செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30



More than a Blog Aggregator

by பிரசாத்
விவசாயிகளின் SEZ எதிர்ப்பு போராட்டத்தை கையாள மேற்கு வங்க அரசும் JSW Steel நிறுவனமும் சேர்ந்து ஒரு புது மாதிரியான திட்டத்தை முன் வைத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின்படி SEZ'க்காக நிலம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த நிலத்திற்கான பணத்தை தருவதுடன் அவர்களின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு அங்கு கட்டப்படும் தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும். மேலும் நிலம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த தொழிற்சாலையின் பங்குகளும் அளிக்கப்படும்

இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று நிலத்தை இழந்தாலும் அங்கே கட்டப்படும் நிறுவனத்தில் வேறு வேலை கிடைப்பதால், இதுவரை விவசாயத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வந்த மக்களுக்கு ஒரு புது வாழ்க்கை கிடைக்க வழி பிறந்திருக்கிறது.

இரண்டாவது அந்த தொழிற்சாலையின் பங்குகள் அளிக்கப்படுவதால் நிலம் கொடுக்கும் ஒவ்வொருவரும் அங்கு கட்டப்படும் தொழிற்சாலையில் பங்குதாரர்களாகின்றனர். இதனால் நிலம் கையை விட்டு போனாலும் அதற்கு சமமாக ஒரு நிறுவனத்தின் பங்குகள் அவர்களிடம் வந்து சேருகிறது.

இதுவரை விவசாயம் மட்டுமே செய்து வந்த மக்களுக்கு அந்த தொழிற்சாலையில் என்ன மாதிரி வேலை கிடைக்கும் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இந்த திட்டம் குறைந்தபட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காவது வழி வகுக்கும். இந்த யோசனை சற்று காலதாமதமானதுதான் என்றாலும் "Better Late than Never" என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். சந்தோஷம்!!
ஆனால் விவசாயம்? அதை எப்போது காப்பாற்றப்போகிறோம்??


More than a Blog Aggregator

by பிரசாத்
சில நாட்களுக்கு முன்னால் மருத்துவத்துறையில் இருக்கும் நண்பர் ஒருவர் "Autopsy of Human Body"என்ற தலைப்பில் ஒரு Google Video'வின் Link'ஐ அனுப்பி இருந்தார்.

சுமார் இருபது நிமிடம் ஓடக்கூடிய video அது. ஒரு மேசையின் மீது ஒரு உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. மருத்துவர் ஒருவர் அந்த உடலை ஒவ்வொரு பாகமாக அறுத்து எடுத்து அந்த பாகத்தை பற்றி விவரிக்கிறார். ஒவ்வொரு பாகத்தின் பெயரையும் சொல்லி அதுஎப்படி இருக்கிறது எப்படி இருந்திருக்க வேண்டும் என விவரிக்கிறார்.

மருத்துவர் என்னவோ ஒழுங்காகத்தான் விளக்குகிறார் ஆனால் எனக்குத்தான் ஒவ்வொரு பாகத்தையும் வெட்ட வெட்ட ஏதோ கசாப்புக்கடையில் இருப்பது போன்ற உணர்வு. ஒருவேளை மருத்துவம் படித்தவர்களுக்கு அந்த மாதிரி தோணாதோ என்னவோ!!!

சற்று கடுமையாகத் தோன்றியதால் அந்த video'வை embed செய்யாமல் link'ஐ மட்டும் கீழே கொடுத்துள்ளேன். சின்ன sample'ஆக ஒரு காட்சியின் Thumbnail picture கீழே இருக்கிறது. (படத்தை என்னால் முடிந்த அளவு சிறியதாக கொடுத்திருக்கிறேன், பெரிதாக பார்க்க படத்தின் மீது click செய்யுங்கள்). இந்த video'வை பார்ப்பதா வேண்டாமா என அந்த படத்தை பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.


எச்சரிக்கை: தைரியசாலிகள் போல் நடிக்கத் தெரியாதவர்கள் இந்த video'வை தவிர்ப்பது நல்லது


More than a Blog Aggregator

by பிரசாத்
இந்த வருட பொங்கலுக்கு சன் டி.வி'யில் தனுஷ் நயந்தாரா பேட்டியை ஒளிபரப்பினார்கள். பேட்டியின்போது நயந்தாராவையும் மீறி (ஹீ..ஹீ...) தனுஷ் சொன்ன ஒரு விஷயம் என்னை வெகுவாக கவர்ந்தது.

கேள்வி: உங்கள் மாமனார் ரஜினி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நீங்கள் எப்படி?

பதில் (தனுஷ்): ஆன்மீகத்தை பத்தி பேசரதெல்லாம் ரொம்ப கஷ்டம் சாதாரண விஷயமில்லை. ஆனா ஒரே ஒரு point சொல்லிடறேன். கடவுளை முழுக்க முழுக்க நம்பறதும் கஷ்டம், முழுக்க முழுக்க நம்பாம இருக்கிறதும் கஷ்டம்.

முழுக்க முழுக்க நம்பறவனுக்கு "ஒரு வேளை இல்லாம இருந்தா" அப்படின்னு ஒரு சந்தேகம் இருக்கும். அதே மாதிரி முழுக்க முழுக்க நம்பாம இருக்கிறவனுக்கும் "ஒரு வேளை இருந்துட்டா" அப்படினு ஒரு பயம் இருக்கும். ஒன்னு இத செய்யனும் இல்ல அத செய்யனும் நடுவுல இருந்தா Waste. 90% பேர் நடுவுல இருக்கவங்கதான்.


http://www.blog.isaitamil.net/?p=1943

கடவுள் மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகவும், அறிவியல் அறிவு சம்பந்தப்பட்ட விஷயமாகவும் பார்க்கப்படுகிறது! மனத்தின் பேச்சை கேட்பதா இல்லை அறிவின் பேச்சை கேட்பதா என்ற குழப்பம் என்றைக்குமே மனிதனுக்கு தீராத ஒன்று! அதுவரை கடவுளும் ஒரு புரியாத புதிர்தான்!
வெயில் திரைப்படம் பார்த்தீர்களா? அதில் வரும் பாண்டியம்மா (ஷ்ரேயா ரெட்டி) சந்தேக புத்தி உடைய தன் கணவனைப் பற்றி தன் பால்ய நண்பன் முருகேசனிடம் (பசுபதி) புலம்பி விட்டு சொல்லுவாள்,

"பொறந்ததிலருந்தே இந்த தீப்பெட்டிக்குத்தான் வாழ்க்கைப் பட்டிருக்கேனோ என்னமோ!!!".

படம் பார்த்த பிறகு ராஜ் எழுதிய ஒரு கவிதை

தீப்பெட்டிக்கு வாழ்க்கைப்பட்டாள் அவள்,
உறசி தேய்த்தப்பின்
தீப்பெட்டி சேர்த்துகொள்ள மறுத்தது
தீக்குச்சியான அவளை!
-த.ராஜசேகர்
அப்படி இப்படி என்று, கடைசியாக பதிவு ஆரம்பித்தாயிற்று. என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை. தமிழ்மணம் வேறு, மூன்று பதிவுகளுக்கு பின் வருக என்று தலையில் கொட்டுகிறது. நானும் மொட்டு வலையை உத்து உத்து பார்த்தும் ஒன்னும் நடக்கவில்லை. பிறகு, வழக்கம் போல, நமக்கு கைவந்த கலையான வெட்டி ஒட்டுவதே செய்துவிடலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனாலும், இந்த வரலாற்று முக்கியத்துவம் (சரி, சரி,சும்மா தமாசு)வாய்ந்த பதிவு, வெறும் ஜல்லியாக இருந்தால் நன்றாக இருக்காது என்பதால் அண்ணாத்தே இளவஞ்சி அவர்களின் பதிவைப்பற்றி எழுதலாம்(வெட்டி ஒட்டலாம்) என்பதின் விளைவே இப்பதிவு.


இவர் எழுதும் அனைத்தும் பிடிக்கும் என்றாலும், மிகப்பிடித்தவைகளின் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

எனக்கு பிடித்த பதிவுகள் :-

1. நல்லா ( நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய
இவருடைய பதிவை படிப்பதே ஒரு சுகானுபவம்.ஆனால், இவருடைய இந்த பதிவை படித்தால், உங்களின் மனம் நெகிழ போவது உறுதி. இவர் சொல்லும் பொருளை நம் கண் முன்னே கொண்டுவந்து விடும், இயல்பான எழுத்துக்கு சொந்தகாரர்.

இவருடைய "தவிர்த்திருக்கக் கூடிய நான்கு செயல்கள்" படிக்கும் போது, அவர்கள் நடந்து வந்தது, கிராமத்து பெண்ணின் கையறுநிலை பார்வை, கம்பத்தில் சாய்ந்தபடி இவர் நிற்பது, நம் கண் முன்னே தோன்றும்.

விகடமாக ஆரம்பித்து, மனதை நெகிழ வைக்கும் நிகழ்வுகளை சொல்வது இவரது எழுத்து நடை.

2. மாப்பூ...! வச்சிட்டான்யா ஆப்பு...!!

3. விட்டில் பூச்சிகள்

4. எமிலி என்றொரு தோழி

5. ஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..

6. சில பட்டாம்பூச்சிகளின் பருவகாலங்கள்

7. அப்பாவின் சட்டை

8. ஜிம்மியும் சில நிகழ்வுகளும்

9. கல்யாணம் தான் கட்டி கிட்டு...

தமிழ் வலையுலகில் ஒரு பய புள்ள விடாம படிச்சது, இத்தொடராகத்தான் இருக்கும்.

10. காலச்சுழிப்பில் தொலைந்தவைகள்

தமிழ்மண,தேன்கூடு மக்களே, இதோ உங்கள் விஜயபாபுவும் , தமிழ்மணத்திற்கும், தேன்கூட்டிற்க்குள்ளும் வந்து விட்டதை அறிக.


More than a Blog Aggregator

by விஜயபாபு பூபதி
இரண்டு பக்கம் ஆறுகளாலும், இரண்டு பக்கம் ஏரிகளாலும் சூழப்பட்டது இந்த கிராமம். மக்கள் தொகை 7000-க்கும் மேல்.மிகவும் பசுமையான கிராமம். முக்கிய வருமானம் தரும் தொழில், விவசாயம்.
ஒரு மேல் நிலை பள்ளி உள்ளது. தபால் நிலையமும், நூலகமும் உள்ளன. அனைத்து தெய்வங்களுக்கும் கோயில்கள் உள்ளன். பெரியாயி அம்மனுக்கு, ஒவ்வொரு வருடமும் நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
கள்ளக்குறிச்சியிலிருந்து, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மூன்று அரசுப்பேருந்துகளும், ஒரு தனியார் பேருந்தும் இயக்கப்படுகின்றன.
படித்தவர்கள் விழுக்காடு தோராயமாக, 40 விழுக்காடு.
நெல், கரும்பு, கிழங்கு , சோளம், எள் , கேழ்வரகு , உளுந்து, மக்காச்சோளம் மற்றும் துவரை அகிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
வீட்டுக்கு ஒருவராவது, திரைகடல் ஒடி திரவியம் தேடுவதால், பொருளாதார நிலையில் சிறந்து விளங்கும் ஊர். இதனால் முக்கியமாக நிகழ்ந்தவை:
1. அனைவரும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.
2. இடத்தின் விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது.
3. அனைவரின் வீட்டிலும் , ஒரு சோனி தொலைகாட்சி இருக்கிறது.
(நல்லதா? கெட்டதா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்)

மற்றபடி சொல்லுவதற்க்கு ஒன்றும் இல்லை.
Posted by Picasa

கருத்துகள் இல்லை: