ரெயிலில் ஜன்னல் ஓர கூடுதல் படுக்கை அகற்றப்படுவதால் அதற்கான முன் பதிவு ஜூலை 13-ந்தேதி முதல் நிறுத்தப்படுகிறது. பயணிகள் நெருக்கடியை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை மற்றும் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் ஜன்னல் ஓரங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
நாட்டின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தின் இணையதளம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இணையதளத்திற்குப் போனால் 2002ம் ஆண்டு தகவல்களே இன்னும் உள்ளன. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வரைபடத்தில் தமிழகத்திற்கு குறிப்பாக சென்னைக்கு தனி இடம் உள்ளது. பெங்களூரையே ஆட்டம் காணவைக்கும் அளவுக்கு விஸ்வரூப வளர்ச்சியில் உள்ளது. ஆனால் சென்னை நகரில் உள்ள, நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் இணையதளம், இன்னும் அறுதப் பழசாகவே உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக