செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-13

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத உதவிகளை நிறுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் சமூக நல வழக்கொன்று தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பான விசாரணைகள் நாளைய தினம் சென்னை உயர் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த கருப்பன் என்பவரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் பாரியளவிலான ஆயுதங்களை இலங்கை அரசாங்கத்திற்கு விநியோகம் செய்து வருவதாகவும், உடனடியாக இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட குளிர்பானங்களை அருந்தியதனால் பயணிகள் வாந்தி எஐத்ததினால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து கொழும்புக்கு கடந்த சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் செல்லும். அந்த விமானம் சென்னை வராததால் பகல் 12 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்வதற்காக 160 பயணிகள் பாதுகாப்பு சோதனை முடிந்து முதல் மாடியில் காத்திருந்தனர்.

நீண்ட நேரமாகக் காத்திருந்ததால் பயணிகளுக்கு சிற்றுண்டி, குளிர்பானத்தை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகம் வழங்கியது. குளிர்பானம் அருந்தியவுடன் பயணிகள் சிலர் வாந்தி எடுத்தனர். உடனே குளிர்பான போத்தல்களைப் பார்த்தபோது அவை காலாவதியானவை என்று தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த விமான பயணிகள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாக ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதற்குள் மேலும் சிலர் வாந்தி எடுக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட பயணிகள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தனியார் ஒப்பநதக்காரர் கொடுத்த குளிர்பானத்தையே தாங்கள் வழங்கியதாக ஊழியர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவருக்கும் புதிய குளிர்பானம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் பிற்பகல் 12.20 மணிக்கு விமானம் கொழும்பை நோக்கி புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட குளிர்பானங்களை அருந்தியதனால் பயணிகள் வாந்தி எஐத்ததினால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து கொழும்புக்கு கடந்த சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் செல்லும். அந்த விமானம் சென்னை வராததால் பகல் 12 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்வதற்காக 160 பயணிகள் பாதுகாப்பு சோதனை முடிந்து முதல் மாடியில் காத்திருந்தனர்.

நீண்ட நேரமாகக் காத்திருந்ததால் பயணிகளுக்கு சிற்றுண்டி, குளிர்பானத்தை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகம் வழங்கியது. குளிர்பானம் அருந்தியவுடன் பயணிகள் சிலர் வாந்தி எடுத்தனர். உடனே குளிர்பான போத்தல்களைப் பார்த்தபோது அவை காலாவதியானவை என்று தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த விமான பயணிகள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாக ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதற்குள் மேலும் சிலர் வாந்தி எடுக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட பயணிகள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தனியார் ஒப்பநதக்காரர் கொடுத்த குளிர்பானத்தையே தாங்கள் வழங்கியதாக ஊழியர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவருக்கும் புதிய குளிர்பானம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் பிற்பகல் 12.20 மணிக்கு விமானம் கொழும்பை நோக்கி புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா தலைநகர் ஒட்டோவா நகரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற கவனயீர்ப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்காணோர் வெலிங்டன் வீதியில் உணர்வெழுச்சியுடன் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டிருந்தனர்.



சிறீலங்காவில் உடனடிப் போர் நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுக்கவேண்டும்,

போர்தளத்தில் வசிக்கும் மக்களுக்கான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்யவேண்டும்,

சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இரசாயன ஆயுதப் பயன்பாட்டை உடனடியாகத் தடை செய்தல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்படுகின்றது.



இதேவேளையில் இக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை முதல் ஆறு தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.ஜுலியஸ் ஜேம்ஸ், புஸ்பராஜா நல்லரத்தினம், நடராஜா தையல்நாயகி, வைசீகமகாபதி யோகேந்திரன் மகாலிங்கம் சிவனேஸ்வரி மற்றும் கணபதிப்பிள்ளை துளசிகாமணி ஆகியோரே அவ் ஆறுபேராவர்.


இவர்களில் உடல்நலக் குறைவுடன் உண்ணாநிலையைத் தொடரும் தையல்நாயகி அவர்களின் நிலை கவலைக்கிடமானதாக உள்ளதாகவும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மயக்க நிலையை அடைந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

"அவருடைய (கனடிய பிரதமர்) விழிகள் திறக்க மறுப்பின் எங்களுடைய விழிகள் மூடப்படும்" என உண்ணாநிலையை மேற்கொள்ளும் தமிழர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.



கடந்த வியாழக்கிழமை உடனடி போர் நிறுத்த ஒப்பந்தத்தத்தை மேற்கொள்ளுமாறு கனடிய வெளிவிவகார அமைச்சர் லாரன்ஸ் கனொன் சிறீலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கை சிறீலங்கா அரசினால் மறுக்கப்படும் நிலையில் கொழும்பில் வசிக்கும் சிறீலங்காவிற்கான கனடிய உயர் அதிகாரி அஞ்சலா பொக்டனை சிறீலங்காவிலிருந்து கனடா வெளியேற்ற வேண்டுமென உண்ணாநிலையை மேற்கொள்ளும் கனடியத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அவ்வாறு நடைபெறும் வரை தமது உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என உறுதி தெரிவித்துள்ளனர்.






கனடா தலைநகர் ஒட்டோவா நகரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற கவனயீர்ப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்காணோர் வெலிங்டன் வீதியில் உணர்வெழுச்சியுடன் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டிருந்தனர்.



சிறீலங்காவில் உடனடிப் போர் நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுக்கவேண்டும்,

போர்தளத்தில் வசிக்கும் மக்களுக்கான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்யவேண்டும்,

சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இரசாயன ஆயுதப் பயன்பாட்டை உடனடியாகத் தடை செய்தல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்படுகின்றது.



இதேவேளையில் இக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை முதல் ஆறு தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.ஜுலியஸ் ஜேம்ஸ், புஸ்பராஜா நல்லரத்தினம், நடராஜா தையல்நாயகி, வைசீகமகாபதி யோகேந்திரன் மகாலிங்கம் சிவனேஸ்வரி மற்றும் கணபதிப்பிள்ளை துளசிகாமணி ஆகியோரே அவ் ஆறுபேராவர்.


இவர்களில் உடல்நலக் குறைவுடன் உண்ணாநிலையைத் தொடரும் தையல்நாயகி அவர்களின் நிலை கவலைக்கிடமானதாக உள்ளதாகவும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மயக்க நிலையை அடைந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

"அவருடைய (கனடிய பிரதமர்) விழிகள் திறக்க மறுப்பின் எங்களுடைய விழிகள் மூடப்படும்" என உண்ணாநிலையை மேற்கொள்ளும் தமிழர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.



கடந்த வியாழக்கிழமை உடனடி போர் நிறுத்த ஒப்பந்தத்தத்தை மேற்கொள்ளுமாறு கனடிய வெளிவிவகார அமைச்சர் லாரன்ஸ் கனொன் சிறீலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கை சிறீலங்கா அரசினால் மறுக்கப்படும் நிலையில் கொழும்பில் வசிக்கும் சிறீலங்காவிற்கான கனடிய உயர் அதிகாரி அஞ்சலா பொக்டனை சிறீலங்காவிலிருந்து கனடா வெளியேற்ற வேண்டுமென உண்ணாநிலையை மேற்கொள்ளும் கனடியத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அவ்வாறு நடைபெறும் வரை தமது உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என உறுதி தெரிவித்துள்ளனர்.






பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரத்தில் இன்று சனிக்கிழமை (ஆறாவது நாளாக) தொடர்ந்து நடைபெற்று வருகின்ற கவனயீர்ப்பு நிகழ்வில் கிட்டத்தட்ட 8000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தனர்.

பாரீஸ் நகரத்திலுள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் சிறுவர் முதல் முதியவர் வரை ஒன்று திரண்டு வானதிர உணர்ச்சி முழக்கங்களைக் கூவி பெரும் உணர்ச்சிப் பெருவாகத்தை வெளிக் கொணர்ந்திருந்தனர்.


இதே நேரம் கடந்த ஐந்து நாட்களாக நீர், ஆகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நான்கு தமிழ் இளைஞர்கள் நேற்று இரவு முதல் நீரருந்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

நேற்று சனிக்கிழமை இரவு உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ஒபவில்லியே நகர பிதா (மேயர்) உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். உண்ணாவிரதம் இருப்பவர்கள் நீரருந்தி உண்ணாவிரதத்தை தொடருமாறும், செவ்வாய்கிழமை இவர்களது கோரிக்கை தொடர்பான முடிவொன்றைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.

அவரது நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மக்கள் உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களை நீரருந்திப் போராட்டத்தை தொடருமாறு வற்புறுத்தியதை அடுத்து இளைஞர்கள் நகரபிதாவினதும் கூடியிருந்த மக்களினதும் கோரிக்கையை ஏற்று நீரருந்தி உண்ணாவிரதத்தை தொடரச் சம்மதித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு நகரபிதா நீரை அருந்தவைத்தார்.

எனினும், வருகின்ற செவ்வாய்கிழமை முடிவொன்றினைப் பெற்றுத் தராதுவிட்டால் தாம் மீண்டும் நீர் அருந்தாமலேயே போராட்டத்தை தொடரப்போவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விரைவாக தான் முடிவொன்றை பெற்றுத்தருவதாக பரிஸ் நகரபிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: