செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30




மக்கள் சேவை
பிரபல தொழில் அதிபரான மந்திரி காலி ஜனார்த்தன ரெட்டி, நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
இரவில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் நேற்று காலை, ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.45 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி எ.வி.தர்மாரெட்டி, அவரிடம் இருந்து வைர கிரீடத்தை பெற்றுக்கொண்டார்.

21/2 அடி உயரம் உள்ள இந்த கிரீடம், ஏறத்தாழ 34 கிலோ எடை கொண்டதாகும். 2 ஆண்டு கால திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏராளமான பொருட்களை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.

இந்த நூற்றாண்டில் செலுத்தப்பட்ட காணிக்கைகளில் இதுவரை ரூ.10 கோடி மதிப்புள்ள காணிக்கைதான் அதிக மதிப்புமிக்கதாக இருந்தது. தற்போது கர்நாடக மந்திரி வழங்கிய ரூ.45 கோடிவைர கிரீடம்தான் இதுவரை வந்த காணிக்கைகளில் மிகவும் விலை உயர்ந்தது என்று கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தங்கத்தில் வைரக்கற்கள் பதித்த இந்த கிரீடம், கைதேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்களால் கடந்த 9 மாதங்களாக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர அபிஷேகம் முடிந்ததும் ஏழுமலையானுக்கு இந்த வைர கிரீடம் அணிவிக்கப்படும்.



மகேசன் சேவை
45 கோடியில் என்ன செய்யலாம் ?

90,000 ஏழை குழந்தைகள் ஒரு வருட படிப்புக்கு ஆகும் செலவு.
44,000 ஏழை குழந்தைகளுக்கு உணவு, உடை, மருத்துவம் - ஒரு வருடத்துக்கு ஆகும் செலவு
1,73,077 அனாதை குழந்தைகளை ( மூன்று வயது வரை ) பராமரிக்கலாம்
90,000 மூளை வளர்ச்சி குன்றிய சிறுவர்களை ஒரு வருடம் பராமரிக்கலாம்.
- தகவல் உதவி உதவும் கரங்கள்.

மக்கள் சேவையே மகேசன் சேவை

Tamilish - தமிழ்




நண்பர்களே,

சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழைத் தொடங்கியிருக்கிறோம். இந்த இதழை http://www.solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், புத்தகவிமர்சனம், அறிவியல் சர்ச்சைகள், சமூகம், இசை, வாழ்வியல் ரசனை, மொழிபெயர்ப்பு, இதழ்பார்வை எனப் பல்வேறு திறப்புகளில் படைப்புகள் கொண்டிருக்கும் முதல் இதழே இந்த இதழின் பன்முகத்தன்மையைக் காட்டுவதாய் இருக்கும் என நம்புகிறோம்.

இந்த இதழுக்கு உங்களுடைய ஆதரவையும், படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம். வன்முறையைத் தூண்டாத, காழ்ப்புணர்வில்லாத எந்த படைப்பையும், அது எந்தத்துறை, கொள்கையைச் சார்ந்ததாய் இருப்பினும் வரவேற்கிறோம். உங்கள் மேலான கருத்துகளையும், படைப்புகளையும், விமர்சனங்களையும் editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


முதல் இதழின் உள்ளடக்கம்:

திலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்
அக்ரகாரத்தில் பூனை - திலீப்குமார் - சிறுகதை
அரசியலாக்கப்படும் அறிவியல் - க்ளோபல் வார்மிங் புனைவா? உண்மையா? - அருணகிரி
திசை - சுகா
இந்திய இசையின் மார்க்கதரிசிகள் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ், கத்ரி கோபால்நாத், தெபாஷிஷ் பட்டாச்சார்யா ஆகியோரை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை - ஸ்ரீ
ஒலிக்காத குரல்கள் - கோபிகிருஷ்ணனின் 'உள்ளேயிருந்து சில குரல்கள்' புத்தகத்தை முன்வைத்து - ஹரன்பிரசன்னா
அறிவியல் கல்வியின் சமுதாயத்தேவை - அரவிந்தன் நீலகண்டன்
வன்முறையின் வித்து - ஓர் விவாதம் - ஹரிவெங்கட்
மகரந்தம் - இதழ் பார்வை

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழுவினர்.
http://www.solvanam.com

இப்ப சைட்டில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை( இப்படியே இருந்தா நல்லா இருக்கும்), வந்த பிறகு படித்துவிட்டு மஞ்சள் கமெண்ட் எழுதலாம் என்று இருக்கேன் :-)

Tamilish - தமிழ்


More than a Blog Aggregator

by த.அகிலன்

இரண்டு
சிவப்பு வெளிச்சங்களிற்கு
மேலாலெழும் நிலவு
அன்றைக்கு மிருந்தது.

ஒரு
விதவைத்தாயின்
இளைய மகனை
அவர்கள் களவாடிப்போன
இரவில்…

பைத்தியக்காரியைப்போல்
தலைவிரி கோலமாய்
தெருவில் ஓடிய
அவளைச் சகியாமல்
மேகங்களினடியில்
முகம் புதைத்துக்கொண்டது.

பின்பொரு மழைநாளில்
அலைகளின் மேல்
ஒருவன் ஏறித்தப்புகையில்…
இராமுழுதும் துணையிருந்தது…

யாரும்
விசாரணைகளை நிகழ்தும் வரை
எல்லாவற்றினதும்
மௌனச் சாட்சியாய்
அலைந்து கொண்டேயிருக்கும்
அது.
வணக்கம், ஒரு வீட்டில இருந்து வேறு வீடு மாறிப் போகும் போது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நண்பர்களின் சொல்லிக் கொண்டு போகவேண்டும் என்கிற தேவையிருக்கிறது. ஏற்கனவே இருந்து தொல்லை போதாதா என்று நீங்கள் முணு முணுப்பது எனக்கு கேட்கிறது இருந்தாலும் பரவாயில்லை.

என் வலைப்பூ,பதிவுகளை http://www.agiilan.com/ என்ற சொந்த தளத்திற்கு மாற்றி உள்ளேன். (புதிய தளத்திற்கு ஏற்பாடு செய்த நண்பர் சயந்தனுக்கு நன்றிகள்.)இன்னும் சில வினாடிகளில் புதுத்தளம் இங்கு விரியும் அல்லது சுட்டியின் மீது சொடுக்கினால் உடனடியாக புதிய தளத்திற்கு செல்லலாம். நன்றி.



Hi, I have moved my blog and posts to http://www.agiilan.com/ You will be automatically redirected to my new page in few seconds, or else u can immediately go to my new page by clicking above link.Thanks.


துப்பாக்கியின் கண்கள்
வாசிக்கத் தொடங்கிய பிறகு
சொற்கள்
ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன

பீரங்கியின் வாய்களால்
அச்சமூட்டப்பட்ட
சொற்கள் கொண்டு
செய்யப்படுகிறது
ஒரு நாள்….

முடமான சொற்கள் கொண்டு
கவிதைகள்
செய்வது எங்ஙனம்?

கால்களற்ற சொற்களைக்
காணச் சகியாதொருவன்
துப்பாக்கிகளறியாதொருகணத்தில்
மொழியைப் புணர்ந்து
புதிதாய்
கால்முளைத்த சொற்களைப்
பிரசவிக்கலானான்…

பின்
ஓர் இரவில்…

துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில்
நிழலெனப் படிந்து
அவன் குரலுருவிப்
பின்
ஒரு பறவையைப்போல
விரைந்து மறைந்ததாய்..
அவன் குழந்தைகள் சொல்லின.


More than a Blog Aggregator

by த.அகிலன்


அவள் அழைத்துப்போன
கனவின் பசிய நிலத்தில்
வானவில்லின்
வர்ணங்களைக்கொண்ட
பறவையின் பாடல்
வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.

பாடலின்
திசைகளில்
நான் கிறங்கிய கணத்தில்
சடுதியாய் நீங்கிப்போனாள்
கூடவே போயிற்று
அவளது நிலமும்
வானவில் பறவையும்

நான் அலைந்து
கொண்டிருக்கிறேன்.
அந்த கனவுக்குள்
மறுபடியும் நுழையும்
திசைகளைத் தேடி.

கருத்துகள் இல்லை: