திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

கேப்டன் படத்துலதான் கத்துவாரு, குதிப்பாரு சமயத்துல குத்துவாருன்னு நினைச்சிக்கிட்டிருந்தோம்.

இப்ப கொஞ்ச நாளா, அதாவது தேர்தல் நெருங்க, நெருங்க,பாக்கற எல்லாரையுமே எரிஞ்சி விழறாராம். கட்சி தொண்டர்கள்னா கையையும் நீட்டிடறாராம்.

இவ்வளவு ஏன்? அவரை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்ங்க கிட்ட எப்படி பேசியிருக்கார்னு பாருங்க.

விஜயகாந்தின் கோபம்

இவரெல்லாம் ஜெயிச்சி முதல்வரான்னா என்னாவறது?
கேப்டன் படத்துலதான் கத்துவாரு, குதிப்பாரு சமயத்துல குத்துவாருன்னு நினைச்சிக்கிட்டிருந்தோம்.

இப்ப கொஞ்ச நாளா, அதாவது தேர்தல் நெருங்க, நெருங்க,பாக்கற எல்லாரையுமே எரிஞ்சி விழறாராம். கட்சி தொண்டர்கள்னா கையையும் நீட்டிடறாராம்.

இவ்வளவு ஏன்? அவரை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்ங்க கிட்ட எப்படி பேசியிருக்கார்னு பாருங்க.

விஜயகாந்தின் கோபம்

இவரெல்லாம் ஜெயிச்சி முதல்வரான்னா என்னாவறது?
கொஞ்சநாளாவே மனுஷன் வில்லங்கமாவே பேசி வருகிறார்.

கொஞ்ச நாளைக்கி முன்னால இலங்கை தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசை பணியவைக்க நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்றார். 'ஆனா இங்கருக்கறவங்க என் கோரிக்கைய ஏத்துக்கமாட்டாங்க. ஏனா கோடி கோடியா கிடைக்கற வருமானம் போயிருமே, அதனால'ன்னும் டயலாக் அடிச்சார்.

இப்ப எல்லாரையும் முந்திக்கிட்டு தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிவிட்டார். ஏனாம் நேத்தைக்கி நல்ல நாளாம்!

கொஞ்ச நாளைக்கி முன்னால் திராவிட கழகங்கள் எதனுடனும் கூட்டு இல்லை. 'ஏன்னா அவங்க அடிக்கற கொள்ளையில எனக்கும் பங்குண்டுன்னு நீங்க நினைச்சிரக் கூடாதில்ல?' அப்படீன்னார்.

அப்புறம் தேர்தல் சின்னம் விஷயமா டெல்லிக்கி போன பண்ருட்டிய காங்கிரஸ் தலைவர்கள பாத்து சீட் விவகாரம் பேசுங்கன்னு சொன்னதா நியூஸ் வந்துது. திடீர்னு என்ன நினைச்சாரோ 'ஒன்னும் பேசவேணாம். திரும்பி வந்துருங்க'ன்னு இன்ஸ்ட்ரக்ஷன். திராவிட கழகங்களோட கூட்டு வேணாம்னு சொன்னவர் காங்கிரஸ்கிட்ட போயி எதுக்கு பேச நினைக்கணும்? காங்கிரசே திமுக கூட்டணியில ஒரு ஜூனியர் பார்ட்னர்னு இவருக்கு தெரியாதோ.

இப்ப என்னடான்னு கடவுள் கூட கூட்டணியாம். ஆனா அத 26ம் தேதிதான் அறிவிப்பாராம். ஏன்? அன்னைக்கிதான் இதுக்கு நாள் நல்லாருக்கா?

இதவிட தமாஷ் என்னன்னா நேத்தைக்கி ரசிகர்ங்ககிட்டவே நேரடியா கேட்ட கேள்விகள்.

'நா திமுக கூட கூட்டணி வச்சிக்கணுமா?

'வேண்டவே வேண்டாம்'

'என்னெ நீங்க கருப்பு எம்ஜியார்னு சொல்றீங்க, அப்ப அஇஅதிமுக கூட கூட்டணி வச்சிக்கணுமா?'

'வேண்டவே வேண்டாம்.'

'அப்ப நா சொல்ற ஆளுங்களுக்கு ஓட்டு போடுவீங்களா?'

'போடுவோம்.'

கடைசி கேள்வி 'அஇஅதிமுக, திமுக ரெண்டுமே மாறி, மாறி மத்தியில பார்ட்னரா இருந்தாங்க. கோடி, கோடியா சம்பாதிச்சாங்க. ஒங்களுக்கு ஏதாச்சும் கிடைச்சிதா?'

'இல்லவே இல்ல'

'ஆனா நா அப்படி இருக்க மாட்டேன்.'

நா கொள்ளையடிக்க மாட்டேன்னு சொல்றாரா இல்ல கொள்ளையடிச்சத மக்களோட பங்கு போட்டுக்குவேன்னு சொல்றாரா? அவருடைய ரசிகர்களுக்கே வெளிச்சம்.

இன்னொரு ஞானோதயம். 'மத்தியில நமக்கு அதிகாரம் இருந்தாத்தான் தமிழர்களோட பிரச்சினைகளான காவிரி,முல்லைப் பெரியார், இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகளை தீர்க்கமுடியும், அதனாலதான் இந்த தேர்தல்ல எல்லா தொகுதிகளையும் புடிச்சிரணும்னு நினைக்கேன்.'

இவருடைய கட்சி 40 (39+1) இடங்களையும் புடிச்சி மத்தியில கூட்டணி ஆட்சியில பங்கு பெறுவாராம். தேர்தலுக்கு முன்னால கூட்டணியில்லையாம். ஆனா தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிய புடிக்கிறாங்களோ அவங்களோட கூட்டணியாம். மத்திய அமைச்சரவையில் பதவி,பணம், புகழ் எல்லாம். நம்ம இடதுசாரிகள் சொல்றது மாதிரி. யார் ஆட்சியில இருக்காங்களோ அவங்களோட கூட்டணி.

இவர் விஜயகாந்த் இல்லை விவகாரமானகாந்த்.

*******
கடும் குளிரையும் பொருட்படுத்தாது வெள்ளை மாளிகை முன்னே சிங்கமென கூடிய தமிழ் கூட்டம் காண்...

சுதந்திர தமிழீழமே தீர்வு என விண்முட்ட முழங்கிய முழக்கம் கேள்...


எம் உறவுகளின் உயிர்காக்க போர் நிறுத்தம் உடனடியாக வேண்டும் என்று கதறிய கோரிக்கை பார்...

சரித்திர நாயகன் ஒபாமா எம் சரித்திரத்தையும் நிலைநாட்ட உதவுங்கள் என்று வேண்டிய வார்த்தைகள் கேள்...

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...."




கடும் குளிரையும் பொருட்படுத்தாது வெள்ளை மாளிகை முன்னே சிங்கமென கூடிய தமிழ் கூட்டம் காண்...

சுதந்திர தமிழீழமே தீர்வு என விண்முட்ட முழங்கிய முழக்கம் கேள்...


எம் உறவுகளின் உயிர்காக்க போர் நிறுத்தம் உடனடியாக வேண்டும் என்று கதறிய கோரிக்கை பார்...

சரித்திர நாயகன் ஒபாமா எம் சரித்திரத்தையும் நிலைநாட்ட உதவுங்கள் என்று வேண்டிய வார்த்தைகள் கேள்...

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...."




தொப்புள் கொடி உறவுகளை காக்க கோரிஇன்று (7-02-09) தஞ்சை மாவட்டம் சீர்காழியில் தீக்குளித்து உயிர்தியாகம் செய்த ரவிச்சந்திரனின் மரணம் குறித்த வீடியோ பதிவுகள்

உணர்வுள்ள தமிழனின் உயிர் தியாகத்தை காணுங்கள்...

சாகும் தருவாயிலும் தன்னை காப்பாததே.. ஈழத்தமிழனை காப்பாத்து என்று கூறும் உணர்வாளனை காணுங்கள்...

இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் வேண்டும் மத்திய,மாநில அரசுகளுக்கு...?

கருத்துகள் இல்லை: