செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

நீதான் தலைவனென்றேநால்வர் சொன்னர் என்னிடம்.விழிகள் விரிந்தனபுருவங்கள் உயர்ந்ததுதலை கொஞ்சம் கனத்ததுஇருந்தும்கால்கள் வானில் பறந்தன.என்னைச் சுற்றிஒளிவட்டம் தெரிகிறதாவெனஎனக்கொரு சந்தேகமும் வந்தது.யாரைக் கேட்பதென புரியவில்லை.கூட்டமும் கூடியது என்னைச் சுற்றிநால்வர் பதின்மராயினர் நூற்றுவராயினர்.இரத்தத்தின் இரத்தங்களேஉடன்பிறப்புக்களேயெனஉரத்து அழைக்கத் தயாரானேன்.எங்கிருந்தோ வந்தென்முகத்தை நனைத்தது
காதலின் நீண்ட விழியசைப்பில்நேற்றின் காத்திருப்புக்கள்காற்றின் ஓட்டம்போல் ஓடிச்சென்றன.எதிர்பார்ப்பின் எண்ண அதிர்வுகள்இதயம் நிரப்பியென்சிந்தனையின் வாசம் மொய்த்தன.காட்சியின் பிழையில்நிலவொன்று உலகின் ஓளியாய்நிகழ்வுகளில் வந்து நின்றது.புன்னகையின் இதழ் விரிப்புக்கள்பாதையின் நெருஞ்சிகளைநெஞ்சுக்குள் பூக்களாய் மாற்றின.பதின்மத்தின் பசுமை நினைவுபோல்ஏக்கத்தின் பசிகளுக்கும் என்இயக்கத்துக்கும் காதல்
காதலின் நீண்ட விழியசைப்பில்நேற்றின் காத்திருப்புக்கள்காற்றின் ஓட்டம்போல் ஓடிச்சென்றன.எதிர்பார்ப்பின் எண்ண அதிர்வுகள்இதயம் நிரப்பியென்சிந்தனையின் வாசம் மொய்த்தன.காட்சியின் பிழையில்நிலவொன்று உலகின் ஓளியாய்நிகழ்வுகளில் வந்து நின்றது.புன்னகையின் இதழ் விரிப்புக்கள்பாதையின் நெருஞ்சிகளைநெஞ்சுக்குள் பூக்களாய் மாற்றின.பதின்மத்தின் பசுமை நினைவுபோல்ஏக்கத்தின் பசிகளுக்கும் என்இயக்கத்துக்கும் காதல்
ஆண்டு நிற்கும் விதியென்பது பொய்அழியாத விளக்கென்பதுவும் பொய்,மாற்றமென்பதே ஒரே மெய்.மாற்றத்தின் பாதையில்ஏமாற்றத்தின் சுவடுதனைமெல்ல நுழைக்கும்பொய்யான வாக்குறுதிகள்பொய்யாய்ப் போகும் நாளொன்றில்,தேவைகளுக்கானவிளக்கங்களும் மாறி இருக்கும்.மாற்றம் பொய்யிற்கானமாற்றமாக இருக்காதுமனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.அன்று பூக்களின் பாதையில்புன்னகைக்க மறந்த விழிகள்பொய்யாய்ப் போய்விடும்.அலையடித்த கரையில்
ஆண்டு நிற்கும் விதியென்பது பொய்அழியாத விளக்கென்பதுவும் பொய்,மாற்றமென்பதே ஒரே மெய்.மாற்றத்தின் பாதையில்ஏமாற்றத்தின் சுவடுதனைமெல்ல நுழைக்கும்பொய்யான வாக்குறுதிகள்பொய்யாய்ப் போகும் நாளொன்றில்,தேவைகளுக்கானவிளக்கங்களும் மாறி இருக்கும்.மாற்றம் பொய்யிற்கானமாற்றமாக இருக்காதுமனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.அன்று பூக்களின் பாதையில்புன்னகைக்க மறந்த விழிகள்பொய்யாய்ப் போய்விடும்.அலையடித்த கரையில்
1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள "ஓடை" என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில் வீடு கட்டியபோது அவர் எஞ்சிய மின்சார கம்பிகளை நுழைக்க பயன்பட்ட குழாய்களை (PVC) மேற்கண்ட முறையில் உபயோகித்து அருகிலிருந்த சாலை மரங்களுக்கும், வீட்டிலுள்ள தென்னைமரங்களுக்கும் மிக சிக்கனமாக நீரைபயன்படுத்தி வளர்த்தார். இன்று அவைகள் ஓங்கி வளர்ந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

இந்த முறையுடன் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்தி எளிதாக மரம் வளர்க்கலாம். அதனை புகைபடங்களாக பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

குழியெடுத்து அதனுள் மக்கிய இலைதழைகளை கொஞ்சம் போடவேண்டும் இவை நீரை எளிதில் தக்கவைக்கவும், உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவு ஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ள தென்னைநார் கழிவுகளையும் உபயோகிக்கலாம். பழைய அல்லது உபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டி அதனை குழியினுள் வைத்து பின் செடிகளை நடவேண்டும். கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராக செல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும். திரவ உரங்களையும் தரலாம். சொட்டு நீர் பாசன வசதியிருந்தால் அதனை குழாயினுள் வைத்தால் போதும். நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது. நடும் போது கண்டிப்பாக வேர் பூஞ்சானம் (வேம் )(Vasicular arbuscular mycorrhizas [VAM] ) உபயோகியுங்கள். அது நல்ல வேர் அமைப்பையும், சத்துக்களை கரைத்து வேர்கள் எளிதில் எடுக்கும் வண்ணம் மாற்றியும் தரும். மண்ணிலுள்ள நோய் உண்டாக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் புஞ்சானங்களிலிருந்து பாதுகாப்பைத் தரும்.

சரிவுப்பகுதிகளில் பிறை வடிவில் குழியெடுத்து வெட்டிவேர் நாற்றுக்களை நட்டு வையுங்கள். அவை மழைகாலங்களில் மண் அரிப்பை தடுத்து நீரை தக்க வைத்துக்கொள்ளும். வெட்டிவேரின் உதவியால் நீர் எளிதில் பூமியினுள் செல்லும். நன்கு வளர்ந்தால் மிக சிறிய தடுப்பணை போன்று நீரின் வேகத்தை தடுத்து நிறுத்தும். நாற்றுக்களை சுற்றி காய்ந்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு இடுங்கள். அவை களைகளை குறைப்பதுடன் மண் ஈரத்தை காக்கும். நிறைய மரங்களை நட்டு சுற்றுச் சுழலைக் காப்போம்.

கருத்துகள் இல்லை: