செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30


"
தலைவர்
புரட்சி
விடுதலை
போராளி
தமிழடையாளம்
வீரர்
"
முடியவில்லை
வேறு வார்த்தைகளால்...

சரி....ஒரே வார்த்தையில்...

தமிழகராதியில் அத்தனை பொருளுக்கும்
கிடைத்த ஒரு வார்த்தை
'பிரபாகரன்'
(தமிழின் தனிப்பெரும் வார்த்தை)
21.09.2006
(Orkut - இல் பிரபாகரனை ஒரு வார்த்தையில் வரையறுக்கச் சொன்னபோது எழுதியது)
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திவிட்டு வந்து பேசுங்க:ள் என்றெல்லாம் நீட்டி முழக்கினர் அதன் பொத்க்குழுவினர். ஆமால் அதையெல்லாம் மீறி இயக்குநர் பாரதிராஜா அவர்களை விமர்சித்தார் நடிகர் ராதாரவி.
அதையெல்லாம் விடக் கொடுமை... குழப்பத்தின் உச்சம்....
"இலங்கைத் தமிழர்களை, இலங்கை வாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டும்; அப்படி அழைத்தால் இந்தியா உதவும்" என்று ஏதோ ஒரு கூமுட்டை கூறியதை வழிமொழிந்து உணர்ச்சிகரமாக அந்தக் கருத்தை ஆதரித்து. ராதாரவி பேசிக் கொண்டிருந்தார் அப்போது போராட்டத்தை வாழ்த்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அரங்கத்தில் நுழைந்துகொண்டிருந்தார். ராதாரவி பேசியதும், அடுத்து திருமா அவர்களை வருங்கால நடிகர்சங்க உறுப்பினர் என்று வரவேற்று எங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வாழ்த்திப்பேச அழைத்தார்கள். வந்தார்... "உங்கள் கட்டுப்பாட்டை மதிக்கிறேன் அதே நேரத்தில், ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்றழைத்தால் தான் இந்திய அரசு உதவும் என்றொரு கருத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் இந்தியர்கள் அல்லர்; பூர்வகுடித் தமிழர்கள்" என்ற உண்மையை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் குழப்ப வாதிகளுக்கு பதில் சொல்லிவிட்டு ரூ.50000 நன்கொடையும் வழங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
நடிகர்கள் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்


பார்க்க இயலாதவர்கள் இந்த சுட்டியைப் பயன்படுத்திக் கொள்க. http://in.youtube.com/watch?v=tT7Q-UpF0JM


ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும்,
சிறுபான்மையினர் படுகொலையைக் கண்டித்தும்
திராவிடர் கழகம் சார்பில்
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
மாபெரும் ரயில் மறியல் போராட்டம்.
நாள்: 23-09-08 10:00 pm
தோழர்கள் பெரியார் திடலில் கூடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாழ்த்துரை:
தொல்.திருமாவளவன்,
பாவலர் அறிவுமதி,
அன்புத் தென்னரசன்,
எஸ்றா.சற்குணம்,
பேரா.செல்வநாயகம்,
சையத் சத்தார்
மற்றும் தமிழின உணர்வாளர்கள்.
தமிழனப் பெருமக்களே! ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், மதவெறிச் சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தைக் க்ண்டித்தும் ஒன்றிணைவோம்!

களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!

"பெரும் புலித் தலைவன் அருகிருந்து எங்கள் விடுதலைப்
பெருங் கனவை வென்றெடுக்க, பாரில் தமிழீழப் புலிக் கொடி
சிறகடிக்க, எதிரி கோட்டையை தூள்தூளாய் சிதறடிப்போம்!
அதில் வெடிகுண்டாய் மாறி எம் உயிர் கொடுப்போம்! - பின்னர்
மாவீரர் தோட்டத்தில் ஓய்வெடுப்போம்" என்று நாட்டுக்காகக்

களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!

போருக்கனுப்பும் தாய் போல தலைவன் முகத்தில் கடமையுணர்வு!
"பாரெங்கள் தலைவனுடன் நாங்கள்" -இது கரும்புலிக் கூட்டத்தின் பெருமையுணர்வு!
தலைவருக்கருகில் அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண்ணின் பூரிப்பு!
தமிழ் விடுதலையைக் கண்டுவிட்ட பெருஞ்சிரிப்பு! -வீரக்

களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!

-----------------------------------------------------------------------------------
தலைவர் பிரபாகரனுடன் நிழற்படத்தில்...
வவுனியா தாக்குதலில் உயிர் விதைத்த கரும்புலிகள்:
கரும்புலி லெப்டினன்ட் கர்னல் மதியழகன்
கரும்புலி மேஜர் ஆனந்த்
கரும்புலி கேப்டன் கனிமத்
கரும்புலி கேப்டன் முத்து நகன்
கரும்புலி கேப்டன் அறிவுத் தமிழ்
கரும்புலி லெப்டினன்ட் கர்னல் வினோதன்
கரும்புலி மேஜர் நிலாகரன்
கரும்புலி கேப்டன் எழிலகன்
கரும்புலி கேப்டன் அகிலன்
கரும்புலி கேப்டன் நிமலன்





இட ஒதுக்கீட்டையும், சமூக நீதிக்காவலர் வி.பி,சிங் அவர்களையும் கொச்சைப்படுத்திய பார்ப்பன ஊடகமான "இந்தியா டுடே"யைக் கண்டித்து மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இந்தியாடுடே அலுவலகத்தின் முன்பு
திராவிடர் கழக இளைஞரணி சார்பில்
"இந்தியா டுடே" க்கு செருப்படி தந்து எரியூட்டப்பட்டது.
சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டோரைக் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் படங்களுக்கு: http://picasaweb.google.com/princenrsama/DemonstrationAgainstINDIATODAY#

கருத்துகள் இல்லை: