செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30



ஏன் மகா ஏனாயித்து?
தும்ப கஷ்டாகித்துரீ
ஏன்ரீ

யேய் புண்ணாக்கு மண்டையா அதான் உனுக்கு வரலல்ல அப்றம் என்னா மயித்துக்கு ஏன்ரீ நோன்ரீன்னுகிட்டு...வந்த வேலைய பாரு...

தோழர் தமிழச்சி அவர்கள் தமிழ்கூறும் வலையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக "வெண்தாடி வேந்தன்" ஈ வே ராமசாமி பெரியாரின் பேச்சுக்களையும் எழுத்தையும் அவர் சம்மந்தப்பட்ட இன்னபிற
நிகழ்வுகளையும் வலையிலேற்றிவருகிறார். அதற்காக நன்றிப்பெருங்கடன் பட்டிருக்கிறோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


டிஸ்கி:
அரைநான் கோவண நாகரீக முன்னோடியான திராவிட தமிழர்களின்(வலைக்குழு அல்ல) பெண்பால் தமிழச்சி என்று விளிக்கப்படும். க்ளோஸ் பிரெண்டுகளை என் தோழி "செல்லா" என்று தான் அழைப்பாள். இந்த பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. இங்கு எழுதப்பட்டதை யார் வேண்டுமானாலும் திருடிக்கொள்ளலாம். சிவாஜி த லாஸ் என்ற வலைப்பதிவர் முக்கியமாக இதைத் திருடிக் கொள்ளலாம்.

தோழர் "தமிழச்சி"யின் இரு இடுகைகள் இரண்டு நாட்களாக சுடச் சுட சூடாக தமிழ்மண முகப்பில் இருக்கிறது. தோழர் கும்முவதற்கு ஒத்துழைக்க மறுத்து ஒண்டிக்கு ஒண்டி கராத்தே போட கூப்பிடுகிறார். அதுவும் தொப்பையும் தொந்தியுமான அப்பாவி "ப்ரென்ச் தாடி" செல்லாவைப் பார்த்து. இன்று மாலை குட்டிக் கழுகார் கோவை "கை"சூப்பிரமணி டீக்கடையின் செல்லக்குட்டி "சிட்டுக்குருவி"யிடம் பிட்டு போட்டதில், தோழர் தமிழச்சியின் ஒண்டிக்கு ஒண்டியில் "ப்ரென்ச் தாடி" செல்லா "ஆட்டுதாடி" செல்லாவாகி விட்டாராம். தோழர் தமிழச்சி அவர்களே உங்களுக்கு ஏனிந்த ஒண்டிக்கு ஒண்டி கொலைவெறி... சாதா"ரண"மாக முறைத்தாலே குப்புற விழும் ஒரு அப்பாவியிடம் போய் ஒண்டிக்கொண்டி கராத்தே கூப்பிட்டு இருக்கிறீர்கள்.( சும்மா தமாசுக்கு தானே கூப்பிட்டீங்க...இல்லை சீரியாசாவேவா)...சீரியஸாகவென்றால் என்னைக் கூப்பிடுங்கள்...பிரான்ஸ் சுத்திப் பார்க்கவேண்டுமென்பது ரொம்ப நாள் கனவு...அதுவும் "கொர்பூசியே"வின்
ரான் சேம்ப் "சேப்பலையும்...யுனைட்டெட் ஹாபிட்டேசனயும்...வில்லா சாவொய்யும் பார்க்க ரொம்ப நாள் ஆசை.(ஆமா நீங்க ப்ளாக் பெல்ட்டா...பெல்ட்டு கட்டிட்டு சர்டிபிகேட் வாங்கும் போது எதுனா ப்லெட்ஜ் எடுத்தீங்களா...எடுத்திருந்தீங்கன்னா "ஆட்டு தாடி" செல்லாவை குமுறுவதற்கு ஒண்டிக்கொண்டி கூப்பிட்டு இருக்க மாட்டீர்கள்)




சரி ப்ரீயா விடுங்க...நீங்க மொதல்ல செய்ய வேண்டியது என்னான்ன உங்க வலைப்பூவோட முகப்பில "இங்கு இருக்கும் அனைத்தும் எனக்கே சொந்தம்" என் அனுமதியில்லாமல் யாரும் திருடக்கூடாது என்று ஒரு அறிவிப்பு போடுங்க...அது சரி விடுதலைல இருந்து சுடறீங்களே(சுட்டதா இல்லை அனுமதி வாங்கி தான் போடறீங்களா?) ஸ்கேண்டு கோப்புகள் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும்.தமிழில் தட்டச்சு செய்து கொடுக்கிறேன்.

அப்பால ரிவீட்டு...இதக்காண்டி மார்சியல் ஆர்ட்ஸ் மொரையா கத்துக்கனுவுங்கோ எடுத்துக்கற மொத ப்லெட்ஜே யாராண்டையும் நா ஒயிட்டு நீ சட்டைய கயிட்டுன்னுட்ட சண்டைக்கு இழுக்கக் கூடாது.ஏன்னா மாமல்லபுரத்து செவந்த் மைல் ல நாங்களும் மூனுவருசம் முழுநேரமும் ஒரு தற்காப்பு பயிற்சி(மன்சூரியன்) வகுப்பில் ஓரமா "ஸ்பாரிங்" செஞ்சிகினு இருந்தவைங்க தான்.

இப்போதைக்கு நா அப்பீட்டு...அப்பாலிக்கா எனுக்கு அடிங்கோ ரிவீட்டுடுடுடு...........




யாரந்த தமிழச்சி?

ஊரெல்லாம் ஒரே பரபரப்பு...பதட்டம்...துப்பாக்கிச்சூடு...கலவரம்...

ஓசையார் கும்மியோடு கோலாட்டமும் வேண்டுமென்று இரு கைகளாலும் தம் குறுந்தாடியின் மயிர்களை எண்ணிக் கொண்டிருக்க, இன்னொரு தோழர் தன் லேடி ப்ராஜெக்ட் மேனேஜரோடு தென் - வட கொரிய
எல்லையில் ஏதோ ஒரு வாக்கிங் டிரெயிலில் கேம்ப்படித்து சாப்ட்வேர் டெஸ்டிங் செய்து கொண்டிருக்க...சிறுவாணிகன் பொட்"டீ"யான் மட்டும் பித்தம் தலைக்கேறி இஞ்சி சாறு குடிக்க, மேற்கத்திய சியர்ஸுக்கான
புதிய வியாக்கானத்தோடு தோழர் வரவனையான் ஓல்டு மாங்க் ஒரு கட்டிங் அடித்து என்னோடு வீடியோ கான்பெரண்ஸில் சியர்ஸ் சொல்லி ஒரே கல்ப்பில் குடித்து முடிக்குமுன்னே நான் தோழர்
தமிழச்சி பதிவில் இன்னொரு ஸ்பாம் "பிரசுரிக்க வேண்டாம்" என்ற தலைப்பில் இவ்வாரத்தின் மிகப்பெரிய ஜொள்ளோடு "தோழர் தாங்கள் யார்" என்று என்னிடமாவது சொல்லுங்கள் என்று
மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்க...ஊரெல்லாம் ஒரே பரபரப்பு!!!

இந்தியா தொடங்கி அமேரிக்கா,சிங்கப்பூர்...அவுசுதிரேலியா என்று கேஜிபியையும், எஃப் பி அய்யையும், ஏ எஃப் பியையும் மிஞ்சும் வகையில் இண்டர்போல் உதவியோடு யாரந்த தமிழச்சி என்று
வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சீக்ரெட் ஏஜெண்ட்...தமிழச்சிக்கு தூங்குவதைத் தவிர வேறெதுவும் வேலை அவ்வளவாக இல்லை. நீங்களே லாஜிக்கோடு யோசிச்சுப் பாருங்கள்
யாராவது 4 மாதாங்களில் நானூறு பதிவு போட முடியுமாவென்று? என்று என்னுடைய லாஜிக்கல் திங்கிங்கை கேவலப்படுத்த...நானோ அவர் மெத்ரோவில் பயனஞ்செய்யும் பொழுது(தோழர் விடாதுகருப்பு பயனத்தின் போது யோசிப்பது போல) அவருடைய மடிக்கணினியில்
தட்டச்சு செய்வார் என்று என்றோ சாரு நிவேதிதாவின் வாசகர் ஒருவரின் வாசிப்பு அனுபவத்தை உல்டா செய்து அல்டாப்பு விட்டுக் கொண்டிருக்க...கொழுப்பு மிதமிஞ்சி என்னுடைய சிறுமூளை சீழ்களாக
என் காதில் வழிய அதை ஒரு கையால் பக்கத்திலிருந்த பெர்ஃப்யூம்டு திசுவினால் வழித்து போட்டு இப்படி ஒரு டிஸ்கஸ்டிங்கான பதிவொண்டை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்ன பன்றது? ரெண்டு நாளா ஒடம்புக்கு ஓய்வு கொடுக்க சொல்லி உத்தரவு அதான் ஆன்லைனே கெதியென்று கிடக்கிறேன்...

நோ அப்யூஸ்...ஃபுல் & ஃபுல் மொக்கை தான்...எஞ்சாய் த வீக்கெண்ட்...
போர் தொடங்கிய போது பிராபகரன் போர் களத்தில் இருந்தார் என்பதே ஐயத்துக்குரியதாக இருக்கிறது. பிராபகரன் நீரிழிவு நோயாளி என்பதால் போர்களத்தில் இருந்து போரை வழிநடத்திச் சென்றிருப்பது ஐயமே. பிரபாகரன் போருக்கு முன்பே இயற்கை மரணம் அடைந்திருக்கலாம். இது உண்மையெனில்

இதை உளவுத்துறைகள் மூலம் அறிந்து கொண்ட சிங்கள அரசு போர் செய்து அந்த பகுதிகளை கைப்பெற்ற திட்டம் தீட்டி இருக்கலாம்

ஈழக்கனவு நிறைவேறத சூழலில் பிரபாகரன் மரணத்தை வெளியே கசியவிட வேண்டாம் என்று விடுதலை புலிகள் தரப்பு பொட்டு அம்மன் தலைமையில் செயல்பட்டு இருக்கலாம்

போரில் வெற்றி என்பதை வழியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை இராணுவத்திற்கு பிரபாகரன் 'உடல்' தேவைப்பட்டு இருக்கிறது, அதைக் காட்டியும் இருக்கிறார்கள். ஏற்கனவே பிராபகரன் மரணம் அடைந்திருந்தால் விடுதலைப் புலிகளின் அமைப்பு அதை வெளிப்படுத்த திணறும் என்பதைக் காரணமாக வைத்து பிரபாகரனின் 'உடலை'க் காட்டினார்கள் என்று ஊகிக்க முடிகிறது.

புலிகள் பிரபாகரனின் இறப்பை காலம் சென்று உறுதிப்படுத்துவது ஏன் ?

பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு தற்காலிக மறுக்கும் படி விடுதலைப் புலிகளின் வெளியுறவு அமைப்புகளிடம் கேட்டு கொள்ள ஆனது ஆயிற்று என்பதால் விடுதலைப் புலிகள் தரப்பு அந்த வேண்டுகோளை ஏற்றிருக்கக் கூடும்.

பிரபாகரன் போர்களத்தில் போரிடும் போது இறந்தார் என்று சொல்வது அவரை பெருமைப் படுத்தும் என்பதாலும் காலம் தாழ்த்திச் சொல்கிறார்கள் போலும்.

எது எப்படியோ போர் தொடங்கும் முன்பே பிராபகரன் மரணமடைந்திருக்கக் கூடும், ஏனெனில் போர் தொடங்கிய பிறகு பிரபாகரன் போர் களத்தில் இருந்தது போலவோ, வேறு நடவெடிக்கைக் குறித்தோ இதுவரை எந்தப்படமும் விடுதலைப் புலிகள் தரப்பில் வெளி இடப்படவில்லை.

இன்னும் சில விடுதலை புலிக்களின் குழுக்கள் பிரபாகரன் உத்தரவிற்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தப்பிவிட்டதாக சொல்லப்பட்ட இந்த ஒருவார காலம் உத்தரவிடவோ, இருப்பை வெளிப்படுத்தவோ போதாதா ?

நடப்புகளை எல்லாம் பார்க்கும் போது எனது ஊகம் பிரபாகரன் போருக்கு முன்பே மரணமடைந்திருக்கக் கூடும் என்பதே. இது தெரியாத இந்திய அரசை, இலங்கை அரசு பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் அழிக்கப் போவதாகச் சொல்லி இந்திய அரசின் உதவிகளைப் பெற்று அப்பாவி தமிழர்களை அழித்திருக்கிறார்கள்.

மற்றபடி பிரபாகரன் மீண்டும் வருவார் என்று எதிர்பார்ப்பது அவர் மீது வைத்திருக்கும், மதிப்பையும் நம்பிக்கையையும் பொருத்ததே. அப்படி நம்பிக்கை உடையவர்களில் நானும் ஒருவன்.
1971ம் ஆண்டு தேர்தலின் போது சில பத்திரிகைகள் திமுகவுக்கு எதிராக இருந்தன. ராஜாஜி, காமராஜரை ஆதரித்தார். பெரியார் மீண்டும் நம் பக்கம் வந்தார். அப்போது நாம் முன்பு இருந்த இடத்தை விட கூடுதலாக 20 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றோம்.

அப்போது நடந்தது போன்று மீண்டும் திராவிடர்-ஆரியர் போராட்டம் இப்போது நடக்கிறது. இந்த சிந்தனையை தட்டி எழுப்ப என்னைப் போன்ற லட்சக்கணக்கான சிப்பாய்கள் இருக்கிறார்கள் என்றார் கருணாநிதி.

*****

பிரச்சனைகள் இருந்த போது எதைத் தூண்டி மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தார்களோ, அதை மீண்டும் கையில் எடுக்கிறார் கருணாநிதி.. திராவிடக் கழகங்களை பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று தான் பார்க்க வேண்டும், பெரியார் பார்ப்பன எதிர்பை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கை, சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு தளங்களில் இயங்கினார். பெண்ணடிமைத்தனம் இன்றைய தேதியில் பெரிதாக இல்லை, அதை விட்டுவிட்டாலும், அவரைப் பின்பற்றி வந்தவர்கள் மற்றதையெல்லாம் மறந்து பார்பன எதிர்ப்பை மட்டுமே திராவிட அடையாளமாக அடிக்கடி மக்கள் முன் வைக்கின்றனர், இதற்கு வசதியாக இவர்கள் கையில் எடுத்துக் கொள்வது தமிழுணர்வு.

ஆறிப்போன ஒன்றை கையில் எடுத்து 'ஆரிய திராவிடப் போர்' என்கிறார், ஊடகங்களும், பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகளும் பார்பனர்களின் கையில் இருந்தது உண்மைதான் என்றாலும் கருணாநிதிக் குடும்பத்தினரிடம் தமிழக அளவில் இருக்கும் ஊடகங்களையும், நிறுவனங்களையும் ஒப்பிட்டால் அது சொற்பமே. தேர்தலுக்கு முன்பு புலம்பி இருந்தாலும் எதோ பொருள் இருக்கிறது என்று சொல்லலாம், தேர்தலுக்கு பிறகு ஆரிய திராவிடப் போர் என்பது எதைக் குறிக்கிறது ? ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் வண்ணம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, மக்கள் எழுச்சியை தடுக்கும் வண்ணம் அவசர உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக அறிவித்து, பின்னர் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என அப்போது தான் அறிந்த செய்தி போல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு அறிவித்தார். நார்வே போன்ற மேற்கத்திய நாடுகள் அடையும் பதற்றங்களில் ஒரு சிறு அளவேனும் இவர் இவரை 'தமிழின தலைவர்' என்று சொல்லும் தமிழர்களின் குரலாக ஒலித்திருக்க வேண்டும். ஆனால் இலங்கைப் பிரச்சனை தேர்தலில் பாதிக்காது (பாதிக்க விடமாட்டோம் என்பதே அதன் மறைமுகப் பொருள், அது போல் தான் திமுக சார்பு ஊடகங்கள் நடந்து கொண்டன) என்று வெளிப்படையாக அறிவித்திலிருந்தே தமிழ் தமிழினம் என்பதெல்லாம் வெறும் ஓட்டு அரசியல் என்று தெரிந்துவிட்டது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் எதைச் சொல்லி 'திராவிடம்' பேசமுடியும், 'திராவிடக் கட்சியாக' காட்டிக் கொள்ள முடியும், என்று உட்கார்ந்து யோசித்து 'மீண்டும் திராவிடர்-ஆரியர் போராட்டம் இப்போது நடக்கிறது' என்கிறார். 'சோ' இராமசாமியை மனதில் வைத்துச் சொன்னால், 'சோ' இராமசாமியை எத்தனை பேர் சீந்துகிறார்கள் என்றே தெரியவில்லை. வட இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு தெரிந்த ஒரே பத்திரிக்கையாளர் சோ என்பதால் அவரைப் பேட்டி எடுத்திருப்பார்கள். மற்றபடி அந்த பேட்டியை எத்தனை தமிழன் பார்த்தான் படித்தான் என்றே தெரியவில்லை. அரசியலுக்கு திராவிடம் பேசுவது எடுபடாது. திமுக உண்டியல் குலுக்கும் கட்சி என்றால் இதையெல்லாம் பேசமுடியும், ஆனால் திமுகவின் வாரிசு அரசியல் அசுர வளர்ச்சி தடைபடாமல் இருக்க திராவிட - ஆரியபோராட்டம் என்கிற கூப்பாடுகள் யானைக்கு சோளப் பொறி போன்றதே. பயனளிக்ககது

இன்றைய திராவிடக் கட்சிகள் எதுவுமே திராவிடக் கொள்கைகளில் முனைப்புக் காட்டுவதில்லை, அல்லது அவற்றிக்கான தேவையும் தீவிரமும் குறைவு என்பதே உண்மை. தாலியைப் பார்க்கும் போது புருஷன் நினைவு வருவது போல் கட்சிப் பேரை படிக்கும் போது 'திராவிட' சித்தாந்தம் ஊற்றெடுத்து உடனே அடங்கும் போலும்.

ஏமாளிகள் இருக்கும் வரை...ஏறி மிதிப்பவர்கள் மிதிப்பார்கள்.


More than a Blog Aggregator

by கோவி.கண்ணன்
உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளம் ஆகிக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, இன்னும் எஞ்சி இருப்போரை அழிக்கும், தூண்டும் சொற்களான 'தமிழீழம் மலரும்' என்பதை படிக்கும் போது வெறுப்பும், விரக்தியும் மிஞ்சுகிறது. காலத்தின் கட்டாயத்தில் எதுவும் நடக்கட்டும், இப்போது காலத்தின் கட்டாயம் காயத்தை குணப்படுத்துவது தான். உயிருக்கும், உடைமைக்கும், உறவுகளை தொலைத்தவர்களுக்கு சாய்ந்து கொள்ளத் தோள். போர்கள வீரவசனத்திற்கான காலம் முடிந்துவிட்டது. எஞ்சி இருப்போரையாவது காப்பதற்கு முடிந்தவரை உரிமைக் குரல் கொடுப்போம், நம்பிக்கையான உலக அமைப்புகள் மூலம் உதவிகள் செய்யும் திட்டம் வெளியிடப் பட்டால் கைகளாக இணையுவோம். சுனாமி பேரைச் சொல்லி சுருட்டியது போல், ஈழத்தமிழர்களின் கண்ணீரைக் காசாக்கிக் கொள்ளும் திடீர் நலக்குழுக்கள், தனிநபர்கள் பணம் வசூல் செய்யப் புரப்படுவார்கள். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உலக அளவில் செஞ்சிலுவை சங்கம் போன்ற நம்பிக்கை உடைய அமைப்புகள் மூலமாக மட்டுமே உதவி செய்ய முன்வருவது இந்த நேரத்தில் சரியான உதவியாக அமையும்.

தமிழீழம் மலரும், மலரவேண்டும் என்பதே தமிழுணர்வாளர்கள் அனைவரின் விருப்போம், ஆனால் அந்த விருப்பதை இப்போதும் திணிப்பதால் இழப்பு எண்ணிக்கையை கூடுதலாக்குவது தவிர்த்து வேறொன்றும் நடைபெறப் போவதில்லை. மனமும் வலியும் போன்று நெருப்பும் புகையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. இப்போதைக்கு நாம் அதை ஊதிவிடாமல் இருப்பதே நல்லது. தண்ணீர் வேட்கையில் தவிப்பவர்களிடம் 'நாளை உனது தாகம் தீரும்' என்று நம்பிக்கை ஊட்டிக் கூறுவது இன்றைய தாகம் தீர்ப்பதற்கான தீர்வல்ல.

கருத்துகள் இல்லை: