செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23


"வேற நியூசே கிடைக்கலியா? போரடிக்குது" என்று நீங்கள் அலுத்துக் கொண்டாலும் சரி. இன்றைய நிலவரத்தை சொல்லாமல் விட்டால் விஜய் ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதால் இந்த தகவல். வேறொன்றுமில்லை, விஜயின் 50 வது படத்தை பற்றிய தகவல்தான்!

"வேட்டைக்காரன் ரிலீசுக்கு பிறகுதான் தனது 50 வது படத்தை பற்றி சொல்ல முடியும்" என்று விஜய் அறிவித்தாலும், டைரக்டரை தேர்வு செய்கிற வேலையில் சுறுசுறுப்பாக இருக்கிறது அவரது மூளை. பேரரசு, ஜெயம் ராஜா, ஹரியை அடுத்து பூபதி பாண்டியனோடு முடிந்த இந்த தேடுதல் வேட்டை, திருப்தியுறாமல் மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கிறது. இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.

சிவாஜி கலெக்ஷனையே சில இடங்களில் மிஞ்சிவிட்டது அயன். கனா கண்டேனுக்கு பிறகு தனது இரண்டாவது படத்திலேயே டாப் டைரக்டர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டார் அயன் பட இயக்குனர் கே.வி.ஆனந்த். சில முன்னணி நிறுவனங்கள் "பிடிங்க அட்வான்சை" என்று ஆனந்தை துரத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு போய் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டிருந்த ஆனந்த், அடுத்த படத்திற்கு அவசரமே படவில்லை. இந்த நிலையில்தான் "நம்ம படத்தை இயக்கலாமே" என்று விஜயே தூது அனுப்பியதாக தகவல்.

"அயன் மாதிரி ஸ்டைலிஷா ஒரு படம் பண்ணுற எண்ணம் இருக்கு. கதையிலே தலையிடாமல் இருந்தால் நாம் சேர்ந்து வொர்க் பண்ணலாம்" என்று ஆனந்தும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறாராம். இந்த ரயிலிலாவது விஜய் ஏறுவாரா? அல்லது அடுத்த ரயிலுக்கு காத்திருப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

இந்நேரம் துபாயில் இருப்பார் விஜய டி.ராஜேந்தர். கவலையை மறப்பதற்கான ஜாலி ட்ரிப்பாம் இது. பிள்ளைய பெத்தா கண்ணீரு என்பது அவருக்கு தெரியாதா என்ன? ஆனால் இந்த கண்ணீரு பிள்ளை கொடுத்த குடைச்சலால் அல்ல. பிள்ளைய நினைச்சு வந்த கண்ணீரு!

அஜீத்தை வைத்து பல்வேறு படங்களை எடுத்தவரும், அவரது பினாமி என்று வெளியுலகில் கிசுகிசுக்கப்பட்டவருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி நீண்ட இடைவேளைக்கு பிறகு பட தயாரிப்பில் இறங்கினார். சிம்புவையும், குறளரசைனையும் அந்த படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவர், டிஆரை அணுகி விஷயத்தை சொல்ல, ஆஹா பண்ணலாமேன்னாரு டிஆரும்!

இதில் இரட்டை வேடத்தில் சிம்பு நடிப்பதாக முடிவானது. இன்னொரு முக்கிய கேரக்டரில் குறள் அறிமுகமாவதாக ஏற்பாடு. சிம்பு இருந்தால், அந்த இடத்தில் நிழலாக யுவனும் இருப்பாரே? இசை யுவன் என்றும் முடிவானது. பைசா அட்வான்ஸ் இல்லாமல் பிராஜக்ட் தயாரானது. ஆனால், திடீரென்று படத்தையே டிராப் செய்துவிட்டாராம் சக்கரை.

ரொம்ப அக்கறையா ஆரம்பிச்ச பிராஜக்ட் இப்படி சக்கரையால் கெட்டதே என்ற வருத்தத்தில் தாட், பூட் என்று குதித்த டிஆர், கையிலே பணம் இல்லேன்னா சும்மா இருந்திருக்கலாமே, எதுக்கு சிம்பு பேரை கெடுக்கணும்?. ஏற்கனவே அவரு துவங்கின படங்கள் டிராப் ஆகுதுன்னு இன்டஸ்ரியிலே பேர் இருக்கு. அதை வலுவாக்கிற மாதிரி ஆயிருச்சே நீங்க செஞ்ச வேலை என்றாராம் சக்கரவர்த்தியிடம்.

சம்பளத்தை இரண்டு கோடியாக குறைத்திருக்கிறாராம் சிம்பு. இந்த சிறப்பு தள்ளுபடியை எந்த தயாரிப்பாளர் பயன்படுத்தப் போகிறாரோ?

 


ந‌ல்லா தான் வேடிக்கையும் வினோதமுமா இருக்கு ப்ளாக். ஆனா மன‌ உண‌ர்வுக‌ளை ப‌கிர்ந்து கொள்ளும் த‌ள‌ம்னு சொல்லிட்டு டி.ஆர்..ட‌ண்ட‌ண‌க்க‌னுலாம்  எத‌ற்கு? துரைபாண்டி ச‌ரியாக‌வே பின்னூட்ட‌ம் போட்டிருந்தார்.விஜ‌ய் க‌ட்சியை வாழ்த்துங்க‌ள்னு சொன்ன‌தெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.


ஏற்றுக் கொள்ள‌ முடியாத‌ எத்த‌னையோ விஷ‌ய‌ங்க‌ளோடு நாம் வாழ்வ‌தில்லையா? அத‌னாலேயே தொட‌ந்து இங்க‌யே த‌ம‌ய‌ந்தியின் வ‌லைப்ப‌க்க‌த்திலேயே எழுத‌ நான் முடிவு ப‌ண்ணிய‌தும்.பாதிப் பேரின் திரும‌ண‌ வாழ்க்கையே அப்ப‌டித்தான் போகிற‌து.நேற்று உண‌வ‌க‌த்தில் ம‌ல‌ர் அக்காவைப் பார்த்தேன். ம‌ல‌ர் அக்காவுக்கு சின்ன‌ வ‌ய‌சுல‌யே க‌ல்யாண‌மாகி ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டாங்க‌.அடிக்க‌டி சண்டை வ‌ந்து வீட்டுக்கு வ‌ந்துடுவாங்க‌. அப்ப‌ல்லாம் அவ‌ங்க‌ முக‌ம் வ‌ற‌ண்டு போயிருக்கும்.எதுக்காக‌ அவ‌ங்க‌ளுக்கு ம‌ல‌ர்னு பேர் வ‌ச்சாங்க‌னு அப்ப‌ல்லாம் என‌க்குத் தோணும்.


இன்னொரு அக்கா .. ம‌னோக‌ரினு. க‌றுப்பா இருந்தாலும் ரொம்ப‌ ல‌ட்ச‌ண‌மா இருப்பாங்க‌.ருசியா ச‌மைப்பாங்க‌.நேர் கோடெடுத்து த‌லை சீவி பூ வ‌ச்சாங்க‌னா அவ்ளோ ந‌ல்லாருக்கும்.அந்த‌க்கா மாப்பிள்ளைப் பாத்த‌ க‌தை சுவார‌ஸ்ய‌மான‌து. வ‌ந்த‌ இர‌ண்டு மாப்பிள்ளையில் யாருடைய‌ பேர் ஸ்டைலா இருக்கோ அதைத் தேர்ந்தெடுத்தார்க‌ளாம்.

ஒவ்வொரு வாட்டி அடி வாங்கிட்டு முக‌ம் வீங்கி வ‌ர்ற‌ப்ப‌ல்லாம் இதை சொல்லி சிரிக்காம‌ இருக்க‌ மாட்டார்க‌ள்.இவ‌ங்க‌ல்லாம் இன்னிக்கு விவாக‌ர்த்து வாங்கிட்டாங்க‌ளா? அப்ப‌ப்ப‌ ச‌ண்டைப் போட்டுக்கிட்டு ,அப்ப‌ப்ப‌ அடி வாங்கிக்கிட்டு .. வாழ்றாங்க‌.

ச‌மீப‌த்துல‌ என‌க்குத் தெரிஞ்ச‌ ஒருத்த‌ர் அவ‌ர் ம‌னைவி ப‌த்தி சொல்லிக்கிட்டு இருந்தார். அவ‌ளுக்குத் தேவையான‌ ந‌கைலாம் செஞ்சி கொடுத்தா அது கொஞ்ச‌ம் கிடைக்க‌ தாம‌த‌மானா கூட‌ என்னைக் கையாலாகாத‌வ‌ன், அது இதுனு திட்டுறா.ம‌ன‌சு ந‌ல்லா இல்ல‌னு சொன்னார். அதை சொல்லும் போதே அவ‌ர் முக‌ம்லாம் வேர்த்து இருந்த‌து.வெளிப்ப‌டுத்துற‌ ச‌ங்க‌ட‌ம் வார்த்தைக‌ளில் வெளிப்ப‌டையாக‌வே தெரிந்த‌து.


எத‌ற்காக‌ இந்த‌ உற‌வுக் குழ‌ப்ப‌ங்க‌ள்? க‌ல்யாண‌ம் என்ற‌ ஒரு அமைப்பு வாழ்க்கையை சிதைக்கிற‌தா? த‌னிம‌னித‌ சுத‌ந்திர‌ம் ,ர‌ச‌னையில் ஏன் நாம் ஆதிக்க‌ ச‌க்தியினை உட்புகுத்துகிறோம்?


தோள் சாய்ந்து கொள்ள‌ என்று ஏற்ப‌டுத்தும் உற‌வு சார்பு நிலையை ஏன் அதிக‌மாக்குகிற‌து?

உமா.. சாய‌ங்கால‌ம் க‌டைக்குப் போறேன். கூட‌ வ‌ர்றியா?

ஐயோ.. அவர்ட்ட‌ கேட்டுக்கிறேனே..


ப‌த‌ட்ட‌ம்..வாழ்க்கை நெடுகிலும்.
அப்புறமா வர்றேன் மாமி..அவ‌ர் வ‌ந்துடுற நேர‌ம்.. ச‌ப்பாத்தி போட‌ணும்..


இவ‌ளே ச‌ப்பாத்தியாய் க‌ல்லில் தேய்ந்து க‌ல்லில் பொசுங்கி த‌ட்டில் விழுந்து, ச‌வைக்க‌ப்ப‌ட்டு..

வெயில் ம‌ங்குகிற‌து. தெருவிளக்குக‌ள் சிறிது நேர‌த்தில் போட‌ப்ப‌ட்டு விடும். இர‌வின் இருட்டைக் கிழித்துக் கொண்டு வெளிச்ச‌ம் பாயும்.


ம‌னித‌ர்க‌ளின் வாழ்வில்?

 



 

தமிழ்ஷ்கை இணையதளம் தன்னுடைய வாசகர்களுக்கு கீழகண்ட ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.

 

 

வேகமாக பரவும் மோசடி மின்னஞ்சல் செய்திகள் தமிழ்ஷ்கை வாசகர் கவணத்திற்கு

 
 

வன்னி உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக பேரம் பேசும் சிங்கள பெரும்பான்மையினர் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புகிறார்கள்.

கடந்த சில நாட்களாக புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே அங்கலாய்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் மின்னஞ்சல் செய்திகள் பரவுவதாகத் தெரிகிறது. இந்த மின்னஞ்சல் பொதுவாக கனடா வாழ் தமிழர்களுக்கே அனுப்பப்படுகிறது.

தலங்காமாவில் உள்ள கொஸ்வாட்டாவில் அலுவலகம் நடாத்துவதாகக் கூறும் ஒரு சிங்கள இனவாதி, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களையும், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து தருவதாகவும் அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் கட்டணாம் 25 டொலர்கள் (ரூ.3000) என்றும் கூறி மின்னஞ்சல் அனுப்புகிறார்.

வவுனியா அகதி முகாம்களுக்குள் சென்று வரும் அலுவலர்களுடன் ஆலோசகர் என்ற ரீதியில் தனக்கு தொடர்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தவற விட்ட உடமைகளைத் தேடி எடுப்பதற்கும், இலங்கையில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் கூட தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றவாறு இவரது மின்னஞ்சல் நீண்டு செல்கிறது.

கனடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, இதுபற்றி தாம் ஏற்கெனவே கனடாவின் சகல பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இது போன்ற மோசடிப் பேச்சுக்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து மக்களையும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுள்ளார். எமது மக்களின் துக்கத்தையும் அங்கலாய்ப்பையும் பயன்படுத்தி அந்த நபர் பொருள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதால் இதுபற்றி விழிப்புடன் இருக்குமாறு வாசகர்களை நாமும் கேட்டுக் கொள்கிறோம்.



More than a Blog Aggregator

by shiyamsena

Sushi-mp3-Player



Shiro-Soccer-ball Mp3 Player




Sony-NW-S200-mp3 Player



Swiss-army-knife Mp3 Player


Ochelari-mp3-Player




Micky Mp3 Player


Lipstick Mp3 Player



icool Mp3 Player



Hellokitty-mp3 Player


Haptic-mp3 Player



Cross-mp3-Player



Clip-Type Mp3 Player


Cassette-mp3-Player

Google Earth இல் முப்பரிமானத்தோற்றத்தில் paris Disneyland  தரவிறக்க இங்கே அழுத்தவும்


கருத்துகள் இல்லை: