துவிட்டால் 100 சதவிகிதம் உண்மையாக உழைப்பேன் என்கிறார் நடிகர் அர்ஜுன்.

அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் "மாசி' படத்தின் தொடக்க விழா, சென்னையில் நடந்தது. இந்த படத்துக்கு முதலில், 'கள்ளன்' என்று பெயர் சூட்டினார்களாம். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட சாதி பெயரைக் குறிப்பிடுவது போல் உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்ததால், அந்த பெயர் மாற்றப்பட்டது.

கதைப்படி நாயகன் பெயர் 'மாசிலாமணி' என்பதால் அந்தப் பெயரின் முதல் இரு எழுத்துக்களை மாசி என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

தங்கம், தீ படங்களை இயக்கிய ஜி.கிச்சா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் தொடக்க விழா பூஜையில் அர்ஜுன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

எல்லோரும் என் இளமைத் தோற்றம் பற்றிப் பேசுகிறார்கள். புதுசு புதுசாக சாதிக்கணும் என்ற ஆர்வமும், லட்சியமும்தான் இந்த இளமையை தக்க வைத்துக் கொள்ளக் காரணம். சினிமாவில் நடிகர்-நடிகைகளின் வாழ்க்கை கொஞ்ச காலம்தான். அந்த கொஞ்ச காலத்துக்குள் என்ன சாதிக்க முடியுமோ, அதை சாதித்துவிட வேண்டும்.

அந்த ஆர்வமும்கூட என் இளமையான தோற்றத்துக்கு காரணம் எனலாம். நான், ஒரு நாளில் மூன்று முறை உடற்பயிற்சி செய்கிறேன். 40 சதவீதம் உடற்பயிற்சி என்றால், 60 சதவீதம் உணவில் கட்டுப்பாடாகவும் இருக்கிறேன்.

பேலீஸ் அதிகாரி வேடங்கள் எனக்கு பழகிய ஒன்றுதான். ஏற்கனவே ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். அந்த படங்களில் இருந்து மாறுபட்ட போலீஸ் அதிகாரியாக 'மாசி'யில் நடிக்கிறேன். இப்படியும் ஒரு போலீஸ் அதிகாரி இருப்பாரா? என்று ஆச்சரியப்படுத்தும் கேரக்டர் இது.

அரசியல்..

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக நடித்தேன். ஆனால் அதை நிஜத்தில் நடத்திப் பார்க்க முடியுமா...

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்குப் போய் ஜெயித்தார்கள். இப்போது விஜயகாந்தும் வந்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை, எந்த பக்கம் பந்து போகிறதோ, அந்த பக்கம் நாமும் போகணும். முயற்சி செய்து பார்க்கக் கூடாது. அரசியலை பற்றி ஆய்வு செய்கிற தகுதி எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், 100 சதவீதம் உண்மையாக உழைப்பேன்.

தமிழ் சினிமா தரம்!

ஸ்லம்டாக் மில்லினர் மூலம் ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது, தமிழ் சினிமா ஆரோக்கியமாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி.

ஆனால் தமிழ் சினிமா ஹாலிவுட்டுக்கு இணையாக முன்னேறிக் கொண்டிருந்தாலும், அங்கிருப்பதைப் போன்ற பொருளாதார வசதிகள் நமக்கில்லை. முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்துக்கு போக முடியாததற்கு பணம் ஒரு தடையாக உள்ளது.

ஹாலிவுட் தரத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், ஒரு படத்துக்கு ஐந்து அல்லது ஆறு பாடல்கள் கட்டாயம் என்ற திணிப்பு அவசியம்தானா? என்ற உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. ஆனால் அப்படிப் படம் எடுக்கும் தைரியம் எத்தனைப் பேருக்கு வரும்!.

குருதிப்புனல் படத்தில் கமல்ஹாசன் பிடிவாதமாக பாட்டு அவசியமில்லை என்று கூறிவிட்டார். அது மாதிரி துணிச்சல் உள்ளவர்கள் இங்கே வேறு யார்? நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் வருபவர்களை, எல்லாவிதத்திலும் திருப்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாட்டு இல்லையென்றால், படம் சரியில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

ஒரு கணவன்-மனைவி கதையை வித்தியாசமாக சொல்லலாம் என்று 'வேதம்' படத்தை எடுத்தேன். வெறும் பாராட்டுக்கள்தான் மிஞ்சியது. எனக்கு பெரிய நஷ்டம். ஆனால் அது என் சொந்த படம் என்பதால், அந்த நஷ்டத்தை தாங்கிக் கொண்டேன். நல்ல படம் எடுத்தால் நஷ்டப்பட வேண்டி வரும் என்ற நிலை மாற வேண்டும் என்றார் அர்ஜுன்.

அரசியல் பற்றி யோசிக்கும் தகுதி இப்போது எனக்கில்லை. ஆனால் ஒருவேளை அரசியலுக்கு வந்துவிட்டால் 100 சதவிகிதம் உண்மையாக உழைப்பேன் என்கிறார் நடிகர் அர்ஜுன்.

அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் "மாசி' படத்தின் தொடக்க விழா, சென்னையில் நடந்தது. இந்த படத்துக்கு முதலில், 'கள்ளன்' என்று பெயர் சூட்டினார்களாம். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட சாதி பெயரைக் குறிப்பிடுவது போல் உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்ததால், அந்த பெயர் மாற்றப்பட்டது.

கதைப்படி நாயகன் பெயர் 'மாசிலாமணி' என்பதால் அந்தப் பெயரின் முதல் இரு எழுத்துக்களை மாசி என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

தங்கம், தீ படங்களை இயக்கிய ஜி.கிச்சா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் தொடக்க விழா பூஜையில் அர்ஜுன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

எல்லோரும் என் இளமைத் தோற்றம் பற்றிப் பேசுகிறார்கள். புதுசு புதுசாக சாதிக்கணும் என்ற ஆர்வமும், லட்சியமும்தான் இந்த இளமையை தக்க வைத்துக் கொள்ளக் காரணம். சினிமாவில் நடிகர்-நடிகைகளின் வாழ்க்கை கொஞ்ச காலம்தான். அந்த கொஞ்ச காலத்துக்குள் என்ன சாதிக்க முடியுமோ, அதை சாதித்துவிட வேண்டும்.

அந்த ஆர்வமும்கூட என் இளமையான தோற்றத்துக்கு காரணம் எனலாம். நான், ஒரு நாளில் மூன்று முறை உடற்பயிற்சி செய்கிறேன். 40 சதவீதம் உடற்பயிற்சி என்றால், 60 சதவீதம் உணவில் கட்டுப்பாடாகவும் இருக்கிறேன்.

பேலீஸ் அதிகாரி வேடங்கள் எனக்கு பழகிய ஒன்றுதான். ஏற்கனவே ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். அந்த படங்களில் இருந்து மாறுபட்ட போலீஸ் அதிகாரியாக 'மாசி'யில் நடிக்கிறேன். இப்படியும் ஒரு போலீஸ் அதிகாரி இருப்பாரா? என்று ஆச்சரியப்படுத்தும் கேரக்டர் இது.

அரசியல்..

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக நடித்தேன். ஆனால் அதை நிஜத்தில் நடத்திப் பார்க்க முடியுமா...

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்குப் போய் ஜெயித்தார்கள். இப்போது விஜயகாந்தும் வந்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை, எந்த பக்கம் பந்து போகிறதோ, அந்த பக்கம் நாமும் போகணும். முயற்சி செய்து பார்க்கக் கூடாது. அரசியலை பற்றி ஆய்வு செய்கிற தகுதி எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், 100 சதவீதம் உண்மையாக உழைப்பேன்.

தமிழ் சினிமா தரம்!

ஸ்லம்டாக் மில்லினர் மூலம் ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது, தமிழ் சினிமா ஆரோக்கியமாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி.

ஆனால் தமிழ் சினிமா ஹாலிவுட்டுக்கு இணையாக முன்னேறிக் கொண்டிருந்தாலும், அங்கிருப்பதைப் போன்ற பொருளாதார வசதிகள் நமக்கில்லை. முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்துக்கு போக முடியாததற்கு பணம் ஒரு தடையாக உள்ளது.

ஹாலிவுட் தரத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், ஒரு படத்துக்கு ஐந்து அல்லது ஆறு பாடல்கள் கட்டாயம் என்ற திணிப்பு அவசியம்தானா? என்ற உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. ஆனால் அப்படிப் படம் எடுக்கும் தைரியம் எத்தனைப் பேருக்கு வரும்!.

குருதிப்புனல் படத்தில் கமல்ஹாசன் பிடிவாதமாக பாட்டு அவசியமில்லை என்று கூறிவிட்டார். அது மாதிரி துணிச்சல் உள்ளவர்கள் இங்கே வேறு யார்? நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் வருபவர்களை, எல்லாவிதத்திலும் திருப்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாட்டு இல்லையென்றால், படம் சரியில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

ஒரு கணவன்-மனைவி கதையை வித்தியாசமாக சொல்லலாம் என்று 'வேதம்' படத்தை எடுத்தேன். வெறும் பாராட்டுக்கள்தான் மிஞ்சியது. எனக்கு பெரிய நஷ்டம். ஆனால் அது என் சொந்த படம் என்பதால், அந்த நஷ்டத்தை தாங்கிக் கொண்டேன். நல்ல படம் எடுத்தால் நஷ்டப்பட வேண்டி வரும் என்ற நிலை மாற வேண்டும் என்றார் அர்ஜுன்.
நோர்வேயின் சர்வதேச  அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்  நேற்று மாலை வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடியுள்ளார். இந்த உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பிரதானி புலித்தேவன் இது தொடர்பில் கருத்துரைக்கையில், தமிழர்
நடிகர் சஞ்சய்தத் அண்மையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் லக்னோ தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுருந்தார். ஆனால் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுதத்தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற அவர் தேர்தலில் போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்தது.


இந்நிலையில், மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தன்னை மிரட்டியதாக சஞ்சய்தத் பரபரப்புப் புகார் தெரிவித்திருந்தார்.

தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சஞ்சய்தத்துக்கு உயர்ந்த பதவியான பொதுச்செயலாளர் பதவியை சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் வழங்கியுள்ளார்.

சினிமா

மலேசியப் பிரதமர் பதவி விலகினார்!

மலேசியப் பிரதமர் அப்துல்லா அஹமது பதாவி இன்று திடீரென தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். மலேசிய மன்னரிடம் இன்று அவர் தனது விலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.
ஆளும் கட்சியில் அவருக்கு செல்வாக்கில் கடும் சரிவு ஏற்பட்டதாலும், முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மதுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும் அவர் இம்முடிவை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து துணை பிரதமர் நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. நஜீப் முன்னாள் பிரதமர் அப்துர் ரஸாக்கின் மகனார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: