திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-05

05.04.2009.  . ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி தாலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் தற்போது உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் அரசுடன் தாலிபான்கள் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி தற்போது இங்கு ஷாரியா சட்ட திட்டங்கள் அமலில் உள்ளது. இந்நிலையில், பாலியல் குற்றச்சாற்றுக்கு இளம்பெண் ஒருவரை தெருவில் இழுந்து வநத தாலிபான்கள் அவரை 34 முறை பிரம்பால் அடித்தனர். இரண்டு தாலிபான்கள் இளம் பெண்ணை தரையில் அழுத்திப் பிடித்திருக்க, மற்றொரு தாலிபான் அவரை பிரம்பால் அடித்தார். வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் [...]
05.04.2009.  உலக முதலாளித்துவம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது என்று வெனிசுலா ஜனாதிபதியான ஹியூகோ சாவேஸ் கருத்து தெரிவித்துள்ளார். அரசுத் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் சாவேஸ் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், முதலாளித்துவமும், அதன் மாண்புகளும்(!) பெரும் நெருக்க டியில் சிக்கியுள்ளன. இதற்கு அடிப்படையான பொருளாதாரக் கொள்கைகளை உலகம் முழுவதும் திணித்த அமெரிக்காவும்,பிரிட்டனுமே நெருக்கடி ஏற்பட்டதற்கு பெரிய காரணமாகும். உலக நிதிஅமைப்பு என்ற வேதாளத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முதலா ளித்துவத்தால் இயலாது. முதலாளித்துவம் தோல்வியைச் சந்தித்தே ஆக வேண்டும். அது முடிவுக்கு [...]
யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு தான் விடுதலைப்புலிகள் என்ற தர்க்கமே, இன்று தமிழ் இடதுசாரிய அரசியல் வழியில் செல்வாக்கு வகிக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி தனது சமூக அரசியல் மதிப்பீட்டை, இப்படி தவறாகவே கூறி வருகின்றனர். அதாவது இந்த யாழ் சமூக கட்டமைப்பைப் தாண்டி, புலிகளைத் தவிர வேறு யாரும் உருவாயிருக்க முடியாது என்கின்றனர். யாழ் மேலாதிக்க தன்மை தான், புலியை உருவாக்கியது என்கின்றனர்.

இதை நாங்கள் தெளிவாகவே மறுக்கின்றோம். இந்த முடிவை கூறுபவர்கள் அனைவரும், புலி பாசிச சூழலை எதிர்கொள்ள திராணியற்றவர்கள். ஒரு மாற்று அரசியல் வழியை மக்களுக்கு முன் வைக்கத் தவறியவர்கள் அல்லது அதில் தோற்றவர்கள். ஒரு அரசியல் வழியின்றி, தம் சொந்த அடையாளத்தையே இழந்தவர்கள்;. தமது இன்றைய இந்த நிலையை நியாயப்படுத்திக் கொள்ள, இந்த தர்க்கத்தை முன்வைக்கின்றனர். இதன் மூலம் தமது செயலற்ற தன்மையையும், கருத்தற்ற ஓடுகாலித்தனத்தையும் நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

இதன் சாரம், யாழ் சமூகக் கட்டமைப்பின் தன்மையைத் தாண்டி, புலிக்கு மாற்றாக எதுவும் உருவாகியிருக்கவே முடியாது என்கின்றனர். இதனால் தான், தாம் சமூகத்தை மாற்ற எதுவும் செய்யமுடியாது இருக்கின்றோம் என்று கூறி, சமூகக் கடமையை நிராகரிக்கின்றனர். இதன் மூலம் கருத்துத்தளத்தில் தம் கருத்தையே கை விடுகின்றனர்.

இந்த தர்க்கம், இதன் சாரம், இதன்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிடும் அறிவிப்புகள் - நகைச்சுவை

ஒவ்வொருவராக வெளியிட்ட அறிவிப்புகளை கொள்ளிமலை குப்பு அவர்கள் தருகிறார்கள்.

அத்வானி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் தலைநகரை புதுதில்லியிலிருந்து அயோத்திக்கு மாற்றுவோம். இந்தியாவில் கோக்கக் கோலா போற்ற அந்நிய குளிர்பானங்களை தடை செய்து விட்டு அதே கோவில்(கோவில்ன்னா எங்களுக்கு இஷ்டமில்லையா) ஆரம்பிக்கும் கோமிய பானம் எங்கும் கிடைக்கச் செய்வோம்.

சோனியா

இத்தாலிய உணவான பிஸ்ஸாவை இந்தியர்களுக்குச் சாப்பிடக்கொடுத்து அதனால் வரும் உள்நாட்டுச் செலவாணியை இத்தாலிய வங்கிக்கு மட்டுமல்லாது ஸ்விஸ் வங்கிக்கும் அனுப்பிவைப்போம்.

மாயாவதி

முதல் கட்டப் பணியாக உத்திர பிரதேசத்தை வாங்கி விட்டேன். இனி இந்தியாதான் எனது இலக்கு. தொழிலில் முதல் போட்டாத்தான் வேலைக்கு ஆகும் என்கிறபடியால், அனைத்து மாநிலங்களுக்கும் பணமூட்டைகளை அனுப்பிவைத்திருக்கிறேன்.

ஜோதிபாசு

என்னுடைய வாழ்நாள் கனவு பிரதமர் பதவி, எனது வயது வேகமாக ஆவதை நினைத்து வேதனைப்படுகிறேன். தேர்தல் முடிந்ததும் மூற்றாவது அணி முப்பது சில்லுகளாகப் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது.

தேவகௌடா

எனக்கு பிரதமர் பதவி தேவை என்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்துவிட்டு வந்தேன். நிச்சயம் கிடைக்கும்.

கருணாநிதி

எங்களை வெற்றிபெற வைத்தால் நாங்கள் அரசு ஊழியருடைய ஓய்வு பெரும் வயதை 58 -ல் இருந்து 98 -க்கு மாற்றுவோம், இருப்பினும் வாரிசுகள் உள்ளவர்களுக்கு இதிலிருந்து விதி விலக்கும் அளிக்கப் படும். ராமர் பாலம் அறுபது சதம் வேலை முடிந்து விட்டதால் ஏவ்வ்வ்தும் முடியாத வேலை இருந்தால் உயர்ரக தொலைநோக்கியை நாசாவில் இருந்து வாங்கி கோர்ட் உத்தரவிட்டால் உற்று நோக்கி மறு டெண்டர் அறிவித்து எங்கள் இலக்கை அடைவோம்.

ஜெயலலிதா

புரட்சித்தலைவி தங்கத் தாரகை டாக்டர் ஜெ .ஜெயலலிதா என்று ஒரு தெருவுக்கு அமெரிக்காவில் பெயர் சூட்டி இருக்கிறார்கள். அந்தத் தெருவின் வாஸ்து சரியில்லாத காரணத்தால் அதை சரி செய்ய பணிக்கரிடம் பணியை ஒப்படைத்திருக்கிறோம். சென்னையின் இதயம் போன்ற பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையைக் கட்ட இருக்கிறோம். அதில் குனிந்து குனிந்து இடுப்பு கடுத்த எங்கள் கட்சித் தலைவர்களை சேர்த்து சிகிச்சை வழங்கலாம் என்பது திட்டம்.
தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் ஏப்ரல் மாத சிறந்த வலைப்பதிவர் விருது
நாள்: சனிக்கிழமை (11-04-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை

10 AM - 2 PM - உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்

இலக்கியம் பகுதியல் இம்மாதம் "புன்னகை உலகம்" சிற்றிதழின் ஆசிரியர் திரு. "சுசி திருஞானம்" அவர்கள் பங்குபெற்று இலக்கியமும் குறும்படங்களும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். இவர் "வெற்றியின் அறிவியல்", "நேர நிர்வாகம்", "உனக்குள் ஒரு மேதை", போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். "விஜய்" தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் இன்புட் எடிட்டர் ஆக இருந்துள்ளார். மேலும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் சேனல் ஹெட் ஆகவும் இருந்துள்ளார். இவர் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. வினோத் அவர்கள். இவரது வலைப்பூ.http://agnipaarvai.blogspot.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

கருத்துகள் இல்லை: