செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

தேர்தல் முடிவுகளைத் தொலைகாட்சியில் காணும் பரபரப்பில் எத்தனை பேர் இதனை கவனித்திருப்பீர்கள் என தெரியவில்லை. பட்டு வேட்டு பட்டு சட்டையில் (வேஷம் போடும்) என்.ராம் மற்றும் பிரணாய் ராய் படம் போட்ட ஹிண்டுவின் கடைசி பக்க விளம்பரத்தை பலரும் தவற விட்டிருக்கக்கூடும்.

ஜெனிஃபர் அருளின் தலைமையில் சென்னையை மையமாகக் கொண்டு இந்த கூட்டுத் தயாரிப்பு தொடங்குகிறது. வெற்றிக்குப் பிறகு தயாநிதி மாறனை பிரணாய் ராயும் பர்கா தத்தும் பேட்டி எடுத்த போது மாறன் என்.ராமை நன்றாக வெளுத்து வாங்கினார் (திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என சொன்னதற்கு.










ஜெயாடிவியில் காலையிலிருந்தே சுரத்தில்லாமல் தொகுத்து வழங்கிய மாலன் மற்றும் ரபி பெர்நார்ட். திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது போலும். அட்லீஸ்ட் 12 மணி வரையாவது ஒப்பேத்தினார்களே.









மேலும் சில டிவிக்களின் தொகுப்பாளர் படங்கள். எந்தக் கட்சி (இந்திய அளவில்) ஆட்சிக்கு வந்தாலும் ஒரு வித உற்சாகத்தோடு பணியாற்றும் டெல்லி (ஆங்கில) சேனல் தொகுப்பாளர்களுக்கும் தமிழக திமுக / அதிமுக டிவிக்களின் தொகுப்பாளர்களுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு !









படங்கள் கைபேசியில் எடுக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள ஆங்கில சேனல்கள் பல்வேறு முடிவுகளை இன்ஃப்ளுயன்ஸ் செய்யும் அளவு தங்கள் பலத்தையும் அரசியல் பெரும்புள்ளிகளுடன் நட்பையும் கொண்டுள்ளன. தமிழகத்தில் தான் ஆட்டோ கலாச்சாரமெல்லாம்.

தொங்கு பாராளுமன்றம் வந்தால் 10 நாட்களுக்கு இல்லை அதற்கும் மேல் தங்களின் பிரெகிங் நியூஸ் விஷயங்களை வைத்து விளம்பரங்களை அள்ளலாம் என்றிருந்த டெல்லி சேனல்களுக்கு இந்த தீர்ப்பால் கொஞ்சம் சோர்வுதான்.
சென்னையில் ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளில் பணிகள் முடிந்து ரயில் ஓடத் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் மக்கள் நெருக்கம், வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தரைக்கு அடியில் செல்லும் வகையில், டெல்லியில் உள்ளதுபோல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இத்திட்டத்தின்படி, இரண்டு பாதைகளில் மெட்ரோ ரயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் திட்டப் பணிகள் தொடக்க விழா, கோயம்பேட்டில் நேற்று நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கொடி அசைத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, மேயர் மா.சுப்பிரமணியன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சோமநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14,600 கோடியில் செயல்படுத்தப்படும். இதில் 59 சதவீதத்தை ஜப்பான் வழங்கும். இதற்கான ஒப்பந்தம் 21-11-2008ல் டோக்கியோவில் கையெழுத்தானது. மத்திய அரசு 20 சதவீதம் வழங்கும்.

இந்த திட்டப்படி 2 வழித்தடங்கள் அமையும்.

முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை 23.1 கி.மீ. நீளம் அமையும். வண்ணாரப்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை, 20 அடி ஆழ சுரங்கப்பாதையிலும் மீதி தூரம் மேம்பாலத்திலும் ரயில் செல்லும்.

2ம் வழித்தடம் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு வழியாக புனித தோமையர் மலையை அடையும். இதன் நீளம் 22 கி.மீ. அண்ணா நகர் வரை சுரங்கப்பாதையிலும் மீதி தூரம் மேம்பாலத்திலும் ரயில் செல்லும். திட்ட ஆலோசகர்களாக இந்தியா, பிரான்ஸ், ஹாங்காங், ஜப்பான் நிபுணர்கள் இருப்பார்கள்.

கோயம்பேட்டிலிருந்து அசோக் நகர் வரை மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.199.20 கோடியில் நடைபெறும். இந்த பணி இன்று தொடங்கப்பட்டு உள்ளது. நூறு அடி சாலையின் மத்தியில் இதற்கான தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படும். 5 ஆண்டுகளில் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும். குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடியும்.

திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயிலை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன்

மெட்ரோ ரயில் பாதை





Chenai Metro Website
தமிழக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதாகவும், இதனை யடுத்து காங்கிரஸ் கட்சியில் முக்கியமான சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக இறங்கி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏதுவாக திமுகவில் சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப் படும் என்றும் இலாகாக்கள் மாற்றப் படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுப்பப் பட்டு, அது தற்போது வலுவடைந்துள்ளது. இது குறித்து விவாதிக்க சென்னையில் இன்று நடக்கவிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள் கூடி விவாதிப்பதற்கு பதிலாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அதுபற்றி விவாதிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், தமிழ்நாடு காங்கிரசுக்கு பொறுப்பு வகிக்கும் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

தமிழக அரசில் பங்கு கேட்க காங்கிரஸ் மேலிடமும் தற்போது விரும்புவதாகவும், அதுபற்றி ஆலோசனை நடத்தி திமுக தலைமைக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசில் 7 அமைச்சர்களை பெற்றுள்ள திமுகவும், காங்கிரசுக்கு தமிழக அமைச்சரவையில் பங்கு கொடுக்க முடிவு செய்து தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதாகத் தெரிகிறது.

தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடைபெறும் திமுக அரசில் காங்கிரசும் பங்கு பெற்றால், அரசு மட்டுமல்லாமல் கூட்டணியும் வலுவடையும் என்றும், இதனைக் கொண்டு அடுத்த சட்டமன்ற தேர்தலை சுலபமாக எதிர்கொள்ளலாம் என்றும் திமுக கருதுவதாக தெரிகிறது.

திமுக அரசுக்கு மிகவும் இணக்கமாக செயல்படும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முக்கிய சில எம்எல்ஏக் களுக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக மேலிடம் முன்வந்துள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரசை அரசில் சேர்க்கும் போது திமுகவைச் சேர்ந்த சில அமைச்சர் களின் பதவிகளும் பறிக்கப்படுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. ஏற்கனவே சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள முதலமைச்சர், அந்த அமைச்சர்களின் பதவிகளை பறிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர்களின் இலாகாப் பொறுப்புக்களில் அதிரடி மாற்றங்களும் செய்யப்படவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. கோ.சி. மணி, பொங்கலூர் பழனிச்சாமி, பரிதி இளம்வழுதி, கா. ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படு வார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைவு காரணமாக கோ.சி. மணி அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. பொங்கலூர் பழனிச் சாமியின் செயல்பாடுகள் அவரது சொந்த மாவட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங் களில் தோல்வி அடைய நேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அவரதுபதவிக்கு ஆபத்து ஏற்படும் என தெரிகிறது.

அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் செய்தி விளம்பரத் துறை சரியாக செயல்படவில்லை என்ற புகாரை அடுத்து, அதற்கு பொறுப்பான பரிதி இளம்வழுதி மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கா. ராமச்சந்திரனின் செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்சியினர் மத்தி யிலும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல மேலும் சில அமைச்சர் களின் தலைகளும் உருளலாம் எனத் தெரிகிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், இந்த மாற்றங்கள் கூட்டத் தொடர் முடிந்ததும் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்
சாலை மறியல்னா ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து தான் செய்கிறார்கள். ஆனால் இப்போ இத சிலர் ஃபேஷனா பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நேத்து தி.நகர் போலாம்னு போனப்போ மேற்கு மாம்பலம் கிட்ட வரிசையா பேருந்து, வண்டி எல்லாம் நிப்பாட்டிட்டாங்க.

என்னமோ கும்பலா இருக்காங்களே என்னனு தெரியலையேனு யோசிச்சிட்டு இருக்கும் போது ஒருத்தர் "ஏதோ சாலை மறியலாம்" அப்படினார். எப்படிங்க சொல்றீங்க அப்படினேன். ஆக்ஸிடெண்டா இருந்தா இந்நேரம் ஆம்புலன்ஸ் வந்திருக்கும்ல.. என்று என்னை ஒரு லுக் விட்டார். சரி நமக்கு ஏன் வம்புனு, நானும் கருமமே கண்ணா வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

கூட்டத்த பாத்தது ஆஹா பெரிய மறியல் போல நாம இன்னிக்கு தி.நகர் போனமாதிரிதான்னு நினைச்சேன். அப்போதான் ஒரு போலிஸ்காரார் வேகமா வந்தார். கூட்டத்துக்குள்ள போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வெளில வந்து போன் போட்டு பேசினார் (இங்கன நிறைய பேர் இருக்காங்க வாங்கடா நல்லா கும்மிட்டு போலாம்னு சொல்லிருப்பார் போல).

கொஞ்ச நேரத்துல 4/5 போலிஸ் கைல லத்தியோட வந்தாங்க. அவங்கள திரும்பி பாத்துட்டு திரும்பினா இங்க மறியல் பண்றோம்னு சொன்னதுல ஒரு 10 பேர் தான் இருக்கானுவ. மீதி எவனையும் காணோம். என்னடானு கேட்டா இவங்க மட்டும் தான் சாலை மறியல் பண்றவங்களாம். மீதி எல்லாம் வேடிக்கை பாக்க வந்தாங்களாம்.

வந்த போலிஸ்காரங்க அங்க போய் மக்கள்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தி (தமிழ் சினிமால அப்படிதான செய்யுராங்க) அவங்கள கலைஞ்சு போக சொல்வாங்கனு நினைச்சேன். ஆனா போனவங்க, ஆளுக்கு 2 பேரை தள்ளி பிடிச்சுகிட்டாங்க. இன்னொருத்தர் போக்குவரத்தை சீர்படுத்தி விட்டுட்டார்.

இவ்ளோதான் அவங்க சாலை மறியல்.

அவங்க கோரிக்கை என்ன? அதை நிறைவேற்றலைனா கூட பரவால. குறைந்த பட்சம் யாராவது கேட்டாங்களா என்னானே தெரியல???. :(

கனவுகளை சுமந்து கொண்டு ஒரு கவிதை நூல்...

ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் - நிலாரசிகனின் மூன்றாவது படைப்பு.

சென்னையில் ஜனவரி மாதம் நடந்த புத்தகத்திருவிழாவின் போது தான் தனது இரண்டாவது படைப்பான "மயிலிறகாய் ஒரு காதல்" புத்தகத்தை வெளியிட்டார்.

குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு கவிதை தொகுப்பு.

விஸ்டம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்

சென்னையில் இப்புத்தகம் கிடைக்குமிடங்கள்:

New Book Lands
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006

2.Hikkin Bothams

3.AnyIndian Book shop,T.ண்agar

4.New Century book shop

5.Wisdom Educational Service
10/8, Dr.Nammalvar Street,
Triplicane,
Chennai-600005
Phone:044-28447476
Mobile:9382181319,9841162927
Email:wisdomedu2003@yahoo.co.in

தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிக்கிங் பாதம்ஸ் மற்றும் நியூ சென்சுரி புக் ஹவுஸிலும் கிடைக்கும்.

மற்ற படைப்புகள்:

நிலாக்காலங்கள்
மயிலிறகாய் ஒரு காதல்

மார்ச் மாதம் முடிந்த +2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. எப்போதும் போல் இல்லாமல் முதல் மதிப்பெண் (1182) -ஐ ஒரு மாணவனும் மாணவியும் பெற்றுள்ளனர். இரண்டாம் மதிப்பெண் (1181)-ஐயும் மாணவனும் மாணவியும் பெற்றுள்ளனர். மூன்றாவது மதிப்பெண் 1180-ஐ ஒரு மாணவி பெற்றுள்ளார்.

முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் மாவட்ட மாணவர்கள் பெற்றுள்ளது கூடுதல் மகிழ்சி.

முதல் மதிப்பெண் பெற்றவர்கள் (1182)

R.தாரணி,
வித்யாவிகாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல்.

M.ராஜேஸ்குமார்
புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

இரண்டாவது மதிப்பெண் பெற்றவர்கள் (1181)

குமார் விக்ரம்
வித்யாவிகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல்.

ரம்யா
K.K.N பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.

மூன்றாவது மதிப்பெண் பெற்றவர்கள் (1180)

K.தீபா
S.R.V பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராசிபுரம், நாமக்கல்.


தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

கருத்துகள் இல்லை: