திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா?

தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிக்கு எதிராக வாக்களித்த 41 பேரின் குரல் முடக்கபட்டதாய் அர்த்தம் ஆகாதா?

இப்படி குதர்க்கம் பேசுகிறாயே, நீ இதற்கு மாற்று யோசனை சொல் பார்க்கலாம் என நீங்கள் சொல்லலாம். சரி பணிந்து போகிறேன். 24 வோட்டுகள் வாங்கிய அந்த நபர் பிரதிநிதியாக இருக்க தகுதியானவர் என்றே ஒப்புக்கொள்வோம்.
  • 24இல் 2 கள்ள வோட்டு
  • 60 சதவீதத்திற்கு மேல் படிப்பறிவு இல்லா சமூகம் நமது. அதிலே கல்லூரிக்கு போய் படிப்பு முடித்த பல கனவான்கள், சீமாட்டிகள் தினசரிகளையோ புத்தகங்களையோ புரட்டுவதே கிடையாது என்கிற அளவு ஞான சூன்யங்கள். இவர்கள் போடும் வோட்டு எந்தளவிற்கு விழிப்புணர்வுடன் செய்யபட்டவை என்று ஒரு கேள்வி.
  • பல வோட்டுகளை விற்குமளவு பலம் படைத்த ஆள் ஒருவர் ஒரு வார்டுக்கு இருக்கும் அளவிற்கு குழு மனப்பான்மை மலிந்து கிடக்கிறது.
  • சாதி ஆதிக்கமிகுந்த சமூகம் இது.

காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். மீண்டும் கேட்கிறேன். நம்ம தேர்தல் முறை சரியானது தானா?

ம்கூம், வோட்டுகளை விற்று பணமாக்கி கொள்ளுங்கள். பிரதிநிதிகளிடம் நீங்கள் எதிர்பார்க்க கூடிய ஒரே விஷயம் இனி அது ஒன்று தான்.


ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா?

தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிக்கு எதிராக வாக்களித்த 41 பேரின் குரல் முடக்கபட்டதாய் அர்த்தம் ஆகாதா?

இப்படி குதர்க்கம் பேசுகிறாயே, நீ இதற்கு மாற்று யோசனை சொல் பார்க்கலாம் என நீங்கள் சொல்லலாம். சரி பணிந்து போகிறேன். 24 வோட்டுகள் வாங்கிய அந்த நபர் பிரதிநிதியாக இருக்க தகுதியானவர் என்றே ஒப்புக்கொள்வோம்.
  • 24இல் 2 கள்ள வோட்டு
  • 60 சதவீதத்திற்கு மேல் படிப்பறிவு இல்லா சமூகம் நமது. அதிலே கல்லூரிக்கு போய் படிப்பு முடித்த பல கனவான்கள், சீமாட்டிகள் தினசரிகளையோ புத்தகங்களையோ புரட்டுவதே கிடையாது என்கிற அளவு ஞான சூன்யங்கள். இவர்கள் போடும் வோட்டு எந்தளவிற்கு விழிப்புணர்வுடன் செய்யபட்டவை என்று ஒரு கேள்வி.
  • பல வோட்டுகளை விற்குமளவு பலம் படைத்த ஆள் ஒருவர் ஒரு வார்டுக்கு இருக்கும் அளவிற்கு குழு மனப்பான்மை மலிந்து கிடக்கிறது.
  • சாதி ஆதிக்கமிகுந்த சமூகம் இது.

காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். மீண்டும் கேட்கிறேன். நம்ம தேர்தல் முறை சரியானது தானா?

ம்கூம், வோட்டுகளை விற்று பணமாக்கி கொள்ளுங்கள். பிரதிநிதிகளிடம் நீங்கள் எதிர்பார்க்க கூடிய ஒரே விஷயம் இனி அது ஒன்று தான்.


குழந்தையை சுமப்பது போல
இரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
பார்க்கும் போது தான்
நான் எந்த வீதிக்கு வந்து இருக்கிறேன்
என்பது உரைக்கிறது.

அங்கங்களை நகைகளாக மாற்றி கொள்ளும்
ஆர்வத்தில் மாதுகளுடன் சில இளைஞர்களும்
அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என் கரங்களின் மேலிருக்கும்
கறுப்பு கறையை மறைக்க வேண்டிய
கட்டாயத்தினை உணரும் போது
முலைகளின் வாசம் எங்கெங்கும் எழுகிறது.

மூக்கிலிருந்து பொங்கும் உதிரத்தினை
மறைக்க ஓட வேண்டும்
ஏதேனும் பழைய துணியினை தேடி.

குப்பை தொட்டிகளை காண முடியவில்லை.

பளபளக்கும் துணிகள்
கடைகளின் வாசலில் தொங்கியபடி
அனைவரையும் அணைத்து வரவேற்கிறது.

என் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட
தூரத்தில் நடனமாடும் துணிகளை நோக்கி ஓடுகிறேன்.

யாரோ மறித்தார்கள்.
எங்கோ அடி விழுந்தது.
கண்கள் இருள்வதற்கு முன்
உதிரத்தால் ஒப்பனையிடப்பட்ட
வேறொருத்தியின் முகத்தை காண்கிறேன்.
அல்ல அது நான் தானா?

விடைக்கு முன்னால்
உடல் அடங்கி கொண்டிருக்கிறது.


குழந்தையை சுமப்பது போல
இரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
பார்க்கும் போது தான்
நான் எந்த வீதிக்கு வந்து இருக்கிறேன்
என்பது உரைக்கிறது.

அங்கங்களை நகைகளாக மாற்றி கொள்ளும்
ஆர்வத்தில் மாதுகளுடன் சில இளைஞர்களும்
அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என் கரங்களின் மேலிருக்கும்
கறுப்பு கறையை மறைக்க வேண்டிய
கட்டாயத்தினை உணரும் போது
முலைகளின் வாசம் எங்கெங்கும் எழுகிறது.

மூக்கிலிருந்து பொங்கும் உதிரத்தினை
மறைக்க ஓட வேண்டும்
ஏதேனும் பழைய துணியினை தேடி.

குப்பை தொட்டிகளை காண முடியவில்லை.

பளபளக்கும் துணிகள்
கடைகளின் வாசலில் தொங்கியபடி
அனைவரையும் அணைத்து வரவேற்கிறது.

என் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட
தூரத்தில் நடனமாடும் துணிகளை நோக்கி ஓடுகிறேன்.

யாரோ மறித்தார்கள்.
எங்கோ அடி விழுந்தது.
கண்கள் இருள்வதற்கு முன்
உதிரத்தால் ஒப்பனையிடப்பட்ட
வேறொருத்தியின் முகத்தை காண்கிறேன்.
அல்ல அது நான் தானா?

விடைக்கு முன்னால்
உடல் அடங்கி கொண்டிருக்கிறது.


தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!
ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி!
வீட்டிற்குள் வந்ததும்
அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள்
முகமூடி கழற்றபட்ட தங்கள் முகங்களை.

முகமூடியை கழற்றியும்
முகத்தில் தெரியவில்லை முகம்.

சிலர் மட்டும் கழுவி கொண்டே இருக்கிறார்கள் முகத்தை!


இலையுதிர் காலம் போல நீ.
காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல்.
கண்களில் குழப்பம்.
பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம்.
சம்பந்தமில்லாத அழுகை.
புரியாத சிரிப்பு.
தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு.

பொங்கிய பழைய நினைவுகள்
பழுப்பேறிய காகிதங்களாய்.
கனமாய் இருக்கிறது யதார்த்தம்.

அந்த நீண்ட பிரிவிற்கு பின்
நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.


கருத்துகள் இல்லை: