புதன், 24 ஜூன், 2009

2009-06-24

مَّثَلُ الَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمْ أَعْمَالُهُمْ كَرَمَادٍ اشْتَدَّتْ بِهِ الرِّيحُ فِي يَوْمٍ عَاصِفٍ لاَّ يَقْدِرُونَ مِمَّا كَسَبُواْ عَلَى شَيْءٍ ذَلِكَ هُوَ الضَّلاَلُ الْبَعِيدُ

எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை புயல் காற்று கடினமாக வீசம் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது இதுவே வெகு தூரமான வழிகேடாகும். (அல்குர்ஆன்: 14:18)



2004ஆம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உருவாக்கப்பட்டதே சிபிஐ மாவோயிஸ்ட் கட்சி. இது ஒரு அரசியல் கட்சியாக பெயரளவில்தான் இருந்தது. உண்மையில் இது ஒரு நக்சல்பாரி வன்முறை இயக்கமாகவே செயல்பட்டு வந்தது.

சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மக்கள் போர், இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மய்யம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட கட்சிதான் சிபிஐ மாவோயிஸ்ட்.
இந்த இணைப்பு 2004ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மக்கள் போர் அமைப்பின் தலைவரான முப்பால லட்சுமண ராவ் என்ற கணபதியே, இந்த மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

கணபதி, ஆந்திர மாநிலம் கரீம் நகரம் மாவட்டம் பீர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர் கணபதி. வாரங்கலில் உயர் படிப்புக்காகப் போன இடத்தில், மாவோயிஸ்ட் தலைவர்களான நல் ஆதிரெட்டி, கொண்டபள்ளி சீதாராமய்யா ஆகியோரைச் சந்தித்து அவர்களின் செயல்பாடுகளால் கவரப்பட்டு நக்சல்பாரி இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 1967ஆம் ஆண்டு தோன்றி பெரும் வெற்றியைப் பெற்ற நக்சல்பாரி இயக்கத்தின் கருத்துக்களை ஒத்ததாக மாவோயிஸ்ட் கட்சி விளங்கியது. மேலும், இந்தக் கட்சியும் நக்சல்பாரி இயக்கமாகவே மாறி செயல்படத் தொடங்கியது.

மாவோயிஸ்ட் கட்சியின் முதல் நோக்கமே மக்களைத் திரட்டி அரசுகளுக்கு எதிராக போர் புரிவது என்பதுதான். சீனாவில் மாசே துங் (மாவோ) மக்களைத் திரட்டி கொரில்லாப் போரில் ஈடுபட்டதால் அந்த அடிப்படையை மாவோயிஸ்டுகள் பின்பற்றி வருகின்றோம் எனச் சொல்கின்றனர்.

இந்தியாவில் பிகார், ஆந்திரா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு அமைப்பு உள்ளது.
இந்த மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்து புரட்சிகர பகுதியாக மாற்றும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாகவே லால்கரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் அவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கடந்த 9 மாதங்களாக வைத்துள்ளனர். இவர்களுக்கு உள்ளூர் பழங்குடியின மக்களும் உறுதுணையாக இருந்ததால் இது சாத்தியமாயிற்று.


சிபிஐ மாவோயிஸ்ட் உருவாக்கப்படுவதற்கு முன்பு செயல்பட்டு வந்த ஆயுதப் பிரிவுகளான மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம், மக்கள் கொரில்லாப் படை ஆகியவற்றை இணைத்து மக்கள் விடுதலை கொரில்லாப் படை என்ற பெயரில் ஆயுதக் குழுவை இந்தக் கட்சி உருவாக்கியது. இந்த ஆயுதக் குழுதான் தற்போது பல்வேறு தாக்குதல்களை மேற்கண்ட மாநிலங்களில் நடத்தி வருகிறது.

மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்பில் கிட்டத்-தட்ட 9000 முதல் 10 ஆயிரம் ஆயுதப்படையினர் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் 6500 அதி நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்தியா முழுவதும் இவர்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் சாதாரண தொண்டர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்திற்குள் ஒரு தனி மாநிலமாகச் செயல்படும் சம்பவத்திற்குப் பின்னர் மாவோயிஸ்டுகளுக்குக் கடிவாளம் போட வேண்டிய நேரம் வந்து விட்டதாக உணர்ந்துள்ள மத்திய அரசு தற்போது சிபிஐ மாவோயிஸ்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.

-------------------- "விடுதலை" 24-6-2009


More than a Blog Aggregator

by SUREஷ் (பழனியிலிருந்து)
சில நேரங்களில் நமக்கு வரும் பின்னூட்டம் நமது கருத்தினைவிட சிறப்பாக அமைந்திருக்கும். அப்படி ஒரு பின்னூட்டம்தான் இது. நான்

Saturday, June 20, 2009 அன்று எழுதிய

இன்றைய இறுதி ஆட்டமும், இந்திய அணியின் தோல்வியும் இடுகையில் நண்பர் ரஃபீக் ராஜா இட்ட பின்னூட்டம் போட்டிருக்கிறார். இடுகை வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்ட காரணத்தால், படித்த இடுகைதானே என்று மீண்டும் அங்கே மற்றவர்கள் செல்ல தயங்குவதாலும் அந்தப் பின்னூட்டத்தை மீண்டும் இடுகையாகவே வெளியிடுகிறேன்.
==========================================================

Rafiq Raja said...

நண்பர் சுரஷ்,

ஐபிஎல் போன்ற போட்டிகளின் தாக்கமே, நமது . இரண்டு வாரங்கள் முன்பு வரை தனி தனி அணிகளுக்கு தலைமை தாங்கி ஒருவரை ஒருவர் வீழ்த்த வியூகம் வகுத்து கொண்டு, உடனே ஒரு அணியில் ஆட சொன்னால் எப்படி என்பதற்கு இது உதாரணம்.

அதே வேளையில், நமது ஐபிஎல் அணிகளில் தன் பங்கை ஆற்றி விட்டு அவர்கள் அணிகளுக்கு திரும்பியவுடன், பட்டைய கிளப்பிய மற்ற தேசத்தவர்களை பார்த்து நாம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.

இத்தனை பிரச்சனைகளுக்கும் நடுவிலும் பாகிஸ்தான் அணி கோப்பையை கைபற்றி இருப்பது, அவர்கள் மன உறுதியை தெளிவுபடுத்துகிறது. நம் மக்களுக்கு விளம்பரங்களில் பிபசா பாசுவையும், இலியானாவையும் துரத்துவதற்கே நேரம் போதவில்லை... இவைகளை கவனிக்க எப்படி முடியும் :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல்

===========================================================

அஞ்சல்பெட்டி

கேரளத்தொடர்புடன் இருக்கும் ஊர் நாகர்கோயில்.1947 ஆம் ஆண்டுக்கு முன்புவரை திருவாங்கூர் மன்னரின் செல்வாக்கு இந்த ஊரில் அதிகம்.ஆங்கில ஆட்சியும் இருந்தது.திருவாங்கூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களுக்குச் செல்ல தனி அஞ்சல் பெட்டியும் ஆங்கில அரசுக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தனி அஞ்சல்பெட்டியும் இருந்ததாம்.

அஞ்சல்பெட்டி

திருவாங்கூர் அஞ்சல் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெட்டி இன்று இந்திய அஞ்சல்துறையின் பயன்பாட்டில் உள்ளது.இரும்பால் வார்க்கப்பட்டுள்ளது அஞ்சல்பெட்டி.நாகர்கோயில் போகாதவர்களுக்குப் பார்வைக்கு இந்தப் பெட்டியும் அருகில் உள்ள முதன்மை வாய்ந்த நூற்றாண்டு கண்ட மணிக்கூண்டும் படமாகத் தருகிறேன்.கண்டு மகிழுங்கள்.

மணிக்கூண்டு

கருத்துகள் இல்லை: