
என்னதான் விஞ்ஞானம், பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், சினிமா கவர்ச்சிக்கு முன் அந்தப் பிரச்சாரமெல்லாம் மழையில் கரைந்த மண் சுவராகத்தான் மாறிவிடுகின்றன.
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்த பூர்ணா, படப்பிடிப்புக்காக வந்தபோது, அவரைத் தொட்டுப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் மேலே விழுந்து பிறாண்டி விட்டார்களாம்!
பூர்ணாவும் காதலில் விழுந்தேன் நாயகன் நகுலும் நடிக்கும் புதிய படம் கந்தக்கோட்டை. இதன் படப்பிடிப்பு குமரி மாவட்டம் பத்மநாபபுரம், நேசமணி நகர் உள்பட பல இடங்களில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
பூர்ணா பஸ்ஸிலிருந்து இறங்கி காரில் ஏறுவது போன்ற ஒரு காட்சி நேற்று வடசேரி பஸ்நிலையத்தில் அதிகாலை நேரத்தில் படமாக்கப்பட்டது.
'இவ்வளவு காலை நேரத்தில் கூட்டம் எங்கே கூடப் போகிறது!' என்ற நினைப்பில் சற்று அலட்சியமாக இருந்துவிட்டனர் படப்பிடிப்புக் குழுவினர். ஆனால் பூர்ணா பஸ்ஸை விட்டு இறங்கியதும், அவரை நோக்கி ஓடிவந்தது ரசிகர் பட்டாளம்.
நேரம் செல்ல, செல்ல அங்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. பூர்ணாவை முற்றுகையிட்டு அவரைத் தொட்டுத் தரிசிக்கும் ஆவலில் மேலே விழ ஆரம்பிக்க, அவர் பயந்துபோய் படப்பிடிப்புக் குழுவிடம் தஞ்சமடைந்தார்.
இருந்தாலும் நமது ரசிக சிகாமணிகளின் ஆர்வமும், கைகளும் கட்டுக்கடங்காமல் போகவே, பாதுகாப்பாக திரும்ப வேண்டிய கட்டாயத்தில் பூர்ணாவும் அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். கஷ்டப்பட்டு சிரித்தபடி கைகுலுக்கவும் செய்தாராம்!

பலமுனை பிரச்சனைகளின் தாக்குதலுக்கு பிறகு நங்கூரம் போட்ட கப்பல்மாதிரி அமைதியாகிவிட்டார் நயன்தாரா.
ஆதவன் படப்பிடிப்பிலிருந்த நயன்தாராவிடம் பேட்டி என்றதும் யோசனைக்கு பிறகே ஓகேயானார்.
உங்களுக்கு கோபம் அதிகம் வருமாமே?
"நான் ஷார்ட் டெம்பர் என்பது உண்மைதான். ஆனா தேவையில்லாம யாரிடமும் கோபப்படமாட்டேன். நியாயமான காரணத்திற்காக மட்டுமே கோபப்படுவேன். என்னைப் பற்றி புரிந்துகொண்டவர்கள் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள். என்னிடம் பழகாதவர்கள்தான் தவறாக நினைத்துக்கொள்வார்கள். நான் கோபப்பட்டு பேசினாலும் அடுத்த நொடியே மறந்துவிடுவேன் மனசுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை பேசமாட்டேன்".
இப்போதுவரும் படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா?
"கதாநாயகிகளுக்கு கதை எழுதுவது என்பது இன்றைய நிலையில் அரிதாகிவிட்டது. சினிமாவில் ஹீரோயின்களை சீரியஸாக காட்டினால் டி.வி.சீரியலைப் போலாகிவிடும் என்று விநியோகஸ்தர்கள் பலர் சொல்வதால்தான் யாரும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை எடுக்க முன்வருவதில்லை.
கடந்த சில வருடங்களில் 'கஜினி' படத்தில் மட்டும்தான் ஹீரோயின் நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. அந்த வகையில் அசின் ரொம்ப கொடுத்துவைத்தவர்தான்.
அப்படியொரு கேரக்டர் எனக்கோ, த்ரிஷாவிற்கோ, ஸ்ரேயாவிற்கோ அமையவே இல்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை இயக்குனர்கள்தான் உருவாக்கவேண்டும். இதற்கு ஹீரோக்களின் ஈகோ இல்லாத மனசும் முக்கியம்".
சரிங்க மேடம்!

பலமுனை பிரச்சனைகளின் தாக்குதலுக்கு பிறகு நங்கூரம் போட்ட கப்பல்மாதிரி அமைதியாகிவிட்டார் நயன்தாரா.
ஆதவன் படப்பிடிப்பிலிருந்த நயன்தாராவிடம் பேட்டி என்றதும் யோசனைக்கு பிறகே ஓகேயானார்.
உங்களுக்கு கோபம் அதிகம் வருமாமே?
"நான் ஷார்ட் டெம்பர் என்பது உண்மைதான். ஆனா தேவையில்லாம யாரிடமும் கோபப்படமாட்டேன். நியாயமான காரணத்திற்காக மட்டுமே கோபப்படுவேன். என்னைப் பற்றி புரிந்துகொண்டவர்கள் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள். என்னிடம் பழகாதவர்கள்தான் தவறாக நினைத்துக்கொள்வார்கள். நான் கோபப்பட்டு பேசினாலும் அடுத்த நொடியே மறந்துவிடுவேன் மனசுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை பேசமாட்டேன்".
இப்போதுவரும் படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா?
"கதாநாயகிகளுக்கு கதை எழுதுவது என்பது இன்றைய நிலையில் அரிதாகிவிட்டது. சினிமாவில் ஹீரோயின்களை சீரியஸாக காட்டினால் டி.வி.சீரியலைப் போலாகிவிடும் என்று விநியோகஸ்தர்கள் பலர் சொல்வதால்தான் யாரும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை எடுக்க முன்வருவதில்லை.
கடந்த சில வருடங்களில் 'கஜினி' படத்தில் மட்டும்தான் ஹீரோயின் நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. அந்த வகையில் அசின் ரொம்ப கொடுத்துவைத்தவர்தான்.
அப்படியொரு கேரக்டர் எனக்கோ, த்ரிஷாவிற்கோ, ஸ்ரேயாவிற்கோ அமையவே இல்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை இயக்குனர்கள்தான் உருவாக்கவேண்டும். இதற்கு ஹீரோக்களின் ஈகோ இல்லாத மனசும் முக்கியம்".
சரிங்க மேடம்!

சிம்புவின் மன்மத கேரக்டருக்கு தீனிபோட 'சிகப்பு ரோஜாக்கள்' ரீ-மேக்கில் நடிக்கவுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி நடித்த படம் 'சிகப்பு ரோஜாக்கள்' லவ் with த்ரில்லர் மூவியான இப்படம் இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய இளைஞர்களை சுண்டி இழுத்த படம். அதில் இடம்பெற்ற 'நினைவோ ஒரு பறவை...' பாடலை இப்போது கேட்டாலும் இதம். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களால் பாதிக்கும் ஒரு இளைஞனை மையமாக கொண்ட கதை இது. அட... சிம்புவுக்கு இந்த கேரக்டர் பொருத்தமாக இருக்கும்? என ஏதோ புதுசா கண்டுபிடித்தவர்களைப் போல சந்தோஷப்படாதீர்கள். ஏற்கனவே சிம்பு இந்த படத்தை ரீ-மேக் செய்வதென்று முடிவு செய்துவிட்டாராம்.
கதையில் சில சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளாராம். சிம்புவுக்கு ஜோடியாக நான்கு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனராம். அதில் ஒருவர் நமிதா. மன்மதன் படத்தில் நடித்த மந்த்ரா பேடியையும் ஒரு கேரக்டரில் நடிக்க வைக்கும் திட்டமும் சிம்புவின் கைவசம் இருக்கிறதாம். சிம்புவின் புதிய நண்பி சனாகான், தனக்கும் ஒரு கேரக்டர் கேட்டு சிம்புவை இப்போதே நச்சரிக்க தொடங்கிவிட்டதாகவும் தகவல் இருக்கிறது.
ஒரிஜினல் 'சிகப்பு ரோஜாக்களை' இயக்கிய பாரதிராஜாவை சந்தித்து ஆலோசனையும் அறிவுரையும் பெற நினைக்கிறாராம் சிம்பு. ஆனால் இயக்குனர் இமயத்தின் எண்ணம் என்னவாக இருக்கும் என்பது இப்போதைக்கு சொல்லமுடியாது.

சிம்புவின் மன்மத கேரக்டருக்கு தீனிபோட 'சிகப்பு ரோஜாக்கள்' ரீ-மேக்கில் நடிக்கவுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி நடித்த படம் 'சிகப்பு ரோஜாக்கள்' லவ் with த்ரில்லர் மூவியான இப்படம் இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய இளைஞர்களை சுண்டி இழுத்த படம். அதில் இடம்பெற்ற 'நினைவோ ஒரு பறவை...' பாடலை இப்போது கேட்டாலும் இதம். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களால் பாதிக்கும் ஒரு இளைஞனை மையமாக கொண்ட கதை இது. அட... சிம்புவுக்கு இந்த கேரக்டர் பொருத்தமாக இருக்கும்? என ஏதோ புதுசா கண்டுபிடித்தவர்களைப் போல சந்தோஷப்படாதீர்கள். ஏற்கனவே சிம்பு இந்த படத்தை ரீ-மேக் செய்வதென்று முடிவு செய்துவிட்டாராம்.
கதையில் சில சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளாராம். சிம்புவுக்கு ஜோடியாக நான்கு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனராம். அதில் ஒருவர் நமிதா. மன்மதன் படத்தில் நடித்த மந்த்ரா பேடியையும் ஒரு கேரக்டரில் நடிக்க வைக்கும் திட்டமும் சிம்புவின் கைவசம் இருக்கிறதாம். சிம்புவின் புதிய நண்பி சனாகான், தனக்கும் ஒரு கேரக்டர் கேட்டு சிம்புவை இப்போதே நச்சரிக்க தொடங்கிவிட்டதாகவும் தகவல் இருக்கிறது.
ஒரிஜினல் 'சிகப்பு ரோஜாக்களை' இயக்கிய பாரதிராஜாவை சந்தித்து ஆலோசனையும் அறிவுரையும் பெற நினைக்கிறாராம் சிம்பு. ஆனால் இயக்குனர் இமயத்தின் எண்ணம் என்னவாக இருக்கும் என்பது இப்போதைக்கு சொல்லமுடியாது.
நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஓரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
காலத்துள் அமிழ்ந்த என் உணர்வுக் குருவிக்கு
சமாதி கட்டிப் பார்க்கும் தோழி ஒருத்தி
மரத்தில் உதிரக் காத்திருக்கும் ஆப்பிள்
மௌனித்திருக்கும் என் வதைகளிலொன்று
பறித்தெடுத்த ஆப்பிளில் இறங்கும்
தேவதைக் கனவு கூசும் பற்களில்
குதறும் விற்றமீன்களுக்கு பொழுதொரு வதையாய்
அனைத்து நித்தியங்களும் அமிழ்ந்தழிய
அறத்தின் ஓரத்தில் காமக் கலப்பை தாக்கக்
கண்ணீர் வதையுள் கடுப்படக்கும்
காலத்துள் உதிரும் எதிர்ப் பால் வினையும்
ஒரு வழிப் பாதை இருவருக்கும்
காலத்துள் அறபடக் காத்திருக்கும் ஜீவன்
கைப் பிடி மண்ணுள் இவ்வளவு கண்ணீர் பொழிவா?
இதயம் அதிரும் உயிரது கூத்துள்

குறுகும் பொழுதுகளில் உடைபடும் நாணம்
குவியும் கருப்புக்கு ஒதுங்கும் உறவு
மெய்தர மறுக்கும் கருமை மனது
ஈரஅலை இதயத்திலிருக்க உறங்கும் தாம்பாத்யம்
தொப்புள் கொடியுறவொன்றிணைக்கும் குடும்பம்
குட்டையைக் குழப்பும் கோதாரி மனது
கும்மாளமிடும் காழ்ப்புணர்வு
வதைக்கும் நினைவுகள்
வடுவாய் விரியும் நாவினாற் சுட்ட புண்
எனினும்,
நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஒரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
மௌனிக்க முனையும் பாலுறுப்பு
ஓலமிடும் ஒலியின் அதிர்வில்
சுவரில் உரசும் இதழ்கள்
இதயத்தின் அடியில் உலர்ந்த சாம்பல்
நாவிற்கடியுள் நலியும் காதல்
வீசியடிக்கும் குளிர்ந்த காற்றுள்
இதழாள் சுவையும்
நெருங்கி வரும் இரவில்
உடலின் மிடுக்கும் உருவந்தர மறுக்கும்
வலியை மென்று மனது ஒடுங்கும்
துயரத்தின் கொடுவாள்
அறுத்தெறியும் காலத்தின் மரிப்பில்
தொலைவதென்னவோ நீயும் நானுமே
தவித்தென்ன தண்ணியடித்தென்ன
தாழ்வது நமது நலமே!
நேரத்தோடு அறியப்படாத
எனது நிறமாற்றம்
தொலைவதில் வியப்பு என்ன?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக