செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-13


ஆந்திராவில் சாதிப் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்டதால் நடிகர் ராஜசேகரை அம்மாநில போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

நடிகர் ராஜசேகர் காங்கிரஸ் கட்சிக்காக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஸ்ரீகாகுளம் டெக்கலி எனும் இடத்தில் நடந்த கூட்டத்தில், 'சிரஞ்சீவி எந்த ஜாதியோ, அதே ஜாதி வேட்பாளரைத்தான் நாங்களும் நிறுத்தியுள்ளோம். எனவே அவருக்கு வாக்களியுங்கள்' என்று கூறியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்டதும் பிரஜா ராஜ்யம் கட்சி பிரமுகர்கள் போலீஸில் புகார் செய்தனர். இதன் பேரில் ராஜசேகர் கைது செய்யப்பட்டார். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வந்த ராஜசேகர் நிருபர்களுக்கு விசாகப்பட்டினத்தில் அளித்த பேட்டியில், "30 ஆண்டுகள் சினிமாவில் உழைத்து சம்பாதித்ததை விட, கடந்த ஒரே மாதத்தில் தொகுதி சீட்டுகளை விற்று இரு மடங்கு அதிகமாக சிரஞ்சீவி சம்பாதித்து விட்டார். அவருடைய முதலமைச்சர் கனவு நிறைவேறாது. சின்னப் பசங்களை வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டுகிறார் அவர்" என்றார் ராஜசேகர்.

உடன் வந்த அவரது மனைவி ஜீவிதா, "முதல்வராகிவிட வேண்டும் என்ற பேராசைக்காரர் சிரஞ்சீவி. கட்சி ஆரம்பித்து கொஞ்ச நாளாவது அரசியல் செய்து பக்குவப்பட்ட பிறகுதான் தேர்தலில் போட்டியிட வேண்டும். என்னைக்கூட முதல்வர் ராஜசேகர ரெட்டி தேர்தலில் போட்டியிடச் சொன்னார். ஆனால் கொஞ்ச நாள் அனுபவம் வந்த பிறகு நிற்கிறேன் என்று கூறிவிட்டேன்" என்றார்.

வன்முறைக் காட்சிகள் அதிகமிருப்பதாகக் கூறி பிரம்மதேவா படத்தின் ஏராளமான காட்சிகளை வெட்டச் சொல்லிவிட்டது சென்சார் போர்டு.

ராயல் பென்டகன் மீடியா தயாரிக்கும பிரம்மதேவா, ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாம்.

நகரில், திடீர் திடீர் என மர்மமான முறையில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள். மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு திக்கித் திணறி போலீசார் கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்.

ஆனால் கொலையாளி யார் என்பது தெரிந்தது போலீசார் அதிர்கிறார்கள். கொலைக்கு அவன் சொ்ல்லும் காரணங்கள் இன்னும் பேரதிர்ச்சியைத் தருகின்றன.

இந்த த்ரில்லரில் நாயகனாக நடித்திருப்பவர் டாக்டர் ராம். திருச்சியை சேர்ந்த மருத்துவரான இவருடன் தேஜாஸ்ரீ, முமைத்கான் ஆகியோர் ஜோடியாக நடித்து கவர்ச்சியில் கலங்கடித்துள்ளனராம்.

வி.எஸ்.தர்மலிங்கா டைரக்டு செய்துள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டது.

படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரி மற்றும் உறுப்பினர்கள், படத்தில் வன்முறை அதிகமாக இருப்பதாக கூறி, 16 இடங்களில் வெட்டவேண்டும் என்றார்கள். அப்படி வெட்டினால், படத்துக்கு யு ஏ சர்டிபிகேட் தருகிறோம். வெட்டவில்லை என்றால், ஏ சர்டிபிகேட்தான் தருவோம், என்று கூறிவிட்டார்களாம்.

அந்த 16 காட்சிகளையும் வெட்டி விட்டால் படத்தில் பார்க்க ஒன்றுமே இருக்காது என்று முடிவு செய்த இயக்குநரும் தயாரிப்பாளரும் பரவாயில்லை, ஏ சர்டிபிகேட்டே கொங்டுங்கள் என்று கூறிவிட்டார்களாம்.

அந்த சர்டிபிகேட்டுக்காகத்தான் இயக்குநர் இத்தனை கஷ்டப்பட்டாரென்பது தணிக்கைக் குழுவுக்குத் தெரிய வாய்ப்பில்லையே!

இப்போதெல்லாம் தேர்தல் நேரத்தில் நடிகர்-நடிகைகளின் கால்ஷீட் கிடைப்பதும் அரிதாகி வருகிறது. காரணம் திரைப்படங்களில் நடிப்பது போக, அரசியல் மேடைகளிலும் தோன்றி தொண்டர்களை மகிழ்விக்க வேண்டியுள்ளது.

வட இந்தியாவில் சூப்பர் ஸ்டார்கள் தொடங்கி சாதா ஸ்டார்கள் வரை தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாகிவிட்டார்கள்.

தென்னிந்தியாவில் ஆந்திராவில் நடிகர், நடிகையர் பிரச்சாரம் தூள் பறக்கிறது. தமிழகத்தில் இம்முறை நடிகர்-நடிகர்கள் பிரச்சாரம் இன்னும் சூடி பிடிக்கவில்லை.

ஆனால், கர்நாடகத்தில் சினிமா ஸ்டார்கள் அரசியல் மேடைகளை அலங்கரிப்பது சமீப காலமாக அதிகரித்துவிட்டது. இந்த அரசியல் ஜோதியில் இப்போது லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் லட்சுமி ராய். கிரிக்கெட் தோணி புகழ் அதே பெல்காம் பேபிதான்.

லட்சுமி ராய் இப்போது தனது தாய்மொழியான கன்னடத்திலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். பூர்வீகமும் கர்நாடகாதான் என்பதால் கர்நாடக மக்களவைத் தொகுதிகளில் அவரைப் பிரச்சாரம் செய்ய வைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயன்றன.

கடைசியில் பகுஜன் சமாஜ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார் லட்சுமி ராய்.

பெங்களூர் மத்திய தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக விஜய்சிங் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகத்தான் நடிகை லட்சுமிராய் பிரச்சார களமிறங்கியுள்ளார்.

அத்தொகுதிக்குட்பட்ட சிவாஜி நகரில் வேட்பாளர் விஜய்சிங்குடன் சென்று அவருக்கு ஓட்டு கேட்டார். உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியின் திட்டங்கள் தனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதாக லட்சுமி ராய் தெரிவித்துள்ளார்.

அரசியலில் நுழையும் எண்ணமோ, அரசியல்வாதிக்குரிய தகுதியோ எனக்குக் கிடையாது. ஆள்காட்டி விரலில் மை வைத்துக் கொள்ளும் அளவுக்குதான் எனக்குத் தகுதி உள்ளது என கலைஞானி கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அரசியல் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

பொதுவாக எந்த ஒரு தொழிலில் ஈடுபடுவதாக இருந்தாலும் அதற்கு தனித் தகுதியும் திறமையும் வேண்டும். அரசியலுக்கும் அப்படி ஒரு தகுதி தேவைப்படுகிறது. எனக்கு அந்தத் தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதேபோல அரசியல் குறித்த எனது பார்வைகளைக் கூட எந்த ஒரு பொது மேடைகளிலும் வைத்து நான் பகிரந்து கொண்டதில்லை.

எனக்குள்ள ஒரே தகுதி, ஆண்டுக்கு ஒருமுறையோ, சில முறைகளோ ஆள்காட்டி விரலில் மை வைத்துக் கொண்டு, அதை வெளியில் காட்டிக் கொள்வதுதான். அதுவே பெரிய விஷயம், என்கிறார் கமல்ஹாசன்.

இப்போது உன்னைப் போல் ஒருவன் படத்தில் பிஸியாக இருக்கும் கமல், விரைவில் முழுக்க முழுக்க இந்தியில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

'பேவாட்ச்' தொடர் புகழ் பமீலா ஆண்டர்சன் விரைவில் நான்காவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

கனடாவில் பிறந்த நடிகை பமீலா ஆண்டர்சன் துவக்கத்தில் ஹாலிவுட்டில் தான் நடித்தார் என்றாலும் அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது 1992ல் வெளிவந்த 'பேவாட்ச்' டிவி தொடர் தான்.

இதை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் வெற்றிகள் குவி்ந்தன. ஆனால், சினமா வாழ்க்கைக்கு நேர் மாறாக இவரது திருமண வாழ்க்கை தொடர்ந்து தோல்வியை சந்தித்து. ஒரு முறை, இரு முறை அல்ல மூன்று முறை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவகாரத்து பெற்றார்.

இவரது முதல் கணவர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் மோட்லே டாமி லீ. இவர்களுக்கு பிரான்டன் (12), டைலன் (11) என இரண்டு குழந்தகள் பிறந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார். இவரை தொடர்ந்து ராப் பாடகர் கிட் ராக் மற்றும் சமூக சேவகர் ரிக் சாலமன் ஆகியோர் மணந்து பின்னர் விவகாரத்து பெற்றார்.

தற்போது 41 வயதான நிலையில் பமீலா நான்காவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த ரகசியத்தை முதலில் கசியவிட்டவர், பமீலாவின் உடை தயாரிப்பளரும், பிரபல பேஷன் டிசைனரான ரிச்சி ரிச் தான்.

மியாமியில் நடந்த பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற ரிச்சி சக விருந்துனர்களிடம் பமீலாவுக்கு தான் புதிய திருமண உடைகளை டிசைன் செய்து வருவதை போட்டு உடைத்துள்ளார். பமீலா ஆழ்கடல் நீச்சல்வீரரான ஜேமி பட்கெட் என்பவருடன் டேட்டிங் செய்து வருவதை அடுத்து அவரை தான் திருமணம் செய்ய போகிறார் என கூறியுள்ளார்.

இது குறித்து பமீலா கூறுகையில், எனது இரண்டு மகன்களுக்கு ஜேமியை மிகவும் பிடித்துவிட்டது. அதனால் தான் இந்த திருமண ஏற்பாடு என்றார்.
பொம்மாயீஈஈஈஈஈஈஈஈ - அருந்த-தீ!!

:) இது வரையில் திரை விமர்சனமே எழுதியதில்லை.. திரு, கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.. இது இரண்டாவது... இதுவும் திரை விமர்சனம் இல்லை.....

படம் பார்க்க செல்பவர்களுக்கு சில டிப்ஸ்..

படம் பார்க்கும் போது நீங்கள் விசில் அடித்து, நடனம் ஆடி, கத்தி, கூப்பாடு போடுபவர்களாக இருந்தால், தயவுசெய்து நண்பர்களுடன் செல்லுங்கள், மனைவி அல்லது கணவரோடு சென்றால் அப்படி எல்லாம் செய்ய முடியாது அடக்கம் ஒடுக்கமாக உட்கார்ந்து படம் பார்க்கவேண்டும் !! :). நான் மிஸ் செய்து விட்டேன்... !! :((( இது விசில் அடித்து.. பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈ!! நான் உன்னை விடமாட்ட்டேண்டீஈஈஈஈஈஈஈஈ !! என்று கத்தி பார்க்க வேண்டியப்படம்.. :).

எப்போதும் போல இந்த படம் பார்க்கும் போதும் நிறைய கேள்விகள்... !! அருந்ததீ' யின் கணவர் என்ற கதாப்பாத்திரத்தை தேவைப்படும் ஸ்கீரிங்களில் தேடி தேடி.. கடைசியில்...........:( அவ்வ்வ்வ் ! ஏன் இப்படி..?!!

கபால மோட்சம் ???!!! - பிரம்மாவில் கையில் இருக்கும் வஜ்ராயுதம்??!!!- ம்ம்..ஒரு ஸ்பெஷல் நடனம்!! - அன்வர் ??!!!! - இந்த நடிகை அனுஷ்கா !! அழகு !! அதுவும் இந்த கெட்டிபில் தனி அழகு... !!

பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈஈ உன்னை நான் விடமாட்ட்ட்டேன்ன்ன்ண்டீஈஈஈஈ !

அணில்குட்டி அனிதா :- ஹய்யாஆங்க்..!!. இங்கயுமா.. படம் பார்த்துட்டு வந்ததிலிருந்து யாரை பார்த்தாலும் "பொம்மாயீஈஈஈஈஈஈ... ன்னு கத்திக்கிட்டு இருக்காங்க... ஓ காட்.. .வெயில் வேற ஜாஸ்தி ஆகிபோச்சி கவி' ஆர் யூ ஓகே !!!

பீட்டர் தாத்ஸ் :- The past is a ghost, the future a dream, and all we ever have is now."
????!

கருத்துகள் இல்லை: