வெள்ளி, 10 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-06

ஜோண்ணா,
ஒழுங்கு மரியாதையா பதிவ போடுற வேலைய பாருங்க. அதென்ன பதிவே போடாமல் பதிவர் ஒன்று கூடலுக்கு மட்டும் நேரத்துக்கு போறிங்க?! இதில சிங்கை பதிவர்கள் தலைவர் பதவி வேறு!! ம்ம்கும்

ஏதோ உங்களுக்கு மட்டும் தான் வேலை அதிகம் போலவும், நாங்கெல்லாம் வேலை இல்லாமல் இருப்பது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றீர்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உடனே பதிவு போடுங்கள், அது சஞ்சயை கலாய்க்கும் பதிவாக இருந்தால் கூட மகிழ்ச்சியே!

உங்கள் பதிவு வரவில்லை எனில்:

தூயா சமையல்கட்டில் தினமும் 3 தடவைகள் மட்டுமல்லாது 6 தடவைகள் சமைப்பார்.
லீ 1 நாள் சாப்பிட்டு கொண்டே உண்ணாவிரதம் இருப்பார்.
ராம் அதிசயபறவைகளை கண் கொண்டும் பார்க்க மாட்டார்.
ஜோதி அண்ணா வீட்டு இட்லி உங்க பக்கம் வரும்.
ஜமால் உங்களுக்காக டீ குளிப்பார்

இவ்வண்ணம்,
தூயா
வாழ்நாள் தலைவர்
ஜோண்ணாவை மிரட்டுவோர் சங்கம்.
தலமை செயலகம்
ஒஸ்திரேலியா
யுத்த முனைக்கு மேலதிக புலிகளை அனுப்ப முடியாமல் போனதற்காக புலிகளின் உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தனது உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
புதுக்குடியிருப்பில் புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளையடுத்தே பொட்டு அம்மான் மன்னிப்பைக் கோரினாரெனத் தெரிய வந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள படையினர் நடத்திய தாக்குதலில் 420க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில், புலிகளின் வெலிஓயா பகுதி முன்னாள் பொறுப்பாளர் ஆதித்தியன் என்பவரும் இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரெனத் தொலைத் தொடர்பு கருவிகளை ஒட்டுக் கேட்ட போது தெரியவந்து ள்ளது. படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில் மறைந்திருக்கும் புலிகளின் தற்போதைய நிழல் தலைவரும், உளவுப் பிரிவுப் பொறுப்பாளருமான பொட்டு அம்மான், கண்ணீர் சிந்திய நிலையில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

"சகல விடயங்களும் எனது கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்று விட்டது" எனக் கூறியுள்ள பொட்டு அம்மான் யுத்த முனையில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். புதுக்குடியிருப்பை முழுமையாகக் கைப்பற்றிய படையினர் அங்கே தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்வதே தற்போதைய முக்கிய விடயமாக இருக்கிறதென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் புதுக்குடியி ருப்பை கைப்பற்றியதைத் தொடர்ந்து விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

படையினர் பெற்ற வெற்றி சிறப்பானதாகும் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளத்திற்கு இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

புலிப் பயங்கரவாதிகளிடமிருந்த கடைசி நிலப்பரப்பும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளை, தொடர்ந்தும் முன்னேறி வரும் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக விமானப் படையினர், மற்றும் கடற்படையினர் ஆற்றிய சேவைகளை பாதுகாப்புச் செயலாளர் பாராட்டியுள்ளார்.


விக்ரம்-ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் கந்தசாமி படக்குழுவினர் 30 கிராமங்களை தத்தெடுத்து உள்ளனர். படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது மேலும் பல புதிய கிராமங்களைத் தத்தெடுக்கும் வித்தியாசமான திட்டத்தை அறிவிக்கின்றனர்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள கந்தசாமி படத்தின் அசத்தல் முன்னோட்டப் படங்கள் சமீபத்தில வெளியாகின.

இதற்கென நடைபெற்ற விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் சுசி கணேசன், விரைவில் புதிய கிராமத் தத்தெடுப்பு திட்டம் ஒன்றை அறிவிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

கந்தசாமி படம் ஆரம்பிக்கும் போதே, இரு கிராமங்களைத் தத்தெடுத்து, அந்த கிராமங்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்து தந்ததனர் கந்தசாமி படத் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் சுசி கணேசனும்.

இதன் தாக்கத்தில் விழாவுக்கு வந்த விருந்தினர்கள் சிலரும் சில கிராமங்களைத் தத்தெடுப்பதாக அறிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிகள் நடந்து முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது, 30 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளது கந்தசாமி படக்குழு. இந்தக் கிராமங்களில் இதுவரை செய்யப்பட்ட சாதனைகள் குறித்து இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.

அதே நாளில் புதிய கிராமங்கள் பலவற்றைத் தத்தெடுக்கும் விதத்தில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்களாம்.

பாரீஸ்: ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் பாடகி சல்மா ஹயேக்கின் கணவர் பிரான்காய்ஸ் ஹென்றி பினால்ட்டை, அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 1,200 ஊழியர்கள் காருக்குள் வைத்துப் பூட்டி சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பினால்ட் பிரான்ஸின் முன்னணி தொழிலதிபர் ஆவார். சமீபத்தில் தனது இரு நிறுவனங்களைச் சேர்ந்த 1200 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கினார். பொருளாதார நெருக்கடி நிலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அவர் எடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர்களில் 50 பேர் கடந்த வாரம் பாரீஸில் நடந்த நிறுவன கூட்டத்தில் பங்கேற்க வந்த பினால்ட்டை அவரது காருக்குள் வைத்து சிறை பிடித்தனர்.

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கலவரத் தடுப்புப் போலீஸார் விரைந்து வந்து பினால்ட்டை மீட்டனர்.

46 வயதாகும் கோடீஸ்வரரான பினால்ட்டுக்கு, கிறிஸ்டி ஏல நிலையம், குச்சி, கன்வர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்களில் பங்கு உள்ளது.

சல்மா ஹயேக்கை கடந்த மாதம்தான் கல்யாணம் செய்து கொண்டார் பினால்ட். அவரது முதல் மனைவியின் பெயர் பிரீதா ஸ்டார். இவர் மூலம் பினால்ட்டுக்கு வாலன்டினா என்ற மகள் உள்ளார்.

'கமல்ஹாஸன் மகள் என்பதால் என் மகளுக்கு எந்தச் சலுகையும் கிடைத்துவிடவில்லை. சொல்லப் போனால் அவருக்கு என் பெயர் ஒரு சுமைதான்' என்கிறார் கலைஞானி கமல்ஹாஸன்.

தன் மகளைப் பற்றி சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "ஸ்ருதியைப் போன்ற திறமையான இளம் பெண்களைப் பார்ப்பது அரிது. அவரது தந்தை என்ற பெருமிதத்தில் இப்படிச் சொல்லவில்லை. அது நடுநிலையாளர்களுக்கே புரியும். ஒரு வெளி நபராக இருந்து என் மகளை கவனித்து வந்துள்ளேன். எந்த உதவியும் வேண்டி என்னிடம் அவர் நின்றதில்லை. தனக்கான பாதையைத் தானே அமைத்துக் கொள்ளும் அளவு தன்னம்பிக்கையும் திறமையும் மிக்கவர் ஸ்ருதி", என்று கூறியுள்ளார்.

'லக்' எனும் இந்திப் படத்தில் ஸ்ருதி நடிப்பதை உறுதி செய்த கமல், தற்போது இந்துஸ்தானி இசையை முழுமையாகக் கற்பதில் ஸ்ருதி தீவிரமாக உள்ளதாகக் கூறினார்.

தனது அடுத்த படமான 'தலைவன் இருக்கின்றான்' இசையமைப்பாளர் யார் என்பதை இதுவரை வெளியிடாமல் இருந்து வந்த கமல், முதல் முறையாக இந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

"இனியும் அதை ரகசியமாக வைத்திருப்பதில் அர்த்தமில்லை. ஆம்... என் மகள் ஸ்ருதிதான் எனது அடுத்த படமான 'தலைவன் இருக்கின்றானு'க்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே அவரது இசையில் ஒரு பாடல் கூட கம்போஸ் செய்துவிட்டோம். அற்புதமாக வந்துள்ளது அந்தப் பாடல்" என்றார் கமல்.

கமல்ஹாஸன் மகள் என்பது ஸ்ருதிக்கு எந்த அளவு உதவியிருக்கிறது?

"இங்கே திறமை இருந்தாதான் ஜெயிக்க முடியும். என் மகள் என்பதற்காக எந்த வாய்ப்பும் வந்துவிடாது. இன்னும் சொல்லப்போனால், கமல்ஹாஸன் மகள் என்ற 'பட்டம்' ஸ்ருதிக்கு ஒரு சுமை என்றுகூடச் சொல்வேன்!"

கருத்துகள் இல்லை: