செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

உங்கள் குழந்தைகள் வளர்ந்த பிறகு எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடிக்கும் என்று இப்போதே அனுமானித்துக் கொள்ள ஆசையாக உள்ளதா?

நல்லது

அதை அறிந்து கொள்ள இணையத்தில் நான் கண்ட ஒரு கணி பொறியை சொல்லுகிறேன்.

அதற்கு முன் சில அறிவுரைகள்,

இது கணித்துச் சொல்லுவது வெறுமனே , குழந்தை எவ்வளவு உயரத்துக்கு வளர்வதற்கான பாரம்பரியத் தகுதி பெற்றுள்ளது என்பதை மட்டுமே.
குழந்தைக்கு வழங்கப் படும் போசாக்கு மற்றும் குழந்தையை பாதிக்கும் வேறு நோய்கள் போன்றவைகளே குழந்தை அந்த உயரத்தை எட்டிப் பிடுக்குமா என்பதை தீர்மானிக்கும்.

http://www.keepkidshealthy.com/welcome/htcalculator.html

இந்த லிங்கில் சென்று அங்கே கிடைக்கும் கணிப்பானில் குழந்தையின் அம்மா மற்றும் அப்பாவின் உயரத்தை பதிவதன் மூலம் , எவ்வளவு உயரம் வரை உங்கள் குழந்தை வளரும் சாத்தியம் உள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தையின் வளர்ச்சி பற்றிய சந்தேகங்களை பின்னூட்டத்தில் கேளுங்கள்.



பட்டினி கிடந்தே
மெலிந்து போன
ஈழத்துக்
குழந்தைகள் போல...
உன் பார்வையின்றி
மெலிந்து
கிடக்கிறது
காதல்



கல்லில்
சாமியை
வணக்குவது போல்
உன்னில்
காதலை
வணங்குகிறேன்..



இனி
உன்னை
கண்ணாடியில்
பார்க்காதே
என்
கவிதைகளில்
பார்...



ஓசோன்
படையில்
ஓட்டை போட்டு
உன்னை ரசிக்கிறது
சூரியன்..



அகதி முகாமில்
அடைபட்ட
அகதிக்கு
நிவாரணம் தாங்கி
வரும் லொறி
போல...
எனக்கு
நீ காதலை
தாங்கி
வருகிறாய்...



Love birds


முட்டாள்
மனிதர்கள்
காதல்
பறவைகளை
கூண்டுக்குள்
அடைக்கலாம்
காதலை...?


விட்டில்
பூச்சி

என்னைக்
காதலித்து விடு...
இல்லாவிட்டால்
ஒரு மணி
நேரத்தில்
இறந்து விடுவேன்
சொன்னது
விட்டில் பூச்சி
வயசு 23 மணித்தியாலயம்


ஆமை


உடம்பு
முழுவதையும்
உள்ளே வைத்து
ஜடமாக
கிடந்தாலும்
உள்ளே
துடித்துக் கொண்டுதான்
இருக்கிறது
காதல்


முதலை

இந்தக் கண்ணீரை
தயவுசெய்து
முதலைக் கண்ணீர்
என்றுமட்டும்
சொல்லி விடாதீர்கள்
இது காதல்
கற்றுத்தந்த
நிஜக் கண்ணீர்



மரம் கொத்தி

உனக்காக
ஒரு மரம்
தாஜ் மஹாலாகி
இருக்கிறது ...

தொடாரலாம் ...

காதலில்
தொலையலாம்
யாரும் காதலை
தொலைக்க
முடியாது...


காதல்
புனிதமானது ....
காதலிப்பவர்
விட்டுப் போனாலும்
காதல்
யாரையும்
விட்டுப்போகாது


காதலுக்காக
தற்கொலை
செய்பவர்கள்
தங்களை
மட்டுமல்ல
காதலையும்
கொலை
செய்கிறார்கள்...
சாக வைப்பதல்ல
உயிர்ப்பிப்பதே
காதல்...


நீங்கள் காதலை
தொலைத்தவர்களா?
இல்லை ...
உங்களைத்
தொலைத்தவர்கள்....
உங்களைக்
கண்டுபிடியுங்கள்
உள்ளேயே
ஒட்டிக் கொண்டிருக்கிறது
இன்னும் காதல்







கர்ப்பத்தைப்
போலதான்...
எப்படித்தான்
பொத்தி வைத்தாலும்
கடைசியில்
உன்னைப்
பார்த்ததும் ...
பிறந்து விட்டது
காதல்


நீ கோயிலுக்குப்
போனாய்..
சாமி
சந்நியானத்தில்
இருந்த
பூக்கள் எல்லாம்
பொறாமைப்
பட்டுக் கொண்டன
உன் கூந்தல்
பூவைப் பார்த்து


எப்போதாவது
என் காதில்
விழுகின்ற நீ
பேசுகிற
ஒவ்வொரு
வார்த்தையையும்
ஒவ்வொரு நோட்டுப்
புத்தகத்தில்
எழுதி வைக்கிறேன்
ஒவ்வொன்றும்
கவிதைப் புத்தகம்


ஒரே பூ
திரும்பத் திரும்ப
பூக்கின்றது ....
உன் வெட்கம்


நிறையப்
பெண்கள்
வெட்கத்தைத்
தொலைத்து
விட்டார்கள்
நான் உன்
வெட்கத்தில்
தொலைந்து
விட்டேன்...

பாடப் புத்தகத்தை
எத்தனை முறை
படித்தாலும்
ஏறாத இந்த
மரமண்டைக்கு
ஒரே பார்வையில்
காதலிக்கக்
கற்றுக் கொடுத்துவிட்டு
போகிறாய்...






நள்ளிரவு ஹேப்பி பர்த்டே !
நம்ம தமிழ் சினிமால ஹீரோயினுக்கு பிறந்த நாளுன்னா ஹீரோ பாதி ராத்திரி போன் பண்ணி ஹேப்பி பர்த்டே சொல்வாரு. இதெல்லாம் சினிமால பார்க்கிறப்ப நல்லாவே இருக்கும்.இருக்கப்பட்டவன் வீட்ல பார்த்தாலும் ஓகே தான். ஆனால் என் மகளுக்கு பெர்த்டேன்னதும் பாதி ராத்திரி கதவு டொக் டொக். திறந்தா என் மகளோட உட் பி (இதுலயே சந்தேகமிருக்குது பாருங்க).கையில பெர்த்டே கேக். அதுமேல ஒரு கேண்டில்.

பேரு சன் தீப் இங்கிலீஷ்ல எழுதி பரிச்சு படிங்க ! சேண்ட் (மணல்), மணல் எங்க இருக்கும் பாலைவனத்துல. டீப் (ஆழம்). பார்க்க நம்ம லேட்டஸ்ட் சினிமா ஸ்டார் மாதிரிதான் இருக்கான்.

உஃப்னு ஊதினா பறந்துருவான். புல் தடுக்கி. எங்க சித்தூர்ல ராத்திரி 7.30 ஆனா போதும் லாலா பார்ட்டி எல்லாம் லாலா போட ஆரம்பிச்சுரும். 9 ஆனால் போதும் கடையெல்லாம் மூடிருவாங்க ! கடை படிக்கட்டுல பிளாஸ்டிக் கிளாஸ் சகிதம் தண்ணி கச்சேரி .

மெயின் ரோட்ல போலீஸ் ரோந்து இருக்குதுன்னு சந்துகள்ள கூட இது நடக்கும். இந்த பையன் கேக்கோட வர்ரத பார்த்து எவனாச்சும் லாலா பார்ட்டி கழுத்துல கத்திய வச்சு வீடுவரைக்கும் வந்து கதவை தட்ட வச்சு உள்ளே பூந்திருந்தா என்ன நிலை? நான் என்ன ஜாக்கிசானா ! இல்லே அவன் என்ன ப்ரூஸ்லீயா !

இந்த லவ்ஸ் வந்தாலே மண்டைல ஸ்க்ரூ எல்லாம் லூஸாயிருமா என்ன? பூனை கண்ணை மூடிக்கிட்டு பால் குடிக்குமாம். எவனும் என்னை பார்க்கலைனு நினைச்சுக்குமாம். இந்த லவர்ஸ் நிலை கூட அதே தான். அவன் என்ன பண்றான்னு அவனை தவிர மத்த எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கும்.

தாளி நான் கூட காதலிச்சிருக்கேன். நம்ம காதலெல்லாம் வெரைட்டியா இருக்கும். உள்ளுக்குள்ள தெய்வீக காதலா இருந்தாலும் மேலுக்கு டவுன் பஸ்ஸுல க்ளோசப்ல நின்னுக்கிட்டு "காலேஜ் வரைக்கும் லவ் பண்ணேன்" தான்.

இவனுங்களால காதலையும் தாங்க முடியாது. காதல் தோல்வியையும் தாங்க முடியாது.

என்ன ஃபிஸிக்கோ, என்ன பழக்க வழக்கமோ ..தாளி ..ஒரு தடவை காதலி , பொறுக்கின்னிட்டா "வெறும் பொறுக்கி இல்லே கண்ணா பொம்பளை பொறுக்கி என்றுவிட்டு சாம்பார்சாதம் 2 தடவை, ரசம் 2 தடவை, மோர் 2 தடவை போட்டு மூக்கு பிடிக்க சாப்பிட்டேன்.

இவன் என்னத்த ரிஸ்க் எடுத்தான். ஒரு நாள் முகமெல்லாம் எண்ணையா என் மகளோட வீட்டுக்கு வந்தான். "என்னா கண்ணா லவ்வா" ன்னேன். என் மக தான் ஆமா போட்டா. நான் வச்சுக்க நீனிட்டேன்.

காதல் தோல்வில மூக்குபிடிக்க சாப்பிட்டா நான் எங்கே ! வில்லனாக வேண்டிய அப்பனே ப்ரோக்கர் ஸ்டேஜுக்கு வந்து " நைனா அங்கே இங்கேல்லாம் மீட் பண்ணாதே .. நேர நம்ம வீட்டுக்கு வந்துடு" என்று சொன்ன பிறகும் வேளைக்கு சாப்பிடாம அல்ஸர் வந்து ரத்த வாந்தி எடுக்கிற இவன் எங்கே..

இவனையெல்லாம் நம்பி எதிர்கால இந்தியா !

கருத்துகள் இல்லை: