
மிகுந்த தாமத்தில் மார்ச் இதழ் தற்பொழுது வெளிவந்துவிட்டது. இந்த இதழ் வளமையான இதழ் போன்று இல்லாமல் சற்றே மாறுபட்டு வெளிவந்துள்ளது. சூரியப் புள்ளிகள் (Sunspot) எப்படி சிற்றலை ஒலிபரப்பினை பாதிப்படையச் செய்கிறது என்பதனை விரிவாக விளக்கியுள்ளார் திரு. வி. பாலசுப்ரமனியம். அவரைத் தொடர்பு கொள்ள 99520 67358. புத்தக தேவைக்கு 98413 66086. ஆண்டு சந்தா ரூ. 100/-
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.
-என்.கணேசன்
நன்றி:விகடன்
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.
-என்.கணேசன்
நன்றி:விகடன்
உடன்பிறப்பே...
தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் இவ்வளவு நேரம் உன்னை வந்து அடைந்திருக்கும்.
என் உடல்நிலையையும் பொருட்படுத்தாது...உன் நலனே என் நலன் என எண்ணி..என் உடல்நிலை இடம் தராவிடினும்..3 நாட்கள் அமர்ந்த நிலையில் 540 பேரை நேர்காணலில் சந்தித்து...முத்துக்கள் 21ஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.
தம்பி...இவர்கள் வெற்றிக்கு..ஊண் உறக்கமின்றி..பசி தாகம் பாராமல் மாற்று கட்சியினரின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் உழைத்திடு.உழைப்பிற்கேற்ற கூலியை பெற்றிடுவோம்.
உடன்பிறப்பே..இச்சமயத்தில்...தமிழன் இல்லாத சிலர்..ஈழத்தமிழர் நிலை குறித்து நீலிக்கண்ணீர் வடித்திடுவார்...என்னவோ இவர்கள்தான் அவர்கள் நிலைக்கு உருகுவது போல.கண்மணி..நீ அறிவாய்..நானும், பேராசிரியரும் எங்கள் பதவியை இதற்காக துறந்தவர்கள்...கின்னஸ் புத்தகத்தில் அதிக முறை நான் இதைச் சொன்னதற்கான சாதனை பொறிக்கப்பட்டால்...அதற்கான முழு புகழையும் நீயே அடைவாய்.கழக அரசு இருமுறை தமிழருக்காக கவிழ்க்கப்பட்டது என்பதையும் மறந்துவிடாதே.இவற்றை பொதுமக்களிடையே எடுத்து செல்ல வேண்டிய பணி உனதென்பதை மறந்துவிடாதே.
இப்போதும்...இலங்கையில் போர் நிறுத்தம் கோரி..இரண்டுமுறை மனிதச் சங்கிலியும், எம்.பி.க்கள் ராஜினாமாவும், எனது உண்ணாவிரதமும் கழக ஆட்சியில் இன்றி வேறு யார் ஆட்சியில் நடந்திருக்கிறது?.நான்குமுறை பிரதமருக்கும்..சொக்கத்தங்கம் சோனியாவிற்கும் இது குறித்து கடிதம் எழுதி உள்ளேன்..இது யார் ஆட்சியில் நடந்துள்ளது? தில்லிக்கே ..அரசியல் தலைவருக்கு தலைதாங்கி சென்றுள்ளேன்..இதை மற்றவர் மறந்தாலும்...கண்மணி என்னாலும்..உன்னாலும் மறக்கமுடியாது.
அண்ணா நேற்று என் கனவில் வந்து..'தம்பி கருணாநிதி கலங்கிடாதே..போற்றுவார்..போற்றட்டும்..வசைச்சொற்களால் உன்னை தூண்டுவார் தூற்றட்டும்...நம் தொண்டர்கள் வெற்றிக்கனியை பறித்து உனக்கு காணிக்கை ஆக்குவார்கள் என்றார்..' 'அண்ணாவின் கனவை..நனவாக்க வேண்டியது உன் கையில்தான் உள்ளது உடன்பிறப்பே'
இன்று முதல்...மே 13 வரை உன் நினைப்பு நம் வெற்றி ஒன்றதாகவே இருக்கவேண்டும்.வெற்றி நமதே!! 40 ம் நமதே!!!
மற்ற கட்சித்தலைவர்கள் முகத்தில் கரியை பூசிடுவாய்.
தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் இவ்வளவு நேரம் உன்னை வந்து அடைந்திருக்கும்.
என் உடல்நிலையையும் பொருட்படுத்தாது...உன் நலனே என் நலன் என எண்ணி..என் உடல்நிலை இடம் தராவிடினும்..3 நாட்கள் அமர்ந்த நிலையில் 540 பேரை நேர்காணலில் சந்தித்து...முத்துக்கள் 21ஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.
தம்பி...இவர்கள் வெற்றிக்கு..ஊண் உறக்கமின்றி..பசி தாகம் பாராமல் மாற்று கட்சியினரின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் உழைத்திடு.உழைப்பிற்கேற்ற கூலியை பெற்றிடுவோம்.
உடன்பிறப்பே..இச்சமயத்தில்...தமிழன் இல்லாத சிலர்..ஈழத்தமிழர் நிலை குறித்து நீலிக்கண்ணீர் வடித்திடுவார்...என்னவோ இவர்கள்தான் அவர்கள் நிலைக்கு உருகுவது போல.கண்மணி..நீ அறிவாய்..நானும், பேராசிரியரும் எங்கள் பதவியை இதற்காக துறந்தவர்கள்...கின்னஸ் புத்தகத்தில் அதிக முறை நான் இதைச் சொன்னதற்கான சாதனை பொறிக்கப்பட்டால்...அதற்கான முழு புகழையும் நீயே அடைவாய்.கழக அரசு இருமுறை தமிழருக்காக கவிழ்க்கப்பட்டது என்பதையும் மறந்துவிடாதே.இவற்றை பொதுமக்களிடையே எடுத்து செல்ல வேண்டிய பணி உனதென்பதை மறந்துவிடாதே.
இப்போதும்...இலங்கையில் போர் நிறுத்தம் கோரி..இரண்டுமுறை மனிதச் சங்கிலியும், எம்.பி.க்கள் ராஜினாமாவும், எனது உண்ணாவிரதமும் கழக ஆட்சியில் இன்றி வேறு யார் ஆட்சியில் நடந்திருக்கிறது?.நான்குமுறை பிரதமருக்கும்..சொக்கத்தங்கம் சோனியாவிற்கும் இது குறித்து கடிதம் எழுதி உள்ளேன்..இது யார் ஆட்சியில் நடந்துள்ளது? தில்லிக்கே ..அரசியல் தலைவருக்கு தலைதாங்கி சென்றுள்ளேன்..இதை மற்றவர் மறந்தாலும்...கண்மணி என்னாலும்..உன்னாலும் மறக்கமுடியாது.
அண்ணா நேற்று என் கனவில் வந்து..'தம்பி கருணாநிதி கலங்கிடாதே..போற்றுவார்..போற்றட்டும்..வசைச்சொற்களால் உன்னை தூண்டுவார் தூற்றட்டும்...நம் தொண்டர்கள் வெற்றிக்கனியை பறித்து உனக்கு காணிக்கை ஆக்குவார்கள் என்றார்..' 'அண்ணாவின் கனவை..நனவாக்க வேண்டியது உன் கையில்தான் உள்ளது உடன்பிறப்பே'
இன்று முதல்...மே 13 வரை உன் நினைப்பு நம் வெற்றி ஒன்றதாகவே இருக்கவேண்டும்.வெற்றி நமதே!! 40 ம் நமதே!!!
மற்ற கட்சித்தலைவர்கள் முகத்தில் கரியை பூசிடுவாய்.

ஸ்ஸ்ஸ்.... அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடியே ஜிவி பிலிம்ஸ் ஆபிசுக்குள் நுழைந்தோம். முகத்தில் அடித்த ஏசியும், நம் முன்னே உட்கார்ந்திருந்த சந்தியாவும், அத்தனை நேரம் நாம் அனுபவித்த வெப்பம் மீது ஐஸ்கட்டியை போட்டு ஆற வைத்தார்கள்.
"இதெல்லாம் என்னங்க வெயிலு? மஞ்சள் வெயில் படத்துக்காக பாங்காக்கில் நாங்க பட்ட அவஸ்தையை விடவா என்றார் சந்தியா. (பாங்காக் பற்றி வேற மாதிரி சொல்றாங்களே?) டைரக்டர் மொட்ட வெயிலில் டூயட் ஆட வச்சிட்டார். மற்றவங்களுக்கு பரவாயில்லை. மேலே குடை பிடிச்சுக்கலாம். அட, குடையே இல்லன்னாலும், கோவமா முகத்தை வச்சுக்கலாம். ஆனால், நாங்க அத்தனை டிகிரி வெயிலையும் பொறுத்திகிட்டு சிரிச்சுகிட்டே ஆட வேண்டிய கட்டாயம். பாட்டை ஸ்கிரீன்ல பார்த்தபிறகு அத்தனை கஷ்டமும் போயே போச்" என்றார் ஸ்வீட் சிக்ஸ்டீன் சிரிப்போடு.
இந்த படத்திலே ஒரு பாடலும் பாடியிருக்கிறார் சந்தியா. "ஷ§ட்டிங்கிலே சும்மாவாச்சும் பாடிட்டே இருப்பேன். அதை கேட்டுட்டு நீங்கதான் இந்த பாட்டை பாடனும்னு சொல்லிட்டார் டைரக்டர். பரத்வாஜ் சார் வாய்ஸ் டெஸ்ட் பண்ணிட்டு ஓகே சொன்னார். என்னவோ தெரியலே, பாட்டை கேட்ட பிரஸ் பீப்புள் எல்லாம் பாராட்டுறாங்க. என் முகத்திற்கு நேரா அப்படி சொல்றாங்களோ என்னவோ? நான் இல்லாதப்போ கொஞ்சம் கேட்டு சொல்லுங்க" என்றார்.
சிம்பு மாதிரி மற்றவங்களுக்கும் பாடுவீங்களான்னு கேட்டதுக்கு பதறினார் சந்தியா. "அவரை எதுக்கு இங்கே இழுக்கிறீங்க. கூப்பிட்டா பாடிட்டு போறேன். அதுக்காக 'என் வழி சிம்பு வழி'ன்னு டைட்டில் போட்டு தாளிச்சிராதீங்கப்பா..." என்றார் சந்தியா.
பேசாம நம்ப ஏரியாவுக்கு (பிரஸ்) வந்திருங்களேன் சந்தியா....

இவரு ஒரு பக்கம் இழுக்க, அவங்க ஒரு பக்கம் இழுக்க, கயிறு எப்போ 'கட்' ஆகும்னு தெரியலேங்கிறாங்க கலைஞானி படத்தை பற்றி. தலைவரு இருக்காருப்பாங்கிற மாதிரி ஒரு டைட்டில் வச்சிட்டு, படப்பிடிப்பும் ஸ்டார்ட்டுங்கிற கண்டிஷன்லே இருந்தார் ஞானி.
ஆனா இப்போ அதில திடீர் சிக்கல்ங்கிறாங்க. என்னவாம்? ஹிந்தியில் வெற்றிகரமாக ஒடிய படத்தை ரீமேக் பண்ணுறதா முடிவு பண்ணி அதுக்கான ரைட்சையும் வாங்கிட்டாங்க. இந்த நேரத்திலே கதையிலே புகுந்த ஞானி, தமிழுக்கு ஏற்ற மாதிரி மாத்துறேன்னு ஸ்கிரீன் பிளேவை பிரிச்சு மேயுறாராம். முந்தைய படம் பல கோடிகள் பட்ஜெட்ல பண்ணிட்டேன். இந்த படத்துக்கும் அப்படி செலவு பண்ணினாதான் என்னோட ரசிகர்கள் ஒப்புக்குவாங்கன்னு சொல்றாராம். அதனால் படத்திலே தேவையில்லாத டூயட்டெல்லாம் வருதாம். அதுவும் வெளிநாடுகளில் எடுக்கணும்னு சொல்றாராம்.
படத்திலே காமெடியே இல்லையேன்னு அதையும் உள்ளே நுழைக்கிறாராம். இதுக்கு பேசாம வேற படமே பண்ணிட்டு போகலாமே? நல்ல படத்தை எதுக்கு கெடுக்கனும்ங்கிற முடிவுக்கு வந்திருக்குதாம் கம்பெனி. நாம சொல்றதை கேட்காத கம்பெனிக்கு இந்த படத்தை பண்ணுறதை விட, வேற கதையை ரெடி பண்ணி, வேற தயாரிப்பாளரிடம் போகலாமாங்கிற முடிவுல இருக்காராம் ஞானி. இப்போதைய கண்டிஷன் இது. நிலைமை மாறலாம். யாரு இறங்கி வரப்போறாங்கங்கறதுதான் பெரிய்ய்ய்ய கேள்வி?
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கு என அச்சிடப்பட்ட மேற்சட்டையுடன் 200 மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தொடர் வண்டியின் மூலம் திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்து கொண்டிருக்கின்றனர் : இன்று காலை தமிழகத்தின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த அனைத்துக் கல்லூரி மாணவர்கள் 200 மேற்பட்டோர் தமிழகத்தின் திருநெல்வேலி இரயிலடி நிலையத்திலிருந்து குருவாயூர் அதிவிரைவு தொடர்வண்டி மூலம் புறப்பட்டனர். அவர்களை கவிஞர் காசி ஆனந்தன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக