செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

சென்னைமா நகர்... பெரிய பெரிய கட்டிடங்கள், எந்நேரமும் விழித்துக் கொண்டிருக்கும் சாலைகள், சீறிச் செல்லும் வண்டிகள், இவங்களுக்கெல்லாம் மெதுவாகவே போகத்தெரியாதா.... ன்னு நினைக்க வைக்கும் மக்கள் கூட்டம், பெரிய பெரிய விளம்பர பேனர்கள் ன்னு சென்னை எப்போதும் பிரமிப்பு தான்... பாக்க பாக்க இந்த அசுர ஓட்டத்தில கலந்துக்க மாட்டமான்னு தான் தோணுது....

ஆனா....
ladies hostel ங்கற பேர்ல அங்க இருக்கற rooms ல்லாம் பாத்தா ஆணியே புடுங்க வேணாம்ன்னு தோணுது...

roomங்கற பேர்ல ஒரு குடோன், compulsoryயா அது இருட்டா தான் இருக்கும்.. ஒரு ரூம்ல கொறஞ்சது4-5 பேர் , சூரிய வெளிச்சம்ன்ற ஒரு வஸ்துவே உள்ள வராத ஒரு அமைப்பு.. ஒரு ரூம்ன்னு சொல்லிக்கிட்டாலும், அந்த ரூம்ல ஒரே ஒரு கட்டில் தான் சொந்தம்.. அந்த கட்டில் கீழயே suitcase, செருப்பு, bucket. இருக்கற ஒரு shelfல, தட்டு, டம்ளர், creams, ஊறுகாய் இத்தியாதிகள்... அதுக்குள்ளயே சாமி படத்துக்கு ஒரு சின்ன இடம்... பாதுகாப்புங்கறது பேருக்கு கூட கிடையாது... யார் வேணா, எப்ப வேணா, உள்ள (திருட) வரலாம்ன்ற மாதிரி ஒரு அமைப்பு .. இதெல்லாம் சேந்தது தான் சென்னை ladies hostel..

சென்னையில சொந்தமா, சின்னதா ஒரு வீடு (வீடு, அபார்ட்மெண்ட் இல்லை) இருந்தா, அதுல ரெண்டு மாடி கட்டி, 10, 12 அறைகள் கட்டி, ஒரு மெஸ் வெச்சு, அந்த மெஸுக்குள்ளயே ஒரு டிவி வெச்சு.. 10க்கு 10 அறையை 10,000 ரூபாய்க்கு(மாசத்துக்கு) வாடகைக்கு விட்டு சம்பாதிச்சுருக்கலாம்...

சென்னைக்கு பிழைக்கவரும் கூட்டத்தை வைத்து ஒரு கூட்டம் பிழைக்குது பாருங்கள், அவர்கள் தான் உண்மையிலேயே பிழைக்கத் தெரிந்தவர்கள்...

இப்படி பிழைக்க தெரியாததினால் தானே
காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதுவும் சென்னையில் வேண்டும்,
அதில் 10, 12 அறைகள் வேண்டும், அதை நான் வாடகைக்கு விட்டு சம்பாதிக்க வேண்டும் என்று கேட்காமல்,

காணி நிலம் வேண்டும் பராசக்தி - அதில் பத்து பன்னிரண்டு தென்னைமரம் வேண்டும் என்று கேட்டான் அந்த முண்டாசு கவிஞன்...
أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ مِن بَعْدِهِمْ لاَ يَعْلَمُهُمْ إِلاَّ اللّهُ جَاءتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَرَدُّواْ أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وَقَالُواْ إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُم بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ مِّمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٍ

உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, "நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம். அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 14:9)
1.முன்னால ஈ ஓட்டிக்கிட்டு இருந்த உன் வியாபாரம் இப்ப எப்படி இருக்கு
ஈ மெயில் ஓட்டிக்கிட்டு இருக்கு இப்ப..

2.எங்க ஆஃப்ஸ்ல யார் தப்பு பண்ணினாலும் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க
அப்போ..நீங்க இப்ப வேலை இல்லாமலா இருக்கீங்க

3.டாகடர் அந்த நோயாளிக்கு வயிற்றுப்போக்கு
நல்லவேளை..இன்னிக்கு வயிற்றுப்பிழைப்புக்கு என்ன செய்யறதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

4.அந்த டாக்டர் நல்லவர்னு எப்படி சொல்ற
தலைவலின்னு போனேன்..பிளட் டெஸ்ட்,சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே இப்படி எதுவும் எடுக்க வேண்டாம்..ஏற்கனவே ஒருத்தருக்கு எடுத்த ரிபோர்ட் இருக்கு..அதை யூஸ் பண்ணிக்கிறேன்னு உங்களுக்கு செலவு குறையும்னு சொல்லிட்டார்.

5.என் மாமியாரை நாய் கடிச்சுடுத்து
இப்ப..நாய் எப்படி இருக்கு

6.உன் பையன் ஒரு ரூபா காயினை விழுங்கிட்டான்னு சொன்னியே..அப்பறம் என்ன ஆச்சு
டாக்டருக்கு 500 ரூபா கொடுத்து..ஒரு ரூபாயை மீட்டேன்.

கருத்துகள் இல்லை: