திங்கள், 22 ஜூன், 2009

2009-06-22

வீரகேசரி இணையம் 6/22/2009 2:12:45 PM - மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் நேற்றிரவு வீடொன்றில் கொள்ளையடிக்க முற்பட்ட பிரதான தேசிய அரசியல் கட்சியொன்றின் அங்கத்தவர்கள் எனக் கூறப்படும் இருவர் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் உட்பட மூவர் வீட்டிலிருந்தவர்களை அறையொன்றினுள் வைத்து அடைத்து விட்டு பொருட்களை கொள்ளையடித்து எடுத்துச் செல்வதற்கு வெளியே தயாராகவிருந்த வேளை வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தவர்கள் கதவை உடைத்து வெளியே வந்து கூக்கரலிட்டு அயலவர்களின் உதவியுடன் கொள்ளையர்களை தாக்கி மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இம் மூவரில் இருவர் மாவடிவேம்பிலுள்ள பிரதான தேசிய அரசியல் கட்சியொன்றின் அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் இந் நபர்களிடமிருந்து குறிப்பிட்ட கட்சியின் அங்கத்துவ அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.சந்தேக நபர்கள் மூவரும் தொடர்ந்தும் ஏறாவூர் பொலிஸாரினால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு இவர்கள் பயணம் செய்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

திட்டமிட்ட ‌‌ரிலீஸ் தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது விக்ரம் நடித்திருக்கும் கந்தசாமி. தயா‌‌ரிப்பாளர் தாணு இந்த தகவலை தெ‌ரிவித்தார்.தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்ற பெருமை கந்தசாமிக்கு கிடைத்திருக்கிறது. விக்ரம், ஸ்ரேயா நடித்திருக்கும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் பெருமளவில் இடம்பெறுகிறது. அதனால் படம் ஆகஸ்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆகஸ்டில் படம் திரைக்கு வரும் என தயா‌‌ரிப்பாளர் தரப்பிலும் கூறப்பட்டது.இந்நிலையில் படத்தின் போஸ்ட்புரொடக்ஷன் வேலைகளை இரவு பகலாக நடத்தி வருகிறார் இயக்குனர் சுசி.கணேசன். இதன் காரணமாக படத்தை ஜுலையிலேயே திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய தாணு, கந்தசாமியின் ‌‌ரி ரெக்கார்டிங், கிராபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜுலையில் படத்தை ‌‌ரிலீஸ் செய்துவிடுவோம் என்றார்.தெலுங்கில் இப்படம் மல்லண்ணா என்ற பெய‌ரில் வெளியாகிறது. உலகம் முழவதும் மொத்தம் 900 திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 21 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. சென்னை உ‌‌ரிமையை பல கோடி கொடுத்து அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார்.

ஈழம் என்றதும் வீரம்வரும் சில‌ரில் அமீரும் ஒருவர். ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசி சிறை சென்ற பின்னும் அவரது சீற்றம் குறையவில்லை. அமீர் சினிமா கலைஞனல்லவா... ஈழத்தின் சோகத்தை செல்லுலாயிடில் செதுக்க வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். ஈழத்தைப் பற்றி படமெடுப்பேன் என்று மேடையிலேயே முழங்கியிருக்கிறார். அது வெறும் பேச்சல்ல.யோகி படத்தின் இறுதிகட்ட பணியில் இருப்பவர் ஈழம் குறித்த படத்தின் கதை விவாதத்தை நடத்தி வருகிறாராம். படத்துக்கு கிளிநொச்சி என்று பெயர் வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் த‌ெ‌ரிவிக்கின்றன. அமீரைப் போலவே ஈழப் பிரச்சனையை பிரதிபலிக்கும் படத்தை எடுக்கவுள்ளார் சீமான். அ‌ஜித் நடிக்கும் படத்துக்குமுன் இப்படம் தயாராகவுள்ளது. அனேகமாக படத்துக்கு கோபம் என பெய‌‌ரிடப்படலாம் என தெ‌ரிகிறது.

Zip, RAR கோப்பினுள்ளே என்ன உள்ளது? ஆன்லைனின் சோதிக்கDo you want to see what is in on the compressed filewhich you want to download?

தினம்தோறும் எத்தனையோ சுருக்கப்பட்ட கோப்புகளை (compressed files) இணையம் வாயிலாக download செய்கிறோம். தரவிறக்கம் செய்தபிறகு அதை விரிப்பதற்கான (extract) சிறப்பு மென்பொருட்களைக் கொண்டு extract செய்கிறோம். இது வழக்கமாக நாம் செய்யும் ஒரு தொடர் நிகழ்வு.

இந்த சுருக்கப்பட்ட கோப்பின் உள்ளே என்ன இருக்கிறது? - என்பதை தரவிறக்கம் செய்தபிறகு பார்ப்பதனால் பல நேரங்களில் தேவையில்லாத கோப்புகளையும் தரவிறக்கிவிடும் அபாயம் உள்ளது.ஆன்லைனில் இருந்தபடி zip,RAR கோப்பினை தரவிறக்கம் செய்யாமலேயே, நேரடியாக சோதித்து அறிவதற்காக நெருப்பு நரி(Firefox) உலாவிக்கான இந்த நீட்சியைப் (addon) பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையற்ற கோப்புகளை தரவிறக்காமல் தவிர்த்துவிடலாம். நல்ல நீட்சி இது.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/5028

சிறிலங்கா பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற, ICC யின் 20twenty உலக கிண்ண போட்டிகளின் இறுதிப்போட்டியில், சிறிலங்கா மண்ணை கவ்வியுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள், டில்ஷான், சனத் ஜெயசூர்ய இரண்டு பேருமே குறைவான ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர். சங்கககார (64), மதிவ்ஸ் (35) ஆகியோரின் இணைப்பாட்டம் மாத்திரம் சிறீலங்காவின் ஓட்ட வீதத்தை சற்று உயர்த்தியது. 20 ஓவர்கள் முடிவில் சிறீலங்கா அணியினால் 138 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.பாகிஸ்த்தான் அணியினரின் பந்து வீச்சில் அப்துல் ரசாக் மூன்று விக்கெட்டுக்களை எடுத்தார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை முன்னெடுத்தது. கம்ரான் அக்மல் 2 சிக்ஸர், 2 பவுன்றிகள் அடங்களாக 28 பந்துகளில் 37 ஓட்டங்களை எடுத்த போது ஜெயசூர்யவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.அவருடன் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக வந்திருந்த சஹாசிப் ஹசான், 23 பந்துகளில் 19 ஓட்டங்களை குவித்திருந்த வேளை, முரளிதரனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து விளையாடிய சஹிப் அப்ரிடி (52 பந்துகளில் 54 ஓட்டங்களை குவித்ததுடன், ஷொகிப் மலிக் 22 பந்துகளில் 24 ஓட்டங்களை குவித்தார்) இருவரும் ஆட்டமிழக்காமல் நிதானமாக ஆடிய ஆட்டம், இறுதி ஓவர் வரை சூடுபிடித்திருந்தது. இறுதி 12 பந்துகளில் 7 ரன்களை பெறவேண்டி இருந்தது. எனினும் அடுத்து போடப்பட்ட 4 பந்துகளையும் அடித்து விளாசிய சஹிட் அப்ரிடி மற்றும் சொஹிப் மலிக் ஆகியோர், மீதம் 8 பந்துகள் இருந்த வேளையில் போட்டியை வெற்றி கொண்டனர். ஆட்ட நாயகனாக சஹிட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்ட போதும், தொடர் நாயகனாக டீ.எம் டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.2007 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளின் போது இறுதிப்போட்டி வரை, வந்து, இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்த்தான் அணி, இம்முறை கிண்ணத்தை கைப்பற்றியதும், இப்போட்டி தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காத சிறீலங்கா அணி, இறுதிப்போட்டியில் கோட்டை விட்டதும், அதிர்ச்சிக்குரிய சம்பவங்களே!

கருத்துகள் இல்லை: