செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30



More than a Blog Aggregator

by ப்ரியன்
என்னைப் பற்றி எட்டு விடயங்களைச் சொல்ல நண்பர் விழியன் & காதல் கவி இளவரசன் அருட்பெருங்கோ இருவரும் அழைத்து நாட்கள் எட்டுக்கு மேல் ஆகிறது,இன்னும் அறுவர் வந்தழைத்து அழைப்பவர் எண்ணிக்கை எட்டை எட்டினால்தான் எழுதுவதென்றிருந்தேன்(உண்மை சொல்வதாயின் சோம்பேறித்தனம் அன்றி வேறில்லை).இதற்குமேலும் காக்க வைத்தால் இருவரும் சென்னைக்கு விமானம் பிடித்து வந்து 'டின்' கட்டிவிடுவார்கள் என்பதால்

1.) மிகவும் பாதித்த நிகழ்வு என்றால் , அறியா வயதில் நிகழ்ந்த என் பெரிய மாமாவின் மரணம்.ஒன்றரை வயது வரை எங்கு சென்றாலும் என்னை சுமந்து சென்ற அவரை என்னிடம் நிரந்தரமாய் பிரித்த காதலுக்கு நிச்சயம் பலம் அதிகம்தான்.

2.) கல்லூரியில் நுழையும் முன்பு வரை படிப்பில் சுட்டிதான் , கல்லூரியில் முதல் இரண்டு வருடங்களில் நான்கு 'அரியர்கள்'.உண்மை காரணம் இன்னமும் என்னால் கூட கண்டறிய இயலவில்லை.

3.) நான் காதலிக்கிறேன் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்த இரகசியம் , எனக்குள் காதல் பிறந்த கதை , நான் என்னவளிடம் என் காதலை சொன்ன கதை தெரிய வேண்டுமா ? இதை படியுங்கள் 'காதல் கதை'.

4.) என் காதலை காதலியிடம் சொன்னதைவிட சுவாரஸ்யமானது , அதை என் பெற்றோரிடம் சொன்ன சம்பவம்.சாதரணமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஓர் இரவில் ஏதோ காபி குடிக்க அனுமதி வேண்டுவதுப் போல் சொன்னேன்.அவர்கள் அவ்வளவு சுதந்திரம் தந்து வளர்த்திருந்தார்கள்.

5.) என்னின் 'இருந்தால்' கனவுகள் அடிக்கடி மாற்றம் காணும்.பட்டியலில்

# முதலமைச்சராக இருந்தால்
# பிரதமராக இருந்தால்
# இராஜராஜன் காலத்தில் இருந்திருந்தால்
# இராணுவத்தில் இடம் கிடைத்திருந்தால் ,

என இப்படி பல.ஆனால் இப்போது அடிக்கடி காணும் கனவு 'ஈழம்'.இக்கனவு நிச்சயம் சீக்கிரமாய் பலிக்க வேண்டும்...நிச்சயம் பலிக்கும்...

6.) என்னிடம் எனக்கு பிடித்த குணங்கள் , சகிப்பு தன்மையும் , நேரம் தவறாமையும்.

7.) என்னிடம் எனக்கு பிடிக்காத விடயங்கள் , கோபம் & செயலை தள்ளிப்போடும் செயலும்.இவற்றால் இழந்தவை ஏராளம் என்றாலும் இன்னும் திருந்துவதாய் இல்லை.

என்ன ஆறாவதும் ஏழாவதும் செமத்தியா உதைக்குதா? ஆனா உண்மை அதுதானுங்க.இடம் , ஆள் , பொருள் பொறுத்து குணம் மாறும்.உதாரணத்திற்கு ,

என் வேலை - தள்ளிப்போடப்படும்.
மற்றவர்களின் வேலை - மாட்டாது.

நண்பர்கள் , உறவினர்கள் - சகிப்புதன்மை அளவில் அடங்காது.
நெருங்கிய உறவுகளிடம் \ விதி மீறுபவர்களிடம் - சகிப்புதன்மை - கிராம் என்ன விலை?

8.) ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...!!! இரகசியம்!!! கல்லூரில் கற்ற , தொடர்ந்த மூன்று கெட்ட பழக்கங்களில் இரண்டு பழக்கங்கள் இன்று என்னிடம் சுத்தமாய் இல்லை , மூன்றாவது - அழகு இரசித்தல் (அழகுத் தமிழில் - 'சைட் அடித்தல்') இன்னும் இருக்கு...இருக்கும்...அதுதானே என் பல கவிதைகளின் வித்து...(அழகு இரசித்தல் தப்பா என்ன???).

கொசுறு :

தமிழனுக்கு விஷம் வாங்கினாலும் கொசுறு வேண்டுமே...

தினமும் தவறாமல் முதலில் பார்க்கும் எட்டு இணையதளங்கள்

1.) SDN
2.) இந்தியன் டெலிவிஷன்.காம்
3.) டெலிவிஷன் பாயிண்ட்.காம்
4.) பி.பி.சி. தமிழ்
5.) தட்ஸ்தமிழ்.காம்
6.) தமிழ்மணம்.காம்
7.) அன்புடன்
8.) ஈழம் பேஜ்.காம்

என்னையும் ஆட்டத்தில் இணைத்த நண்பர் விழியன் , அருட்பெருங்கோ இருவரும் எனது நன்றிகள்.

வணக்கம்...
'மக்கள் திலகம்' ஆரம்பித்த இயக்கத்திற்கு இந்த நிலைமையா? என்று பதற்றமா?

என்னது பிதற்றுகிறேனா?

நான் சொல்வது 100 க்கு 200 உண்மைங்க...

நம்ப முடியலயா?கொஞ்சம் இந்த விளம்பரத்தை பாருங்க



http://www.aiadmk.org/

குறிப்பு : இப்பதிவு தமிழ்99 தட்டச்சி பழகும் முயற்சியில்...
நீங்கள் ரஜினி ரசிகரா?

நீங்கள் அனிமேஷன் படவிரும்பியா?

இதோ உங்களுக்கான விருந்து...



சுட்டி : http://www.sultanthefilm.com/
இயல் கவிதை: நடுவர் : திசைகள் ஆசிரியர் மாலன்

ஆறுதல் பரிசு 1 :


கார்த்திக் பிரபு, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

சோ. சுப்புராஜ், துபாய்

இரண்டாம் பரிசு :

தண்டபாணி பொன்னுரங்கம், சென்னை

முதல் பரிசு :

ஜாபர் அலி, துபாய்

ஊக்கப்பரிசு :

லிவிங் ஸ்மைல் வித்யா (2 கவிதைகள்), மதுரை

உஷா, சென்னை

மாதங்கி, சிங்கப்பூர்

கவிஞன் முதல்வன் (எ) ஸ்ரீராம், ஆஸ்த்ரேலியா

நட்சத்ரன் (எ) கா. முத்துராமலிங்கம், தஞ்சாவூர்

மேரித் தங்கம், சென்னை

இளா, நாமக்கல்

அருட்பெருங்கோ, சென்னை

மதுமிதா, சென்னை

இசைக்கவிதை: நடுவர் : இசைக்கவி ரமணன்

ஆறுதல் பரிசு 1 :


பங்கேற்பு ,இசை, பாடல்: கே.எம். அமீர், சென்னை கவிதை: நாக. சொக்கன்

ஆறுதல் பரிசு 2 :

பங்கேற்பு, கவிதை: சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ் பாடியது: கலாவதி

இரண்டாம் பரிசு :

பங்கேற்பு, கவிதை , குரல் : சிறில் அலெக்ஸ் சிகாகோ

முதல் பரிசு :

பங்கேற்பு, கவிதை: S. சங்கரநாராயணன், சென்னை குரல்: லஹரி

ஊக்கப் பரிசு 1:

கவிதையும் பங்களிப்பும்: கவிஞர் மதுமிதா, சென்னை இசையும் குரலும்: பல்கலைத் தென்றல் ஆரெஸ்மணி

ஊக்கப் பரிசு 2:

கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: இராஜ. தியாகராஜன், புதுச்சேரி

ஊக்கப் பரிசு 3:

கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: விசாலம், மும்பை

ஒலிக்கவிதை: நடுவர்கள் : கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்

ஆறுதல் பரிசு 1 :


கவிஞர் மதுமிதா, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

V. லஷ்மணக்குமார், மதுரை

இரண்டாம் பரிசு :

ஷைலஜா, பெங்களூர்

முதல் பரிசு :

மு. பாண்டியன், நெய்வேலி

படக்கவிதை : நடுவர்கள் : ஆசிப் மீரான் , கவிஞர்.பாலபாரதி மற்றும் தம்பி அகிலன்

ஆறுதல் பரிசு 1 :


கே. வி. உஷா, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

மு. பாண்டியன், நெய்வேலி

இரண்டாம் பரிசு :

சோ. சுப்புராஜ், துபாய்

முதல் பரிசு :

மேரித் தங்கம், சென்னை

காட்சிக்கவிதை : நடுவர் : நிலா என்கிற நிலாச்சாரல் நிர்மலா

ஆறுதல் பரிசு 1 :

கவிநயா என்றழைக்கப்படும் மீனா ,ரிச்மண்ட், அமெரிக்கா

ஆறுதல் பரிசு 2 :

ஆர்.எஸ். மணி , கேம்ப்ரிட்ஜ், கனடா

இரண்டாம் பரிசு :

முத்துலட்சுமி , புது தில்லி

முதல் பரிசு :

சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா , மாவனல்லை, இலங்கை

நடுவர்களின் உரைகளையும் பரிசு பெற்ற கவிதைகளையும் வாசிக்க

http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd
மக்களவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 253 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
எதிர்த்து 232 வாக்குகள் பதிவாயின. கடந்த சில நாட்களாக நீடித்து வந்த மர்மம் நீங்கியது. கம்யூனிஸ்டுகளின் பணியால் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு நின்ற மதவாதத்தின் முயற்சி தோல்வியடைந்தது.
கொம்பு முளைத்த உச்சநீதிமன்றம், மக்கள் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நூற்றண்டு கால தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை, பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மத நம்பிக்கை என்னும் புரட்டைச் சொல்லி தடுக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றம் அடைக்கலம் கொடுக்குமாம்; இதைப் பார்த்துக் கொண்டு இன உணர்வாளர்கள் சும்மா இருக்க வேண்டுமாம். உச்சிக்குடுமி நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம்.

அப்படி இல்லாமல், சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி அமைதியான வழியில், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வழியில் பந்த் அறிவித்தால் அதை இரவுக்கிரவே கூடித் தடுக்குமாம் உச்ச நீதிமன்றம்.
சரி, உச்சநீதிமன்றத்திற்கு மதிப்புக் கொடுத்து உண்ணாநிலைப் போராட்டம் என்று அதை மாற்றிக் கொண்டு, உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு சென்று கையொப்பமிட்டு பணியை மேற்கொண்டார் கலைஞர்.
பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் தன்னெழுச்சியாக 'பந்த்' நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் கரியைப் பூசினர். அதைத் துடைத்துக் கொண்டு, தனது அவமானத்திற்கு பழிவாங்கத் துடிக்கிறது உச்சிக் குடுமி நீதிமன்றம்.

இதோ இன்று கலைஞருக்கு அது விடுத்துள்ள எச்சரிக்கையில் "தலைமைச் செயலரின் அறிக்கையைத் தனது அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், விரைவில் முதல்வர் பதிலளிக்காவிட்டால் அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

பிறப்பிக்கட்டும்! பிறப்பிக்கட்டும்!! அப்போது தான் கனன்று கொண்டிருக்கும் தமிழின உணர்வு கொழுந்துவிட்டெரியும்!
இந்தியா என்னும் மாயையில் சிக்கித் தவிக்கும் எம் தமிழினம் மீண்டு வரும்! உச்சிக் குடுமி நீதிமன்றமே உன் ஆணவ ஆணையை அனுப்பு!
தமிழினத்திடமிருந்து மீண்டும் கிடைக்கும் உனக்கு ஆப்பு!

முந்தைய பதிவுகள்:
உச்சநீதி மன்றத்திற்கு மக்கள் தந்த செருப்படி!
எவன் மசுர புடுங்கப் போனீங்க!
பெஞ்சுகளைச் சுத்தப்படுத்துவோம் வாருங்கள்!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....
கலைக்கட்டும் கலைஞர் அரசை!

கருத்துகள் இல்லை: