செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

கல்லூரியில் நண்பன் வீட்டில் goat cutting. எங்களை அழைத்திருந்தான். பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் போகும் வழியில் வீடு. {ஆனால் அதை ஊர் என்றெல்லாம் சொல்லமுடியாது. அவனே அதை தோட்டம் என்றுதான் கூறுவான்}.


அவனது குடும்பம் பற்றி முதலில் கூறிவிடுகிறேன். அவனது தந்தை திருப்பூரில் ஏற்றுமதியாளர். தவிர நிறைய விவசாயம். சுருக்கமாகச் சொன்னால் சூரிய வம்சம், நாட்டாமை சரத் குமார் வீடு மாதிரி. அவனது அண்ணன் சென்னையில் பொறியியல் துறையில் ஏதோ வேலை. அவனது அக்கா குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில்தான் goat cutting. [கிடா வெட்டும் நிகழ்ச்சிதான்]



வசதி படைத்த குடும்பம் அல்லவா.. அதில் உணவுகள் எல்லாம் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தினர். வீட்டின் கீழ்ப்பகுதியில் தலைவாழை இலைபோட்டு சோறு, கூட்டு, குழம்பு, ரசம், பொறியல், வடை, ஆடு, முட்டை, கோழி என்று அமர்க்களப் படுத்தி இருந்தார்கள். எங்களுக்கு மாடியை ஒதுக்கிக் கொடுத்திருந்தனர்.

நாங்கள் ஏதோ அமெரிக்காவில் இருந்து வந்தது போல் நினைத்திருந்தார்களோ என்னவோ.. எங்களுக்கு உணவே வேறா மாதிரி இருந்தது. பஃபே முறை. நான், ஃபிரைடு ரைஸ்.. இன்னபிற பெயர் தெரியாத உணவுவகைகள் [மட்டுமே].


பார்த்த உடனேயே எங்களுக்கு ஒரே ஏமாற்றம் . இருந்தாலும் சமாளித்துக் கொண்டோம். இருந்தாலும் தட்டைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக சாப்பாடு வாங்கத்தொடங்கினோம்.

டேய்.. மணி... நண்பனின் பால்ய சிநேகிதர்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. அதே நேரத்தில் கீழே உள்ள சொந்தங்களுக்கும் சப்பாத்தி, காளான், கறி வகையறாக்கள் சிறப்பு உணவாக வழங்கப் படுவது தெரிந்து அவர்களும் வர ஆரம்பித்தனர். சின்ன அறையில் வெளியே வராமல் உள்ளேயே நின்று கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். அந்த அறையின் மொத்த கொள்ளளவினையும் தாண்டி............ வெளியே செல்லவும் வழியின்றி.... மறுபடியும் வாங்க படியேறி வரவேண்டுமே...... ஒரே நேரத்தில் எல்லாப் பொருட்களையும் தட்டில் வாங்கிக் குவித்து மொத்தமாய் பிசைந்து சாப்பிட...


எப்படியோ ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தோம். கீழே வந்தால் எல்லோரும் தலைவாழை இலைபோட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

எங்கு பஃபே முறையில் சாப்பிட்டாலும் அந்தக் காட்சிதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நந்திக்கு பழக்கம் நடுவாப்லே நிக்கிறது.... நத்தைக்கு பழக்கம் செவனேன்னு நடக்கிறது... நம்மாளுகளோட பழக்கம் என்ன? சிண்டையும் முடியணும், சிக்கையும் எடுக்கணும்!

த்ரிஷா இந்தி படத்திலே நடிக்க போனாலும் போனார். அசினுக்கு போட்டியாகதான் இந்திக்கு போயிருக்கார். அங்கேயுள்ள பெரிய பெரிய ஆளுகளுக்கெல்லாம் போன அன்னைக்கே பெரிய பார்ட்டி வச்சாருன்னு கொளுத்தி போட ஆரம்பிச்சிட்டாங்க. தகவல் அறியும் சட்டத்தை இப்படி தவறா பயன்படுத்துறவங்க மேலே கோவப்படாம பதில் சொல்றதுதான் புத்திசாலித்தனம். த்ரிஷாவும் சீரியஸ் ஆக பதில் சொல்லியிருக்கார். என்னன்னு?

நான் இந்தியில் நடிக்கணும்னு சான்ஸ் தேடி அலையலே. அதே மாதிரி எனக்கு முன்னாடி போயி, இந்தியிலே ஒரு இடத்தை பிடிச்சிருக்கிற அசினுக்கு போட்டியா நடிக்கணும்னும் போகலே. மத்தவங்க என்ன செய்யுறாங்கன்னு பார்க்கிறதுதான் என்னோட வேலை மாதிரி எழுதுறாங்க. அதெல்லாம் உண்மை இல்லை.

நான் நடிச்ச அபியும் நானும் படத்தை பார்த்திட்டு, அவரா விரும்பி என்னை இந்திக்கு கூப்பிட்டார் அக்ஷய் குமார். என்னை தமிழ்லே அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் இந்த படத்தை டைரக்ட் பண்ணுறாரு. இதைவிட எனக்கு வேறென்ன வேணும்? அவங்க கூப்பிட்டதும் போயிட்டேன். இந்த படத்தை தயாரிக்கிறது அக்ஷய் குமார்ங்கிறது இன்னும் கூடுதல் சந்தோஷம். இதிலே எங்கிருந்து வந்தாரு அசின்?

நான் என் வேலையை பார்க்கிறேன். யாருக்கும் யாரும் போட்டியில்லை என்று நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். புரளி இதோடு ஓயுமா? அல்லது இன்னும் வருமா? என்பவர்களுக்கு... வாழ்க்கைன்னா ஒரு சுவாரஸ்யம் வேணாமா? பேசாத த்ரிஷாவை பேச வைக்கணும்னா இப்படியெல்லாம் எழுதினாதானே முடியுது?
பர்தா அணிந்து, ஆஜ்மீர் சென்ற காத்ரீனா கைப் அங்குள்ள புகழ் பெற்ற தர்காவில் வழிபட்டார்.

காத்ரீனா நடித்துள்ள நியூயார்க் என்ற புதிய படம் ஜூன் 26ம் தேதி ரிலீஸாகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் காத்ரீனா கைப், ஆஜ்மீர் தர்காவுக்கு வந்தார்.

பக்தர்கள் கூட்டத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காகவே அதிகாலையில் காத்ரீனா வந்ததாக கூறப்படுகிறது. தர்காவுக்கு வந்த அவர் அங்கு மனமுருக வழிபட்டார்.

பர்தா அணிந்தபடி அவர் வந்ததால் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. அவருடன் படக்குழுவினர் சிலரும் வந்திருந்தனர்.

முன்பொருமுறை நமஸ்தே லண்டனில் நடித்தபோதும் ஆஜ்மீர் தர்காவுக்கு வந்திருந்தார் காத்ரீனா. அப்போது அவர் குட்டை சட்டையுடன் வந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. கவர்ச்சியான உடையுடன் வருவதா என்று தர்கா நிர்வாகிகளும், பக்தர்கள் சிலரும் ஆட்சேபனை எழுப்பினர்.

இதை மனதில் கொண்டே இம்முறை எந்தவிதப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வந்திருந்தார் காத்ரீனா.

பிரசன்னா, ஸ்னேகா நடிப்பில் உருவாகியுள்ள அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை தெலுங்கிலும் டப் செய்கிறார்கள்.

அமெரிக்க வாழ் தமிழரான அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அச்சமுண்டு அச்சமுண்டு. ரிலீஸுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஒரு விருதையும் பெற்று விட்ட இப்படம் திரைப்பட விழாக்களையும் வலம் வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஜூலை 10ம் தேதி தமிழகத்தில் திரைக்கு வருகிறது. இப்படத்தை தற்போது தெலுங்கிலும் டப் செய்து வெளியிடவுள்ளனராம்.

முதல் முறையாக ரெட் ஒன் கேமராவில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம், முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்ட படம் என்ற பல்வேறு சிறப்புகளைத் தாங்கி வரும் இப்படம் தெலுங்கிலும் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.
பிரபாகரன் மரணம் அடைந்தது எப்படி? என்பது குறித்து இலங்கை ராணுவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள வெள்ளமுல்லி வாய்க்கால் பகுதியில் கடந்த மாதம் 18, 19 தேதிகளில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. இதில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி,

கருத்துகள் இல்லை: