எனதருமைச் செல்லங்களே இன்று என் கதை கேட்க தயாரா இருப்பீங்க இல்லையா? இதோ ரம்யா வந்து விட்டேன்!!
ஓர் ஊரில் அடுத்தடுத்து செல்வந்தர் ஒருவரும், ஏழை ஒருவனும் குடி இருந்தார்கள். செல்வந்தரின் வீடு பெரிதாக இருந்தது. ஏழையின் வீடோ குடிசை வீடு.
ஏழைக்குச் சொந்தமாக நிலம் எதுவும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்துக் கிடைக்கின்ற சிறிதளவு கூலியுடன் வீடு திரும்புவான் அவன். எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
அவன் வீட்டுக் கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும். படுத்தவுடன் நன்றாகத் தூங்கி விடுவான் அவன்.
ஆனால் செல்வந்தரோ எப்பொழுதும் பரப்புடனும், கவலையுடனும், காட்சி அளித்தார். தன் வீட்டுக் கதவுகளையும் சன்னல்களையும் மூடியே வைத்திருந்தார். திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களைத் திருடி சென்று விடுவார்களோ என்று அஞ்சினார். அதனால் அவர் இரவில் தூங்குவதே இல்லை.
ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தார் அவர். இவ்வளவு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக் இருக்க முடிய வில்லையயே என்று வருந்தினார்.
ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய வ்ரும்பினார் அவர்.
ஏழையை அழைத்த அவர், நண்பனே! நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய். உனக்கு உதவி செய்ய எண்ணுகிறேன். என்னிடன் அள்ள அள்ளக் குறையாத செல்வம் உள்ளது. அதிலிருந்து உனக்கு நூறு பொற்காசுகள் தருகிறேன். நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து" என்றார்.
செல்வந்தரிடம் நூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட ஏழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.
இரவு வந்தது இந்தப் பொற்காசுகளைத் திருடர்கள் திருடிச் சென்று விடுவார்களோ என்று அச்சத்தில் வீட்டுக் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.
தூங்கும் போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்க வில்லை. சிறு ஓசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான்.
தன் மகிழ்ச்சி பறி போனதற்கும் காரணம் பொற்காசுகள் தான் என்று உண்மையை உணர்ந்தான் அவன்.
பொழுது விடிந்தது. பொற்காசுகளை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தான். "ஐயா! நான் ஏழை தான். உங்கள் பொற்காசுகள் என் மகிழ்ச்சியையும் அமைதியையும் குலைத்து விட்டன. எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று செல்வந்தரிடம் தந்துவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன்.
நேரே ஓபன் to மெரினா....
கொஞ்சம் கடல் காற்றுடன் ,நிறைய ஆர்வத்துடனும் பதிவர்களை எதிர்நோக்கி நின்றேன்....
என்னுடைய முதல் பதிவர் சந்திப்பு இது...
பல பதிவர்கள் அங்கே ஆஜர்.....
என்னுடைய மொக்கை வலைப்பூவையும் சிலர் ஞயாபகம் படுத்தி சொன்னது எனக்கு ஆச்சர்யம்....
பதிவர்களின் வாசிப்பானுபவம் அலாதியானது...
அனைத்து பதிவர்களையும் அதிஷா அடையாளம் காட்டினார்.....(Thanks to அதிஷா )
நான் அண்ணன் ராதாகிருஷ்ணன் அவர்களின் அருகில் அமர்ந்து பிறர் பேச்சை மட்டும் கவனித்தேன்....நானே வாயை திறந்து நான் முட்டாள் என்று நிரூபிப்பதை விட அவர்கள் வார்த்தைகளில் அனுபவங்களில் கவனம் செலுத்தினேன் பல விஷயங்கள் கிடைத்தது....
பிரஸ் id கார்டுடன் வந்திருந்தவர் பால பாரதி , அடுத்து கேபிள் ஷங்கர் ,லக்கி லுக்,நரசிம் ,ஊர் சுற்றி ,ராகவன் ,அக்னி பார்வை ,அகநாழிகை ,தண்டோரா,நட்டு போல்ட்டு ,ஜ்யோவ்ராம் சுந்தர் என்று பலரும் ஆஜர் ...
கார்க்கி வர அதிஷா மற்றும் கார்க்கி கூட்டு போட்டு நரசிம் அவர்களை கலாய்க்க...இடம் கல கலா ....
கார்க்கி வெகு நாட்களுக்கு முன்பு எனக்கிட்ட பின்னூட்டம் பற்றி சொல்ல அவரின் ஞாபக சக்திக்கு ஒரு ஓ......
நான் மெதுவாக விஜய் பற்றி ஓட்டலாமா என்று யோசித்துஅந்த எண்ணத்துக்கு தடா போட்டு உட்கார வைத்தேன்....
ஒரு புறம் கேபிள் ஷங்கர் and co வினர் சினிமா பேச்சில் மூழ்க,
இன்னொரு புறம் லக்கி and co அரசியலில் வளைந்து நுழைந்து சீரியஸ் விவாதங்களில் இருந்தனர்....சுதந்திர மென்பொருள் பதிவாளரின் பதிவு டுமீல்(அட அதாங்க சுட்டது) ஆனது ஹாட் topic....
நாம் மொக்கை பக்கம் கரை ஒதுங்கினோம்....
கும்மி பற்றி யாரோ காச்சி கொண்டு இருக்க நம் மறுப்பை அங்கே வெளியிடாமல் இங்கே சொல்லி கொள்கிறோம்....
புது இதழ் தொடங்குவது பற்றியும் பேசினார்கள்.....
blogspot இல் இருந்து டொமைன் மாற்றுவதில் உள்ள சாதக பாதகங்கள் அலசப்பட்டது...(உபயம் லக்கி)
அங்கு பேசிய போது வந்த ஒருவரை புது பதிவர் என்று எண்ணி கார்க்கி கேட்க்க அவர் நான் புதுசு blog என்றால் என்ன?என்று கேட்க கார்க்கி ஏதாவது சொல்லி அனுப்பி விடுவார் என்று பார்த்தேன் ஆனால் அவர் மெதுவாக அவருக்கு blog பற்றி விளக்கி சொல்ல அவரும் நானும் தொடங்குவேன் என்றார்...
கார்க்கியின் இந்த செயல் எனக்கு ஆச்சர்யம் தந்தது...keep it up கார்க்கி....
இவ்வாறாக போன சந்திப்பு லைட் ஹௌஸ் அருகே இருந்த டீ கடை டீ உடன் இனிதே முடிவடைய.....
இந்த புதிய பதிவர்களுக்கான சந்திப்பில் நான் கடைசி வரை அந்த புதிய பதிவரை யார் என்று பார்க்கவே இல்லை.....
பதிவர் சந்திப்பின் போது எடுக்க பட்ட புகை படங்கள் அண்ணன் அகநாழிகை பதிவில் இங்கே....(நன்றி அகநாழிகை அவர்கள்)
பதிவர் சந்திப்பு படங்கள்
இது தான் என் முதல் சந்திப்பு என்பதால் தெளிவாக சொல்ல முடியவில்லை என்று எண்ணுகிறேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்....
Be Cool...
Stay Cool...
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அண்மையில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற மோதலின்போது படுகாயமடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனியை மேலதிக சிகிச்சைக்காக மலேசியாவுக்கு அழைத்துச் செல்ல புலிகள் முயற்சிப்பதாகத் தெரியவருகிறது.
சார்ள்ஸ் அன்டனியின் தோள்பட்டையிலும் முதுக்குப் பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இரணைப்பளையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் வேறொரு தாக்குதலில் காயமடைந்த சொர்ணம் என்பவரின் கால் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புப் பிரிவுக்கும் ராதா படையணிக்கும் பொறுப்பாகவிருந்த ரட்ணம் மாஸ்டர் விமானப்படையினரின் தாக்குலில் கொல்லப்பட்டமை தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றேழுத்தில் என்மூச்சிருக்கும் என்று சொன்ன தமிழ்திரை உலகை கட்டிப்போட்ட அடுத்த தலைமுறை மூன்றெழுத்து மந்திரம்.
ரஜினியின் நடிப்பு பலநேரங்களில் கேள்வி கேட்கப் பட்டுள்ளது. கேலி செய்யப் பட்டுள்ளது. அதற்கு சாட்சியான ஒரு காட்சிதான் இந்த வீடியோ
எம்ஜியாரும் சிவாஜியும் மக்கள் மனதில் நிறைந்த தெல்லாம் முழுநீளக் கதாபாத்திரங்களும் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களின் மூலம். ஆனால் ரஜினி பெயர் வாங்கியது துண்டுக்கதாபாத்திரங்களில் , ஆபூர்வராகங்கள், மூன்றுமுடிச்சு, 16 வயதினிலே, நான்வாழவைப்பேன் போன்ற படங்களின் மூலமே மக்களின் மனம் கவர்ந்தவர்.
இப்போது நிலைமை இன்னும் மோசம். அவருக்கு நடிக்க கிடைக்கும் ஓரிரு காட்சிகளில் முழுதிறமையும் காட்டவேண்டிய சூழலில் இருக்கிறார். அப்படிப்பட்ட காட்சிதான் பாஷாவில் வந்த காட்சி.
இரண்டு வார்த்தை, நான்கே எழுத்து இதுதான் அவர் வாய்விட்டுப் பேசிய வார்த்தை. மற்றதெல்லாம் அவரது உடல்மொழியும், முகபாவனையும்,கண்களும் பேசியவையே.. அவர் மிகச் சிறந்த நடிகர் என்பதற்கு இது ஒன்றே போதுமே..











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக