திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

வலைப்பதிவர்களான நண்பர்கள் மூவரும் கூடியிருக்க, போனில் வந்த கொலைமிரட்டல் குறித்து விவாதம் ஆரம்பிக்கிறது.


Mr.கே.கே: நம்ம எதிர்பார்த்த மாதிரியே எதிர்ப்புகள் வர ஆரம்பிச்சுடுச்சு.. அதைப்பற்றி பேசத்தான் இந்த அவசரக்கூட்டம்
Mr.யூ.கே: ஆமாம். கே.கே வுக்கு வந்த அந்த போன்காலை நானும் அட்டெண்ட் செய்தேன்.கொஞ்சம் கடுமையாகத்தான் பேசினான் அந்த மர்ம நபர்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன சொல்றீங்க.. பெயரைக்கூட சொல்லாமல் மிரட்டிய அவனுக்குப் போய் பயந்துக்கிட்டு நிறுத்திடலாம்கிறீங்களா?
Mr.கே.கே: இல்லை.. அப்படி சொல்லலை. இதுவரை வந்த பதிவுகளுக்கு இந்த மிரட்டல் கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது.
Mr.என்.எஸ்: கே.கே ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்க.. இதுவரைக்கும் வெளியாகியிருக்கும் பதிவுகளில் நீயும்,யூ.கே வும் சும்மா பிள்ளையார் சுழிதான் போட்டிருக்கீங்க.. அப்படி ஒண்ணும் பெருசா ஏதும் எழுதிடலை. இதுக்கே இப்படி யோசிச்சிங்கன்னா எப்படி? எதுக்கு சொல்றேன்னா நான் களத்தில் இறங்கி பதிவுமட்டும் போட்டேன்னா பிளாக்ஸ்பாட்டே சும்மா அதிரும் தெரிஞ்சுக்கங்க.. நமக்கு இந்த செண்டிமெண்ட் எல்லாம் ஒத்துவராது.நடந்ததையெல்லாம் புட்டுபுட்டு வைப்பேன் தெரியுமில்ல..
Mr.யூ.கே: இல்லை. இப்படியெல்லாம் நடக்கும்னு எதிபார்த்ததுதான். இருந்தாலும்..
(என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போதே மொபைல் ஒலிக்க லைனில் வருகிறார் பருத்திவீரன் சித்தப்பூ.விஷயத்தை சொல்லி ஸ்பீக்கர் போனை ஆன் செய்து மேஜையில் வைத்தவுடன் வைப்ரேட் மோடில் வைக்காமலேயே போன் அதிர ஆரம்பிக்கிறது. அந்தளவுக்கு சித்தப்பூ டென்ஷனில் எகிறுகிறார்)
சித்தப்பூ(போனில்):
ஏண்டா எவனோ ஒரு பன்னாடைப் பய ஏதோ பேசினான்னு பதிவு போடறதை விட்டுட்டு, இப்படி மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கீங்களே? வெட்கமாயில்லை உங்களுக்கெல்லாம்?
Mr.கே.கே: அதில்லை சித்தப்பூ.. அவன் பேசின தோரணையை பார்த்தா கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கு.. அதான்...
சித்தப்பூ(போனில்): டேய் அந்த ** எங்கயாவது 1 ரூபாய் செல்லாத காசை கீழே கண்டெடுத்து இருப்பான்.அதுக்கு பீடி கூட வாங்க முடியலையேங்கற கடுப்பில பப்ளிக் பூத்துலேயிருந்து போனை போட்டு ஒரு அல்ப ஆசைக்கு பேசியிருப்பான்.அதைப்போய் ஒரு விஷயம்னு உட்கார்ந்து பேசறீங்களேடா.. அதுவுமில்லாமல் யூ.கே. சொன்னதை வைச்சுப் பார்த்தா அந்த **க்கு பிளாக்குன்னா என்னான்னே தெரியலை.. இதுகூட தெரியாத ** பேசினான்னு பொழப்பை விட்டுட்டு மீட்டிங்காம் மீட்டிங்கு.. ஆகற வேலையைப் பாருங்கடா.. அவன் 1 ரூபாய்க்கு பேசினான்னு என்னை 20 ரூபாய்க்கு எஸ்.டி.டி போட வைச்சுட்டீங்களேடா.இனிமேல் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு போனைப் போட்டீங்க தொலைச்சிடுவேன்.. தெரிஞ்சுக்கங்க.. என்ன செய்விங்களோ எனக்கு தெரியாது.இனிமேல் தினமும் ரெண்டு பதிப்பு போட்டே ஆகணும் ஞாபகம் வைச்சுக்கங்க.. என்றபடியே லைனை கட் செய்கிறார்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன செய்யலாம்?
Mr.கே.கே: அதான் சித்தப்பூவே சொல்லிட்டாருல்ல.. வழக்கம்போல நம்ம வேலையை தொடர வேண்டியதுதான்..
Mr.யூ.கே: சரி.. நம்ம பசங்கதானே.. கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்னு பார்த்தால் விட மாட்டேங்குறானுங்க. நாளையிலிருந்து புது வேகத்தோடு களமிறங்கி பரபரப்பான பதிவுகளை போடணும்.. ஓ.கே..
Mr.கே.கே வும் என்.எஸ் ஸீம் ஒருமித்த குரலில் ஓ.கே என்றுசொல்ல மீட்டிங் இனிதே முடிவடைகிறது.

வலைப்பதிவர்களான நண்பர்கள் மூவரும் கூடியிருக்க, போனில் வந்த கொலைமிரட்டல் குறித்து விவாதம் ஆரம்பிக்கிறது.


Mr.கே.கே: நம்ம எதிர்பார்த்த மாதிரியே எதிர்ப்புகள் வர ஆரம்பிச்சுடுச்சு.. அதைப்பற்றி பேசத்தான் இந்த அவசரக்கூட்டம்
Mr.யூ.கே: ஆமாம். கே.கே வுக்கு வந்த அந்த போன்காலை நானும் அட்டெண்ட் செய்தேன்.கொஞ்சம் கடுமையாகத்தான் பேசினான் அந்த மர்ம நபர்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன சொல்றீங்க.. பெயரைக்கூட சொல்லாமல் மிரட்டிய அவனுக்குப் போய் பயந்துக்கிட்டு நிறுத்திடலாம்கிறீங்களா?
Mr.கே.கே: இல்லை.. அப்படி சொல்லலை. இதுவரை வந்த பதிவுகளுக்கு இந்த மிரட்டல் கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது.
Mr.என்.எஸ்: கே.கே ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்க.. இதுவரைக்கும் வெளியாகியிருக்கும் பதிவுகளில் நீயும்,யூ.கே வும் சும்மா பிள்ளையார் சுழிதான் போட்டிருக்கீங்க.. அப்படி ஒண்ணும் பெருசா ஏதும் எழுதிடலை. இதுக்கே இப்படி யோசிச்சிங்கன்னா எப்படி? எதுக்கு சொல்றேன்னா நான் களத்தில் இறங்கி பதிவுமட்டும் போட்டேன்னா பிளாக்ஸ்பாட்டே சும்மா அதிரும் தெரிஞ்சுக்கங்க.. நமக்கு இந்த செண்டிமெண்ட் எல்லாம் ஒத்துவராது.நடந்ததையெல்லாம் புட்டுபுட்டு வைப்பேன் தெரியுமில்ல..
Mr.யூ.கே: இல்லை. இப்படியெல்லாம் நடக்கும்னு எதிபார்த்ததுதான். இருந்தாலும்..
(என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போதே மொபைல் ஒலிக்க லைனில் வருகிறார் பருத்திவீரன் சித்தப்பூ.விஷயத்தை சொல்லி ஸ்பீக்கர் போனை ஆன் செய்து மேஜையில் வைத்தவுடன் வைப்ரேட் மோடில் வைக்காமலேயே போன் அதிர ஆரம்பிக்கிறது. அந்தளவுக்கு சித்தப்பூ டென்ஷனில் எகிறுகிறார்)
சித்தப்பூ(போனில்):
ஏண்டா எவனோ ஒரு பன்னாடைப் பய ஏதோ பேசினான்னு பதிவு போடறதை விட்டுட்டு, இப்படி மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கீங்களே? வெட்கமாயில்லை உங்களுக்கெல்லாம்?
Mr.கே.கே: அதில்லை சித்தப்பூ.. அவன் பேசின தோரணையை பார்த்தா கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கு.. அதான்...
சித்தப்பூ(போனில்): டேய் அந்த ** எங்கயாவது 1 ரூபாய் செல்லாத காசை கீழே கண்டெடுத்து இருப்பான்.அதுக்கு பீடி கூட வாங்க முடியலையேங்கற கடுப்பில பப்ளிக் பூத்துலேயிருந்து போனை போட்டு ஒரு அல்ப ஆசைக்கு பேசியிருப்பான்.அதைப்போய் ஒரு விஷயம்னு உட்கார்ந்து பேசறீங்களேடா.. அதுவுமில்லாமல் யூ.கே. சொன்னதை வைச்சுப் பார்த்தா அந்த **க்கு பிளாக்குன்னா என்னான்னே தெரியலை.. இதுகூட தெரியாத ** பேசினான்னு பொழப்பை விட்டுட்டு மீட்டிங்காம் மீட்டிங்கு.. ஆகற வேலையைப் பாருங்கடா.. அவன் 1 ரூபாய்க்கு பேசினான்னு என்னை 20 ரூபாய்க்கு எஸ்.டி.டி போட வைச்சுட்டீங்களேடா.இனிமேல் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு போனைப் போட்டீங்க தொலைச்சிடுவேன்.. தெரிஞ்சுக்கங்க.. என்ன செய்விங்களோ எனக்கு தெரியாது.இனிமேல் தினமும் ரெண்டு பதிப்பு போட்டே ஆகணும் ஞாபகம் வைச்சுக்கங்க.. என்றபடியே லைனை கட் செய்கிறார்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன செய்யலாம்?
Mr.கே.கே: அதான் சித்தப்பூவே சொல்லிட்டாருல்ல.. வழக்கம்போல நம்ம வேலையை தொடர வேண்டியதுதான்..
Mr.யூ.கே: சரி.. நம்ம பசங்கதானே.. கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்னு பார்த்தால் விட மாட்டேங்குறானுங்க. நாளையிலிருந்து புது வேகத்தோடு களமிறங்கி பரபரப்பான பதிவுகளை போடணும்.. ஓ.கே..
Mr.கே.கே வும் என்.எஸ் ஸீம் ஒருமித்த குரலில் ஓ.கே என்றுசொல்ல மீட்டிங் இனிதே முடிவடைகிறது.



More than a Blog Aggregator

by ஜிங்காரோ ஜமீன்
ஜமீனுடனான தனது அனுபவங்களை பற்றி Mr.யூ.கே தொடர்கிறார்:

அட.. இன்னும் முழுசா ரெண்டு பதிவுகூட போடலை அதற்குள் இந்தியா ஆஸ்திரேலியா செகண்ட் பைனல் ரேஞ்சுக்கு பரபரப்பு தொத்திக்கிச்சே.. எல்லாம் எதிர்பார்த்ததுதான்.. சரி நம்ம மொக்கையை தொடருவோம்.

ஜமீன்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா தலைக்கு தாழ்வு மனப்பான்மைங்கற விஷயம் கடுகளவுக்கு கூட கிடையாது. இது ஜமீனை நக்கல் பண்றதுக்காக சொல்லலை. சத்தியமான உண்மை. எனக்கு ஜமீன் அறிமுகமான முதல் நாளிலிருந்து இன்றுவரைக்கும் தனது உயரத்தைக் குறித்து கவலைப்பட்டதோ அல்லது அதைவைத்து மற்றவர் ஜமீனை கிண்டல் செய்ததாகவோ ஒரு நிகழ்ச்சி கூட கிடையாது என உறுதியாக கூறமுடியும்.

நம்ம தலை ஜமீன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா யாரையும் சந்தித்த அடுத்தநொடியே அவர்களுக்கு மாமா,மச்சி என அன்புடன் உறவுமுறை வைத்துக் கூப்பிடுவது. நம்ம கே.கே தன் பதிவுல சொன்ன விஷயம் இது. இது நூத்துக்கு நூறு உண்மை.


ஏன் சொல்றேன்னா எங்க காலேஜ்ல மச்சின்னு ஒருத்தர் இருந்தார். அவர் வயசுக்கு அவனவன் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பெற்று வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். ஆனால் மச்சியோ அந்தவயதில் எங்களுடன் காலேஜில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு படிப்பின்மேல் தீராத ஆர்வம்(?). சரி விஷயத்துக்கு வருவோம்.காலேஜில் ரவுடிகளாக வலம்வந்த சில மாணவர்கள் கூட மச்சியை கண்டால் மரியாதையுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு நழுவிவிடுவர். இப்படிப்பட்ட மச்சியை ஜமீன் அழைப்பது யோவ் பெருசு! என்றுதான். அதுவும் உ.பா துணையுடன் இருக்கும் நேரங்களில் அன்புடன் வாடா,போடா எனவும் அழைப்பதுண்டு. மச்சி வயசு என்ன? நம்ம எப்படி? இந்த மாதிரியெல்லாம் ஜமீன் கூச்சப்பட்டு பார்த்ததேயில்லை. அந்த அளவுக்கு ஜமீன் நட்புக்கும், நண்பர்களுக்கும் மரியாதை(?) கொடுப்பவர்.

அதேபோன்று ஜமீனுக்கு தைரியம் ரொம்பவே அதிகம் என பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்குப் பின் நானே ஜமீனின் தைரியத்தை பலரிடம் பரப்பினேன். அந்த இனிமையான நிகழ்வை இப்போது நேரமில்லாத காரணத்தால் அடுத்த பதிவில் கண்டிப்பாக பதிக்கிறேன்.

ஒருமுறை ஜமீனிடம் டீக்கடையில் பேசிக் கொண்டிருக்கும்போது "ஜமீன்! உனக்கு எதுக்கு ஜமீன் அப்படின்னு பெயர் வந்தது? யார் வைச்சாங்க?" என ஆவலாகக் கேட்டேன். உடனே ஜமீன் "அதுவா மச்சி! ஒரு கிங்ஸ் வாங்கு சொல்றேன்.. என்றார். நானும் செலவைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த காரணத்தை அறியும் ஆவலில் கிங்ஸ் வாங்கி கொடுத்தேன். பற்றவத்து புகைத்த ஜமீனைப் பார்த்து, "ஜமீன் நான் கேட்டது?" என்று ஞாபகப்படுத்த "ஸ்ஸ்ஸ்... தம்மடிக்கும்போது குறுக்கே பேசக்கூடாது.. அசிங்கமா இல்லையா அண்ணனுக்கு.." என்ற ஜமீன் "தம்"மை தொடர்ந்தார். எல்லாம் நேரம்டா மகனே! என்று மனதுக்குள் நினைத்தபடியே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன்.கிங்ஸ் எண்ணிக்கை மட்டும் 1..2..3.. என பழைய இந்திய அணியின் ஸ்கோர்போர்டு போல் தொடர எதிர்பார்த்த பதிலைத்தான் காணோம். சரி.. இதற்குமேலும் வெயிட் செய்தால் கடைசியாக பஸ்ஸிக்கு பைசா இல்லாமல் நடந்துதான் ரூமுக்கு போகவேண்டுமென்ற யதார்த்த நிலை உறைக்க "சரி ஜமீன் நீ யோசிச்சு அப்புறமா சொல்லு.. எனக்கு நேரமாச்சு கிளம்பறேன்.." என்று நழுவினேன்.

(ஆனால் இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரைக்கும் அந்தக் கேள்விக்கான பதில் ஜமீனிடமிருந்து வரவில்லை.யார் மூலமாகவாவது இந்தப் பதிவைப் பற்றிக் கேள்விப்பட்டு உலகத்தின் ஏதோ ஒரு மூலையிருந்து படித்துவிட்டு அந்தக் கேள்விக்கான பதிலை ஜமீன் விரைவில் சொல்லுவார் என்ற நம்பிக்கையுடன் யூ.கே வாகிய நான் இப்பதிவை இத்தோடு முடிக்கிறேன்)

ஜமீனுடனான மேலும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். - யூ.கே


More than a Blog Aggregator

by ஜிங்காரோ ஜமீன்
ஜமீனுடனான தனது அனுபவங்களை பற்றி Mr.யூ.கே தொடர்கிறார்:

அட.. இன்னும் முழுசா ரெண்டு பதிவுகூட போடலை அதற்குள் இந்தியா ஆஸ்திரேலியா செகண்ட் பைனல் ரேஞ்சுக்கு பரபரப்பு தொத்திக்கிச்சே.. எல்லாம் எதிர்பார்த்ததுதான்.. சரி நம்ம மொக்கையை தொடருவோம்.

ஜமீன்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா தலைக்கு தாழ்வு மனப்பான்மைங்கற விஷயம் கடுகளவுக்கு கூட கிடையாது. இது ஜமீனை நக்கல் பண்றதுக்காக சொல்லலை. சத்தியமான உண்மை. எனக்கு ஜமீன் அறிமுகமான முதல் நாளிலிருந்து இன்றுவரைக்கும் தனது உயரத்தைக் குறித்து கவலைப்பட்டதோ அல்லது அதைவைத்து மற்றவர் ஜமீனை கிண்டல் செய்ததாகவோ ஒரு நிகழ்ச்சி கூட கிடையாது என உறுதியாக கூறமுடியும்.

நம்ம தலை ஜமீன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா யாரையும் சந்தித்த அடுத்தநொடியே அவர்களுக்கு மாமா,மச்சி என அன்புடன் உறவுமுறை வைத்துக் கூப்பிடுவது. நம்ம கே.கே தன் பதிவுல சொன்ன விஷயம் இது. இது நூத்துக்கு நூறு உண்மை.


ஏன் சொல்றேன்னா எங்க காலேஜ்ல மச்சின்னு ஒருத்தர் இருந்தார். அவர் வயசுக்கு அவனவன் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பெற்று வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். ஆனால் மச்சியோ அந்தவயதில் எங்களுடன் காலேஜில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு படிப்பின்மேல் தீராத ஆர்வம்(?). சரி விஷயத்துக்கு வருவோம்.காலேஜில் ரவுடிகளாக வலம்வந்த சில மாணவர்கள் கூட மச்சியை கண்டால் மரியாதையுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு நழுவிவிடுவர். இப்படிப்பட்ட மச்சியை ஜமீன் அழைப்பது யோவ் பெருசு! என்றுதான். அதுவும் உ.பா துணையுடன் இருக்கும் நேரங்களில் அன்புடன் வாடா,போடா எனவும் அழைப்பதுண்டு. மச்சி வயசு என்ன? நம்ம எப்படி? இந்த மாதிரியெல்லாம் ஜமீன் கூச்சப்பட்டு பார்த்ததேயில்லை. அந்த அளவுக்கு ஜமீன் நட்புக்கும், நண்பர்களுக்கும் மரியாதை(?) கொடுப்பவர்.

அதேபோன்று ஜமீனுக்கு தைரியம் ரொம்பவே அதிகம் என பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்குப் பின் நானே ஜமீனின் தைரியத்தை பலரிடம் பரப்பினேன். அந்த இனிமையான நிகழ்வை இப்போது நேரமில்லாத காரணத்தால் அடுத்த பதிவில் கண்டிப்பாக பதிக்கிறேன்.

ஒருமுறை ஜமீனிடம் டீக்கடையில் பேசிக் கொண்டிருக்கும்போது "ஜமீன்! உனக்கு எதுக்கு ஜமீன் அப்படின்னு பெயர் வந்தது? யார் வைச்சாங்க?" என ஆவலாகக் கேட்டேன். உடனே ஜமீன் "அதுவா மச்சி! ஒரு கிங்ஸ் வாங்கு சொல்றேன்.. என்றார். நானும் செலவைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த காரணத்தை அறியும் ஆவலில் கிங்ஸ் வாங்கி கொடுத்தேன். பற்றவத்து புகைத்த ஜமீனைப் பார்த்து, "ஜமீன் நான் கேட்டது?" என்று ஞாபகப்படுத்த "ஸ்ஸ்ஸ்... தம்மடிக்கும்போது குறுக்கே பேசக்கூடாது.. அசிங்கமா இல்லையா அண்ணனுக்கு.." என்ற ஜமீன் "தம்"மை தொடர்ந்தார். எல்லாம் நேரம்டா மகனே! என்று மனதுக்குள் நினைத்தபடியே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன்.கிங்ஸ் எண்ணிக்கை மட்டும் 1..2..3.. என பழைய இந்திய அணியின் ஸ்கோர்போர்டு போல் தொடர எதிர்பார்த்த பதிலைத்தான் காணோம். சரி.. இதற்குமேலும் வெயிட் செய்தால் கடைசியாக பஸ்ஸிக்கு பைசா இல்லாமல் நடந்துதான் ரூமுக்கு போகவேண்டுமென்ற யதார்த்த நிலை உறைக்க "சரி ஜமீன் நீ யோசிச்சு அப்புறமா சொல்லு.. எனக்கு நேரமாச்சு கிளம்பறேன்.." என்று நழுவினேன்.

(ஆனால் இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரைக்கும் அந்தக் கேள்விக்கான பதில் ஜமீனிடமிருந்து வரவில்லை.யார் மூலமாகவாவது இந்தப் பதிவைப் பற்றிக் கேள்விப்பட்டு உலகத்தின் ஏதோ ஒரு மூலையிருந்து படித்துவிட்டு அந்தக் கேள்விக்கான பதிலை ஜமீன் விரைவில் சொல்லுவார் என்ற நம்பிக்கையுடன் யூ.கே வாகிய நான் இப்பதிவை இத்தோடு முடிக்கிறேன்)

ஜமீனுடனான மேலும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். - யூ.கே
இதுவரை வெளிவந்திருக்கும் பதிவுகளினால் கடும் கோபமுற்ற சிலர் வன்முறையைக் கையாண்டும் கூட, நாங்கள் சிறிதும் அஞ்சாததால் இப்போது வ.வா.சங்கத்தின் துணையோடு எமது வலைப்பூ தளத்தை அத்துமீறி கைப்பற்றியுள்ளனர். எனினும் நமது நண்பர்களின் உதவியால் வலைப்பூ மீண்டும் சீர் செய்யப்பட்டது. அதனாலேயே இரு நாட்களாக இந்த சிறு தடங்கல். மேலும் எங்கள் வலைப்பூவிற்கு எதிராக உலகமெங்கும் கடும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றனன. அது தொடர்பான செய்தியை இங்கே காணலாம்.மேலும் ஜமீன் எங்களுக்கு எதிராக மான நஷ்டவழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் ஜமீனின் கதையை இப்போது தொடர முடியவில்லை. மாற்று ஏற்படாக ஜமீனின் நெருங்கிய நண்பரும், காலேஜ் பெருசுமான மச்சியின் மொக்கை வரலாறு அடுத்த பதிவிலிருந்து தொடங்கும்.

ஏன் இந்தப் பிரச்சினையில் வ.வா.சங்கத்தை இழுக்கிறோம் எனில், தலை ஜமீனுக்கு பிளாக் என்றால் என்ன? என்பதையே இரு நாட்களுக்கு முன்னர்தான் தெரிந்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகையால் இது ஒரு கூட்டுசதி என உறுதியாக அறியமுடிகிறது.
மேலும் 2 நாட்களூக்கு முன் ஜமீனை வ.வா.சங்கத்தில் பார்த்ததாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை வெளிவந்திருக்கும் பதிவுகளினால் கடும் கோபமுற்ற சிலர் வன்முறையைக் கையாண்டும் கூட, நாங்கள் சிறிதும் அஞ்சாததால் இப்போது வ.வா.சங்கத்தின் துணையோடு எமது வலைப்பூ தளத்தை அத்துமீறி கைப்பற்றியுள்ளனர். எனினும் நமது நண்பர்களின் உதவியால் வலைப்பூ மீண்டும் சீர் செய்யப்பட்டது. அதனாலேயே இரு நாட்களாக இந்த சிறு தடங்கல். மேலும் எங்கள் வலைப்பூவிற்கு எதிராக உலகமெங்கும் கடும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றனன. அது தொடர்பான செய்தியை இங்கே காணலாம்.மேலும் ஜமீன் எங்களுக்கு எதிராக மான நஷ்டவழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் ஜமீனின் கதையை இப்போது தொடர முடியவில்லை. மாற்று ஏற்படாக ஜமீனின் நெருங்கிய நண்பரும், காலேஜ் பெருசுமான மச்சியின் மொக்கை வரலாறு அடுத்த பதிவிலிருந்து தொடங்கும்.

ஏன் இந்தப் பிரச்சினையில் வ.வா.சங்கத்தை இழுக்கிறோம் எனில், தலை ஜமீனுக்கு பிளாக் என்றால் என்ன? என்பதையே இரு நாட்களுக்கு முன்னர்தான் தெரிந்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகையால் இது ஒரு கூட்டுசதி என உறுதியாக அறியமுடிகிறது.
மேலும் 2 நாட்களூக்கு முன் ஜமீனை வ.வா.சங்கத்தில் பார்த்ததாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: