செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30


ஏன் வேண்டும்?
இன்பத் திராவிடம்!!




More than a Blog Aggregator

by முத்துகுமரன்

மூவர்ணக் கொடி
அறுக்கிறது
தமிழன் தொப்புள்கொடி
உதிர்த்துப் போன பூக்களில்
தேசத் தாயின் திலகத்தில்
வெடித்துச் சிதறிய எம் தாய்களின் சூல்கள்
கருவறைச் சதைகளோடு

கதறல்களுக்கு காதுகளையும்
பிணக்குருதி வாடை சுவாசிக்கவும்
ஆணையிடுகிறது சுதந்திரக் கொடி
அனுமதித்த அளவோடு அழ

மறத்துப் போகாத உணர்வெஞ்சியிருப்பின்
மரித்துப் போகலாம்
இல்லையேல்
மண்டியிடாது கொடி கிழித்துப் போகலாம்
நாளை நம் கொடி

அறுபடாதிருக்க



More than a Blog Aggregator

by முத்துகுமரன்

இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் பிரபாகரன் குறித்தான அஞ்சலி பதிவுகளை நிறுத்துங்கள். மரியாதை தெரிவிக்கும் சம்பிரதாய சடங்குகளை கொஞ்ச நேரம் தூக்கி எறியுங்கள். பாதுகாப்பு வலையப் பகுதியில் சிக்கியிருக்கும் இன்னும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை தடயம் இல்லாது கொன்றொழிக்க முனையும் இலங்கை அரசின் நச்சுப் பரப்புரைகளுக்கு இரையாகாதீர்கள். உண்மையை நீண்ட காலத்திற்கு மூடி வைக்க இயலாது. இருள் விலகும். அங்கு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்காக விடாது குரலெழுப்புவோம். போராடிக் கொண்டிருப்பவர்களை நம் எழுத்துகளால் சாகடிக்க வேண்டாம்.


More than a Blog Aggregator

by முத்துகுமரன்



More than a Blog Aggregator

by முத்துகுமரன்

கருத்துகள் இல்லை: