செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

"அமுதம்" சஞ்சிகை அறிமுக விழா நாளை 3ஆம் திகதி பி.ப 4 மணிக்கு கொள்ளுப்பிட்டி காலிவீதியில் உள்ள 78ஆம் இலக்கத்தில் உள்ள சுற்றுலா பயணச் சபையின் ஹோட்டல் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

சஞ்சிகை அறிமுக விழா சிறப்பாக நடந்தேற "இலக்கியா" வாழ்த்துகின்றது.
"அமுதம்" சஞ்சிகை அறிமுக விழா நாளை 3ஆம் திகதி பி.ப 4 மணிக்கு கொள்ளுப்பிட்டி காலிவீதியில் உள்ள 78ஆம் இலக்கத்தில் உள்ள சுற்றுலா பயணச் சபையின் ஹோட்டல் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

சஞ்சிகை அறிமுக விழா சிறப்பாக நடந்தேற "இலக்கியா" வாழ்த்துகின்றது.
"வானோசை - 17"
கலை, இலக்கியப் போட்டி அறிவிப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டிக் கலை இலக்கியப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

1. தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி,
2. புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி,
3. தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி
என மூன்றாக வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு வானொலி நாடகம், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

ஆக்கங்கள் யாவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கக் கூடியதாகவும், தமிழின மேம்பாடு கருதியதாகவும் அமைய வேண்டும்.

ஆக்கங்கள் எழுதுதாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.

ஆக்கத்தை எழுது தாளில் கையெழுத்துச் சுவடியாகவோ, தட்டச்சுச் சுவடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

ஆக்கங்களைச் சுவடியாக்கும் போது பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது சிறப்புக்குரியதாகும்.

போட்டிக்கான ஆக்கங்களை எழுதுபவர்கள் தங்கள் பெயர், முகவரி ஆகியவற்றைத் தனியான தாளில் எழுதிச் சுவடியோடு இணைக்க வேண்டும்.

எந்தப் போட்டிக்கான ஆக்கம் என்பதை மடல் உறையின் மேல் இடப்பக்க மூலையில் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

வானொலி நாடகம்:
20 நிமிடங்களுக்கு அமைவாக எழுதப்பட வேண்டும். எழுதுதாளில் பத்துப் பக்கங்களுக்குக் (10) குறையாமலும் பன்னிரண்டு (12) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

சிறுகதை:
நான்கு (04) பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து (05) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதை:

மூன்று (03) பக்கங்களுக்குக் குறையாமலும், நான்கு (04) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ, புதுக்கவிதைகளாகவோ அமையலாம்.

ஆக்கங்களை 31.10.2007க்கு முன் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.

போட்டிகளில் கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்குபற்றலாம்.

ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரிகள்:


01) புலிகளின்குரல் நிறுவனம்
நடுவப்பணியகம்
முதன்மைச்சாலை
கிளிநொச்சி
தமிழீழம்.


02) மின்னஞ்சல் முகவரி: info@pulikalinkural.com
முதல் பாடல்

என்னடி முனியம்மா - கலவைப் பாடல்






குறிப்பு:

"பதிவிறக்கு" என்ற பொத்தானை சொடுக்கியவுடன் வரும் திரையில்
Download Here என்ற பச்சை நிற பொத்தானை அழுத்தி பாடலைப் பெறவும்.
முதல் பாடல்

என்னடி முனியம்மா - கலவைப் பாடல்






குறிப்பு:

"பதிவிறக்கு" என்ற பொத்தானை சொடுக்கியவுடன் வரும் திரையில்
Download Here என்ற பச்சை நிற பொத்தானை அழுத்தி பாடலைப் பெறவும்.



வின்ஆம்ப் பற்றி கேள்விப் படாமல் இருக்க மாட்டீர்கள். தற்போது 5.35 தொகுப்பை வெளியிட்டிருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: