ஐஸ்வர்யாராய் மீது மகாராஷ்ட்ர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல காற்றாலை நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி மகாராஷ்ட்ராவின் நந்தர்பார் மற்றும் துல் மாவட்டங்களில் காற்றாலைகள் அமைக்க ஏராளமான நிலங்களை வாங்கியது.
பழங்குடி மக்களுக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அப்படி வாங்கப்பட்ட இந்த நிலங்களில் காற்றாலைகள் அமைக்க அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்ட சுஸ்லான், பின்னர் காற்றாலை அமைக்காமல், நிலங்களை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு எக்கச்சக்க விலைக்கு விற்று லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது.
எனவே பழங்குடி மக்களை ஏமாற்றி மோசடி செய்து இந்த நிலங்கள் வாங்கப்பட்டிருப்பதாக மகாராஷ்ட்ர அரசு கடந்த முறை சட்ட சபையிலேயே அறிவித்தது நினைவிருக்கலாம்.
நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், ட்விங்கிள் கன்னா மற்றும் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர் சிங் ஆகியோர் பெயர்களில் இந்த நிலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகாராஷ்ட்ர அரசே எழுப்பியுள்ள இந்தப் புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சன்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கரும் இந்த நிலங்களை வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

பயணத்தின் அடுத்த கட்டம் தான் மொத்தப் பயணத்தின் சிறப்பம்சமே! ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கோவில்பட்டிக்கு பேருந்து பிடித்து போய் இறங்கியபோது பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டி இருந்தது. மதிய உணவை முடித்து, அங்கிருந்து நாங்கள் பயணம் செய்யத் தொடங்கிய இலக்கு, 'எட்டையபுரம்'. பயணத்தின் இந்தப் பகுதியைப் பற்றி ஏற்கனவே என் வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். ஒரு மாதிரியான பரவச நிலையில் எழுதப்பட்ட பதிவு அது. மீண்டும் அதுபோல் என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. அப்பதிவின் தொடுப்பை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்...
முத்தமிழ் வளர்த்தான் பாண்டியன், இன்று செந்தமிழ் வளர்க்கிறான் இந்த இணைய நண்பன் www.searchko.in
எனதினிய தமிழ் நேசம் கொண்ட வலை நண்பர்களுக்கு வணக்கம்...
கூகிள் உலகையே ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் ஒரு இணைய வலை அரசன். என்னதான் அரசன் என்றாலும், எழுதுவதற்கும் படிப்பதற்கும் சுவை தரும் தமிழில் கூகிளால் உயரத்தை எட்ட முடியவில்லை. நான் வலையில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது நான் கண்ட இந்த அற்புதமான ஒரு தமிழ் இணைய வலை அரசன் தான் www.searchko.in
இந்த தமிழ் இணைய வலையரசனின் சிறப்புகளை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
1. செந்தமிழில் இணைய வலையினை தேட, செந்தமிழில் ஒரு தேடல் இயந்திரம்.
அ. செந்தமிழ் மற்றும் இயல்பு நடை தமிழில் இணைய வலை தேடல்.
ஆ. சங்க கால இலக்கியங்கள் தேடல்.
2. கூட்டாக தமிழ்ப் பத்திரிக்கைகளை வாசிக்கலாம்
அ. பல தமிழ் செய்தித்தாள்களை ஒரே இடத்தில் அதன் தலைப்புச் செய்திகளை
உடன்மாறும் செய்திகளாக வாசிக்கலாம்.
3. நேரடி கிரிக்கெட் விளையாட்டு விவரங்கள்
அ. நேரடி கிரிக்கெட் ஆட்ட விவரங்களைத் தமிழில் காணலாம். (குறுகிய மற்றும்
விவரமான நிலவரங்களுடன் காணலாம்).
ஆ. கூடிய விரைவில் தமிழில் நேரடி ஆட்ட விமர்சனங்களை காண வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
4. அகராதி சேவை
அ. தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தம் புரிந்துகொள்ள, தமிழ்-ஆங்கில
அகராதி அமைக்கப்பட்டுள்ளது.
ஆ. ஆங்கிலம்-தமிழ் அகராதி அமைத்து தமிழ் புரிந்து கொள்ளும் இணைய
உலகத்தில், தமிழ்-ஆங்கில அகராதி மூலம் தமிழுக்கே பெருமை சேர்த்துள்ளது
இந்த இணையம்.
5. மார்கழி மாத இசைத்திருவிழா விவரங்கள் இசைப்பகுதியில்
இணைக்கப்பட்டுள்ளது .
6. அனைத்திற்கும் மேலாக இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ் எழுத்து
பிழைத்திருத்தி இணைக்கப்பட்டுள்ளது.
7. ஆங்கில தட்டச்சுப் பலகையிலிருந்து தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்யும்
வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ் தட்டச்சுப் பலகை செயல்
உண்மைப்பலகையாக (virtual)உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் எண்ணம் கொண்ட உள்ளங்களுக்கு இது ஒரு வரப்பிர
சாதமாக இருக்குமென்று, என் இனிய இணைய வலை நண்பர்களுக்கு இதை
சமர்ப்பிக்கின்றேன்.
இணைய தமிழ் வளர்ப்போம் .....
மென்பொருள் உலகில் தமிழுக்கு ஒரு இடம் ஒதுக்குவோம் ....
தங்கள் அன்பு நண்பன்
பழநி கண்ணன். க

அவங்க சீமா.எட்டு வருடமாக எங்கள் வீட்டில்தான் வேலை பார்க்கிறாங்க.அப்படியொரு நேரம் தவறாமை,வேலையில் சுத்தம்,அக்கறை...எந்தக் குறையும் சொல்லவே முடியாது.....அவங்களை அவ்வ்ளோ நம்பினோம்....
அவங்கதான் இன்று இதைச் செய்தாங்க.அவங்க பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கும்போது நான் திடீரென்று உள்ளே நுழைந்து விட்டேன் அவங்க பதட்டமாக குப்பையை ஒரு பையில் திணித்துக் கொண்டிருந்தாங்க.....எனக்கு சந்தேகமாக இருக்கவே அங்கேயே நின்று கொண்டேன்.அடிக்கடி குப்பையை அவங்களே கொண்டு வெளியில் போடுவாங்க....அன்று எனக்குச் சந்தேகமாக இருக்கவே குப்பை வண்டிக்காரன் வருவான்...நானே போட்டுக்கறேன்னு சொல்லிட்டேன்.....
அவங்க போனதும் பையைத் திறந்து ஆராய்ந்து பார்க்கையில் ஒரு பை நிறைய அரிசி............
இதற்குக் காரணம் ????
என்னுடைய கவனக் குறைவா?
அவங்களை அளவுக்கதிகமா நம்பியதாலா?
இப்போ என்ன செய்வது?
எட்டு வருட உழைப்பைப் பற்றிக் கவலைப் படாமல் அவங்களை வேலையை விட்டுத் தூக்குவதா?
இல்லை அவங்களைக் கூப்பிட்டு நீங்க செய்தது எனக்குத் தெரிந்து விட்டது...இனி அப்பிடிச் செய்யாதீங்க எனச் சொல்வதா?
இல்லை எதுவுமே சொல்லாமல் அவங்களை வேலையைத் தொடரச் சொல்லி விட்டு இனி அவங்களைக் கண்காணிப்பதா?
ஒரே குழப்பமும் வருத்தமும்..........

அவங்க சீமா.எட்டு வருடமாக எங்கள் வீட்டில்தான் வேலை பார்க்கிறாங்க.அப்படியொரு நேரம் தவறாமை,வேலையில் சுத்தம்,அக்கறை...எந்தக் குறையும் சொல்லவே முடியாது.....அவங்களை அவ்வ்ளோ நம்பினோம்....
அவங்கதான் இன்று இதைச் செய்தாங்க.அவங்க பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கும்போது நான் திடீரென்று உள்ளே நுழைந்து விட்டேன் அவங்க பதட்டமாக குப்பையை ஒரு பையில் திணித்துக் கொண்டிருந்தாங்க.....எனக்கு சந்தேகமாக இருக்கவே அங்கேயே நின்று கொண்டேன்.அடிக்கடி குப்பையை அவங்களே கொண்டு வெளியில் போடுவாங்க....அன்று எனக்குச் சந்தேகமாக இருக்கவே குப்பை வண்டிக்காரன் வருவான்...நானே போட்டுக்கறேன்னு சொல்லிட்டேன்.....
அவங்க போனதும் பையைத் திறந்து ஆராய்ந்து பார்க்கையில் ஒரு பை நிறைய அரிசி............
இதற்குக் காரணம் ????
என்னுடைய கவனக் குறைவா?
அவங்களை அளவுக்கதிகமா நம்பியதாலா?
இப்போ என்ன செய்வது?
எட்டு வருட உழைப்பைப் பற்றிக் கவலைப் படாமல் அவங்களை வேலையை விட்டுத் தூக்குவதா?
இல்லை அவங்களைக் கூப்பிட்டு நீங்க செய்தது எனக்குத் தெரிந்து விட்டது...இனி அப்பிடிச் செய்யாதீங்க எனச் சொல்வதா?
இல்லை எதுவுமே சொல்லாமல் அவங்களை வேலையைத் தொடரச் சொல்லி விட்டு இனி அவங்களைக் கண்காணிப்பதா?
ஒரே குழப்பமும் வருத்தமும்..........











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக