ஆந்திராவில் நரசிம்ஹ ராவ் என்னும் கூடுதல் மாவட்ட நீதிபதியும் அவருடைய மனைவியும், அனந்தபூரில் சிவில் நீதிபதியாகப் பணியாற்றும் அவருடைய மகன் கிரண் குமாரும் 498A சட்டத்தின் கீழ் சென்ற வாரம் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீதிபதி கிரண் குமாரின் மனைவி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான் (அவன் எப்போது கைதாவான் என்று கேட்கிறீர்களா? என்ன அவசரமய்யா உங்களுக்கு; அவனுக்கு திருமண வயது வரவேண்டுமல்லவா; பிறகுதானே அவனுடைய மனைவித் தெய்வம் 498A புகார் கொடுப்பாள்!)
அந்தப் பெண் தெய்வம் இந்தப் புகாரில் இன்னும் மூன்று பேர்களையும் சேர்த்திருக்கிறார். அவர்களும் சீக்கிறமே கைதாவார்களாம். (கவனமாகப் பாருங்கள்- நம் வலைப்பதிவு நண்பர்கள் எவருடைய பெயரையாவது சேர்த்திருக்கப் போகிறார்கள்!)
ஆனால் இது போதாது. எம்.பிக்களும், அமைச்சர்களும், பெண்ணியவாதிகளும், இதுபோல் பொய் வழக்கு போட்டு கொள்ளையடிக்கும் கெடுமதி வக்கீல்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும், முதலமைச்சர்களும் பெருமளவில் இந்த 498A பொய் வழக்குகளில் கைதாக வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற முட்டாள்தனமான சட்டங்களைத் திருத்துவார்கள்; மேன்மேலும் அடுக்கடுக்காக இதுபோன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களை கட்டமைக்கமாட்டார்கள்.
அந்த நன்னாள் எப்பொது வரும்!
(Times of India செய்தி இங்கே)
நீதிபதி கிரண் குமாரின் மனைவி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான் (அவன் எப்போது கைதாவான் என்று கேட்கிறீர்களா? என்ன அவசரமய்யா உங்களுக்கு; அவனுக்கு திருமண வயது வரவேண்டுமல்லவா; பிறகுதானே அவனுடைய மனைவித் தெய்வம் 498A புகார் கொடுப்பாள்!)
அந்தப் பெண் தெய்வம் இந்தப் புகாரில் இன்னும் மூன்று பேர்களையும் சேர்த்திருக்கிறார். அவர்களும் சீக்கிறமே கைதாவார்களாம். (கவனமாகப் பாருங்கள்- நம் வலைப்பதிவு நண்பர்கள் எவருடைய பெயரையாவது சேர்த்திருக்கப் போகிறார்கள்!)
ஆனால் இது போதாது. எம்.பிக்களும், அமைச்சர்களும், பெண்ணியவாதிகளும், இதுபோல் பொய் வழக்கு போட்டு கொள்ளையடிக்கும் கெடுமதி வக்கீல்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும், முதலமைச்சர்களும் பெருமளவில் இந்த 498A பொய் வழக்குகளில் கைதாக வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற முட்டாள்தனமான சட்டங்களைத் திருத்துவார்கள்; மேன்மேலும் அடுக்கடுக்காக இதுபோன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களை கட்டமைக்கமாட்டார்கள்.
அந்த நன்னாள் எப்பொது வரும்!
(Times of India செய்தி இங்கே)
மேகங்கள் திடீரென ஒரு நாள்
வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன்.
ஆற்றுத்தண்ணீர் போல
அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல
போர் விமானங்கள் போல
சோகங்கள் போல
ஓவியத்தின் மீது ஊற்றபட்ட தண்ணீர் போல
மேகங்களின் அபரித வேகத்தை கண்டு
எனக்கு பயமாக இருந்தது.
தினமும் காலையில் கண் விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன்.
ஆனால்
முடிவே இல்லாத நீண்ட கனவாக
அது மாறி கொண்டிருந்தது.
அப்போது தான் அது நடந்தது...

வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன்.
ஆற்றுத்தண்ணீர் போல
அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல
போர் விமானங்கள் போல
சோகங்கள் போல
ஓவியத்தின் மீது ஊற்றபட்ட தண்ணீர் போல
மேகங்களின் அபரித வேகத்தை கண்டு
எனக்கு பயமாக இருந்தது.
தினமும் காலையில் கண் விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன்.
ஆனால்
முடிவே இல்லாத நீண்ட கனவாக
அது மாறி கொண்டிருந்தது.
அப்போது தான் அது நடந்தது...
நாகர்கோயில் என்ற பெயர்வரக் காரணமான ஆலயம். முழுதும் காண நேரம் அனுமதிக்கவில்லை. இயன்றவரை எடுத்த படங்களும், தகவல்களும் உங்களுக்காக. நகரத்தின் மையத்தில் பேருந்து நிலையத்திலிருந்து நடக்கும் தொலைவில் உள்ளது. ஆலயமெங்கும் பாம்பின் பல்வேறு தடங்கள். நாகராஜா சிலை தவிர, அனந்தகிருஷ்ணன், சிவன், மகாவீரர் உள்ளிட்ட பல அற்புதங்கள் காணக் கிடைக்கின்றன. கோயிலின் முன்வாயில் சீனக் கட்டிடக் கலையை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
மூலவர் கருவரையின் மேல் கூரைமட்டும் வேயப்பட்டுள்ளது. விமானம், பீடம் இல்லை. வருடத்திற்கு ஒருமுறை கூரை புதிதாக வேயப்படுகிறது. (அப்போது நிறைய நாகங்களைக் காணலாம் என்கிறார்கள்.) மூலவர் அமர்ந்திருக்கும் இடம் எப்போதும் ஈரமாகக் காணப்படுகிறது. இங்குள்ள ஓடவள்ளி மரத்தின் இலைகளைச் சாப்பிட்டால் தொழுநோய் தீரும். ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு சுவை.
வரலாறு:
புல் அறுக்கும் பெண்ணின் அரிவாள் ஐந்துதலை நாகத்தில்பட்டு ரத்தப்பெருக்கு. ஊராரை அழைத்து வர அவர்கள் அங்கு சிறிய கோயிலை நிர்மாணித்தனர். காலப்போக்கில் மிகவும் பிரபலமடைந்தது. நாகர் வழிபாட்டுக்கென்றே உள்ள தலம்.
ஆவணிமாதத் திருவிழாக்கள் மிகவும் பிரபலம். தேவர்களின் தலைவன் இந்திரன் தினமும் இங்கு வழிபடுவதாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுசீந்திரம் குறிப்பிடத்தக்க ஆலயம்.
அந்தக் கூட்டத்தில் எட்டு அல்லது ஒன்பது பேர் இருப்பார்கள். காலையில் பத்து மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். முதல் காரியமாக இடத்தைக் கூட்டி பெருக்குவார்கள். பின்னர் சிவப்புப் பேனரை விரித்து வைப்பார்கள். அதன் கீழே பழைய நியூஸ் பேப்பர் பரப்பி வைக்கப்படும். வரிசையாக உட்கார்ந்து மெல்ல அன்றைய செய்தித்தாளை புரட்டுவார்கள். ஒன்றரை மணிக்கு லன்ச் முடித்துவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது பசி மயக்கத்தில் படுத்து இருப்பார்கள். உறுத்தலாக இருக்கும். அது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம். மூடப்பட்ட நிறுவனத்தை திறக்கச் சொல்லி ஏதோ [...]
சென்னைக்கு வந்த புதுசுல, இந்தப் பக்கம் போறதுக்குப் பதிலா, அந்தப் பக்கம் போற பஸ்சுல ஏறின அனுபவத்தைப் போன பதிவுல சொல்லிருந்தேன். படிக்க இங்கே க்ளிக்கவும். அண்ணா மேம்பாலக் குதிரையானது என்னை ஒருமுறை ஏமாத்துன கதைதான் இப்ப இந்தப் பதிவுல.
எங்க ஊருல பக்கத்துத் தெருக்கார ஒரு அண்ணன் இங்க ஸ்டெர்லிங் ரோட்டுல, ஒரு லாட்டரிக் கடையில வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரு. எனக்கு ஆபீஸ்ல பெரும்பாலும் ஷிப்ட் ஒர்க்தான். அதனால சும்மா இருக்குற நேரத்துல இந்த லாட்டரிக் கடையில வந்துதான் பொழுதப் போக்குவேன். அப்ப இந்த ஒரு நம்பர் லாட்டரி ரொமப ஃபேமஸ். காலையில டிபன்பாக்ஸ்ல சாப்பாடு எடுத்திட்டு வந்திட்டு, சாயங்காலம் வரைக்கும் ஒரு நம்பர் லாட்டரில விளையாடிட்டு, தினமும் 100, 200 சம்பாதிச்ச ஒரு சில கஷ்டமர்களையும் அங்க பார்த்திருக்கேன். அடபாவிங்களா.. இந்த அளவிற்கா லாட்டரி மோகத்துல இருக்காங்க. இதனாலதான் பல குடும்பம் நடுத்தெருவுக்கே வந்திருதுனு மனசுக்குள்ள நெனச்சிக்குவேன்..ம்ம்ம்.. அது போகட்டும்.. இப்ப மேட்டருக்கு வருவோம்.
ஒருநாளு அந்த அண்ணன்கிட்ட, இங்கிருந்து தெளசன்லைட்டு எப்படி போகுறதுனு கேட்டேன். ஏன்னா என் தம்பி ஒருத்தன் க்ரீம்ஸ் ரோட்டுல வேலை பார்த்தான். அவனப் பார்க்க போறதுக்குத்தான் கேட்டேன். தெளசன் லைட்டு இங்க இருந்து பக்கம்தான்; வள்ளுவர்கோட்டத்துல இருந்து ஒரே பஸ்சுதான்னு அவரு சொன்னாரு. பக்கம்னா எதுக்கு பஸ்சுல போய்க்கிட்டு; அப்படியே நடந்து போனா, நாலு இடத்த தெரிஞ்சிவச்சிக்கிட்ட மாதிரி இருக்குமேனு நான் சொன்னேன். அப்படியா.. அப்ப இப்படி போயி, வள்ளுவர்கோட்டத்தில இருந்து லெப்ட்ல பாம்குரோவ் வழியா ஜெமினி போயிரு. ஜெமினில இருந்து அப்படியே லெப்ட்ல போனா க்ரீம்ஸ் ரோடு வந்திரும்னு சொன்னாரு.
நானும் அப்படியேதான் போனேன். அடங் கொய்யால இதுதான் ஜெமினி பிரிட்ஜா.. எல்லா படத்துலயும் மெட்ராஸைக் காட்டும்போது, இந்த பிரிட்ஜத்தான் காட்டுவானுங்க. குதிரைவேற சும்மா கம்பீரமா இருக்கே. இந்த இடத்துலதான் நான் கொஞ்சம் அதிபுத்திசாலித்தனமா திங்க் பண்ணுனேன். டேய்.. நவநீதா.. (நவநீதகிருஷ்ணன் தான் என்னோட பேரு) நல்லா ஞாபகம் வச்சுக்கோ.. "இந்தக் குதிரையில இருந்து இடதுபக்கமா போனா தெளசன்லைட்டு". தெளிவா மனசுல ஞாபகம் வச்சிக்கிட்டு க்ரீம்ஸ் ரோடு போயிட்டேன். ஒகே..இந்த சீனு இதோட ஓவர். அப்புறம் நடந்தது வேற சீன்.
இது நடந்து முடிஞ்ச ஒரு வாரத்துலயோ, இரண்டு வாரத்துலயோ ஒரு இண்டர்வியூக்காக ராதாகிருஷ்ணன் சாலைக்கு (மயிலாப்பூர்), எப்படியோ யார் யார்ட்டயோ கேட்டு போயிட்டேன். இண்டர்வியூ முடிஞ்ச உடனே, பக்கத்துல ஒரு டீக்கடையில, அண்ணே தெளசன்லைட்டு எப்படி போகுறதுனு கேட்டேன். இங்க இருந்து 29C ல ஜெமினி போயி, அங்கயிருந்து தெளசன்லைட்டு போ ன்னு சொன்னாரு. ரொம்ப தூரம்லாம் இல்ல. நடந்தும் போகலாங்கிறதை அவர்ட்ட கன்பார்ம் பண்ணிக்கிட்டு, நடக்க ஆரம்பிச்சேன்.
டீக்கடைக்காரர் சொன்ன மாதிரி, சோழா ஓட்டல் தாண்டுன உடனே, ஜெமினி பிரிட்ஜ் கண்ணுல பட்டது. அட.. அன்னிக்கு பார்த்த குதிரை. குதிரையில இருந்து இடது பக்கமா போனா தெளசன்லைட்டுனு நாந்தான் ஏற்கனவே மைண்டுல ஏத்தி வச்சிருக்கேனே..அப்படியே இடதுபக்கமா போறேன். கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம்தான் மைல்டா டவுட் வர ஆரம்பிச்சது. க்ரீம்ஸ் ரோடு போக இவ்வளவு தூரம் போகவேண்டியதில்லையே; சரி.. இது எந்த இடம்னு பார்போம்னு பார்த்தா DMS தாண்டிட்டேன்.
இந்தக்கூத்து நடந்ததுக்கு பின்னாலதான், அண்ணா மேம்பாலத்துக்கு ரெண்டு பக்கமும் குதிரை சிலை இருக்குங்கிற மேட்டரையே தெரிஞ்சிக்கிட்டேன்.
(படிச்சிட்டு மட்டும் போயிறாதீங்க.. உங்க ஓட்டை தமிழ்மணம் மற்றும் தமிழிசுலயும் போட்டுட்டு போங்க)
உழவன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக